Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். போதனா வைத்தியசாலையில் 5 நாட்களில் ஆயிரம் பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
31 OCT, 2023 | 10:40 AM
image

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஆயிரம் பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை திங்கட்கிழமையில் (30 ) இருந்து ஐந்து தினங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன் ஆரம்ப நிகழ்வு நேற்று 30 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை வடக்கு மாகாண ஆளுநரின் பங்கு பற்றுதலுடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.

அசிஸ்ட் ஆர் ஆர் ஐக்கிய இராச்சியம் –  இலங்கை (Assist Resettlement & Renaissance UK & SL) நிறுவனத்தின் ஏற்பாட்டில் அலாக்கா மற்றும் ஆனந்தா பவுண்டேஷனின் நிதி ஒதுக்கீட்டி கீழ் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

உலக பார்வை தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் – இரத்தினபுரி மருத்துவமனைகளின் நல்லுறவினை மேம்படுத்தும் முகமாக  இம்மாதம்  30ம் திகதி தொடக்கம் மூன்றாம் திகதி வரை யாழ் போதனா மருத்துவமனையில் கண் சிகிச்சை மருத்துவ வல்லுநர் முத்துசாமி மலரவனின் நெறிப்படுத்தலில் இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கண்புரை சத்திர சிகிச்சையில் யாழ்ப்பாண சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் இருந்து 50க்கும் மேற்பட்டோருக்கும்  அனுராதாபுரம், மதவாச்சி, பதவியா பகுதிகளில் இருந்து 170 க்கும் மேற்பட்டோருக்கும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

01__1___2_.jpg

01__8_.jpg

01__7_.jpg

01__3___2_.jpg

https://www.virakesari.lk/article/168127

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். போதனா வைத்தியசாலையில் 1050 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு

04 NOV, 2023 | 04:42 PM
image

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் மலரவனின் தலைமையில் கடந்த 5 நாட்களில் வடக்கின் பல்வேறு பகுதிகளில் உள்ள 1050 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை (Cataract Surgery) மேற்கொள்ளப்பட்டது.

இந்த சிகிச்சைக்காக ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்டவர்கள் அவர்களின் கிராமங்களில் இருந்து விசேட பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டு, சிகிச்சையின் பின்னர், வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

யாழ். போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களுடன் இரத்தினபுரி போதனா வைத்தியசாலை, வவுனியா பொது வைத்தியசாலை, மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கடமையாற்றும் கண் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பல்வேறு நிலை உத்தியோகத்தர்களும் இணைந்து இந்த சிகிச்சை முகாமை சிறப்பாக செய்து முடித்தனர் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

மேலும் அவர், Assist RRR நிறுவனம் இதற்கான ஒழுங்கமைப்பில் பெரும் பங்காற்றியதோடு, சத்திர சிகிச்சைக்கு தேவையான கண் வில்லைகள் மற்றும் பொருட்களை அலாக்கா Foundation மற்றும் ஆனந்தா Foundation வழங்கியது. பல்வேறு தரப்பின் ஒருங்கிணைந்த செயற்பாட்டில் இந்த சிகிச்சை முகாம் வெற்றிகரமாக நிறைவேறியதாக தெரிவித்தார்.

இந்த சிகிச்சை முகாமை நிறைவு செய்ததற்கான இறுதி நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இரத்தினபுரி போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அனோஜ் றொட்றிகோ கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

01__3_.jpg

01__4_.jpg

01__7_.jpg

01__2_.jpg

01__5_.jpg

01__6_.jpg

01__9_.jpg

01__8_.jpg

01__11_.jpg

01__12_.jpg

https://www.virakesari.lk/article/168511

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.