Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 FEB, 2024 | 07:22 PM
image

நேர்கண்டவர் – ரொபட் அன்டனி  

க்கிய நூற்றாண்டு முன்னணி  அடுத்து வருகின்ற சகல தேர்தல்களிலும் போட்டியிடும். நாங்கள் இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்போம்.  எமது கட்சியில் வேட்பாளர்கள் தமது சொத்துக்களை  பிரகடனம் செய்யவேண்டும். அதன்பின்னரே   நாங்கள் வேட்புமனு கொடுப்போம் என்று ஐக்கிய நூற்றாண்டு முன்னணியின் தலைவர்  பிரசான் டி விஸ்ஸர் தெரிவித்தார். 

பதிமூன்றாவது திருத்த சட்டத்துக்கு அமைவாக மாகாண சபைகளை  பலப்படுத்த வேண்டும்.  13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுவது அவசியம்.  வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தெற்கு மக்களின் பிரச்சினைகளுடன் பார்க்கையில் வேறுபட்டவை.  அதுபோன்ற மத்திய மாகாண மக்களின் பிரச்சினைகள் வேறுபட்டவை.  எனவே அந்தந்த மாகாண மக்கள் தமது பொருளாதார செயல்பாடுகளை மேற்கொண்டு  செல்வதற்கான சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்  என்றும் அவர் குறிப்பிட்டார்.  

வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே  அவர் இதனை குறிப்பிட்டார்.   செவ்வியின் முழு விபரம் வருமாறு 

கேள்வி : இலங்கை ஐக்கியமடைகிறது  என்ற அமைப்பின் ஊடாக நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? 

பதில் நான் உயர்தரம் கற்றதன் பின்னர்  புலமை பரிசில் பெற்று அமெரிக்காவில் உயர்கல்வி கற்க சென்றேன்.  அங்கு சர்வதேச தொடர்புகள் தொடர்பாக  கற்றேன்.  அதன் பின்னர்  இலங்கைக்கு திரும்பி இலங்கை  ஐக்கியமடைகிறது என்ற அமைப்பை நிறுவி செயற்பட்டுக் கொண்டிருக்கிறேன். 

கேள்வி : இந்த அமைப்பை எப்போது தொடங்கினீர்கள்?  அதில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? 

பதில் 2006 ஆம் ஆண்டு இதனை நாங்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தோம்.  2008 இல் இதனை இலாப  நோக்கமற்ற நிறுவனமாக பதிவு செய்தோம்.   சகலரும் ஒன்றிணைந்த இலங்கை அடையாளம் என்பதே இந்த அமைப்பின் பிரதான நோக்கமாகும்.  அனைத்து இலங்கையர்களும் பிரதான பிரஜைகள்,  அனைவருக்கும் நீதி,    சமத்துவம்,  மற்றும் செழிப்பான நாடு என்பனவே எமது  பிரதான நோக்கங்களாக இருக்கின்றன.  எமது முன்னைய சந்ததியினருக்கு இதனை செய்ய முடியவில்லை.  நாம் அதனை செய்ய முயற்சிக்கிறோம்.  நீதி கிடைக்கின்ற,  சகலரும் வாழ முடியுமான ஒரு நாட்டை உருவாக்குவது எமது நோக்கமாகும்.  எமது தாத்தா பாட்டியை எம்மால் மாற்ற முடியாது.  ஆனால் எமது பிள்ளைகளை மாற்ற முடியும்.  நாம் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தபோது எனக்கு கிடைத்த தகவல் என்னவென்றால் இலங்கையில் இளைஞர் யுவதிகளில்  70 வீதமானோர்க்கு தமது இனம் தமது மதங்களுக்கு அப்பால் நண்பர்கள் இல்லை என்பதாகும்.  நண்பர்கள் இல்லாவிடின்  வெறுப்பு ஏற்படுவது இலகுவாகும்.  பிரச்சினைகள் இலகுவாகவே ஏற்படும்.  புரிந்துணர்வு இருக்காது.  தொடர்பாடலே அனைத்தையும் தீர்மானிக்கிறது.    இலங்கையில் 10,400 பாடசாலைகள் இருக்கின்றன.  அவற்றில் 112 பாடசாலைகள் மட்டுமே இரண்டு மொழிகளையும் மூலமாக கொண்டவையாக இருக்கின்றன.  மறுபுறம் அரசியல்வாதிகள் மக்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்தி ஊழல்களை செய்து மக்களை அச்சுறுத்தி தலைவர்கள் வாக்குகளை பெற்றுக்கொள்கின்றனர்.  உங்களுக்கு யாரும் இல்லை,  நாங்கள் மட்டுமே இருக்கின்றோம் என்று கூறி மக்களிடம் வாக்குகளை பெற முயற்சிக்கின்றனர்.  

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்தபோது ஆசியாவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்தது.    ஆனால் இன்று இனவாதம் மதவாதத்தை ஏற்படுத்தி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நாடு எங்கு இருக்கின்றது என்பது தெரிகிறது. 

கேள்வி : இலங்கை ஐக்கியமடைகிறது என்ற அமைப்பில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்?  அவர்கள் என்ன செய்கின்றார்கள்? 

பதில் எமது அமைப்பில் கிட்டத்தட்ட 30,000 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.  இலங்கை முழுவதும் 9 மாகாணங்களில்  9 அலுவலகங்கள் இருக்கின்றன.  இதில் முக்கியமாக எதிர்கால தலைவர்கள் மாநாடு என்ற கருப்பொருளை பாடசாலைகள் மட்டத்தில் முன்னெடுக்கிறோம்.   இதற்காக ஐந்துநாட்கள் முகாம் நடத்தி நாட்டின் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடுகிறோம்.  அதன்பின்னர் பாடசாலைகளுக்கு இடையில் தொடர்பாடல்களை ஏற்படுத்துகிறோம். இதுவரை கிட்டத்தட்ட 500 பாடசாலைகளில் இவ்வாறு வேலைத்திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.    முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில்  தகவல் தொழில்நுட்பம்  தொடர்பாக பாடநெறிகள் காணப்படுகின்றன.  திறமை விருத்தி,  தொழில் முயற்சியாண்மை,  உள்ளிட்ட பல பாடத்திட்டங்கள் அங்கே காணப்படுகின்றன.  இளைஞர்கள்,  யுவதிகள் அங்கு சென்று தமது திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும்.  இளைஞர்கள் யுவதிகளால் இந்த நாட்டை முன்னேற்ற முடியும்.  இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும்,  இந்த நாட்டுக்காக ஏதாவது  செய்யும் முடியும் என்ற நம்பிக்கையை நாங்கள் அவர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறோம்.  ஆனால் இதற்கு சகலரும் ஒற்றுமைப்பட வேண்டும்.  ஏனையவர்களின் துயரத்தை புரிந்து கொள்வது அவசியம்.  எமக்கு மட்டுமே துயரம் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். மற்றவர்களின் துயரத்தை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.  எமது இந்த செயற்பாட்டின் பிரதான நோக்கம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் எதிர்கால தலைவர்களை உருவாக்குதல்,  நீதியை நோக்கி பயணித்தல்,  என்பனவாகும். 

அதாவது கொரோனா வராமல் இருப்பதற்கு தடுப்பூசி  ஏற்றுவதைப் போன்று இனவாதம் வராமல் இருப்பதற்கான தத்துவங்களை நாங்கள் இளைஞர்கள் மத்தியில் விதைக்கிறோம்.  நாங்கள் சகல பல்கலைக்கழகங்களுடனும் இணைந்து செயல்படுகிறோம்.  அதேபோன்று ஐந்தாம் ஆண்டிலிருந்து எட்டாம் ஆண்டு வரையான மாணவர்களுக்காக சிறுவர் நிகழ்ச்சித்திட்டங்களையும் நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். 

கேள்வி : நீங்கள் சர்வதேச நிறுவனங்களுடனும் தொடர்பு பட்டிருக்கின்றீர்கள். இதனை எவ்வாறு முன்னெடுக்கின்றீர்கள் ? 

பதில் எமது இந்த முயற்சிகளுக்கு சர்வதேச மட்டத்தில் எமக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.  பொதுநலவாய நாடுகள் அமைப்பில்  உலகில் செயற்படுகின்ற  25 கீழ்மட்ட நிறுவனங்களில் ஒன்றாக நாம் அங்கீகரிக்கப்பட்டோம்.  உலகில் இருக்கின்ற சிறந்த இளைஞர்களை  கொண்டியங்கும் எட்டு நிறுவனங்களில் ஒன்ற ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம்.   இதனைப் பார்த்த பல சர்வதேச நிறுவனங்கள் எமது இந்த திட்டத்தை முன்னுதாரணமாக கொண்டு செயல்பட ஆரம்பித்தன.   இளைஞர்களை ஒருமுகப்படுத்திய,  நீதியை நல்லிணக்கத்தை நிலைநாட்டுகின்ற,   நாட்டை கட்டி எழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ஒரு செயற்பாட்டை ஏனைய பல நாடுகளும் பின்பற்ற ஆரம்பித்துள்ளன.  அதனடிப்படையில் கொங்கோ நாட்டில் இருந்து ஒரு குழுவினர் இலங்கைக்கு வந்து எமது இந்த செயற்பாடு தொடர்பாக கற்றறிந்து  அங்கு இதனை ஆரம்பித்து செயல்படுத்துகின்றனர்.  நானும் யாழ்ப்பாணம் மாத்தறை மாவட்டங்களில் இளைஞர்களை அழைத்துக் கொண்டு கொங்கோ நாட்டுக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை கற்றறிந்தோம்.   கென்யா உகண்டா போன்ற நாடுகளிலும் எமது அமைப்பை போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.  13 நாடுகளில் எமது இந்த செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்படுகிறது.  

கேள்வி : சரி இந்த பின்னணியில் ஏன் அரசியல் கட்சி ஒன்றை அதாவது நூற்றாண்டு ஐக்கிய முன்னணி என்ற அரசியல் கட்சியை ஏன் நீங்கள் ஆரம்பித்தீர்கள் ?  

பதில் நாம் இந்த எமது இலங்கை ஐக்கியப்படுகிறது என்ற செயற்பாட்டை  முன்னெடுத்து செல்லும்போது   பல அரசியல் கட்சிகள் இனவாதத்தைக் கொண்டு அரசியல் செய்வதை நாம் அவதானித்தோம்.  நாம் இனவாதத்தை போக்கி நல்லிணக்கத்தை மேற்கொள்ள எவ்வளவு முயற்சித்தாலும் அரசியல் கட்சிகள் அதற்கு மாறாக செயல்படும் போது இதனை மாற்றுவது கடினமானதாக எமக்கு தெரிந்தது.  எனவே நாம் எமது அரசியல் கல்வியகம்  ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்து முதலில் நூற்றாண்டு கல்வியாகத்தை ஆரம்பித்தோம். 

அதாவது இலங்கை சுதந்திரமடைந்து 100 ஆண்டுகளாகும் போது 2048  இல் நாம் எவ்வாறான இலக்குகளை அடைய வேண்டும் என்பது தொடர்பாக சிந்தித்து இந்த நிறுவனத்தை ஆரம்பித்தோம்.  பத்து இலக்குகளை அடைய வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.  அதில் ஆறு கொள்கை திட்டங்களை நாங்கள் இளைஞர்  யுவதிகளுக்கு கற்பிக்கின்றோம்.  அரசியல்,சுகாதாரம்,  கல்வி,  விவசாயம் மற்றும்   நல்லாட்சி மற்றும் சகலரும் இணைந்த முன்னெடுப்பு  ஆகிய விடயங்களை கற்பிக்கின்றோம்.  மூன்று மாதங்கள்  அவர்களுக்கு திறமைகளை நாம் கற்பிப்போம்.   பின்னர் ஏனைய பல்வேறு விடயங்கள் கற்பிக்கப்படும்.  அப்போது அந்த பாடத்திட்டத்திற்கு கிட்டத்தட்ட இலங்கை முழுவதும் இருந்து 1000 இளைஞர்கள்  விண்ணப்பித்தனர்.  இதனூடாக இளைஞர்கள் மிகவும்  ஆர்வமாக இருக்கின்றனர் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்.  ஆனால் அவ்வாறு எமது கல்வியகத்தில் கல்விகற்ற எதிர்கால தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகளில் இடம் கிடைக்கவில்லை.  எனவே தான் நாம் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்க வேண்டியேற்பட்டது.  நாம் அதனை ஆரம்பித்தோம். 

அதனூடாக  எதிர்கால தலைவர்கள் என்ற பாடத்திட்டத்தை கற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேறு எந்த அரசியல் கட்சிகளையும் நாடாமல் எமது கட்சியிலே சேர்ந்து போட்டியிட முடியும். 

கேள்வி : அப்படியானால் அடுத்துவரும்  அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவீர்களா?

பதில் அடுத்து வருகின்ற சகல தேர்தல்களிலும் நாங்கள் போட்டியிடுவோம்.  நாங்கள் இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்போம்.  எமது கட்சியில் வேட்பாளர்கள் தமது சொத்துக்களை  பிரகடனம் செய்யவேண்டும். அதன்பின்னரே   நாங்கள் வேட்புமனு கொடுப்போம்.   ஒவ்வொரு வருடமும் பிரகடனம் செய்ய வேண்டும்.  இப்போது பாராளுமன்றத்தில் 225 எம்.பி.க்களில் 15 பேர் அளவிலேயே   சொத்துப்பிரகடனம் செய்துள்ளனர்.  

35 வீதமான வேட்பாளர்கள் 35 வயதுக்கு கீழ் பட்டவர்கள்.   தற்போது பாராளுமன்றத்தில் 35 வயதுக்குட்பட்ட 11 பேர் மட்டுமே இருக்கின்றனர்.  அதில் 10 பேர் அரசியல் ரீதியான குடும்பங்களை பின்னணியாக கொண்டவர்கள்.  இலங்கையில் 1931 ஆம் ஆண்டு  ஐந்து வீத பெண் பிரதிநிதித்துவம்  இருந்தது. 2023 ஆம் ஆண்டிலும் பாராளுமன்றத்தில் ஐந்து வீத  பெண்களே இருக்கின்றனர்.  எனவே எமது கட்சியில் வேட்பாளர்களில் 50 வீதமானோர்  பெண்கள்.

கேள்வி : உங்கள் கட்சியின் கட்டமைப்பு என்ன?

பதில் எமது கட்சிக்கு ஒரு நிறைவேற்று குழு  உள்ளது. அதன் ஊடாக தலைவர் நியமிக்கப்படுவார்.  தற்போது இந்த வருடத்துக்கு  நானே எமது கட்சியின் தலைவராக இருக்கின்றேன்.  அதேபோன்று சிரேஷ்ட பிரஜைகள் எமக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.  சகல மாகாணங்களில் இருந்தும்  நிறைவேற்று குழுவில் உறுப்பினர்கள்  உள்ளனர். 

கேள்வி : உங்கள் கட்சியின்  இலக்கு என்ன? 

பதில் சுதந்திரம் பெற்ற நூறு வருடங்கள் நிறைவடையும்போது இலங்கையின்   அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைப்போம். நிச்சயமாக எதிர்கால சந்ததியினருடன் இணைந்து அதனை செய்ய முடியும்.  ஊழலற்ற பொருளாதார சுபிட்சமான நாட்டை உருவாக்க வேண்டும்.  மக்கள் வறுமையாக இருப்பதே அரசியல்வாதிகளுக்கு சாதகமாக அமைகிறது.  எமது கட்சியின் நிறைவேற்றுக் குழுவில் சர்வதேச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற கல்விமான்கள் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள்.  

கேள்வி : இலங்கையில் நீங்கள் அடையாளம் காண்கின்ற இளைஞர் யுதிகளின் பிரதான பிரச்சனைகள் என்ன? 

பதில் முக்கியமான சில பிரச்சினைகளை நாங்கள் அடையாளம் கண்டு இருக்கின்றோம். முதலாவதாக எமது கல்வி திட்டத்தை குறிப்பிட வேண்டும். எமது கல்வி திட்டத்தில் மேலே பயணிப்பதற்கு ஏணி இருக்கின்றது. ஆனால் ஏனியை பிடித்து எங்கே செல்வது என்பது இங்கு தெளிவாக இல்லை.  அடுத்ததாக வேலையின்மை காணப்படுகிறது.  தமது திறமைக்கேற்ற தொழிலை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது இலங்கையில் இருக்கின்ற பிரதான பிரச்சினையாகும்.  அதனால் திறமையானவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர்.  சிறுபான்மை இளைஞர்களுக்கு  தமது அடையாளம் தொடர்பான ஒரு பிரச்சினை காணப்படுகிறது.  அவர்களுக்கு   நீதி கிடைக்கும் என்று நம்பிக்கையில் இல்லை.  தமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று அவர்கள் நம்பவில்லை.  வடக்கில் உள்ள எனது சகோதர சகோதரிகளின் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.  அவர்களின் காயங்கள் ஆற்றப்பட வேண்டி இருக்கிறது.  அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.  அங்கே ஆற்றுப்படுத்தல் இல்லை. இறந்தவர்களை  நினைவு கூருவதற்கு  உரிமை இருக்க வேண்டும்.

கேள்வி : தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளியே வருவதற்கு உங்கள் திட்டங்கள் என்ன? 

பதில் இலங்கையில் இருந்த சென்ற 3 மில்லியன் மக்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றார்கள்.  அவர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு விருப்பமாக இருக்கின்றனர்.  ஆனால் இங்குள்ள நிலைமை அவர்களை தடுக்கிறது.  அந்த மூன்று மில்லியன் மக்கள் தமது நாடுகளின் பொருளாதாரத்துக்காக கிட்டத்தட்ட 200 பில்லியன் டொலர்களை பங்களிப்பு செய்கின்றனர்.  இலங்கையின் பொருளாதாரம் வெறுமனே 80 பில்லியன் டொலர்களாகும்.  இங்கு தொழில்சார் தன்மை வெளிப்படைத்தன்மை ஊழலற்ற தன்மை இருந்தால் நிச்சயமாக அந்த முதலீடுகளை பெற்றுக் கொள்ள முடியும்.  தற்போது வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இளைஞர்கள் 7 பில்லியன் டொலர்களை அனுப்புகின்றனர்.  அதனை 20 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க எம்மால் முடியும். அடுத்ததாக வர்த்தகங்களை செய்வதற்கான இலகு தன்மை உறுதிப்படுத்தப்படுவது அவசியம்.  அந்தநிலையை உறுதிப்படுத்தினால் இங்கு அதிகளவு வெளிநாட்டவர்கள் வியாபாரம் செய்ய வருவார்கள்.  சகல விடயங்களும் டிஜிட்டல் மையமாக வேண்டும்.  அனைத்து முதலீடுகளும் கொடுக்கல் வாங்கல்களும் டிஜிட்டல் மையத்தில் இடம் பெற வேண்டும்.  இவர்களுக்கு எரிபொருள் க்யூ ஆர் கோட்டா முறையை    செய்வதற்கே மூன்று மாதங்கள்  சென்றன.  இந்தியா இந்தோனேசியா வியட்நாம் தாய்லாந்து சீனா போன்ற நாடுகளில் இருந்து வர்த்தக சந்தர்ப்பங்களை நாங்கள் பெற வேண்டும்.   சுற்றுலாத்துறை ஊடாக  வருடம் ஒன்றுக்கு ஐந்து பில்லியன் டொலர்களே உச்சபட்சமாக இலங்கை பெற்றிருக்கின்றது.    நான்கு வருடங்களில் அதனை 15 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க முடியும்.  சிறுவர்களை இலக்கு வைத்த சுற்றுலாத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.  இலங்கையை சர்வதேச மாநாட்டு தலமாக உருவாக்க முடியும்.  அதுமட்டுமின்றி சர்வதேச மட்டத்தில் இலங்கையை நேசிக்கின்ற நாடுகள் இருக்கின்றன.   எம்மால் அந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இருக்கிறது.

கேள்வி : இலங்கையில் வடக்கு கிழக்கு மக்கள் நீண்ட காலமாக தமக்கான அரசியல் தீர்வை கோரி வருகின்றனர்.  அரசியல் தீர்வு திட்டம் தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன?

பதில் பதிமூன்றாவது திருத்த சட்டத்துக்கு அமைவாக மாகாண சபைகளை  பலப்படுத்த வேண்டும்.  13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுவது அவசியம்.  வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தெற்கு மக்களின் பிரச்சினைகளுடன் பார்க்கையில் வேறுபட்டவை.  அதுபோன்ற மத்திய மாகாண மக்களின் பிரச்சினைகள் வேறுபட்டவை.  எனவே அந்தந்த மாகாண மக்கள் தமது பொருளாதார செயல்பாடுகளை மேற்கொண்டு  செல்வதற்கான சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.  மத்திய அரசாங்கம் தலைமைத்துவம் வழங்க முடியும்.  ஆனால் அதிகாரங்களை பரவலாக்கும் போது அங்கு வெளிப்படை தன்மையும் போட்டித் தன்மையும் உருவாகின்றன.  ஆனால் இங்கு சகலதையும் மத்திய அரசாங்கம் வழங்கும் வரை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.  ஒரு மாகாணம்  தனது பொருளாதாரத்தை இயக்குவதற்கான உரிமையை வழங்க வேண்டும்.  பொருளாதாரம்  சட்டம் ஒழுங்கு காணி உரிமை போன்ற விடயங்கள் வழங்கப்படுவது  அவசியமாகும்.    கொழும்பில் இருக்கின்ற மாணவிக்கும் மொனராகலையில் வளர்கின்ற மாணவிக்கும் இடையிலான திறமைகளில் வித்தியாசம் இருக்கும்.  

மேலும்  இங்கு சகலர் மத்தியிலும் அவநம்பிக்கை காணப்படுகிறது.  முதலில் மக்கள் மத்தியில் இந்த நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்.  

கேள்வி : இந்த நாட்டில் ஒரு   அரசியல்  கலாசார மாற்றத்தை செய்ய முடியும் என்று எப்படி நீங்கள் இவ்வளவு திடமாக நம்புகிறீர்கள் 

பதில் உலகில் இதற்கு முன்னர் பல நாடுகள் மாறி இருக்கின்றன.  எம்மைவிட யுத்தம் இருந்த எம்மைவிட வறுமையாக இருந்த நாடுகள் இன்று முன்னேறி இருக்கின்றன.  சிங்கப்பூர் வியட்நாம் இந்தோனேசியா மலேசியா    ருவாண்டா கானா போன்றவற்றை குறிப்பிடலாம்.  நாம் இன்றும் எமது இனம் எமது மதம் தொடர்பாகவே சிந்திக்கின்றோம். அந்த செயற்பாடு மாறவேண்டும்  திருடர்கள் எமது வீட்டை உடைத்து திருடிவிட்டு செல்லலாம்.   அதனை நாம் தடுக்க வேண்டும்.   மாறாக நாம் வீட்டை விட்டு ஓடிவிட முடியாது.  தமிழ் மக்களை பொறுத்தவரையில் அவர்கள்  பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.    அதனால் அவர்களுக்கு எதிர்பார்ப்பு இல்லாமல் இருக்கின்றது.   ஆற்றுப்படுத்தல் இல்லை.     1983 ஆம் ஆண்டு இந்த நாட்டில் நடந்ததை  இன்னும் தமிழ் மக்கள் மறக்காமல் இருக்கலாம்.  நான் அண்மையில் கனடாவுக்கு சென்றபோது அங்கு ஒருவர் 1983 ஆம் ஆண்டு கலவரம் தற்போது நடைபெற்றது போன்று என்னுடன் பேசினார்.    அந்த வேதனையை யாரும் ஆற்றுப்படுத்த இன்னும் முயற்சிக்கவில்லை என்பதே இங்கே குறைபாடாக இருக்கிறது.  குறைந்தபட்சம்  அரசாங்கம் இதுவரை மன்னிப்பு கேட்டிருக்கின்றதா ? 

கேள்வி : உண்மையை கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில்... 

பதில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும்.  காணாமல் போனோர்  தொடர்பான அலுவலகம் செயற்படுவது அவசியம்.  உலகத்திற்காக அல்ல,  எமக்காக  அதனை செய்ய வேண்டும்.

https://www.virakesari.lk/article/176128

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.