Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tiran-alles.png?resize=699,375&ssl=1

“யுக்திய” செயற்பாட்டை யாராலும் நிறுத்த முடியாது : அமைச்சர் டிரான் அலஸ்!

யுக்திய சுற்றிவளைப்புச் செயற்பாடுகளை யார் சொன்னாலும் நிறுத்தப் போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு யுக்திய சுற்றிவளைப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிறைச்சாலைகளில் கூட்ட நெரிசல் தொடர்பாக உரிய அதிகாரிகள்தான் கவனம் செலுத்த வேண்டும்.

அதைவிடுத்து, சிறைச்சாலைகளில் கூட்டம் அதிகரிக்கிறது என்பதற்காக யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையை நிறுத்துமாறு யாரேனும் கோரினால், அது உண்மையில் நகைப்புக்குரிய விடயமாகவே பார்க்கப்படும்.

சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் குறைக்கும் வகையில், புதிய சிறைச்சாலைகள் இரண்டை நிர்மாணிக்க உரிய இடத்தை அடையாளம் காணுமாறு ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

உரிய ஆலோசனைகளைகளும் இதற்காக வழங்கப்பட்டுள்ளன. யுக்திய நடவடிக்கையானது, குடும்பங்களை பாதுகாக்கும் செயற்பாடாகும். பெற்றோரை, சமூகத்தை பாதுகாக்கும் ஒரு செயற்பாடாகும்.

யுக்திய செயற்பாட்டை யார் சொன்னாலும் நிறுத்தமாட்டோம். இதனை நிறுத்துமாறு ஜனாதிபதி பணிக்க மாட்டார் என நாம் உறுதியாக நம்புகிறோம்” என அமைச்சர் டிரான் அலஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1366431

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவே இது ஒரு நல்ல செயட்பாடு , மக்களும் இதனை வரவேட்கிறார்கள். இனி மேல் இலங்கை  முழுவதும் போலீஸ் பதிவு கொண்டு வரப்போகின்றார்கள். புதிதாக எவர் வந்தாலும் போலீசில் பதியப்பட வேண்டும். வாடகைக்கு இருப்போர் கண்காணிக்கப்பட உள்ளார்கள்.

போக்கு வரத்து ஒழுங்குகளை மீறுவோர் கமெரா மூலம் கண்காணிக்கப்பட்டு தண்டிக்கப்பட உள்ளார்கள். இதுக்காக கொழும்பு முழுவதும் கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இது சிலவேளைகளில் சிரமங்களை கொடுக்கும் செயட்பாடாக இருந்தாலும் நன்மைகளுமுண்டு. இனி தேவை இல்லாமல் கொழும்புக்கு வந்து சொந்தக்காரர்களுக்கு தொல்லை கொடுக்காமல் இருக்க சந்தர்ப்பம் உண்டு.😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Cruso said:

இனி தேவை இல்லாமல் கொழும்புக்கு வந்து சொந்தக்காரர்களுக்கு தொல்லை கொடுக்காமல் இருக்க சந்தர்ப்பம் உண்டு.

ரொம்ப…. பாதிக்கப்பட்டுளீர்கள் போல் தெரிகின்றது. 😁 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:
1 hour ago, Cruso said:

இனி தேவை இல்லாமல் கொழும்புக்கு வந்து சொந்தக்காரர்களுக்கு தொல்லை கொடுக்காமல் இருக்க சந்தர்ப்பம் உண்டு.

ரொம்ப…. பாதிக்கப்பட்டுளீர்கள் போல் தெரிகின்றது

நானும் கொழும்புக்கு போனால் குரூசோவோடு நிற்கலாமென்று நினைத்தேன்.

நீங்க சொல்வதைப் பார்த்தா ஆப்பு தான்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

நானும் கொழும்புக்கு போனால் குரூசோவோடு நிற்கலாமென்று நினைத்தேன்.

நீங்க சொல்வதைப் பார்த்தா ஆப்பு தான்.

 நிற்கலாம். பிரச்சினை இல்லை. ஆனால் உங்கள் கருத்துக்களை பார்க்கும்போது வரமாடடீர்கள் என்று எனக்கு தெரியும். 😜

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Cruso said:

 நிற்கலாம். பிரச்சினை இல்லை. ஆனால் உங்கள் கருத்துக்களை பார்க்கும்போது வரமாடடீர்கள் என்று எனக்கு தெரியும். 😜

நன்றி குரூசோ.

  • கருத்துக்கள உறவுகள்

'யுக்திய' நடவடிக்கை : தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் உட்பட மூவர் காத்தான்குடியில் கைது

25 JAN, 2024 | 04:10 PM
image

தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் உட்பட இருவர் யுக்திய போதை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 5 கிராம் 440 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு, அதே பிரதேசத்தில் மற்றுமொருவர் 860 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் கைதாகியுள்ளார். 

தற்போது நாடு முழுவதும் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பணிப்புரையின் கீழ், 'யுக்திய' போதை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையிலேயே இந்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவர்களில் 2 கிராம் 960 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் காத்தான்குடி அமானுல்லா வீதியில் வைத்து 32 வயதுடைய இளைஞர் ஒருவரும், 2 கிராம் 480 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் புதிய காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து மற்றொரு இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதேவேளை, கர்பலா பிரதேசத்தில் வைத்து 860 மில்லி கிராம் கேரள கஞ்சாவுடன் 48 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்க குறிப்பிட்டார்.

கைதான மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான மூவரில் புதிய காத்தான்குடியை சேர்ந்த சந்தேக நபர் மட்டக்களப்பு நீதிமன்ற உத்தரவுக்கமைய, ஏழு நாட்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். 

ஏனைய இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

இச்சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/174786

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.