Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேச்சுக்கு வருகின்றீர்களா? இல்லையா? கோதபயாவின் இறுதிச் சவால்

Featured Replies

அமைதி முயற்சிகளுக்கு இணங்கினாலே இராணுவம் அடங்கியிருக்கும் என்கின்றார்.

மேலும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதற்குத் தோதுவான சூழ்நிலை தற்போது தொடர்கின்றது. ஆனால், வி.புலிகைள் உடனடியாக அமைதிப் பேச்சு மேசைக்குத் திரும்புவார்களாயின், அத்தகைய படை நடவடிக்கைகளை மேற்கொண்டு, சமாதான முயற்சிகளுக்கான வாய்ப்பை அரசு சீர்குலைக்காது"

இப்படி கூறியிருக்கன்றார் வி.புலிகளுக்க எதிரான அரசுப்படைகளின் நடவடிக்கைகளை அரசுத் தரப்பில் வழி நடத்துபவரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதியின் சகோதரருமான கோட்டபயா.

இப்போதாவது அமைதிப் பேச்சுக்கு வருகிறீர்களா? .இல்லையா? இல்லையேல் இராணுவம் உங்கள் மீது பாயும்!" என்ற தொணியில் புலிகளுக்கு இறுதிச் சவாலும் எச்சரிக்கையும் விடும் தொனியில கருத்துக் கூறியிருக்கின்றார்.

அவரது இந்தக் கருத்தை ஆங்கில வார இதழ் ஒன்று நேற்று வெளியிட்டிருக்கின்றது.

அவர் கூறியவை எனத் தெரிவித்து அந்த ஆங்கசில வார இதழ் வெளியிட்ட தகவல்களின்

விபரம் பின்வருமாறு :-

'அமைதி முயற்சிகள் தொடர்பாக புலிகள் இதயசுத்தியுடன் எத்தனத்தில் ஈபடுவார்களாயின் நாங்கள் இப்போது உள்ள கள நிலைவரத்தை எங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கமாட்டோம்'.

'தங்களுக்கு எதிரான இராலணுவ நடவடிக்ககைளைத் தவிர்ப்பதற்கு புலிகளுக்கு இது கடைசிச் சந்தர்ப்பம்'. 2003 ஏப்பிரலில் அமைதி முயற்சிகளில் இருந்து புலிகள் வெளியேறியிருந்தனர். அந்த அமைதி முயற்சிகளுக்கு உடன்பட்டு மீண்டும் திரும்புவதன் மூலம் இராணுவ நடவடிக்கைகளை எதிர் கொள்ளாமல் தவிர்ப்பதற்கு சாதக நிலை அவர்களுக்ககு இப்பொது கிட்டியிருக்கின்றது".

'நோர்வே அனுசரணையாளர்கள் ஊடாகவோ அல்லது ஜனாதிபதி நிர்வாகத்துடன் நேரடியாகவோ அமைதி முயங்கிசளுக்குத் திரும்பும் படி புலிகளை வற்புறுத்தி, வலியுறுத்துவது முக்கியமானது.

'வடக்கு,கிழக்கில் பெரும் இராணுவ வெற்றியை எதிபர்நோக்கித்தான் புலிகள் அழுத்தமாக முயன்றார்hகள். அதில் அவர்கள் வென்றிருப்பார்களேயயானால் நிபந்தனைகள் போடும் நிலைக்கு அவர்களது கைகள் ஓங்கியிருகச்கும். ஆனால், களநிலையில் புதிதாக முன் முயற்சிகளை முன் தொடரும் வலுவில் இப்பொது அவர்கள் இல்லை என்பதால் அமைதி வழித் தீர்வு ஒன்றையே அவர்கள் இனித் தேட வேண்டும்'.

'புலிகள் ஆயுதங்களை முற்றாகக் களைவதில் அரசு உறுதியாக உள்ளது. அதைத் தவிர வேறு மாற்று வழியோ மார்க்கமோ இல்லை.

"ஆகவே, தங்களின் வலுவான வன்னித் தளத்தைப் பாதுகாப்பதற்காக யுத்தத்திற்குப் போவதா அல்லது பேச்சு மேசைக்குத் திரும்புவதா என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்களாகப் புலிகள் உள்ளனர்'.

'எனவே, முடிவு அவர்களுடையதே, இந்தச் சந்தர்ப்பத்தை அவர்கள் நிராகரிக்க மாட்டார்கள் என நான் நம்புகிறேன்.புலிகள் தாக்குதல் பலம் கொண்டவர்களாக இருக்கும் வரை அரசியல் தீர்வு சாத்தியமற்றது

என்பதையே எனது திருமலை உரையில் நான் குறிப்பிட்டிருந்தேன். அதனை, நான் இராணுவ வழித் தீர்வையே அங்கு அறிவித்தேன் எனச் சிலர் பிழையாக விளங்கியுள்ளனர்.

'புலிகள் ஆயுதங்களைத் தாங்கித் திரிவதை அங்கீகரிக்கு எந்தத் தீர்வையும் நிராகரிக்கிறோம். அது ஏற்புடையதேயல்ல" என்றார் அவர்.

நன்றி : சுடர் ஒளி

Edited by Janarthanan

சமாதான ஒப்பந்தத்திற்குள் ஒழிந்துகொண்டு இப்படிப் பேசுவதை விடவும் போரைப் பிரகடனப் படுத்திவிட்டு இதைச் சொல்ல வேண்டும். போரின் கொடுமையைத் தெற்கு அனுபவிப்பதைத் தடுக்க முடியாது போலுள்ளது.

Edited by Iraivan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.