Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாகாணசபை முறையை நீக்கவேண்டும் - ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் வேண்டுகோள் விடுக்க லங்காலோகய தீர்மானம்

Published By: RAJEEBAN   19 FEB, 2024 | 03:40 PM

image

மாகாணசபைமுறையை நீக்கவேண்டும் என்ற யோசனையை  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களிடமும் முன்வைக்கவுள்ளதாக லங்காலோகய என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

தென்மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தனவின் மகன் பசன்ட  யாப்பா அபயவர்த்தன தலைமையிலான அமைப்பொன்றே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

லங்காலோகய என்ற அமைப்பு மாகாண சபை முறையை நீக்கிவிட்டு மாவட்ட சபைகளை ஏற்படுத்தும் யோசனையை முன்வைத்துள்ளது.

பிரதேச சபைகளை வலுப்படுத்தும் யோசனையையும் இந்த அமைப்பு முன்வைத்துள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களிடமும் மாகாண சபை முறையை நீக்கவேண்டும்  என்ற யோசனையை முன்வைக்கவுள்ளோம் என தெரிவித்துள்ள  பசன்ட  யாப்பா அபயவர்த்தன மாவட்ட சபைகளை உருவாக்குங்கள் பிரதேசசபைகளை வலுப்படுத்துங்கள் என கோரிக்கை விடுக்க இருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட அமைச்சர்களை நியமிக்கவேண்டும் இதன் காரணமாக மாவட்டங்களின் அபிவிருத்தியை துரிதப்படுத்தமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகள் வெள்ளை யானைகள் அவற்றினால் 1988 முதல் 7000பில்லியனை வீணடித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகளை தொடரவேண்டிய தேவையில்லை அவசியமில்லை வடக்கில் எவரும் மாகாணசபைகளுக்காக குரல் கொடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தேர்தலை நடத்துமாறு இந்தியா கூட அழுத்தம் கொடுக்கவில்லை இவ்வாறான சூழ்நிலையில் மாகாணசபைகளை தொடரவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/176771

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்குள்ள நிலைமையை பொறுத்து அடிக்கடி எழுதும் செய்திதான் இது. இப்போது பிரதேச சபை, கிராம சபை (இப்போது இல்லை) போதுமென்ற நிலைக்கு சிங்களவர்கள் வந்திருக்கிறார்கள்.

தமிழர்கள் இவ்வளவு உயிரிழப்புக்களை சந்தித்திருக்கிறார்கள் எனவே சுயாட்சி , சமஷடி என்று கேட்க்கிறோம். சிங்களவர்கள் எத்தனை ஆயிரம் போர் வீர்கள், சிங்கள மக்களைப்பழி கொடுத்திருக்கிறோம். எனவே இதட்கு மேல் கொடுக்க முடியாது என்கிறார்கள்.

நமது அரசியல் வாதிகள் என்ன சொல்லுகிறார்கள்? இத்தனை தசாப்தங்களாக நமபிய நாம் இனியும் நம்புவோம். 

  • கருத்துக்கள உறவுகள்

மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்கு மேலான எந்த அதிகாரத்தையும் தமிழருக்குத் தரமுடியாது என்று ஜெயார் 1984 இலேயே கூறிவிட்டான். இவற்றிலும் 2 அல்லது 3 மாவட்ட அதிகார சபைகள் மட்டும்தான் தமிழரின் கைகளில் இருக்கும் என்று கூறியிருக்கிறான். இது, சிங்கள குடியேற்றங்கள் ஆரம்பித்த காலப்பகுதியில் நடந்தது. இன்றோ சிங்களக் குடியேற்றங்களின் எண்ணிக்கையும் விஸ்த்தரிப்பும் பன்மடங்காகி வருகிறது. இந்த நிலையில் ஒரேயொரு மாவட்ட சபைதான் தமிழரின் கைகளில் தரப்படும் சென்று சொன்னாலும் ஆச்சரியப்படுதற்கில்லை.

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான் இது. தாயகத்தில் இருக்கும் தமிழரும், புலம்பெயர் தமிழரும் இணைந்து தமிழரின் பொதுவான கோரிக்கையினை முன்வைக்கவேண்டும். சிங்களவன் விரும்பித் தருவதை ஏற்றுக்கொள்ளலாம் என்றிருந்தால் அவன் எதையுமே தரப்போவதில்லை. ஏனென்றால், தமிழருக்கு எதனையும் கொடுக்க அவனுக்கு விருப்பமில்லை. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.