Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தைவானில் 25 ஆண்டுகளில் காணாத அளவு பெரிய நிலநடுக்கம்

பட மூலாதாரம்,TVBS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், கெல்லி Ng மற்றும் ரூபர்ட் விங்ஃபீல்ட்-ஹேயஸ்
  • பதவி, பிபிசி செய்திகள், சிங்கப்பூர் மற்றும் தாய்பெய்
  • 3 ஏப்ரல் 2024, 03:32 GMT
    புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர்

தைவானின் கிழக்குக் கடற்கரையில் இன்று (புதன்கிழமை, ஏப்ரல் 3-ஆம் தேதி) 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தைவான் தீவு மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நிலவியல் ஆய்வு மையத்தின் படி, இந்த நிலநடுக்கத்தின் தோற்றப்புள்ளி, தைவானின் ஹுவாலியன் (Hualien) நகருக்கு தெற்கே 18.கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்த நிலநடுக்கம், இந்திய நேரப்படி அதிகாலை 5:30 மணிக்கு (தைவான் நேரப்படி காலை 07:58 மணி) 15.5 கி.மீ. ஆழத்தில் தாக்கியது. இது ஒன்பது பின் அதிர்வுகளையும் ஏற்படுத்தியது.

ஹுவாலியனில் பல கட்டிடங்கள் பாதி இடந்த நிலையிலும் ஆபத்தான கோணங்களில் சாய்ந்த நிலையிலும் காணப்படுகின்றன.

தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவே என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தைவானிய சிப் தயாரிப்பு நிறுவனமான டி.எஸ்.எம்.சி (TSMC), தனது ஊழியர்களின் பாதுகாப்பிற்காக சின்ச்சு (Hsinchu) மற்றும் தெற்கு தைவானில் உள்ள சில தொழிற்சாலைகளை காலி செய்துள்ளதாகக் கூறியுள்ளது. அதன் பாதுகாப்பு அமைப்புகள் எப்போதும்போல இயங்குகின்றன என்றும் கூறியுள்ளது.

ஆப்பிள் மற்றும் என்விடியா உள்ளிட்ட பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான செமிகண்டக்டர்களின் முக்கிய தயாரிப்பாளராக டி.எஸ்.எம்.சி நிறுவனம் உள்ளது.

மீட்புப் பணிகள் தீவிரம்

தைவான் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,AP

தைவான் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,NATIONAL FIRE AGENCY

ஹுவாலியன் மற்றும் பிற பகுதிகளில் இடிபாடுகளிலிம் கட்டிடங்களிலும் சிக்கியுள்ள மக்களைச் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தைவானின் தேசிய தீயணைப்பு முகமையின் கூற்றுப்படி, சுரங்கப்பாதைகளிலும் பலர் சிக்கியுள்ளனர்.

ஹுவாலியனில் உள்ள யுரேனஸ் கட்டிடத்தில் இருந்து குறைந்தது 12 பேர் மீட்கப்பட்டனர்.

தாய்பெயில், ஜோங்ஷான் மாவட்டத்தின் ஒரு கட்டிடத்தில் சிக்கிய லிஃப்டில் இருந்து இரண்டு பேர் மீட்கப்பட்டனர். நியூ தாய்பெய் நகரில் ஸிண்டியான் மாவட்டத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து 7 பேர் மீட்கப்பட்டனர்.

தைவான் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

தைவானின் உள்ளூர் ஊடகங்கள், இடிந்து விழுந்த குடியிருப்புக் கட்டிடங்களின் காட்சிகளைக் ஒளிபரப்பின

இடிபாடுகளின் காட்சிகள்

தைவானின் தலைநகர் தாய்பெயில் இருந்து பகிரப்பட்ட வீடியோக்கள், கட்டிடங்கள் பலமாகக் குலுங்குவதையும், அலமாரிகளில் இருந்து பொருட்களை தெறித்து விழுவதையும், மேஜை நாற்காலிகள் கவிழ்வதையும் காட்டுகின்றன.

மலைகள் நிறைந்த தைவானின் உட்புறப் பகுதிகளில், நிலநடுக்கம் மிகப்பெரிய நிலச்சரிவை எற்படுத்தியிருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் காட்டுகின்றன. ஆனால் அங்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு என்ன என்று இன்னும் தெரியவில்லை.

தைவானின் உள்ளூர் ஊடகங்கள், இடிந்து விழுந்த குடியிருப்புக் கட்டிடங்களின் காட்சிகளைக் ஒளிபரப்பின. மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்படும் காட்சிகளும் காட்டப்பட்டன. நிலநடுக்கத்தின் தாக்கத்தால் வாகனங்கள் நொறுங்கிக் கிடப்பதையும், கடைகளில் பொருட்களை கலைந்து கிடப்பதையும் உள்ளூர் தொலைக்காட்சி சேனலான டிவிபிஎஸ் (TVBS) ஒளிபரப்பிய காட்சிகள் காட்டுகின்றன.

தைவான் முழுவதும் மின்வெட்டு நிலவுவதாகவும், இணையச் சேவைகள் தடைபட்டிருப்பதாகவும் இணைய கண்காணிப்புக் குழுவான NetBlocks தெரிவித்துள்ளது.

 
தைவான் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

மலைகள் நிறைந்த தைவானின் உட்புறப் பகுதிகளில், நிலநடுக்கம் மிகப்பெரிய நிலச்சரிவை எற்படுத்தியிருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் காட்டுகின்றன

அண்டை நாடுகளில் சுனாமி எச்சரிக்கைகள்

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அண்டை நாடான ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையில் 3மீ உயரமான சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் முன்னர் எச்சரித்திருந்தனர்.

ஆனால் அதன்பின்னர், ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் இந்த எச்சரிக்கையின் தீவிரத்தைக் குறைத்தது. ஆனால் மக்கள் ‘அதே தீவிரத்துடன் பின் அதிர்வுகள் குறித்து விழிப்புடன்’ இருக்குமாறு கேட்டுக் கொண்டது.

நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே பிலிப்பைன்ஸின் நில அதிர்வு ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. மக்கள் உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டது.

பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, சுனாமி அச்சுறுத்தல் ‘கடந்து விட்டதாக’ கூறியது.

சீனாவின் தென்கிழக்கு புஜியான் மாகாணத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

"இந்த நிலநடுக்கம் நிலத்திற்கு அருகில் உள்ளது. ஆழமற்றதாக உள்ளது. இது தைவான் மற்றும் அதன் தீவுகள் முழுவதும் உணரப்பட்டுள்ளது. இது 25 ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்களிலேயே மிகவும் வலுவானது," என்று தைபேயின் நில அதிர்வு மையத்தின் இயக்குனர் வூ சியென் ஃபூ கூறினார்.

இதற்குமுன், 1999-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தைவானில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 2,400 பேர் இறந்தனர், 5,000 கட்டிடங்கள் இடிந்தன.

தைவான் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

ஆப்பிள் நிறுவனத்திற்கான செமிகண்டக்டர்ளை டி.எஸ்.எம்.சி நிறுவனம் தயாரிக்கிறது

உலகப் பொருளாதாரத்தில் தைவானின் முக்கியத்துவம் என்ன?

கணினி சிப் தயாரிப்பு நிறுவனமான தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் (டி.எஸ்.எம்.சி) மற்றும் ஐபோன் பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான ஃபாக்ஸ்கான் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் தாயகமான தைவான் உலகப் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்காற்றுகிறது, என்கிறார் சிங்கப்பூரில் இருக்கும் பிபிசியின் வணிகச் செய்திகள் நிருபர் பீட்டர் ஹாஸ்கின்ஸ்.

ஆப்பிள் மற்றும் என்விடியா உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான குறைகடத்திகளின் (செமிகண்டக்டர்) முக்கிய தயாரிப்பாளராக டி.எஸ்.எம்.சி நிறுவனம் உள்ளது.

ஆப்பிள் நிறுவனத்திற்கான பாகங்களைத் தயாரிப்பதுடன், அமேசான் கிண்டில், நிண்டெண்டோ மற்றும் சோனி நிறுவனங்களுக்கான வீடியோ கேம் சாதனங்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களையும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, டி.எஸ்.எம்.சி நிறுவனம் அதன் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக அதன் சில தொழிற்சாலைகளில் இருந்து அவர்களை வெளியேற்றியதாகவும், தற்பொது அவர்கள் தங்கள் பணியிடங்களுக்குத் திரும்பத் தொடங்கியிருப்பதாகவும் கூறியிருக்கிறது.

நிலநடுக்கம் அதன் தயாரிப்புச் செயல்பாடுகளில் என்ன தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்த விவரங்களை உறுதிப்படுத்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான தகவல்களை பிபிசி கேட்டபோது, அதற்கு ஃபாக்ஸ்கான் பதிலளிக்கவில்லை.

தைவானின் தொழில்நுட்ப நிறுவனங்கள் சர்க்யூட் போர்டுகள் மற்றும் மேம்பட்ட கேமரா லென்ஸ்கள் உள்ளிட்ட பாகங்களையும் உற்பத்தி செய்கின்றன.

நைகி, அடிடாஸ் போன்ற உலகளாவிய ஆடை பிராண்டுகளுக்கும் தைவானில் இருக்கும் நிறுவனங்கள் பொருட்களை விநியோகம் செய்கின்றன.

https://www.bbc.com/tamil/articles/ckvwwzq3jx9o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாய்வானில் பூகம்பம் - சுனாமி எச்சரிக்கை

03 APR, 2024 | 06:22 AM
image

தாய்வானின் கிழக்கு கடலோர பகுதியை தாக்கியுள்ள பாரியபூகம்பத்தை( 7.2) தொடர்ந்து ஜப்பான் அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

ஜப்பானின் தென்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தாய்வானின் கிழக்கு நகரமானஹ_வாலியனில் பல கட்டிடங்கள் இடிந்துவீழ்ந்துள்ளதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

டோக்கியோவிலிருந்து தென்பகுதியில் ஆயிரம் மைல்தொலைவில் உள்ள ஒகினாவாவை சுனாமி அலைகள் தாக்ககூடும் என ஜப்பானிய அதிகாரிகள் எச்சரி;த்துள்ளனர்.

மக்களை கடலோரபகுதிகளிற்கு செல்லவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள அதிகாரிகள் தாழ்நிலப்பகுதிகளில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை ஜப்பானின் யொனாகுனி என்ற தீவை சிறிய சுனாமி தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

GKM1F39XoAAMDqv.jpg

https://www.virakesari.lk/article/180288

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாய்வான் பூகம்பம் - சுரங்கப்பாதையில் சிக்குண்டுள்ள 77 பேரை மீட்க தீவிர முயற்சி

03 APR, 2024 | 05:10 PM
image
 

தாய்வானை தாக்கிய பூகம்பம் காரணமாக 127 பேர்  மற்றும் சுரங்கப்பாதைகள் மற்றும் இடைநடுவில் பேருந்ர்களிலும் சிக்குண்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹ_வாலியனில் மலைகளிற்கு அடியில் உள்ள ஜின்வென் கிங்சூய் சுரங்கப்பாதைகளில் 77 பேர் சிக்குண்டுள்ளனர் என தீயணைப்புதுறையினர் தெரிவித்துள்ளனர்.

GKN-WEIWAAACa4_.jpg

டராகோ  தேசிய பூங்காவில் உள்ள சொங்டே  சுரங்கப்பாதைக்குள் ஜேர்மனியை சேர்ந்த இரண்டு சுற்றுலாப்பயணிகள் சிக்குண்டுள்ளனர்.

இதேவேளை டராகோ தேசிய பூங்காவில் இருந்து பயணித்துக்கொண்டிருந்த  பேருந்துகளில் 50 சிக்குண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/180359

  • கருத்துக்கள உறவுகள்

நிலநடுக்கத்தின் போது குழந்தைகளை ஓடிச்சென்று பாதுகாக்கும் தாதியர்கள் !

தாய்வானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது மருத்துவமனை ஒன்றில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் உள்ள பிரிவில், இன்குபேட்டர்களில் (Incubators) உள்ள குழந்தைகளை பாதுகாக்க தாதியர்கள் விரைந்து செயற்படும் CCTV காட்சி வௌியாகியுள்ளது.

நிலநடுக்கத்தில் மருத்துவமனை கட்டடம் ஆட்டம் காண்கையில், புதிதாகப் பிறந்த குழந்தைகள் உள்ள கட்டில்களை இறுகப் பிடித்துக்கொண்டு மிக வேகமாக தாதியர்கள் செயற்படுவது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

மருத்துவமனையின் மகப்பேற்றுப் பிரிவில், கட்டிடம் நடுங்கத் தொடங்கியதும் நான்கு தாதியர்கள் தாம் முன்னுரிமையளிக்க வேண்டிய விடயம் எதுவென தௌிவாகத் தெரிந்துகொண்டு, புதிதாகப் பிறந்த குழந்தைகளை பாதுகாக்கும் செயலில் ஈடுபடுகின்றனர்.

தாய்வானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்று (03) காலை 7.4 மெக்னிட்யூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால், அங்கு 9 பேர் உயிரிழந்ததுடன், 1000 பேர் வரையில் காயமடைந்தனர்.

https://admin.thinakkural.lk/wp-content/uploads/2024/04/GIPW8xkg0hxvplsDAMkLclGGhxJ2bmdjAAAF.mp4?_=1

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.