Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

missing-fe.jpg?resize=275,183&ssl=1

கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 10 பேர் மாயம்!

நாட்டில் கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 10 பேர் காணமற்போயுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு காணாமற்போனவர்களில் வெலிபன்ன பத்தினியாகொட பகுதியைச் சேர்ந்த 2 வயதுச் சிறுமியும், கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 14 வயதான பாடசாலை மாணவியொருவரும் அடங்குகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  வரக்காபொலையைச் சேர்ந்த 26 வயதான நபரும், மொரட்டுவையைச் சேர்ந்த 57 வயதான பெண்ணும், முல்லேரியாவைச் சேர்ந்த 67 வயதுடைய நபரும், தம்பகல்லையைச் சேர்ந்த ஒருவரும், காரைத்தீவைச் சேர்ந்த 53 வயதான நபரும், வவுணதீவைச் சேர்ந்த 42 வயதான நபரும், மெதகமவைச் சேர்ந்த  40 வயதான நபரும் இவ்வாறு காணமற் போயுள்ளனர் எனத் தெரிவிக்கப்படடுள்ளின்றது.

இந்நிலையில் குறித்த நபர்கைளைத் தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

https://athavannews.com/2024/1365674

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த இரு நாட்களில் 10 பேர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தகவல்

11 JAN, 2024 | 08:30 PM
image
 

கடந்த 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் சிறுவர் முதல் பெரியோர் வரையான 10 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வெலிபன்னை பிரதேசத்தில் கடந்த 9 ஆம் திகதி 2 வயது குழந்தை மற்றும் அவரது தாய் காணாமல் போயுள்ளார். காணாமல்போன பெண் ஒரு யூடியூப் சேனலை நடத்திச் செல்பவர் என வெலிபன்னை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 9 ஆம் திகதி யாழ்ப்பாணம், கோண்டாவில் பிரதேசத்தில் 14 வயது பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக கோண்டாவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி வறக்காப்பொலவில் 26 வயது யுவதியும் மொரட்டுவையில் 57 வயது பெண்ணும் முல்லேரியாவில் 67 வயது நபரொருவரும் தம்பகல்லவில் நபரொருவரும் அம்பாறை பிரதேசத்தில் 53 வயது நபரொருவரும் வவுணதீவு பிரதேசத்தில் 42 வயது நபரொருவரும் காணாமல் போயுள்ளனர்.

மேலும் நுவரொலியா ,மெதகம பிரதேசத்தில் 40 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட நபரொருவரும் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/173695

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.