Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்பரப்பினுள் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்றொழிலாளர்களின் தொழில் முதல்களை அழிப்பதற்கும் எதிராக வடக்கு மாகாண கடற்றொழில் இணையத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது இன்று (05.3.2024) யாழ் மாவட்டச் செயலகத்திலிருந்து ஆம்பமாகி உள்ளது. 

 

 

வீதித் தடைகள்

போராட்டக்காரர்கள் இந்திய துணை தூதரகம் சென்று மகஜர் ஒன்றை கையளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பொலிஸார் இந்திய துணை தூதரகத்திற்குள் போராட்டக்காரர்களை செல்ல விடாது வீதித் தடைகளையிட்டு மறித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

யாழில் இந்திய துணை தூதரகத்திற்குள் நுழைய முற்பட்ட மக்கள்! பொலிஸார் குவிப்பு | A Massive Demonstration By Fishermen In Jaffna

இந் நிலையில் பொலிஸாரால் இடைமறிக்கப்பட்ட போராட்டகாரர்கள் இலங்கை கடற்றொழிலாளர்களின் கடல் வளத்தை அழிக்காதே, தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்து, கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர்.

யாழில் இந்திய துணை தூதரகத்திற்குள் நுழைய முற்பட்ட மக்கள்! பொலிஸார் குவிப்பு | A Massive Demonstration By Fishermen In Jaffna

மேலும் இந்த நாட்டில் வாழுகின்ற நாங்கள் எங்களது பாதுகாப்பையும் உரிமையையும் வலியுறுத்தி தரையில் போராட்டத்தை நடாத்துகிற போது கம்பிக்கூடுகளை வைத்து எங்களை தடுத்து நிறுத்துகிற இலங்கை படைகள் கடலில் எங்கள் பகுதியில் அத்துமீறி எங்களையே தாக்குகிற இந்திய கடற்றொழிலாளர்களை ஏன் தடுத்து நிறுத்த முடியாதுள்ளது என கேள்வி எழுப்பிய கடற்றொழிலாளர்கள் எங்களை கட்டுப்படுத்த முன்னர் இந்தியர்களை கட்டுப்படுத்துங்கள் எனவும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இந்திய துணை தூதரகத்திற்குள் நுழைய முற்பட்ட மக்கள்! பொலிஸார் குவிப்பு | A Massive Demonstration By Fishermen In Jaffna

https://tamilwin.com/article/a-massive-demonstration-by-fishermen-in-jaffna-1709618132

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தை முடக்கி தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் - றேகன் எச்சரிக்கை!

Published By: VISHNU

06 MAR, 2024 | 06:46 PM
image
 

 

எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு முன்னால் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து தூதரகத்தின் செயல்பாடுகளை முடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என வழி வடக்கு மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவர் பாக்கியநாதன் றேகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட மீனவ அமைப்புகளின் சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் இந்தியத் துணை தூதரகத்திற்கு முன்னால் இழுவை மடி தொழிலுக்கு எதிரான போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தோம். அதற்கான எந்த ஒரு தீர்வுகளும் இந்திய துணை தூதரகத்தால் எங்களுக்குப் பெற்றுத் தரப்படவில்லை.

இந்தியத் துணைத் தூதரகத்திடம் நாங்கள் மகஜரை கொடுத்துள்ளோம். அவர்கள் இன்று வரை எங்களுக்கு பதில் தரவில்லை என்றால், இந்தியத் துணைத் தூதரகமானது யாழ்ப்பாணத்தில் டிசா கொடுப்பதற்கு மட்டும் தான் இருக்கிறது. எங்களுக்கான பதில் இதுவரை கிடைக்கவில்லை.

இந்திய மக்களால் தான் எங்களுக்குப் பிரச்சனையாக உள்ளது. ஆனால் அந்தப் பிரச்சினையைத் தீர்க்குமாறு கூறினாலும் தூதரகமானது அதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றது. எத்தனையோ தடவை எமது கடல் தொழில் சமூகம் சார்பில் மகஜர்களை இந்திய தூதரகத்திடம் கொடுத்துள்ளோம். ஆனால் இன்றுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இனிவரும் நாட்களில் நாங்கள் இந்திய துணை தூதரகத்திற்கு முன்னால் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி ஏற்படும். அவர்களது சேவைகளை முடக்க வேண்டிய கட்டம் ஏற்படும். ஏனென்றால் இவர்கள் மக்களுடைய பிரச்சினைகளை இதுவரை இந்திய நாட்டு மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லவில்லை. இது எமக்கு மிகவும் கவலையை அளிக்கிறது. எனவே இந்தியத் துணைத் தூதரகம் மத்திய அரசின் பதிலை எமக்குக் கூற வேண்டும் என்றார்.

யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தை முடக்கி தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் - றேகன் எச்சரிக்கை! | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.