Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராயப்பு யோசேப்பு ஆண்டகையின்   நினைவுச் சிலை திறப்பு.

January 8, 2024
 
10.jpg?fit=1170%2C1755&ssl=1

மறைந்த மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அமரர்   இராயப்பு யோசேப்பு ஆண்டகையின்  நினைவுச் சிலை மன்னார்   ஜோசப் வாஸ் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் ஜோசப் வாஸ் நகர் பங்கு மக்களால் அமைக்கப்பட்ட குறித்த நினைவுச் சிலையை மன்னார் மறைமாவட்ட ஆயர்   இம்மானுவேல் பெர்னாண்டோ   வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் அருட்தந்தையர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,பங்கு மக்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

9.jpg?resize=533%2C8005.jpg?resize=800%2C533
 
  • கருத்துக்கள உறவுகள்

நேர்மையாக துணிவுடன் எம்து விடுதலையில் செயல்பட்ட ஆண்டகை...கொழும்பில் முக்கிய சந்திப்பு ஒன்றுக்கு சென்றநேரம் ,அணில் மைத்திரி ஆட்சியில்.. (நல்லாட்சி என்ற பெயராம்)>..இடைவழியில் ராணுவசாவடியில் ஓய்வுக்கு கொடுக்கப்பட்ட பழரசம்  குடித்தவுடன் ஏற்பட்ட பக்கவாதமே ..அவரை படுத்த படுக்கை ஆக்கியது...அதன் பின் எமதுவிடுதலை னோக்கிய சில முன்நகர்வுகளும் பின் நோக்கியே போய்க்கொண்டிருக்கிறது..

Edited by alvayan
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, alvayan said:

நேர்மையாக துணிவுடன் எம்து விடுதலையில் செயல்பட்ட ஆண்டகை...கொழும்பில் முக்கிய சந்திப்பு ஒன்றுக்கு சென்றநேரம் ,அணில் மைத்திரி ஆட்சியில்.. (நல்லாட்சி என்ற பெயராம்)>..இடைவழியில் ராணுவசாவடியில் ஓய்வுக்கு கொடுக்கப்பட்ட பழரசம்  குடித்தவுடன் ஏற்பட்ட பக்கவாதமே ..அவரை படுத்த படுக்கை ஆக்கியது...அதன் பின் எமதுவிடுதலை னோக்கிய சில முன்நகர்வுகளும் பின் நோக்கியே போய்க்கொண்டிருக்கிறது..

இது பரவலாக எல்லோராலும் கூறப்படும் ஒரு குற்றச்சாட்டாயினும் (நானுட்பட ), அதற்கு போதிய ஆதாரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

இது பரவலாக எல்லோராலும் கூறப்படும் ஒரு குற்றச்சாட்டாயினும் (நானுட்பட ), அதற்கு போதிய ஆதாரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. 

ஆமோதிக்கிறேன். 

On 9/1/2024 at 06:30, alvayan said:

நேர்மையாக துணிவுடன் எம்து விடுதலையில் செயல்பட்ட ஆண்டகை...

இவர் மன்னாரில் ஆயராக இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை கூறுகிறேன். மன்னாரில் கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் குறிப்பிட தக்க அளவு கிறிஸ்தவர்களும் வாழ்கிறார்கள்.

ஒரு குறிப்பிடட கிறிஸ்தவ மதத்தினர் ஆலயம் கட்டியபோது இவர்களால் எரிக்கப்பட்ட்து. முறையாக அனுமதிபெற்றே கடடபட்ட்து. இருந்தாலும் ஆயரும் அதட்கு அனுமதிக்கவில்லை. அதாவது நீங்கள் சிறுபான்மையினர் எமது அனுமதி இன்றி செய்ய முடியாது என்று கூறப்படடதாம்.

அப்படி என்றால் எப்படி இவர் தமிழ் சிறுபான்மையினருக்காக பாடுபடடார் என்று எப்படி கூற முடியும். எல்லாமே மற்றவர்களுக்கு உபதேசம்தான். தங்களுக்கு என்று வரும்போது ...........

இந்த விடயம் சம்பந்தமாக சிங்கள இனவாதிகளுக்கு அவர்கள் தெரிவித்திருந்தால் சிறுபான்மையினரின் போராட்டம் வெளிச்சத்துக்கு வந்திருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Cruso said:

ஆமோதிக்கிறேன். 

இவர் மன்னாரில் ஆயராக இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை கூறுகிறேன். மன்னாரில் கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் குறிப்பிட தக்க அளவு கிறிஸ்தவர்களும் வாழ்கிறார்கள்.

ஒரு குறிப்பிடட கிறிஸ்தவ மதத்தினர் ஆலயம் கட்டியபோது இவர்களால் எரிக்கப்பட்ட்து. முறையாக அனுமதிபெற்றே கடடபட்ட்து. இருந்தாலும் ஆயரும் அதட்கு அனுமதிக்கவில்லை. அதாவது நீங்கள் சிறுபான்மையினர் எமது அனுமதி இன்றி செய்ய முடியாது என்று கூறப்படடதாம்.

அப்படி என்றால் எப்படி இவர் தமிழ் சிறுபான்மையினருக்காக பாடுபடடார் என்று எப்படி கூற முடியும். எல்லாமே மற்றவர்களுக்கு உபதேசம்தான். தங்களுக்கு என்று வரும்போது ...........

இந்த விடயம் சம்பந்தமாக சிங்கள இனவாதிகளுக்கு அவர்கள் தெரிவித்திருந்தால் சிறுபான்மையினரின் போராட்டம் வெளிச்சத்துக்கு வந்திருக்கும். 

தமிழ்த் தேசியம் தொடர்பான ஆயரின் செயற்பாட்டில் தங்களுக்கு சந்தேகம் இருக்கிறது? 

இந்தச் சம்பவம் உண்மையில் நடைபெற்றதா என்று அவரது கல்லறையைத் தட்டித்தான் கேட்க வேண்டும். 

ஏனென்றால் அந்தச் சம்பத்தில் ஆயரின் பதிலை மூன்றாந் தரப்பினூடாகத்தான்  தாங்களும் கேட்டிருக்கிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Cruso said:

இவர் மன்னாரில் ஆயராக இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை கூறுகிறேன். மன்னாரில் கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் குறிப்பிட தக்க அளவு கிறிஸ்தவர்களும் வாழ்கிறார்கள்.

ஒரு குறிப்பிடட கிறிஸ்தவ மதத்தினர் ஆலயம் கட்டியபோது இவர்களால் எரிக்கப்பட்ட்து. முறையாக அனுமதிபெற்றே கடடபட்ட்து. இருந்தாலும் ஆயரும் அதட்கு அனுமதிக்கவில்லை. அதாவது நீங்கள் சிறுபான்மையினர் எமது அனுமதி இன்றி செய்ய முடியாது என்று கூறப்படடதாம்.

அப்படி என்றால் எப்படி இவர் தமிழ் சிறுபான்மையினருக்காக பாடுபடடார் என்று எப்படி கூற முடியும். எல்லாமே மற்றவர்களுக்கு உபதேசம்தான். தங்களுக்கு என்று வரும்போது ...........

இந்த விடயம் சம்பந்தமாக சிங்கள இனவாதிகளுக்கு அவர்கள் தெரிவித்திருந்தால் சிறுபான்மையினரின் போராட்டம் வெளிச்சத்துக்கு வந்திருக்கும். 

இது பற்றி ஏதாவது பத்திரிகையில் வந்துள்ளதா? அல்லது நீங்கள் அனுபவப்பட்டீர்களா? அல்லது யாரும் சொல்ல கேட்டீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nunavilan said:

இது பற்றி ஏதாவது பத்திரிகையில் வந்துள்ளதா? அல்லது நீங்கள் அனுபவப்பட்டீர்களா? அல்லது யாரும் சொல்ல கேட்டீர்களா?

ஊர்க் கட்டுப்பாடு என்று  வரும்போது மன்னாரில் அது மிகவும் அதிகம். 

ஊர்க்கட்டுப்பாட்டை மீறும்போது எலஎல்லாம்  சாத்தியம்தான். அதற்காக தமிழ் மக்களுக்கான மறைந்த இராயப்பு அடிகளாரின் சேவையை குறைத்து மதிப்பிட முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

இது பற்றி ஏதாவது பத்திரிகையில் வந்துள்ளதா? அல்லது நீங்கள் அனுபவப்பட்டீர்களா? அல்லது யாரும் சொல்ல கேட்டீர்களா?

 எனது அனுபவத்தில்தான் எழுதினேன். நீங்கள் வேண்டுமென்றால் அங்கு போய் அந்த ஆலயத்தின் நிலைமையையும் காணலாம். உண்மையாகவே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இதில் தெரிவியுங்கள்  நான் விளக்கமாக அதனை எழுதுகிறேன்.

இன்று எம்மில் அநேகருக்கு எமது உரிமையை சிங்களவர் தர வேண்டும் சுயஆட்ட்ச்சி தர வேண்டும் என்றெல்லாம் கூச்சல் போடுகிறோம். ஆனால் அவர்களில் எதனை பேர் அவர்களுக்குள் மத ரீதியாக , இந ரீதியாக சிறு பான்மையாக இருப்பவர்களுக்கு உரிமைகளை கொடுக்கவேண்டுமென்று நினைக்கிறார்கள்.

தனக்கு வந்தால் சிவப்பு ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற நிலைமையில்தான் நிறைய பேர் இருக்கிறார்கள். 

12 hours ago, Kapithan said:

தமிழ்த் தேசியம் தொடர்பான ஆயரின் செயற்பாட்டில் தங்களுக்கு சந்தேகம் இருக்கிறது? 

இந்தச் சம்பவம் உண்மையில் நடைபெற்றதா என்று அவரது கல்லறையைத் தட்டித்தான் கேட்க வேண்டும். 

ஏனென்றால் அந்தச் சம்பத்தில் ஆயரின் பதிலை மூன்றாந் தரப்பினூடாகத்தான்  தாங்களும் கேட்டிருக்கிறீர்கள். 

மூன்றாம் தரப்பில் நாங்கள் கேள்விப்பட்டு எழுதவில்லை. உண்மையைத்தான் எழுதினேன். நீங்கள்,வேணுமென்றால் செபஸ்தியார் ஆலயத்தின் நடுவில் உள்ள கல்லறையை தட்டி கேளுங்கள். நாங்கள் எப்போதும் இங்கு உண்மையைத்தான் எழுதுவோம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

 1) மூன்றாம் தரப்பில் நாங்கள் கேள்விப்பட்டு எழுதவில்லை. உண்மையைத்தான் எழுதினேன். 

2)நாங்கள் எப்போதும் இங்கு உண்மையைத்தான் எழுதுவோம். 

1) ""நீங்கள்சிறுபான்மையினர் எமது அனுமதி இன்றி செய்ய முடியாது என்று கூறப்படடதாம்""

இப்படி நீங்களே எழுதினீர்கள. தற்போது அதனை மறுப்பதும் தாங்களே. 

2) நாங்கள் என்று கூறுகிறீர்களே, யார் யாரெல்லாம் அந்த "நாங்கள் " என்பதற்குள் அடங்குகின்றனர்? 

ஊர்க் கட்டுப்பாடு தொடர்பாக எனது கருத்திற்கு  தாங்கள் எதுவும் கூறவில்லையே,.... ஏன்? 

 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

1) ""நீங்கள்சிறுபான்மையினர் எமது அனுமதி இன்றி செய்ய முடியாது என்று கூறப்படடதாம்""

இப்படி நீங்களே எழுதினீர்கள. தற்போது அதனை மறுப்பதும் தாங்களே. 

நான் விசாரித்து எழுதியதுதான்  அது. எல்லாவற்றையும் பக்கத்தின் நின்று கேட்க முடியாது. அதனால்தான் உண்மையை எழுதினேன் என்று கூறினேன். இன்றும் அங்கு  எரிக்கப்படட ஆலயம் இருக்கின்றது. அதில் அவர்கள் கட்டிடத்தை கட்டி ஒரு சிலையை வைத்து அதட்கு பெந்தேகோஸ் மாதா என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். 

2) நாங்கள் என்று கூறுகிறீர்களே, யார் யாரெல்லாம் அந்த "நாங்கள் " என்பதற்குள் அடங்குகின்றனர்? 

இங்கு உண்மையை எழுதுகிற யாவரும் அடங்குகிறார்கள். 

ஊர்க் கட்டுப்பாடு தொடர்பாக எனது கருத்திற்கு  தாங்கள் எதுவும் கூறவில்லையே,.... ஏன்? 

எது ஊர் கட்டுப்பாடு? அப்படி என்றால் தனி மனித சுதந்திரம் என்று ஒன்று இல்லையா? சடடபடி செய்யும் போது ஊர் கட்டுப்பாடு எங்கிருந்து வந்தது?

அப்படி என்றால் இலங்கை சிங்கள பவுத்த நாடு என்பதை ஏற்றுக்கொண்டு அவர்கள் சொல்வதை  செய்யுங்கள். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Cruso said:

 

உங்கள் ஊர்க் கட்டுப்பட்டை நீங்கள் மீறினால் அதற்கு எதிர்  விளைவுகள் உண்டு.

அதற்குத்  தாங்கள் உடன்படவில்லையென்றால் ஊரைவிட்டு வெளியேற  வேண்டும், எங்களைப்போல (அகதிகளாக 😉).

அத்துடன், ஊருக்கு ஊர்  (ஊர் நலனை முன்னிட்ட)  கட்டுப்பாடுகள் வேண்டும் என்பது என் நிலைப்பாடு. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

உங்கள் ஊர்க் கட்டுப்பட்டை நீங்கள் மீறினால் அதற்கு எதிர்  விளைவுகள் உண்டு.

அதற்குத்  தாங்கள் உடன்படவில்லையென்றால் ஊரைவிட்டு வெளியேற  வேண்டும், எங்களைப்போல (அகதிகளாக 😉).

அத்துடன், ஊருக்கு ஊர்  (ஊர் நலனை முன்னிட்ட)  கட்டுப்பாடுகள் வேண்டும் என்பது என் நிலைப்பாடு. 

ஊர் கட்டுப்பாடு இருப்பது நல்லதுதான். போதைப்பொருள் பாவிக்க கூடாது, மக்களுக்கு தொந்தரவு செய்யக்கூட்ட்து போன்ற நல்லவற்றை அமுல்படுத்தினால் நல்லது. மற்றப்படி ஊர் கட்டுப்பாடு என்று மக்கள்தவறாக சென்றால் ஏற்றுக்கொள்ள முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Cruso said:

ஊர் கட்டுப்பாடு இருப்பது நல்லதுதான். போதைப்பொருள் பாவிக்க கூடாது, மக்களுக்கு தொந்தரவு செய்யக்கூட்ட்து போன்ற நல்லவற்றை அமுல்படுத்தினால் நல்லது. மற்றப்படி ஊர் கட்டுப்பாடு என்று மக்கள்தவறாக சென்றால் ஏற்றுக்கொள்ள முடியாது. 

எது தவறு? 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kapithan said:

எது தவறு? 

தப்பு தப்பாக செய்வது எல்லாம் தவறுதான்.  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.