Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

”நிராகரிக்கபட்ட விடயங்களை அரசாங்கம் செய்ய முயல்கின்றது” - கஜேந்திரகுமார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

”நிராகரிக்கபட்ட விடயங்களை அரசாங்கம் செய்ய முயல்கின்றது”

புலம்பெயர் தமிழ் மக்களினாலும் அங்கிருக்கும் ஏனைய அமைப்புகளினாலும் நிராகரிக்கப்பட்ட ஒரு சில உதிரிகளை வைத்துக்கொண்டு ஒரு அரசாங்கமே செய்யமுடியாததை செய்ய நினைக்கும்போது அது தோற்கடிக்கப்படவேண்டும் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பயங்காரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குகன் மாஸ்டர் மற்றும் அவரது மகன் மற்றும் செயற்பாட்டாளர்களை சென்று சந்தித்தனர்.

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார், அக்கட்சியின் செயலாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ஆகியோர் சிறைச்சாலைக்கு சென்று அவர்களை சந்தித்தனர்.

மாவீரர் நினைவு தினத்தன்று மாவீரர் தினத்தை நடாத்துவதற்கு கொடி ஏற்றும் கம்பிகளை கொண்டுசென்ற வாகனத்தை பொலிஸார் கைப்பற்றிய நிலையில் அது தொடர்பில் அறிவதற்காக வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குகன் மாஸ்டர் அவரது மகன் ஆகியோர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் அவர்களை சந்தித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் நிலைமைகள் தொடர்பிலும் அவர்களுக்காக முன்னெடுக்கப்படும் சட்ட செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

கடந்த மாதம் 27ஆம் திகதி எமது கட்சியை சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் அவரது மகனும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் இன்று அவர்களை சென்று பார்வையிட்டதோடு வழக்கு தொடர்பான விடயங்களையும் கலந்துரையாடினோம்.

அமைப்பாளருக்கு டயாபிடிக் நோய் இருப்பதினால் அவரது கால் வீங்கி காணப்படுகிறது அதற்காக நிஜமானிடம் இந்த விடயங்கள் பதிவு செய்யப்பட்டு இன்று வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாக சிறைச்சாலை பொறுப்பு அதிகாரி தெரிவித்து இருக்கின்றார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து வைத்திருக்கின்றது எதிர்த்து சட்ட நடவடிக்கைகளை நாங்கள் ஈடுபடுவதற்கு முழுமூச்சாக முயற்சிகளை அமைந்துள்ளது நாங்கள் அவருக்கு கூறியிருக்கின்றோம்.

இது ஒரு பெரிய சவால் இல்லை தமிழ் தேசியத்தில் ஊறி இருக்கக்கூடிய தமிழ் தேசியத்திற்காக எத்தனையோ தியாகங்களை செய்து கொண்டிருக்கின்ற நம்முடைய வடகிழக்கில் வாழுகின்ற ஈழத் தமிழர்கள் கடைசி வரைக்கும் இடம் கொடுக்காது.

ஆனாலும், அப்படிப்பட்ட ஒரு முயற்சியை எடுப்பதற்கும் இப்படிப்பட்ட துரோக செயல்பாடுகளை செய்வதற்கு ஆட்கள் இருக்கின்றனர் அவர்களை இனம் கண்டு அவர்களோடு பயணிக்கின்ற அனைத்து தரப்புகளையும் இனம் கண்டு அவர்களை ஒட்டுமொத்தமாக இந்த அரசியல் அரங்கிலே நிறுத்தி ஓரம் கட்ட வேண்டும் என குறிப்பிட்டார்.

 


http://www.samakalam.com/நிராகரிக்கபட்ட-விடயங்க/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

”இந்த நாடு புலம்பெயர்ந்த சமூகத்திடமே கையேந்துகிறது”

 

வங்குரோத்து நிலமையை மாற்றியமைக்க இந்த நாடு புலம்பெயர்ந்த சமூகத்திடம் கையேந்துதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சமகால அரடியல் கலந்துரையாடல் நிகழ்வு நேற்று மாலை திருகோணமலை மல்லிகா விடுதியில் இடம்பெற்றது.

கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கருத்துவெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,

தமிழரரசியலில் தமிழ் தேசிய நீக்கம் நடைபெறுகிறது அதனையே உலகின் வல்லரசுகளும் விரும்புகிறது.

உலக தமிழர் பேரவையின் ஹிமாலய பிரகடணத்தில் ஆறு சரத்துக்கள் அடங்கியுள்ளது.

அதன் வார்த்தைகளை கவனமாக அவதானிக்க வேண்டும், “இன்றைய நிலமைகளை பாதுகாத்து பலப்படுத்த வேண்டும்” என அதன் முதலாவது வசனத்தில் குறிடப்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போது காணப்படும் நிலமைகளே நாட்டில் மாற்றியமைக்க வேண்டும் மாறாக தற்போதைய நிலைமைகள் நல்லவையாக காணப்படுவதாக அதில் கருதப்படுகிறது அது தவறான ஒன்று என குறிப்பிட்டார்.

அடுத்தபடியாக பொருளாதாரத்தினை கட்டியெளுப்பவேண்டும் என்பதே. அதற்கமையநாடு சந்தித்துள்ள வங்குரோத்து நிலமையை மாற்றியமைக்க இந்த நாடு புலம்பெயர்ந்த சமூகத்திடம் கையேந்துகிறது.

அன்று விரோதியாக பார்க்கப்பட்ட புலம்பெயர் தமிழர்களிடம் இன்று உதவி கோரும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

இலங்கை அரசானது நாட்டிலுள்ள சொத்துக்களை விற்று நாட்டினை மீண்டும் கட்டியெழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க சக்தி எனும் போர்வையில் வட கிழக்கு பகுதிகள் இன்று வல்லரசுகளுக்கு தாரைவார்க்கப்படுகிறது. இலங்கையின் மீன்பிடி எல்லைகளுக்குள் பிரவேசிக்கவும் மீன்பிடியில் ஈடுபடுவதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது இவையும் வடகிழக்கிலேயே நிகழ்த்தப்படுகிறது எனவும் குறிப்பிட்டார்.

இன்று தமிழ் தேசியம் மக்கள் மயப்படுத்தப்படுகிறது எதிர்வரும் 2025ம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தமிழ்மக்கள் விரும்பி ஒற்றை ஆட்சியை சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதனை நடைமுறைப்படுத்தவே இந்த உலகத்தமிழர் பேரவை முனைவதோடு தமிழ் அரசியல் தலைமைகளும் பின்னின்று அதனை அவசரமாக நடைமுறைப்படுத்த எத்தணிக்கிறது என குறிப்பிட்டார்.
http://www.samakalam.com/இந்த-நாடு-புலம்பெயர்ந்த/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.