Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

56 இலங்கையர்களை மீட்பதற்கான பேச்சுவார்த்தைக்கு மியன்மார் உள்துறை அமைச்சர் இணக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
news-01-11.jpg

மியன்மாரில் பயங்கரவாதிகளினால் தடுத்துவைக்கப்பட்டுள்ள 56 இலங்கையர்களை மீட்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அந்நாட்டு உள்துறை அமைச்சர் இணக்கம் வௌியிட்டுள்ளார்.

இந்த விடயத்தை மியன்மாருக்கான இலங்கை தூதுவர் உறுதி செய்துள்ளார்.

மியன்மாரின் தாய்லாந்து எல்லைக்கு அருகே பயங்கரவாத குழுவொன்றின் சைபர் அடிமைகளாக இலங்கை இளைஞர்கள் சிலர் பலவந்தமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல்கள் வௌியாகின.

குறித்த பிரதேசம் கூகுள் வரைபடத்தில் “Cyber Criminal Area” எனப்படும் சைபர் குற்றப் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

மியன்மாரின் மியாவெட்டி (Myawaddy) நகரில் இருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதி முழுமையாக பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் காணப்படுகிறது.

தாய்லாந்தில் கணினி துறையில் தொழில்களை பெற்றுத் தருவதாக கூறி அழைத்துச் செல்லப்பட்ட இலங்கையின் இளைஞர், யுவதிகள் சிலர் இந்தப் பிரதேசத்திலேயெ தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

https://thinakkural.lk/article/285378

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாய்லாந்தில் தொழில் வழங்குவதாக கூறி அழைத்துச் செல்லப்பட்ட  52 இலங்கையர்கள் பயங்கரவாத குழுவினருக்கு விற்பனை!

20 DEC, 2023 | 05:18 PM
image

தாய்லாந்தில் தொழில் வழங்குவதாக கூறி ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட 52 இலங்கையர்கள், தாய்லாந்தின் மியன்மார் எல்லையைச் சேர்ந்த பயங்கரவாதக்  குழுவினருக்கு சைபர் குற்றங்களுக்காக  விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த இருவரினால் இந்த இலங்கை இளைஞர்கள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு வைத்து 5,000 அமெரிக்க டொலர்களுக்கு இவர்களை பயங்கரவாத குழுவுக்கு விற்பனை செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.

இந்த இலங்கை பணியாளர்கள் தாய்லாந்தில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் பணிபுரிவதற்காக கடந்த ஆண்டு தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர், இந்த பயங்கரவாத குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

https://www.virakesari.lk/article/172168

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மியன்மாரில் கடத்தப்பட்ட இலங்கையர்களை மீட்க கூட்டிணைந்த முயற்சி : 56 இலங்கையர்கள் தடுத்துவைப்பு

23 DEC, 2023 | 04:51 PM
image

(நமது நிருபர்)

அண்மையில் மியான்மாரில் கடத்தப்பட்ட இலங்கையர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் மியான்மார் அதிகாரிகளிடம் கோரிக்கைவிடுத்துள்ளது.

இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் வெளிவிவகார அமைச்சு, கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மியன்மாரில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்துவதற்கென ஆட்கடத்தல் கும்பலால் இலங்கையர்கள் கடத்தப்படும் சம்பவங்கள் பதிவாகிவருவதாகத் தெரிவித்துள்ளது.

அதேவேளை முன்னதாக மியன்மார் அரச அதிகாரிகளுடன் அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் இணைந்து முன்னெடுத்த மீட்பு நடவடிக்கைகளை அடுத்து, 2022 - 2023 க்கு இடைப்பட்ட காலத்தில் பாதிக்கப்பட்ட 32 இலங்கையர்கள் மீட்கப்பட்டனர்.

அதேபோன்று வெளிவிவகார அமைச்சுக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, மியன்மாரின் மியாவாடி பகுதியில் தற்போது 56 இலங்கையர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் மியன்மார் அரசு மற்றும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/172340

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.