Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையின் பொருளாதார - அரசியல் ஸ்திரத்தன்மை பிராந்திய நலன்களுக்கு முக்கியமானது - கோபால் பாக்லே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17 DEC, 2023 | 12:57 PM
image
 

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கையின் பொருளாதார - அரசியல் ஸ்திரதன்மை என்பது இந்தியாவுக்கு மாத்திரமல்ல, பிராந்திய நலன்களுக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். இலங்கை போன்ற நட்பு நாடொன்று நெருக்கடிகளை எதிர்கொள்ளும்போது அதன் தாக்கம் நிச்சயம் பிராந்தியத்திலும் இருக்கும் என தெரிவித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே,  இரு நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா, தகவல் தொழில்நுட்ப மற்றும் வலு சக்தி உள்ளிட்ட புதிய இணைப்புகளினால் இலங்கை நலனடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  

இலங்கையில் மூன்று ஆண்டு கால இந்திய இராஜதந்திர சேவையை வெள்ளிக்கிழமையுடன் உத்தியோகபூர்வமாக நிறைவு செய்துள்ள உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக சேவையில் இணையவுள்ளார். இந்நிலையில், இலங்கையின் தனது சேவைக்காலம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே  கோபால் பாக்லே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,  

இலங்கை - இந்திய உறவு என்பது பொருளாதாரத்தை மாத்திரம் சார்ந்ததல்ல. மாறாக கலாசார பின்னணிகள், இரு நாட்டு மக்கள் தொடர்புகள் மற்றும் பாதுகாப்பு என பல்துறைகளில் மிகவும் ஆழமாக இருதரப்பு உறவுகள் வேரூன்றியுள்ளன.எனவே தான் இலங்கையின் கொவிட் உள்ளிட்ட அண்மைய நெருக்கடிகளில் இந்தியா முதலாவதாக முன்வந்து உதவிகளை செய்தது. அயலகத்திற்கு முதலிடம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இலங்கைக்கு உதவ யாருக்காகவும் காத்திருக்க வில்லை.

குறிப்பாக அண்மைய பொருளாதார நெருக்கடிகளின் போது எரிபொருள், உணவு மற்றும் மருந்து என பல அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டன. இதன் போது இந்தியா அவசரமாக செயல்பட்டு இலங்கை மக்களின் அத்தியாவசிய தேவைகளை ஈடுசெய்ததது. இதே போன்று தான் கொவிட் பெரும்  தொற்றின் போது இலங்கை மக்களுக்கு தேவையான அனைத்து தடுப்பூசிகளையும் வழங்கி உதவியது. மறுப்புறம் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தை இலங்கை நாடியப்போது, இந்தியா பக்கபலமாக நின்று ஆதரவு வழங்கியது. எழுத்து மூலமாக சர்வதேச கடன் மறுசீரமைப்புகளுக்கு உத்தரவாதத்தை வழங்கியது.

இலங்கையின் பொருளாதார - அரசியல் ஸ்தீரதன்மை என்பது இந்தியாவுக்கு மாத்திரமல்ல பிராந்தியத்துக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். இலங்கை போன்ற நட்பு நாடொன்று நெருக்கடிகளை எதிர்கொள்ளும் போது அதன் தாக்கம் பிராந்தியத்திலும் தாக்கம் செலுத்தும். எனவே பிராந்தியத்தில் நட்பு நாடுகள் சவால்களை எதிர்கொள்ளும் போது, அயலகத்திற்கு முதலிடம் என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தியா தலைமைத்தும் எடுத்து நிலையான தீர்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும். இவ்வாறான ஒத்துழைப்புகள் இலங்கைக்கு மாத்திரம் நன்மையளிக்காது. மாறாக பிராந்திய நலன்களிலும் தொடர்புப்படும்.

இலங்கை - இந்திய இணைப்புகள் முக்கிய உறவுகளில் ஒத்திசைவாகின்றன. வரலாற்று ரீதியிலான பாரம்பரிய இணைப்புகள். அபிவிருத்தி திட்டங்களையும் பொருளாதார உறவுகளையும் உள்ளடக்கியதாக உள்ள இணைப்புகள். மக்கள் - கலாசார இரு தரப்பு இணைப்புகள். இவை அனைத்துமே இரு நாடுகளுக்கு மாத்திரமன்றி இரு நாட்டு மக்களுக்கு பொதுவானதாக உள்ளது. இதனை மையப்படுத்திய இரு நாட்டு சுற்றுலா, தகவல் தொழில்நுட்ப மற்றும் வலு சக்தி உள்ளிட்ட புதிய இணைப்புகளினால் இலங்கை நலனடையும் என்றார்.

https://www.virakesari.lk/article/171879

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை – இந்திய உறவு வலுவடைய கோபால் பாக்லே பெரும் பங்களிப்பு - பிரதமர் தினேஷ் குணவர்த்தன புகழாரம்

Published By: DIGITAL DESK 3   18 DEC, 2023 | 02:38 PM

image

ரொபட் அன்டனி

இலங்கை நெருக்கடியான  காலகட்டத்தில்  இருந்தபோது  இந்தியாவிடமிருந்து  3.8 பில்லியன் டொலர் கடன் கிடைத்தது. அந்தக் கடனைப் பெற்றுக்கொள்வதற்கு பதவி காலம்  முடிவடைந்து செல்லும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே   பாரியதொரு பங்களிப்பை வழங்கினார்.  அதற்கு நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றேன் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயின் காலத்தில்  இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான  உறவு பாரியளவில் நெருக்கடியடைந்தது. பலமடைந்தது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.  இந்திய உயர்ஸ்தானிகர்  பாக்லே  தனது மூன்று வருட பதவிகாலத்தை  நிறைவு செய்து வெளியேறுவதுடன்   அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகராக பொறுப்பேற்கவிருக்கிறார்.  

இந்நிலையில்,  அவரது பதவிக்காலம்  தொடர்பாக   கருத்து வெளியிடுகையிலேயே   பிரதமர் தினேஷ் குணவர்த்தன இதனைக் குறிப்பிட்டார்.  ‘‘இலங்கை கடந்த வருடம் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்த போது இந்தியா  பல்வேறு கட்டங்களில் 3.8 பில்லியன்  டொலர் கடனுதவியை வழங்கியது.  அதனூடாகவே இலங்கை எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது’’  என்று  பிரதமர் தினேஷ் குறிப்பிட்டார்.

கடந்த வருடம் பொருளாதார நெருக்கடி காலத்தில்  இந்தியாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து  பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு டொலர் கடனுதவிகள் வழங்கப்பட்டன.  3.8 பில்லியன் டொலர்கள் கடனாக வழங்கப்பட்டது.  நெருக்கடி காலத்தில் இந்தளவு  பெரிய தொகையை   கடனாக வழங்கிய ஒரே நாடாக இந்தியா காணப்படுகின்றது.

இந்நிலையில் இது தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன மேலும் குறிப்பிடுகையில்;

இலங்கைக்கும்  இந்தியாவுக்குமிடையில் காணப்படுகின்ற நட்புறவை  உயர்ஸ்தானிகர்  கோபால் பாக்லே மேலும்  நெருக்கமாக்கும்  வகையில் செயற்பட்டார்.   அவரது பதவிக்காலத்தில் இருதரப்பு உறவு மேலும் வலுவடைந்தது.  கோபால் பாக்லே  இலங்கை மக்களின் பிரச்சினைகள் தொடர்பில்  மிகவும் அக்கறையுடன் செயற்பட்டார். அதனை  நாம் நன்றியுடன் நினைவுகூறுகின்றோம். மிகவும் கஷ்டமான காலத்தில் இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து   உதவிகள் கிடைக்கப் பெறுவதற்கு வழி ஏற்படுத்தினார்.  இரண்டு நாடுகளுக்குமிடையில் பொருளாதார  அரசியல், சமூக   தொடர்புகள் வலுவடையும் நோக்கில்   உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே  செயற்பட்டார்.

கடந்த 2020  ஆம் ஆண்டு கோபால் பாக்லே இலங்கைக்கான  உயர்ஸ்தானிகராக பொறுப்பேற்றார்.   அந்த வகையில் கடந்த  15ஆம் திகதியுடன் அவரது பதவிக்காலம் நிறைவடைந்தது.  அவரது காலப்பகுதியிலேயே இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.  குறிப்பாக  கொரோனா வைரஸ் தொற்று காலப்பகுதியில்  இந்தியாவிலிருந்து மருந்துப்பொருட்கள், தடுப்பூசிகள் போன்றன இலங்கைக்கு வழங்கப்பட்டன.  அத்துடன் புதுப்பிக்கதக்க சக்தி  திட்டங்களுக்கான ஒத்துழைப்பு  திருகோணமலை அபிவிருத்தி திட்டம்,  உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான புரிந்துணர்வு  ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.

இலங்கைக்கான இந்தியாவின்   புதிய உயர்ஸ்தானிகராக  ஐரோப்பிய ஒன்றியத்துக்கான  தூதுவராக பணியாற்றும் சந்தோஷ் ஜா  நியமிக்கப்பட்டிருக்கின்றார். 

https://www.virakesari.lk/article/171964

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.