Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU  06 FEB, 2024 | 05:49 PM

image

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்பில் உள்ள தரவுகளை அழித்து, சாதாரண கார்களாக பதிவு செய்து சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சொகுசு வாகனங்களை உடனடியாக  கைப்பற்றி அரசுடைமையாக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் செவ்வாய்க்கிழமை (06) இந்த உத்தரவை இலஞ்ச ஊழல்கள் விசாரணை ஆணைக் குழுவுக்கு பிறப்பித்துள்ளார்.

குறித்த இரண்டு சொகுசு வாகனங்களும் 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு, இரண்டு சாதாரண கார்களாக அவற்றைப்  பதிவு செய்து, சொகுசு  வாகன இறக்குமதிக்காக  அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய  வரி  இவற்றுக்குச் செலுத்தப்படாமை தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்துக்கு  அறிவித்ததையடுத்து நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

https://www.virakesari.lk/article/175734

  • கருத்துக்கள உறவுகள்

2005 ஆம் ஆண்டு வாங்கின வரி ஏய்க்கப் பட்ட கார்களை 2024 ஆம் ஆண்டு பறிமுதல் செய்ய நீதி மன்றம் உத்தரவு..!

கார்களின் தற்போதைய வயது பத்தொன்பது வருடங்கள்..!😀

  • கருத்துக்கள உறவுகள்
Just now, புங்கையூரன் said:

2005 ஆம் ஆண்டு வாங்கின வரி ஏய்க்கப் பட்ட கார்களை 2024 ஆம் ஆண்டு பறிமுதல் செய்ய நீதி மன்றம் உத்தரவு..!

கார்களின் தற்போதைய வயது பத்தொன்பது வருடங்கள்..!😀

அது வந்து ராஜபக்சேக்களின் காலத்தில் இறக்குமதி செய்யப்படட கார்கள் என்பதால் ஒன்றும் செய்யமுடியாமல் போய் விடடதாம். ரணில் சிறிசேன ஆட்சி குளறுபடியால் ஒன்றும் செய்யவில்லை. பின்னர் கோத்தாவின் ஆட்சி.

அதன் பின்னர் நாடு வங்குரோத்து. இப்படியாக போய் வேறு வழி இல்லாமல் எப்படி பணம் பார்க்கலாம் எண்டு கடந்த வருடம்தான் தேடுதல் வேடடைகள் தொடங்கி இப்போது கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இலங்கையில் எழுதப்படாத சடடமாக, அவர் கொள்ளையடித்தல் இவர் பாதுகாப்பார் , இவர் கொள்ளையடித்தல் அவர் பாதுகாப்பார். எனவே இங்கு கொள்ளையடிப்பது என்பது அரசியல்வாதிகளுக்கு சர்வ சாதாரணம். இனி கொஞ்சம் சிரமமான விடயம்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இனி கொஞ்சம் சிரமமான விடயம்தான். 

என்னாது அரசியல்வாதிகள் திருந்தி விட்டார்களா??

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

என்னாது அரசியல்வாதிகள் திருந்தி விட்டார்களா??

அரசியல் வாதிகள் திருந்தவில்லை. மக்கள் திருந்தி விடடார்கள். 😜

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Cruso said:

அரசியல் வாதிகள் திருந்தவில்லை. மக்கள் திருந்தி விடடார்கள். 😜

ஓ வீட்டை கொழுத்தி விடுவார்கள் சரியா?😁

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

ஓ வீட்டை கொழுத்தி விடுவார்கள் சரியா?😁

கெஹெலியாவுக்கு நடந்தது என்னவென்று தெரியும்தானே? மக்கள் போராட்டமும், நடவடிக்கையுமே அவரை  உள்ளே தள்ளியது. இன்னும் ராஜபக்சேக்களுக்கு எதிராக, சிறிசேனவுக்கு எதிராக தீர்ப்புக்கள் வரவும் மக்கள் எடுத்த சடட நடவ்டிக்கைகள்தான்.

தீ வைத்தது எல்லாம் அரசியல் (JVP) நடத்துபவர்களே ஒழிய பொது மக்கள் இல்லை. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.