Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாடு முழுவதும் மின் துண்டிப்பு : கொத்மலை – பியகமவில் நடந்தது என்ன? - இலங்கை மின்சார சபை தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 DEC, 2023 | 11:03 AM
image
 

நாடு முழுவதும் நேற்று (09) மாலை திடீரென மின் துண்டிக்கப்பட்டதற்கு, கொத்மலை – பியகம மின் விநியோக கட்டமைப்புக்கு மின்னல் தாக்கியமையே காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் மின்சக்தி அமைச்சும் இலங்கை மின்சார சபையும் இரு வேறு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த கூறியுள்ளார். 

நேற்று மாலை 5.15 மணியளவில் நாடு முழுவதும் திடீரென மின் துண்டிக்கப்பட்டு, பல பிரதேசங்களில் இரவு 11.30 மணியளவிலும், வேறு சில இடங்களில் நேரம் தாமதமாகவும் மீண்டும் மின் விநியோகிக்கப்பட்டு, நிலைமை இயல்புக்கு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/171361

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை! வெளியான காரணம்

புதிய இணைப்பு
நாடு முழுவதும் நேற்று மாலை திடீரென மின் துண்டிக்கப்பட்டதற்கு, கொத்மலை – பியகம மின் விநியோக கட்டமைப்புக்கு மின்னல் தாக்கியமையே காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

மேலதிக தகவல் - ராகேஷ்

முதலாம் இணைப்பு
நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் ஏற்பட்ட திடீர் மின் தடை தொடர்பில், இலங்கை மின்சார சபையும், மின்சார அமைச்சும் இணைந்து இருவேறு விசாரணைகைள நடத்தவுள்ளன.

இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இன்றைய(10) நாடாளுமன்ற விவாதத்தின் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

விளக்கமளிக்கவுள்ள அமைச்சர் 

இதேவேளை, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்றைய திடீர் மின் தடை குறித்து இன்று பிற்பகல் விளக்கமளிக்கவுள்ளார். 

நாடளாவிய ரீதியில் நேற்று மாலை  ஏற்பட்ட மின் தடை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை! வெளியான காரணம் | Sudden Power Outage Sri Lanka

கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று மாலை 05.10 மணியளவில் நாடு  முழுவதும் திடீரென மின்சாரம் தடைப்பட்டது.

இலங்கை மின்சார சபை ஏற்பட்ட சிக்கல்களை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டதுடன், நேற்று இரவு 11 மணியளவில் நாடு முழுவதும்  மீண்டும் மின் விநியோகம் வழமைக்குத் திரும்பியது. 

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்களின் அன்றாட நடவடிக்கைகள் தடைபட்டதுடன், நாட்டைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டிருந்தனர்.

இந்த திடீர் மின் தடைக்கான காரணம் இன்னும் துல்லியமாக வெளிப்படுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

https://tamilwin.com/article/sudden-power-outage-sri-lanka-1702183714

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியாக மாறிய இலங்கையின் மின்தடை

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் விநியோகத் தடை வழமைக்குத் திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 05.10 மணியளவில் கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது.

பல மணி போராட்டத்தின் பின்னர் இரவு 11 மணிக்கு நாடு முழுவதும் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்களின் அன்றாட நடவடிக்கைகள் தடைபட்டதுடன், நாட்டை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

சர்வதேச ஊடகங்களில் பேசப்பட்ட விடயம்

இந்த திடீர் மின் தடைக்கான காரணம் இன்னும் துல்லியமாக வெளிப்படுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் முறையான உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியாக மாறிய இலங்கையின் மின்தடை | Nationwide Power Outage In Sri Lanka

மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணமாக நேற்று பிற்பகல் நீர் விநியோகம் தடைப்பட்டதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சில மணித்தியாலங்களில் நீர் விநியோகம் சீரமைக்கப்பட்டதாக சபை குறிப்பிட்டுள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட போதிலும், தொடருந்து சேவைகள் வழமை போன்று இடம்பெறுவதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின் தடை காரணமாக விக்டோரியா, பொல்கொல்ல, ரன்தெனிகல மற்றும் ரன்தம்பே நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று பிற்பகல் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு பல சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முறையாக இது போன்ற மின்தடை ஏற்பட்டுள்ளது. மேலும் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் திகதி அன்று கெரவலப்பிட்டியவில் மின் விநியோக அமைப்பில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக 06 மணித்தியாலங்களுக்கு மேலாக மின்சார விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.

மேலும், 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 03ஆம் திகதி அன்று கொத்மலை மற்றும் பியகம மின் விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறினால் மின்சார விநியோகம் தடைப்பட்டதுடன், அவ்வாறான மின் தடைகள் மீண்டும் ஏற்படாதவாறு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகள் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும் நேற்று திடீரென சுமார் 06 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டதுடன், மின்வெட்டு தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்படும் என ராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த இன்று தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/article/nationwide-power-outage-in-sri-lanka-1702190781

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின் துண்டிப்பு தொடர்பாக மின்சார சபை, அமைச்சு மட்டத்திலும் விரிவான விசாரணைகள் ஆரம்பம் - இந்திக்க அநுருத்த

10 DEC, 2023 | 04:36 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாடு முழுவதும் நேற்று ஏற்பட்ட மின் துண்டிப்பு தொடர்பாக மின்சார சபை மற்றும் எரிசக்தி, மின்சக்தி அமைச்சு மட்டத்தில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சம்பந்தப்ப்பட்ட தரப்பினர் தொடர்பில் சுயாதீனமாகவும் நேர்மையாகவும் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்பதை பொறுப்புடன் தெரிவிக்கிறோம் என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவித்தார்.

நாடு முழுவதும் மின் துண்டிப்பு ஏற்பட்டமை தொடர்பில பாராளுமன்றத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

மின் துண்டிப்பு தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அமைச்சு மட்டத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

அதேபோன்று ஒரு மின் விநியோக கட்டமைப்பு மாத்திரம் செயலிழந்திருந்தால் எவ்வாறு முழு நாட்டுக்கும் மின்சாரம் இல்லாமல் போயிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொழில்நுட்ப ரீதியாக ஆராயவேண்டிய விடயம் என்பதை நான் அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுவரை நாம் மின் உற்பத்தியை நுரைச்சோலை அனல் மின் நிலையம் மூலம் முன்னெடுக்கின்றோம். அதன் மூலம் 300 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஏனைய அனைத்து மின்சாரத்தையும் நாம் நீர் மின் உற்பத்தி மூலமே பெற்று வருகின்றோம். அந்த வகையில் சீரற்ற காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி விநியோக கட்டமைப்பிலேயே இந்த செயலிழப்பு இடம்பெற்றுள்ளது.

அந்த சந்தர்ப்பத்தில் 1500 மெகாவோட் மின்சாரத்திற்கான கேள்வி இருந்தது. எனினும் 300 மெகாவோட் மின்சாரமே இருந்தது. அச்சமயம் நுரைச்சோலை மின் விநியோக கட்டமைப்பும் செயலிழந்தது. அந்த வகையில் அனைத்து விநியோக கட்டமைப்புகளும் செயலிழந்தன.

இவற்றை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு சுமார் 4 மணித்தியாலங்கள் தேவைப்பட்டன. சிறு மின் உற்பத்தி நிலையங்கள் மூலமே நிலைமையை சரி செய்ய முடிந்தது. மின்சார சபையும் எரிசக்தி, மின்சக்தி அமைச்சும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

அதேவேளை நாம் ஒன்றை குறிப்பிட வேண்டும். 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படவிருந்த பொல்பிட்டிய, கொத்மலை ஆகியவற்றின் நடவடிக்கைகள் வருடக்கணக்கில் தாமதமாகியது.

அதனால் ஏன் இந்தளவு காலதாமதம் ஏற்பட்டது என அது தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கு பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றன. இரண்டு தினங்களுக்கு முன் 5 இலட்சம் பேருக்கு மின்சாரம் இல்லாமலுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

எனினும், இந்த வருடத்தில் அனைத்து நாட்களும் எந்த தடையுமின்றி நாம் மின்சாரம் வழங்கினோம். எதிர்பாராத விதமாகவே இந்த செயலிழப்பு ஏற்பட்டது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

அந்த வகையில் மிகவும் சுயாதீனமாகவும் நேர்மையாகவும் அதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்பதை நாம் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/171388

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்னல் தாக்கத்தினால் மின்சாரம் தடைபடுவதை தடுக்க முன்கூட்டிய நடவடிக்கை எடுக்கவில்லையென மின்சார சபை ஒப்புக்கொண்டது

மின்னல் தாக்கம் ஏற்பட்டால், நாடு முழுவதும் மின்சாரம் தடைபடுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்கத் தவறியுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) ஒப்புக்கொண்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மின்னல் தாக்கம் காரணமாக கொத்மலை – பியகம பிரதான மார்க்கம் துண்டிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது.

இதற்கான காரணத்தைக் கேட்டபோது, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்ததாவது, CEB தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தனது தவறை ஒப்புக்கொண்டது. எவ்வாறாயினும், மின்னலினால் ஏற்படும் சேதங்களைத் தடுப்பதற்கான மேம்பட்ட வழிமுறைகளை நிறுவுவதற்கு CEB க்கு பெரும் செலவை உள்ளடக்கியதாக அவர் குறிப்பிட்டார்.

“அடுத்த மாதம் நடக்கும் குழு கூட்டத்தில், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/285774

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்வெட்டு தமது தவறினாலேயே ஏற்பட்டதாக CEB தெரிவிப்பு

power-cut.jpg

நாடளாவிய ரீதியில் அண்மையில் ஏற்பட்ட மின்வெட்டு தமது தவறினாலேயே ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபை ஏற்றுக்கொண்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னிலையில் விடயங்களை முன்வைத்த போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த விடயம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆணைக்குழு கூடவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் மஞ்சுல பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொத்மலை முதல் பியகம வரையிலான மின் விநியோகக் கட்டமைப்பில் மின்னல் தாக்கம் ஏற்பட்டமையினால், கடந்த 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்வெட்டு ஏற்பட்டது. மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர பல மணித்தியாலங்கள் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/286089

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.