Jump to content

புலிகளின் காலத்திய 214 இயக்கப்பாட்டு இறுவெட்டுகள் | திரட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

 


 

பண்டைய காலத்தில் தமிழ் மக்களின் வாழ்வு எவ்வாறு இலக்கியங்களில் செய்யுள் வடிவத்தில் வடிக்கப்பட்டிருந்ததோ அதே போன்று தற்காலத்திய ஈழத்தமிழர்களின் போர்க்காலத்திய வாழ்வானது பாடல்களின் மூலமாக காட்டப்பட்டுள்ளது.

ஆயிரம் ஆயிரம் மாவீரர்களை ஈர்ந்தும் பல வரலாறுகளையும் சாதனைகளையும் படைத்த தமிழீழ விடுதலைப் போரின் பக்கங்கள் பாடல்களாக புலிகளின் காலத்தில் வெளிடப்பட்டன. இவை புலிகளின் அனுமதிபெற்று அவர்களின் வரமுறைகளுக்கு உட்பட்டு புலிகளின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள்/ வெளிநாட்டுக்கிளைகள் ஊடாக வெளியிடப்பட்டன. பேந்து, நான்காம் ஈழப்போரின் முடிவிற்குப் பிறகு, புலிகளுக்குப் பின்னான காலத்திலும், வெளிவந்துகொண்டுள்ளன. 

இப்பாடல்கள் தொடக்க காலத்தில் இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்தும் பின்னாளில் தமிழீழம், தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் நாடுகள் என எல்லா இடங்களிலிருந்தும் வெளிவந்தன. 1990இற்கு முன்னர் வந்த பாடல்கள் தனிப்பாடல்களாகவும் பின்னாளில் தனிப்பாடல்களாகவும் இறுவெட்டுகளாகவும் வெளியிடப்பட்டன. இப்பாடல் ஆக்கத்திற்கு தமிழ்நாடு மற்றும் தமிழீழத்தைச் சேர்ந்த கலைஞர்கள் பங்களித்திருந்தனர். 

இப்பாடல்கள் யாவும் "இயக்கப்பாட்டு" என்றும் "புலிப்பாட்டு" என்றும் மக்கள் நடுவணில் அறியப்பட்டுள்ளன. இலக்கியங்களில் "விடுதலைப் பாடல்கள்", "போர்க்காலப் பாடல்கள்", "இயக்கப்பாடல்" என்ற பெயர்களால் சுட்டப்படுகின்றன.

இவற்றின் பாடல்வரிகள் போரின் பல பக்கங்களை பல கோணங்களில் விதந்துரைப்பவையாக எழுதப்பட்டிருந்தன. 

தமிழீழ மக்களின் வாழ்வு, புலம்பெயர் ஈழத்தமிழர்களின் வாழ்வு, விடுதலைப் போரிற்கு ஆட்சேர்ப்பித்தல், போராளிகளின் களவாழ்வு, படைத்துறைக் கிளைகள், கரும்புலிகளின் தாக்குதல்கள் மற்றும் அவர்தம் வாழ்க்கை, வலிதாக்குதல் நடவடிக்கைகள், விடுதலைப்போரிற்கு ஆதரவளிக்கும் சிங்கள/இந்திய வன்வளைப்பு வாழ் மக்களின் வாழ்வு, போராளிகளின் வீரச்சாவுகள், துயிலுமில்லங்கள், இடப்பெயர்வு அவலங்கள், படுகொலை அவலங்கள், வழிபாட்டுத் தலப் பாடல்கள் என விடுதலைப்போரின் அனைத்துக் கூறுகளும் பாடல்களாக வடிப்பிக்கப்பட்டிருந்தன. 

இவ்வாறு வெளிவந்த பாடல்களில் 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி வரை வெளிவந்த, புலிகளின் காலத்திய, மொத்தம் 214 இறுவெட்டுகளை அடையாளம் கண்டு தொகுத்துள்ளேன். நான் தொகுத்ததைத் தவிர வேறு ஏதேனும் விடுபட்டிருந்தால் அதனைத் தொகுக்க தெரிவித்துதவுமாறு கேட்டுள்கொள்கிறேன்.

இவை எதிர்காலத்தில் புலிகளின் காலத்திய பாடல்களுக்கும் ஆயுதவழி ஈழப்போரிற்குப் பிறகு வெளிவந்த பாடல்களுக்குமான வேறுபாட்டைக் காட்டுவதோடு இருவேறு காலத்திய பாடல்களை இலகுவாக அடையாளம் காணவும் உதவும் என்று நம்புகிறேன்.

 

ஆக்கம் & வெளியீடு 
நன்னிச் சோழன்


*****

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to புலிகளின் காலத்திய 211 இயக்கப்பாட்டு இறுவெட்டுகளின் தொகுப்பு | திரட்டு
  • நன்னிச் சோழன் changed the title to புலிகளின் காலத்திய 211 இயக்கப்பாட்டு இறுவெட்டுகள் | திரட்டு
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
  • புலிகளால் முதன் முதலில் கவிதை வடிவில் எழுதி எடுக்கப்பட்டு வாய்வழி மெட்டுடன் பாடலாகப் பாடப்பட்டது: "வாருங்கள் புலிகளே தமிழீழம் காப்போம்" 

இக்கவிதையானது புலிகளின் ஆரம்பகாலப் பயிற்சி முகாமான அம்பகாமம் பயிற்சி முகாமில் பாடப்பட்டது ஆகும். இது "உணர்ச்சிக் கவிஞர்" காசி ஆனந்தன் அவர்களிடமிருந்து எழுதிப் பெறப்பட்டதாகும். இதனை பெரும்பாலும் லெப். செல்லக்கிளி அம்மானே பாடுவாராம். பின்னாளில் இதற்கு இசையமைத்துப் பாடியவர் யாரென்பது தெரியவில்லை.

ஆதாரம்: 'விடுதலைத் தீப்பொறி ' நிகழ்படம்

 
 
பாடல்வரி:

வாருங்கள் புலிகளே!
தமிழீழம் காப்போம்!
வாழ்வா? சாவா?
ஒரு கை பார்ப்போம்!

முந்தை எங்கள் தந்தை வாழ்ந்த
முற்றம் அல்லவா?
முடிசுமந்து நாங்கள் ஆண்ட
கொற்றமல்லவா?
இந்த மண்ணின் மக்கள் எங்கள்
சுற்றமல்லவா? - தமிழ்
ஈழமண்ணை மறந்து வாழ்தல்
குற்றமல்லவா?

ஞாலம்போற்ற வாழ்ந்தோம் இந்தக்
கோலம் நல்லதா?
நாலுதிக்கும் நம்மை அடிமை
என்று சொல்வதா?
ஈழமண்ணில் எங்கள் கண்ணீர்
நாளும் வீழ்வதா? - அட
இன்னும் இன்னும் அந்நியர்கள்
எம்மை ஆள்வதா?

தமிழர்பிள்ளை உடல் தளர்ந்த
கூனல் பிள்ளையா?
தடிமரத்தின் பிள்ளையா?
உணர்ச்சி இல்லையா?
தமிழா! என்னடா உனக்குப்
போர் ஓர் தொல்லையா? - உன்
தாய் முலைப்பால் வீரம் நெஞ்சில்
பாயவில்லையா?
வேல் பிடித்து வாழ்ந்த கூட்டம்
கால் பிடிக்குமா?
வீழ்ந்த வாழ்வு மீள இன்னும்
நாள் பிடிக்குமா?
தோள் நிமிர்த்தித் தமிழர்தானை
போர் தொடுக்குமா? - எங்கள்
சோழர் சேரர் பாண்டியர் போல்
பேர் எடுக்குமா?

வாருங்கள் புலிகளே!
தமிழீழம் காப்போம்!
வாழ்வா? சாவா?
ஒரு கை பார்ப்போம்!

 
 

இதுவே உண்மையாக புலிகளால் வெளியிடப்பட்ட பாடல் ஆகும். 2009இற்குப் பின்னர் புலி வணிகர்கள் பலதை வெளியிட்டுள்ளனர். அவையெதுவும் மூலப் பாடல் அன்று.

 
 
(கீழுள்ள அட்டவணையை மடிக்கணினியிலோ அல்லது கணினியிலோ தான் சரியாகப் பார்க்க முடியும். திறன்பேசியில் சரிவரக் காண முடியாது.)
Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 


 

இறுவெட்டு


 

இசை

பாடலாசிரியர்

பாடகர்

வெளியீடு

வெ. திகதி

  1. அக்கினிச் சுடர்கள்

எஸ்.பி. ஈஸ்வரநாதன், இசைப்பிரியன்.

‘மாமனிதர்’ கவிஞர் நாவண்ணன், கவிஞர் புதுவை இரத்தினதுரை, கவிஞர் கு.வீரா.

ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், நிரோஜன், இளந்தீரன், செம்பருத்தி, தனேந்திரன், கலைமாறன், மணிமொழி, கிருபாகரன், வித்தகி.

தர்மேந்திரா கலையகம், நிதர்சனம்.

 
  1. அடிக்கற்கள்

உதயா

கோ.கோணேஸ்

எஸ்.பி. பாலசுப்ரமணியம், உன்னிமேனன், மாணிக்க விநாயகம், குமரன், எஸ்.ராஜா, கங்கா, சாந்தி

வெளியீட்டுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. அணையாத தீபம்

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசிஆனந்தன்

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா மற்றும் குழுவினர்

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

 
  1. அண்ணைத்தமிழ்

கவி

பாவலர் அறிவுமதி

மாணிக்க விநாயகம், ஹரிஷ் ராகவேந்தர், கார்த்திக், ஸ்ரீராம், டொனல்ட், நித்யஸ்ரீ, ஹரிணி, நிவேதா, மகதி, நிர்மலா, மாலதி, சின்ன பொண்ணு, கரிசல் கருணாநிதி, கிரேசு, கவி, லாவண்யா

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், சுவிஸ் கிளை.

 
  1. அந்நியர் வந்து புகலென்ன நீதி

 

(இது இரண்டாவது இறுவெட்டு ஆகும். தமிழ்நாட்டிலிருந்து வெளியானது.)

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா

இன்குலாப், ‘உணர்ச்சிக்  கவிஞர்’ காசி ஆனந்தன்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, சுவர்ணலதா

 

இந்திய அமைதிப்படையின் காலம்

  1. அலாஸ்காவில் ஓடங்கள்

???

???

???

???

 
  1. அலை பாடும் பரணி

இசைப்பிரியன்

‘மாமனிதர்’ கவிஞர் நாவண்ணன், கவிஞர் புதுவை இரத்தினதுரை, பாவலர் அறிவுமதி, கவிஞர் வேலணையூர் சுரேஸ், கவிஞர் கு.வீரா, உதயலட்சுமி.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசீகரன், திருமலைச் சந்திரன், நிரோஜன், யுவராஜ், சந்திரமோகன், இசையரசன், சீலன், மேரி, சாகித்தியா.

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 

உருவாக்கம்: தர்மேந்திரா கலையகம், நிதர்சனம்.

17/10/2004

  1. அலையின் கரங்கள்

நிர்மலன்

கவிஞர் புதுவை இரத்தினதுரை, சு.பா. வீரபாண்டியன், மைகேல், வசந்தன், சுபாஷ், பரா.

கஜன், ஜீவன், வதனன், ஜீவன், செல்வலிங்கம், ஆஷா, கண்ணன், நிர்மலன்.

தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், பிரான்ஸ்.

 
  1. அலையின் வரிகள்

தமிழீழ இசைக்குழு

???

???

???

~2000

  1. அழியாச் சுவடுகள்

???

???

???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்

 
  1. அனுராதபுரத்து அதிரடி

இசைப்பிரியன்

புதுவை இரத்தினதுரை, அம்புலி, செந்தோழன், கவிஞர் கு.வீரா, வேலணையூர் சுரேஸ், துளசிச்செல்வன், அன்ரனி, இராணிமைந்தன்

எஸ்.ஜி.சாந்தன், திருமலைச் சந்திரன், வசீகரன், திருமாறன், சந்திரமோகன், கானகி, இசையரசன், மான்பூ, அபிராமி

திரைப்பட வெளியீட்டுப் பிரிவு, தமிழீழம் .

 
  1. அனுராதபுரம் தேடி/  எல்லாளன் நடவடிக்கை நாயகர்கள் நினைவில்

முகிலரசன் மற்றும் ???

கு. வீரா மற்றும் ???

எஸ்.ஜி.சாந்தன், வசீகரன் மற்றும் ????

???

 
  1. ஆதிக்க அலை

???

???

???

???

 
  1. ஆழிப்பேரலை

???

‘பாவலர்’ அறிவுமதி

???

???

 
  1. ஆனையிறவு

இசைவாணர் கண்ணன்.

 

பின்னணி இசை: முரளி.

கவிஞர் புதுவை இரத்தினதுரை.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், நிரோஜன், செங்கதிர், மணிமொழி, தவமலர்.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

2000

  1. இசைபாடும் திருகோணம்

‘இசைவாணர்’ கண்ணன்

???

???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்

 
  1. இது நெருப்பின் குரல்

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா.

 

பின்னணி இசை: இளங்கோ செல்லப்பா.

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, திருமதி சாந்தி நாகராஜன், செல்வி கெளரி ராஜன்.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. இது பிரபாகரன் காலம்

இளங்கோ செல்லப்பா.

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, கோவை கமலா

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், சுவிஸ் கிளை.

 
  1. இது புலிகளின் காலம்

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா.

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, சுவர்ணலதா

நிதர்சனம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

 
  1. இந்த மண் எங்களின் சொந்தமண்

 

(தமிழீழத்திலிருந்து வெளியான முதலாவது இறுவெட்டு.)

'இசைவாணர்' கண்ணன்

புதுவை இரத்தினதுரை, கந்தராசா, செ. இராஜநாயகம்

பொன். சுந்தரலிங்கம், எஸ். ஜி. சாந்தன் மற்றும் அவரது குழுவினர், பெளசியன், மிதிலா, கந்தராசா, செ. இராஜநாயகம்

???

23/10/1990>

  1. இராட்சத அலை

???

???

???

நோர்வே கலை பண்பாட்டுக் கழகம்.

 
  1. இலட்சிய நெருப்பு

சிறீகுகன், அதியமான், எஸ்.கண்ணன், இசைப்பிரியன், ரி.எல்.மகாராஜன், மதுராங்கன் சிவநாதன், ஆர்.கண்ணன், வர்ண இராமேஸ்வரன், முல்லை சாந்தன், சாரங்கன், சிறீபாஸ்கரன்.

புதுவை இரத்தினதுரை, கவி அன்பன், கவிஞர் கு.வீரா, செ. ராணிமைந்தன், தா.சிவநாதன், கலைஞர் கருணாநிதி, வர்ண இராமேஸ்வரன், சதா பிரணவன், முல்லை ஜெயராஜா, முல்லை சாந்தன், ஈலபித்தன்

எஸ்.ஜி.சாந்தன், வசீகரன், ரி.எல்.மகாராஜன், எஸ்.கண்ணன், வர்ண இராமேஸ்வரன், ஜெய்கிசன், பாபு சிவநாதன், தா.சிவநாதன், முல்லை சாந்தன், பிரபா, கெளசி, கல்பனா.

வெளியீட்டுப்பிரிவு, அனைத்துலக தொடர்பகம்.

 
  1. ஈட்டி முனைகள்

ரி.எல்.மகாராஜன்.

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை, கவிஞர் கு.வீரா, அம்புலி, வேலணையூர் சுரேஷ், அன்ரனி.

மனோ, வாணி ஜெயராம், கிருஷ்ணராஜ், கார்த்திக், கல்பனா, ரி.எல்.மகாராஜன், சுரேந்தர், மாணிக்க விநாயகம், கல்யாணி.

இம்ரான் பாண்டியன் படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழீழம்.

 
  1. ஈர நினைவுகள்

 

(2 சுவரொட்டிகள்)

???

???

???

கலை பண்பாட்டுக் கழகம் - நோர்வே

 
  1. ஈரமில்லாப் பேரலை 

இசைப்பிரியன்

வேலணையூர் சுரேஸ், கவிஞர் கு.வீரா, கலைப்பருதி, துளசிச்செல்வன், செந்தோழன்

குமாரசாமி, பொன் சுந்தரலிங்கம், வசீகரன், யுவராஜ், இசையரசன், சந்திரமோகன், அனுராதா சிறீராம், சாகித்தியா

தர்மேந்திரா கலையகம், தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழீழம்.

28/01/2006

  1. ஈழ தேசத்திற்காக

???

???

???

???

 
  1. ஈழ வேட்கை

???

???

???

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஒட்டாவா, கனடா.

 
  1. ஈழத்தமிழனின் இதயத்திலே

???

???

???

???

 
  1. ஈழத்துக்காதல்

மனோகர்

சுதா

சத்தியன், ஜான்நம்பி, பிரசன்னா, கார்த்திகேயன், ஹரிச்சரன், டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம், மாட்டின், சாரதீன், மனோகர், அனுராதா சிறீராம், மாலதி லக்ஸ்மன், சுஸ்மிதா.

வெளியீட்டு பிரிவு, அனைத்துலகத்    தொடர்பகம்.

 
  1. ஈழம் மலர்கின்ற நேரம்

ம.தயந்தன்.

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், சிவானந்தம், பத்மநாதன், புதிய பாரதி, வைரமுத்து.

பொன் சுந்தரலிங்கம்.

உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, சுவிஸ்.

 
  1. ஈழம் மீட்பது உறுதி

‘பாசறைப் பாணர்’ தேனிசை செல்லப்பா.

பாபுராஜ், பிரகாஷ் அன்டனி, ஆனந்.

‘பாசறைப் பாணர்’ தேனிசை செல்லப்பா, சாந்தி நாகராஜன்.

வெளியீட்டுப்பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

 
  1. ஈழராகங்கள்

 

(சிதறலாகி சிதறிக்கிடக்கும் ஒவ்வொரு பழைமையான புதுமையான ஈழத்தின் பாடல்களை ஓர் தொகுப்பு)

???

???

எஸ்.ஜி.சாந்தன் மற்றும் பிற பாடகர்கள்

???

2009<

  1. உண்மை

???

???

???

???

 
  1. உதயம்

அமரர் யாழ் ரமணன்

???

???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. உம் நினைவில்

???

???

???

புலத்தில் வாழும் தாயகக் கலைஞர்களின் படைப்பு.

 
  1. உரிமைக்குரல்

வர்ண இராமேஸ்வரன், கனி, செல்வன், அரிமா அழகன், மதுராந்தன், வசந்தன் செல்லத்துரை, வானம்பாடிகள்.

புதுவை இரத்தினதுரை, வர்ண இராமேஸ்வரன், வேந்தன், சதா பிரவணன், சிவநாதன், விவேகானந்தன், துரை.

வர்ண இராமேஸ்வரன், ஜெய்கிஷன், சதா பிரவணன், வதனன், விமல், சிவநாதன், வசந்தன் செல்லத்துரை, அர்ச்சனா செல்லத்துரை, ரஞ்சன் குழு.

வெளியீட்டுப் பிரிவு, அனைத்துலக தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. ஊர் ஓசை

ஜீட் ஜெயராஜ்.

கலைப்பருதி, தமிழ்மாறன், கவிஞர் கு.வீரா, வேலணையூர் சுரேஸ், சதா பிரணவன்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசீகரன், இசையரசன், சந்திரமோகன், கஜன், செல்வலிங்க்கம், ஸ்ரீபதி, சாகித்தியா.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.

 
  1. ஊர் போகும் மேகங்கள்

‘இசைவாணர்’ கண்ணன்

‘மாமனிதர்’ கவிஞர் நாவண்ணன், ‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், விஞர் புதுவை இரத்தினதுரை, புலவர் சிவநாதன்.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், நிரோஜன், திவாகர், குமரன், கஜன், எஸ்.கண்ணன் (யேர்மனி), முல்லைக் கணேஷ், வியஜ லட்சுமி, கெளசி, கரோலின், மேரி, தேனுகா.

தர்மேந்திரா கலையகம், நிதர்சனம் : தமிழீழம்.

06/02/2004

  1. ஊர்க்குயில்

முரளி

கவிஞர் புதுவை இரத்தினதுரை

இசைவாணர் கண்ணன், எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், எஸ்.நிரோஜன், திருமலைச் சந்திரன், செங்கதிர், சீலன், இரத்தினம், குமாரதாஸ், வசீகரன், தனுராஜ், தியாகராசா, மணிமொழி, சிவரதி, பிறின்சி, பாடகி.

தர்மேந்திரா கலையகம், நிதர்சனம்.

04/1999>

  1. எங்களின் கடல்

தெய்வேந்திரம்

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், புலவன் புலமை பித்தன், புதுவை இரத்தினதுரை, வேலணையூர் சுரேஸ், கு. வீரா, புரட்சி, செந்தோழன்

எஸ்.பி. பாலசுப்ரமணியம், ரி.எல்.மகாராஜன், மனோ, திப்பு, மாணிக்க விநாயகம், சத்தியன், எஸ்.எம்.சுரேந்திரன், ஹாரிஸ் ராகவேந்திரா,கார்த்திக், சுஜாதா, கல்பனா.

வெளியீடு: திரைப்பட வெளியீட்டுப்பிரிவு, தமிழீழம்.

 

உருவாக்கம்: விடுதலைப் புலிகளின் கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. எங்கள் தேசம்

 

(துன்பங்களிலும் துயரங்களிலும் தோய்ந்து வழியும் எம் தேசத்தில் தமிழீழக் கலைஞர்கள் ஆர்த்தெழுந்த முரசுகொட்டும் இவ்வெழுட்சிக் கீதங்கள் முதன்முறையாக இசைத்தட்டு வடிவில் வெளியிடப்பட்டது.)

‘இசைவாணர்’ கண்ணன்

???

???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்

 
  1. எங்கள் விழி

பெ.விமல்ராஜ், சதீஸ், செ.இளங்கோ.

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், பாவலர் அறிவுமதி, க.சிவசுப்ரமணியம், மறத்தமிழ் வேந்தன்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, பிரபாகர், இந்திரா, சோபியா, முகேஷ், ஹேமா அம்பிகா, சைலஜா.

வெளியீட்டுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம்.

 
  1. எந்நாளும் மாவீரர் நினைவாக

தமிழீழ இசைக்குழு

தமிழீழக் கவிஞர்கள்

தமிழீழ பாடகர்கள்

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்

 
  1. எல்லாளன் பெயர் சொல்லி

 

குறிப்பு : எல்லாளன் திரைப்பட பாடல் ‘தாயக மண்ணே’ பாடலும் இணைக்கபட்டுள்ளன.

 

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை, செந்தோழன்,புரட்சி, கவிஞர் கு.வீரா, அம்புலி

எஸ். பி.பாலசுப்ரமணியம், மனோ, திப்பு, முகேஷ், தீபன் சக்கரவர்த்தி, சத்தியன், கிருஷ்ணராஜ், தினேஷ், தியானந்திரு, மாண்பு, மஞ்சு, கல்யாணி.

லெப்.கேணல் ராதா வான்காப்புப் படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. எழு எழு தமிழா

இளங்கோ செல்லப்பா

வன்னி மைந்தன் (லண்டன்).

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, சாந்தி நாகராஜன்.

வெளியீட்டுப் பிரிவு, அனைத்துலக தொடர்பகம்

 
  1. எழுக தமிழ்

எஸ்.கண்ணன், சந்தோஸ், மதுராந்தன்.

தா.சிவநாதன், சுஜித், அமுதநதிசுதர்சன்.

எஸ்.கண்ணன், தா.சிவநாதன், சுஜித், ஜெகதா, ரஜீவ், சந்தோஸ்.

ஜேர்மன் கிளை, தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. ஐயா குமார் ஐயா

தமிழக கலைஞர்கள்

தமிழீழ & தமிழகக் கவிஞர்களின் வரிகளில்..

தமிழக பாடகர்கள்

கலை பண்பாட்டுக் கழகம் – தமிழீழம்.

 
  1. ஒரு தலைவனின் வரவு

இளங்கோ செல்லப்பா.

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, சாந்தி நாகராஜன்.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. ஒளிமுகம் தோறும் புலிமுகம்

தினா, கவி.

பாவலர் அறிவுமதி

டி.எல்.மகாராஜன், அனுராதா ரமணன், ஹரிணி, நித்யஸ்ரீ, உன்னிமேனன், பிரபாகர், உன்னி கிருஷ்ணன், கிருஸ்ணராஜ், தீபிகா, டொனால்டு, கி.ராஜ், ஸ்ரீனிவாஸ், சின்னப்பொண்ணு.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. ஓயாத இசை அலை

எஸ்.கண்ணன்.

அமுதநதி சுதர்சன், சிவநாதன், ஷோபா கண்ணன், அனுரா.

எஸ்.கண்ணன், அனுரா, அமுதா, தேவிகா, ஷோபா.

ஜேர்மனி கலை பண்பாட்டுக் கழகம்

 
  1. கடலிலே காவியம் படைப்போம் **

“இசைவாணர்” கண்ணன்

புதுவை இரத்தினதுரை, பண்டிதர் பரந்தாமன், வாஞ்சிநாதன்

மேஜர் சிட்டு, கப்டன் சௌகான், எஸ். ஜி. சாந்தன்,  ஜெயா. சுகுமார், நிரோஜன், விஜயலக்ஷ்மி, விஜயகுமார்

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

01/09/1994

  1. கடலின் மடியில்

 

???

???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

 

(இது இவர்களின் 11 வது இறுவெட்டாகும்)

16/11/1994

  1. கடலோரக்காற்று

இசைப்பிரியன்

 

பாடல் ஒலிப்பதிவு: மலையவன்

'மாமனிதர்' கவிஞர் நாவண்ணன், முல்லைக்கமல், கவிஞர் கு.வீரா.

குமாரசாமி, சாந்தன், வசிகரன், யுவராஜ்,

கடலோரக்காற்று திரைப்படத்தில் வந்த பாடல்கள் இறுவெட்டாக வெளியிடப்பட்டன.

31/12/2002

  1. கடற்கரும்புலிகள் பாகம் 01

இசைவாணர் கண்ணன் மற்றும் தமிழீழ இசைக்குழு (குறிப்பு: இரா செங்கதிர் பாடிய பாடல்களுக்கு தமிழீழ இசைக்குழுவினர் இசையமைத்தனர், ஏனைய பாடல்களுக்கு 'இசைவாணர்' கண்ணன் இசையமைத்தவர்)

 

இரா. செங்கதிர் மற்றும் ???

விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம்

 

(இது இவர்களின் 12வது வெளியீடு ஆகும்)

16/11/1994

  1. கடற்கரும்புலிகள் பாகம் 02

தமிழீழ இசைக்குழுவினர், எஸ்.பி.ஈஸ்வரநாதன்.

புதுவை இரத்தினதுரை, தமிழ்மாறன், வேலணையூர் சுரேஸ், இளந்தமிழ்.

மேஜர் சிட்டு, எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், நிரோஜன், தியாகராஜா, செங்கதிர், கெளசி, பிறின்சி.

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள்.

28/12/1997

  1. கடற்கரும்புலிகள் பாகம் 03

‘இசைவாணர்’ கண்ணன், முரளி, குகன், தேவகுமார், இசைத்தென்றல்.

‘மாமனிதர்’ நாவண்ணன், புதுவை இரத்தினதுரை, உதயலட்சிமி, செங்கதிர்.

மேஜர் சிட்டு, எஸ்.ஜி.சாந்தன், திருமலைச் சந்திரன், நிரோஜன், வசீகரன், செம்பருத்தி, யுவராஜ்.

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. கடற்கரும்புலிகள் பாகம் 04

‘இசைவாணர்’ கண்ணன், முரளி (உதவி)

‘மாமனிதர்’ நாவண்ணன், புதுவை இரத்தினதுரை, பொன்.கணேசமூர்த்தி, ச.வே.பஞ்சாட்சரம், செம்பருத்தி, பண்டிதர் வீ.பரந்தாமன், வேலணையூர் சுரேஸ், உதயலட்சுமி.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், எஸ்.நிரோஜன், மணிமொழி, ‘மாவீரர்’ குட்டிக்கன்னணன்.

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. கடற்கரும்புலிகள் பாகம் 05

ஜேர்மனி கண்ணன்

பொன் கணேசமூர்த்தி , நாவண்ணன் , செம்பருத்தி , பஞ்சாட்சரம் , திவாக

ஜேர்மனி கண்ணன், குமார் சந்திரன், செல்வலிங்கம், கஜன், அனுரா, கண்ணன் சிவநாதன், கண்ணன் சோபா

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள்.

05/07/2002

  1. கடற்கரும்புலிகள் பாகம் 06

முல்லை கே.பாஸ்கரன், ஜி.கிரிதரன், மோகன் றெமிசியார், எஸ்.வி.வர்மன்,

‘மாமனிதர்’ நாவண்ணன், ச.வே.பஞ்சாட்சரம், பண்டிதர் வீ.பரந்தாமன், யோகரத்தினம் யோகி, அருட்தந்தை யோகன், பிரமிளா, எஸ்.மகிழ்நிலா, ஆதிலட்சுமி சிவகுமார், நா.யோகரத்தினன், கனிமொழி பேரின்பராஜன், பூங்கோதை.

ரவி அச்சுதன், ஜெயராஜ், முல்லை கே.பாஸ்கரன், ஜி.கிரிதரன், செந்தூரன் அழகையா, எஸ்.எலிசபெத், நிர்ஜானி கருணாகரன், சாந்தினி வர்மன், சுகலியா ரகுநாதன், சி.ரி.உத்தமசீலன், சிவபாலன் நடராசா, சி.ஆதிரை.

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. கடற்கரும்புலிகள் பாகம் 07

செயல்வீரன் 

 

இசைஉதவி: ஜி.தோமஸ்

‘போராளி’ யோகரத்தினம் யோகி, ‘போராளி’ துளசிச்செல்வன் ‘போராளி’ வெற்றிச்செல்வி, ‘போராளி’ அ.அன்ரனி, ‘போராளி’ க.க.கலைச்செல்வன், வேலணையூர் சுரேஸ், ச.வே.பஞ்சாட்சரம், ஆதிலட்சுமி சிவகுமார், செந்திரு, கோகுலன், பொன்.காந்தன்.

எஸ்.ஜி.சாந்தன். திருமலைச் சந்திரன், நிரோஜன், வசிகரன், யுவராஜ், ‘போராளி’ இசையரசன், த.றொபேட், திருமாறன், எஸ்.கண்ணன், ஜெயபாரதி, மணிமொழி, பிறின்சி, அநுரா, தேவிகா, அமுதா.

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. கடற்கரும்புலிகள் பாகம் 08

‘இசைவாணர்’ கண்ணன் 

 

இசைஉதவி: முரளி, இசைத்தென்றல்.

‘மாமனிதர்’ கவிஞர் நாவண்ணன், கவிஞர் புதுவை இரத்தினதுரை, துளசிச்செல்வன், கவிஞர் கு.வீரா, மனோன்மணி நடராசா.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், நிரோஜன், வசீகரன், திருமலைச் சந்திரன், திவாகர், மணிமொழி, ஜெய பாரதி, திவ்யா அஞ்சலி.

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள்.

05/07/2004

  1. கடற்கரும்புலிகள் பாகம் 09

இசைப்பிரியன்

கலைப்பருதி, கவிஞர் கு.வீரா, வேலணையூர் சுரேஸ், துளசிச்செல்வன், அம்புலி, செந்தோழன்.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், எஸ்.என்.சுரேந்திரன், நிரோஜன், யுவராஜ், இசையரசன், கல்ப்பனா ரஞ்சித், சந்திரமோகன்.

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. கடற்கரும்புலிகள் பாகம் 10

அதியமான்

புதுவை இரத்தினதுரை, கலைப்பருதி, வேலணையூர் சுரேஸ், கவிஞர் கு.வீரா, உதயலட்சுமி, செந்தோழன்.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசீகரன், விஜய் ஜேசுதாஸ், திப்பு, யுவராஜ், சந்திரமோகன், இசையரசன், கல்ப்பனா ரஞ்சித், சயிந்தவி (பாடல் பின்னணியில்) சுபாசினி, பாடகி, மணிமொழி, கானகி.

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. கடற்கரும்புலிகள் பாகம் 11

இசைப்பிரியன்

புதுவை இரத்தினதுரை,   வேலணையூர் சுரேஸ், கவிஞர் கு.வீரா, அம்புலி, செந்தோழன்.

ஜெயா சுகுமார், வசீகரன், திருமலைச் சந்திரன், மாணிக்க விநாயகம், தயாளன், இசையரசன், சந்திரமோகன், மணிமொழி, கிருபாகரன், ஹேமா, பிறின்சி ரஞ்சித்குமார், கலைவாணி. (பாடல் பின்னணியில்) சீலன், முகிலரசன், தனேந்திரன், மணிமொழி, பாடகி, கானகி.

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. கடற்கரும்புலிகள் பாகம் 12

ரி.எல்.மகாராஜன்

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், புலவர் புலமைபித்தன், புதுவை இரத்தினதுரை.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோ, ரி.எல்.மகாராஜன், கிருஷ்ணராஜ், புஸ்பவனம் குப்புசாமி, பரவை முனியம்மா.

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. கடற்கரும்புலிகள் பாகம் 13

இசைப்பிரியன்.

செந்தோழன், அன்ரனி, வேலணையூர் சுரேஸ், தமிழினி, ராணிமைந்தன்.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசீகரன், செளந்தர நிரோஜன், ரெஜிஸ், சர்மிலன், திருமாறன், அபிராமி, வாணி சுகுமார், இசையரசன், கலையரசன், கானகி, மணிமொழி.

விடுதலைப் புலிகளின் கடற்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. கரும்புலிகள்

‘இசைவாணர்’ கண்ணன்

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை, த.வே.பஞ்சாட்சரம், ‘பண்டிதர்’ வீ.பரந்தாமன்

மேஜர் சிட்டு, எஸ்.ஜி.சாந்தன், விஜயலட்சுமி, மாதவன், மோகனதாஸ், மலேசியா வாசுதேவன், யே.ஆர். செளந்தரராஜன், வர்ண இராமேஸ்வரன், பார்வதி சிவபாதம், குமாரசாமி.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

02/07/1993

  1. கரும்புலிகள் II

‘இசைவாணர்’ கண்ணன் 

 

பின்னணி இசை: முரளி.

புதுவை இரத்தினதுரை, ச.பொட்டு.

‘இசைவாணர்’ கண்ணன், எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், எஸ்.நிரோஜன், மணிமொழி, தவமலர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழம்.

05/07/2002

  1. கல்லறை தழுவும் கானங்கள்

இசைப்பிரியன்

‘மாமனிதர்’ கவிஞர் நாவண்ணன், கவிஞர் புதுவை இரத்தினதுரை, கவிஞர் கு.வீரா, ஊரவன், உதயலட்சுமி.

எஸ்.ஜி.சாந்தன், குமாரசாமி, திருமலைச் சந்திரன், நிரோஜன், வசீகரன், யுவராஜ், இசையரசன், மணிமொழி கிருபாகரன், இளந்தீரன், தனேந்திரன்.

தர்மேந்திரா கலையகம், நிதர்சனம்.

15/11/2002

  1. களத்தில் கேட்கும் கானங்கள்

 

(இது மூன்றாவது இறுவெட்டு ஆகும். தமிழ்நாட்டிலிருந்து வெளியானது.)

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, தேவேந்திரன் 

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், 

ரி.எல்.மகாராஜன், வாணி ஜெயராம், தினேஸ்

???

இந்திய அமைதிப்படையின் காலம்

  1. களத்தில் நின்று வேங்கைகள்

???

????

கப்டன் வீரத்தேவன், ????

யாழ் மாவட்ட தாக்குதல் பிரிவு 

15/03/1992

  1. கார்த்திகை 27

உதயா

பாவலர் அறிவுமதி, மயில், விவேகா, சிநேகன், அன்புநெஞ்சன்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், கோபால்ராவ், அருண், சினிவாஸ், ப்ரியா.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், சுவிஸ் கிளை.

 
  1. காலம் எடுத்த முடிவு

சதீஸ்

பாவலர் அறிவுமதி, தேவராஜன், காளிதாசன், யுகபாரதி.

????

வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. காலம் எதிர்பார்த்த காலம்

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, இளங்கோ செல்லப்பா.

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, சாந்தி நாகராஜன்.

அனைத்துலக செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. காலம் தந்த தலைவர்

இலக்கியன், தரணியாழ், செ.இளங்கோ.

புதுவை இரத்தினதுரை, மறத்தமிழ் வேந்தன், பாவலர் அறிவுமதி, க.சிவசுப்பிரமணியம்.

‘பாசறைபாணர்’ தேனிசை செல்லப்பா, அனந்த நாராயணன், சுனந்தன், பவன், நா,சாந்தி, ஹேமா அம்பிகா.

தாய்மண் வெளியீட்டகம், தமிழீழம்.

 
  1. காவலரண்

சி.மதுராந்தன், சி.பிரணவன்

தமிழவள், அ.அன்ரனி, கவிஞர் கு.வீரா, லம்போதரன், மட்டுவில் ஞானகுமாரன், தா.சிவநாதன்.

பாபு, எமிலியானோஸ், பிரதட்ஷன், நிவாகினி, கவிப்பிரியா, குமாரச்சந்திரன், ஸ்ரேபான், பைரவி, கார்த்திஜா. உ.தர்சிக்கா.

 

அறிமுகக்குரல்:

தா.சிவநாதன்

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், யேர்மனிக் கிளை.

 
  1. காற்றில் கேட்கும் குரல்

சதீஸ்

பாவலர் அறிவுமதி

கிருஸ்ணராஜ், முகேஷ், கோவி முரளி, ஆனந்து, மாளவி சிவகணேஸ், சமளி சிவகணேஸ், சோபியா சதீஸ், மார்டின்.

நோர்வே மருத்துவர் சிவகணேஸ் மற்றும் கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள் நேர்வே கிளை.

 
  1. கிழக்கில் விழுந்த வித்துக்கள்

???

???

???

???

 
  1. கூவுகுயிலே

ராஜன் இசைக்குழு?

     

08/08/1992

  1. கொடியேறும் காலம்

தமிழீழ மகளிர் இசைக்குழு.

புதுவை இரத்தினதுரை, கலைப்பருதி, வேலணையூர் சுரேஸ், கவிஞர் கு.வீரா, துளசிச்செல்வன், செந்தோழன்.

வசீகரன், சந்திரமோகன், யுவராஜ், இசையரசன், இசைப்பிரியன், திருமாறன், கானகி, தவமலர், மாங்கனி, சுலக்சன்.

 

பாடலின் பின்னணியில்: மணிமொழி.

 

அறிமுகக்குரல்: வெற்றிச்செல்வி.

தமிழீழ மகளீர் கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 

உருவாக்கம்: மாங்கனி கலையகம்.

 
  1. கோபுர வாசலிலே

தமிழீழ இசைக்குழு

????

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், தியாகராஜா, பிறின்சி, விஜயலஷ்மி மற்றும் ஏனையோர்

   
  1. சத்திய வேள்வி

???

???

???

???

 
  1. சத்தியம் சாகாது

???

???

???

???

 
  1. சமர்க்கள நாயகன்

செயல்வீரன், இளங்கோ செல்லப்பா, இசைப்பிரியன்,வர்ண  இராமேஸ்வரன்.

லெப். கேணல் செந்தோழன், மறத்தமிழ்வேந்தன், கவியன்பன், கவிஞர் கு.வீரா, வேலணையூர் சுரேஸ், வன்னிமைந்தன், வர்ண  இராமேஸ்வரன்.

எஸ்.ஜி.சாந்தன், நிரோஜன், சந்திரமோகன், ‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, வர்ண  இராமேஸ்வரன்.

அனைத்துலக தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

 
  1. சிரிப்பின் சிறகு

சிறீகுகன், செயல்வீரன், இசைப்பிரியன், அதியமான், முகிலரசன், தமிழீழ மகளிர் இசைக்குழுவினர்.

புதுவை இரத்தினதுரை, துளசிச்செல்வன், வேலணையூர் சுரேஸ், கவிஞர் கு.வீரா, அம்புலி, செந்தோழன், ராணிமைந்தன், வெற்றிச்செல்வி.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், பார்வதி சிவபாதம், வசீகரன், சந்திரமோகன், இசையரசி, கானகி, மணிமொழி, பாடகி.

தர்மேந்திரா கலையகம், தமிழீழம்.

 
  1. சிவந்த மண்

தமிழீழ இசைக்குழு

       
  1. சிவளைக்காளை

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, புஷ்பவனம் குப்புசாமி.

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, புஷ்பவனம் குப்புசாமி.

தமிழீழ கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. சிறகு விரித்த புலிகள்

ரி.எல்.மகாராஜன்.

“உணர்ச்சிக் கவிஞர்” காசி ஆனந்தன்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ, ரி.எல்.மகாராஜன், மாணிக்க விநாயகம், மால்குடி சுபா.

தமிழீழ வான்புலிகள் , தமிழீழ விடுதலைப் புலிகள்.

2007

  1. சுதந்திர தரிசனம்

???

????

???

ஜேர்மன் கலைபண்பாண்டுக் கழகம் – தமிழீழ விடுதலைப் புலிகள்

 
  1. சுதந்திரதாகம்

???

???

???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், நோர்வே கிளை.

 
  1. சுதந்திரத்தமிழ்

சதீஸ்

‘மாமுனை’ மனோ

எம்.எஸ்.விஸ்வநாதன், ரி.எல். மகாராஜன், கிருஷ்ணராஜ், புஷ்பவனம் குப்புசாமி, அனந்து, சுரேந்தர், மாட்டீன், கல்பனா, சோபியா, பாவலர் அறிவுமதி (அறிமுக உரை)

தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், நோர்வே.

 
  1. சுதந்திரவாசல்

???

ரூபன். சிவராஜா

???

???

 
  1. சுயத்தை வென்றவன்

எஸ்.கண்ணன்.

உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், பாவலர் அறிவுமதி, தா.சிவநாதன், கோசல்யா சொர்ணலிங்கம், இராஜகுமாரன், மட்டுவில் ஞானகுமார், ஷோபா

எஸ்.கண்ணன், தா.சிவநாதன், எமிலியானோஸ், குமாரச்சந்திரன், வியயலட்சுமி, ஷோபா, அனுரா, அமுதா, ஜெகதா, பாபு, தேவிகா, ஸ்ரெபான் வலன்ரைன்.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், ஜேர்மனிக் கிளை.

 
  1. சூரியதேசம்

சதீஸ்

‘ஆழியவளை’ எஸ்.பாலா.

எம்.எஸ். விஸ்வநாதன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், தேவா, சபேஷ் முரளி, கிருஷ்ணராஜ், முகேஷ், மார்டின், நித்தியஸ்ரீ, சின்னபொண்ணு, கல்பனா.

தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், நோர்வே.

 

உருவாக்கம்: தமிழப்பன் படிப்பகம்.

 
  1. சூரியப் புதல்விகள்

முரளி

புதுவை இரத்தினதுரை, உதயலட்சுமி, மார்சல், தமிழ்க்கவி, வேலணையூர் சுரேஸ், செங்கதிர், தமிழவள், பொன் . கணேசமூர்த்தி.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசீகரன், பிறின்சி, நிரோஜன், சிவரதி, மணிமொழி, செங்கதிர், குமாரதாஸ், தவமலர், திருமலைச் சந்திரன்.

கலை பண்பாட்டுக் கழகம் மகளிர் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. செஞ்சோலை

க.முரளி

“மாமனிதர்” கவிஞர் நாவண்ணன், ஜெயா, யோகி, காயத்திரி, பொன்.கணேசமூர்த்தி.

மேஜர் சிட்டு, மணிமொழி, விதுஷா, இசையமுதன், காஞ்சனா, யாழினி, செங்கதிர், ஈழச்செல்வி, ஜெயவீரன், தமிழ்ச்செல்வன் மற்றும் செஞ்சோலை சிறுவர்கள்.

செஞ்சோலை சிறுவர் இல்லம், தமிழீழம்

19/11/1992

  1. தமிழர் தாகம்

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, திருச்சி சுந்தரமணி.

பாடலாசிரியர்கள்: ‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன் (1-7), கவிஞர் சிங்காரவேலன் (8-11).

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, சாந்தி நாகராஜன், அரங்கமணி, கென்னடி.

அனைத்துலக செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. தமிழர் நமக்கு

தரணியாழ்

மறத்தமிழ் வேந்தன்.

பிரபாகரன், பேபி திவ்யா, அனந்த நாராயணன், பவன், அம்பிகா, ஜெயசிறீ, ஹேமா, முகேஷ்.

தாய் மண் வெளியீட்டகம்

 

உருவாக்கம்: அன்னைத் தமிழ் படைப்பகம்.

 
  1. தமிழிசைப் பாடல்கள் பாகம் : 01

கலைமாமணி திரு.புஷ்பவனம் குப்புசாமி

கவிஞர் பாரதிதாசன், ‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், பல்லவன், தாரா பாரதி, என்.எம்.முத்குட்டன்.

கலைமாமணி திரு.புஷ்பவனம் குப்புசாமி

தந்தை பெரியார் தமிழிசை மன்றம், தமிழகம்.

 
  1. தமிழிசைப் பாடல்கள் பாகம் : 02

கலைமாமணி திரு.புஷ்பவனம் குப்புசாமி

கவிஞர் பாரதிதாசன், ‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், காளமேகம், என் எம் முத்குட்டன், காந்திநாதன்.

கலைமாமணி திரு.புஷ்பவனம் குப்புசாமி

தந்தை பெரியார் தமிழிசை மன்றம், தமிழகம்.

 
  1. தமிழீழ இளையோர்கள் எழுட்சிப் பாடல்கள்

 

(புலத்தேசங்களில் வாழும் தமிழீழ நாளைய எதிர்கால சந்ததியினரின் தாய்த்தேச விடியலின் கனவுகளுடன் செதுக்கப்பட்ட பாடல்களை (2009>) “தேசக்காற்று” என்ற வலைத்தளம் தொகுத்து பதிவாக்கியுள்ளோம்.)

???

???

???

???

2009<

  1. தமிழீழ எழுச்சிப் பாடல்கள்

'பாசறைப்பாணர்' தேனிசை செல்லப்பா, தேவேந்திரன்

புலமைப்பித்தன், 'உணர்ச்சிக் கவிஞர்' காசி ஆனந்தன், காளிமுத்து, மெய்யப்பன், புதுவை இரத்திணதுரை, இன்குலாப்

'பாசறைப்பாணர்' தேனிசை செல்லப்பா, ஜெயச்சந்திரன், பி. சுசிலா, டி.எம். செளந்தரராஜா, நாகூர்பாபு, மனோ, வாணி ஜெயராம்

???

 
  1. தமிழீழ திரைப்படப் பாடல்கள்

 

(உயிர்ப்பூ , முகங்கள் , பிஞ்சுமனம் , ஆகிய திரைப்படங்களிலும் ஒளிவீச்சிலும் வெளிவந்த பாடல்களினது தொகுப்பு)

ராஜன்ஸ் இசைக்குழுவினர் (யாழ் ரமணன்), முரளி, தமிழீழ இசைக்குழு மற்றும் ஏனையோர்

புதுவை இரத்தினதுரை, ‘’மாமனிதர்” நாவண்ணன், முல்லைச் செல்வன், மாசல், வேலணையூர் சுரேஷ் மற்றும் ஏனையோர்

திருமலைச் சந்திரன், மேஜர் சிட்டு, வர்ண இராமேஸ்வரன், குமாரசாமி, விஜயலட்சுமி, கௌசி மற்றும் ஏனையோர்

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.


 
 
  1. தமிழீழ பரணி

???

???

???

????

 
  1. தமிழீழ மொட்டுக்கள்

முரளி

புதுவை இரத்தினதுரை, நாவண்ணன், பொன்.கணேசமூர்த்தி, என்.சண்முகலிங்கம், பண்டிதர் பரந்தாமன்

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், சிட்டு, திருமலைச்  சந்திரன், குமாரதாஸ், குமுதினி, சுபலட்சுமி, விஜயன் மாஸ்ரர். இவர்களுடன் அறிவூச்சோலை பிள்ளைகள்: மேளின், கிரிசாந்தன், சுரேஸ்.

காந்தரூபன் அறிவுச்சோலை, தமிழீழம் .

 
  1. தமிழே உனக்கு நிகர் தமிழே!

ரி.எல்.மகாராஜன்

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன்

ரி.எல்.மகாராஜன், பிரசன்னா, சைந்தவி.

தமிழ்த் தாய் ஆலய கலாசார மையம் மொன்றியல், கனடா.

 
  1. தமிழ் எங்கள் உயரிலும் மேலாகும்

ரி . எல் . மகாராஜன்

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

ரி. எல். மகாராஜன்

உலகத் தமிழர் பேரமைப்பு.

 
  1. தமிழ் சொந்தங்கள்

???

???

???

???

 
  1. தமிழ் வீரம் 

???

???

???

???

 
  1. தலைவா ஆணை கொடு

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, 

 

பின்னணி இசை: இளங்கோ செல்லப்பா.

வேலணையூர் சுரேஸ்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, சாந்தி நாகராஜன்.

சுவிஸ் கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. தாயக மண்ணின் காற்று

 

(பல்வேறு இறுவெட்டுகளில் வெளிவந்த பாடல்களின் வாத்திய இசை வடிவில் அமைந்த விடுதலைப் பாடல்கள் கொண்ட இறுவெட்டு.)

???

???

???

பிரித்தானியக் கிளை, தமிழீழ விடுதலைப் புலிகள்

2003

  1. தாயகத்தாய்

தமிழீழ இசைக்குழு,

எஸ்.பி.ஈஸ்வரநாதன்

புதுவை இரத்தினதுரை, சி.குணரத்தினம், அம்பலாந்துறை அரியவன், ராஜகுலேந்திரன், நாகேந்திரன், மதிபாலசிங்கம் , விக்ரதி, போர்வாணன்.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், நிரோஜன், வசீகரன், யுவராஜ், சந்திரமோகன், தவமலர், செங்கதிர், சிமேந்திரன், பிறின்சி ரஞ்சித்குமார், கானகி.

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

 
  1. தாயகவித்து

சந்துரு (லண்டன்), மகேஸ்

பொ.அன்ரன், சங்கையூர் குமார், மண்மகள், நாக. தயாபரன், சிவா.

நரேஷ், சிவாஜி, சிவநாயகி, சிவா, கவிதா, கண்ணன், சாந்தன், கரோலின், வாகீசன், சிவா. காந்தன்.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழம்.

 
  1. தாய்நிலக் காற்று

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா.

 

பின்னணி இசை : இளங்கோ செல்லப்பா.

கவி அன்பன்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, உன்னி கிருஷ்ணன், ஹாரிஸ் ராகவேந்திரா, இறையன்பன், மணிமேகலை இளங்கோ, கங்கா, சாந்தி நாகராஜன்.

தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், நோர்வே.

 
  1. தாய்நிலத்து வேலி

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா.

 

பின்னணி இசை: இளங்கோ செல்லப்பா.

புதுவை இரத்தினதுரை, வேலணையூர் சுரேஸ், நுணாவிலூரான், அ.அன்ரனி.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, கோவை கமலா.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. தாய்மடியின் தாலாட்டு

இரா.செங்கதிர்.

இரா.செங்கதிர், கோகிலன், அன்பழகன், பிரபாகரன்.

செங்கதிர், ஜெசிகரன், சுரேஸ், கலைவாணி, லுகிஸ், கணேஸ், ஜெயந்தன்.

விடியல் இசைக்குழு,தமிழீழம்.

 
  1. திசைகள் வெளிக்கும்

???

???

???

கலை பண்பாண்டுக் கழகம், தமிழீழம்.

 
  1. திசையெங்கும் இசைவெள்ளம்

வர்ண இராமேஸ்வரன்

புதுவை இரத்தினதுரை

வர்ண இராமேஸ்வரன்

தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், பிரித்தானியா.

~1999

  1. திலீபனின் கீதாஞ்சலி 

???

புதுவை இரத்தினதுரை, வீரமணி ஐயர் மற்றும் ???

வர்ண இராமேஸ்வரன், குமாரசாமி, குலசிங்கம், பொன் சுந்தரலிங்கம் மற்றும் ???

???

1993>

  1. திலீபனின் நினைவஞ்சலிக் கீதங்கள்

எஸ்.கண்ணன்.

???

???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், யேர்மனி கிளை.

 
  1. தீக்குளித்த நேரம்

இசைப்பிரியன்

‘மாமனிதர்’ கவிஞர் நாவண்ணன், கவிஞர் புதுவை இரத்தினதுரை, கவிஞர் கு.வீரா, துளசிச்செல்வன், உதயலட்சுமி, அன்ரனி, முல்லைக்கமல்.

எஸ்.ஜி.சாந்தன், இசை அமுதன், தமிழ்கவி, ஜெயபாரதி, யுவராஜ், இசையரசன், குமரன், குமாரசாமி, சாகித்யா, திவாகர்.

 

பின்னணிப் பாடகர்கள்: நகுலன், சந்திரஜோதி, சாருமதி.

தர்மேந்திரா கலையகம், நிதர்சனம்.

28/04/2003

  1. தீயில் எழும் தீரம்

‘இசைவாணர்’ கண்ணன்.

புதுவை இரத்தினதுரை, கலைப்பருதி, வேலணையூர் சுரேஸ், கவிஞர் கு.வீரா.

ரி.எல்.மகாராஜன், எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், நிரோஜன், வசீகரன், சந்திரமோகன், இசையமுதன், இசையரசன், ஜெகனி.

சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

~2005

  1. திலீபன் அழைப்பது சாவையா?

 

(தியாக தீபம் திலீபன் அவர்களின் தியாக வேள்வியின் வேளை அன்று மேடையில் உருகிய கீதங்கள். ஒலிவாங்கி பிடித்து பாடிக் கொண்டிருந்த போதே பதிவு செய்த இந்தப்பாடல் விடுதலை பயணத்தின் அசைக்கமுடியா ஒரு ஆவணமாக உள்ளது.)

???

???

???

???

1987

  1. துளிர்கள்

???

???

???

???

 
  1. தேசக்காற்று

சந்திரு

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன் , இராசலிங்கம், புலவர் சிவநாதன், மணமகள்.

பொன் சுந்தரலிங்கம், மதினி சிறிகந்தராஜா, பொன் சுபாஸ் சந்திரன்

அனைத்துலக தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள்

 
  1. தேசத்தின் குரல்

வர்ண இராமேஸ்வரன், கவி, ரி.எல்.மகாராஜன், சிறீகுகன், இசைப்பிரியன்.

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை, ‘பாவலர்’ அறிவுமதி, வர்ண இராமேஸ்வரன், வேலணையூர் சுரேஸ், கவிஞர் கு.வீரா.

எஸ்.ஜி.சாந்தன், வர்ண இராமேஸ்வரன், வசீகரன், சதிரமோகன், ரி.எல்.மகாராஜன், பிரசன்னா.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. தேசத்தின் புயல்கள் 

???

???

???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்

 
  1. தேசத்தின் புயல்கள் பாகம் 02

தமிழீழ இசைக்குழு

???

???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்

 

உருவாக்கம்: இம்ரான் பாண்டியன் படையணி

26/02/1999

  1. தேசத்தின் புயல்கள் பாகம் 03

எஸ்.பி.ஈஸ்வரநாதன், செயல்வீரன், இசைப்பிரியன்

புதுவை இரத்தினதுரை, பண்டிதர்.பரந்தாமன், உதயலட்சுமி, செம்பருதி, கஜேந்திரன், துளசிச்செல்வன், இளநிலா, வேலணையூர் சுரேஸ்

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், நிரோஜன், வசீகரன், இளந்தீரன், யுவராஜ், சந்திரமோகன், தனேந்திரன், தவமலர், பிறின்சி

இம்ரான் பாண்டியன் படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழீழம்.

 
  1. தேசத்தின் புயல்கள் பாகம் 04

யாழ். ரமணன்


 

புதுவை இரத்தினதுரை, இசையருவி, ஆதிலட்சுமி சிவகுமார், துளசிச்செல்வன், கு. வீரா, கானகன், மாதங்கன், சிறீதரன், கலைச்செல்வன்.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், வசீகரன், ஜெயபாரதி, திவாகர், யாழ்ரமனன், மேரி, நிரோஜன், இசையரசன், ஜெகனி, றொபேட், வரதன்.

லெப்.கேணல் ராதா வான்காப்புப் படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. தேசத்தின் புயல்கள் பாகம் 05

அதியமான்

புதுவை இரத்தினதுரை, இசையருவி, ராணி மைந்தன், துளசிச்செல்வன், கு. வீரா, வேலணையூர் சுரேஸ், செந்தோழன்.

எஸ்.ஜி.சாந்தன், திருமலைச் சந்திரன், யுவராஜ், மணிமொழி, பாடகி, இசையரசன், கானகி, வசீகரன், கார்த்திக், மாணிக்க விநாயகம், கல்பனா, சந்திரமோகன். 

 

பின்னணிப் பாடகர்கள்: பாடகி, புவீத்திரா, தமிழ்க்கவி, சிவலிங்கம்.

லெப்.கேணல் ராதா வான்காப்புப் படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. தேசம் நோக்கி

???

???

???

தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் நோர்வே கிளை

 

(இது இவர்களின் இரண்டாவது வெளியீடு)

29/10/1998>

  1. தேசம் மறவோம்

சாரு,கனி.

சதா பிரணவன், T.A ரொபேட், சுதன்ராஜ், வேந்தன், சாரு சுபா.

ஜெய்கிசன், ஜீவன், ஆசா, நிலானி, வதனன், குகன்.

 

முன்னுரை : கோபிகா

தமிழ் இளையோர் அமைப்பு பிரான்சு.

 
  1. தேனிசைத் தென்றலும் புயலும்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, இளங்கோ செல்லப்பா, சதாசிவ துரைராஜ்.

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, சுவர்ணலதா, அசோகரெட்ணம்.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. தொலைதூர விடுதலைச் சுவடுகள்

தமிழீழ இசைக் கலைஞர்கள்

கப்டன் கஜன் அவர்களின் ஐந்து பாடல்களும் மற்றும் தாயகக் கவிஞர்களின் ஏனைய பாடல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தமிழீழ கலைஞர்கள்

பிரான்ஸ் கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. தோள் கொடுப்போம்

செல்விசைசித்தர், ரெ.சண்முகம்.

கனிமொழி, காசிதாசன், சுகுமாரன், ரெ.சண்முகம், திருமாவளவன் (மலேசியா).

மலேசிய வாழ் தமிழ்க் கலைஞர்கள்.

உலகத் தமிழர் நிவாரண நிதி மலேசியா.

 
  1. நல்லை முருகன் பாடல்கள்

‘இசைவாணர்’ கண்ணன்

புதுவை இரத்தினதுரை

வர்ண இராமேஸ்வரன்

தமிழீழ கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழம்

03/08/1994

  1. நினைவாஞ்சலிக்கீதங்கள்

எஸ்.கண்ணன்

???

???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், யேர்மனி கிளை.

 
  1. நெஞ்சில் வாழும் பூக்கள்

பிரியதீபன் துரைஸ்

பிரியாலயம் துரைஸ்

ஜீவன், வதனன், சந்தியா, விகிலன், பிறின்சியா, அருண், தீபன், பிரியாலயம் துரைஸ்,  வளர்மதி துரைஸ், சுதன், ரம்யா, நவீனா, ரமேஷ், கருணா, தி.சிவநேசன் தமிழீழம்.

???

 
  1. நெய்தல்

‘இசைவாணர்’ கண்ணன்

இது விடுதலைப் புலிகளின் கடற்புலி அமைப்புக் கலைஞர்களின் ஒருங்கிணைந்த முயற்சி இது.

எஸ்.ஜி.சாந்தன், மேஜர் சிட்டு, புவனா இரத்தினசிங்கம், பார்வதி சிவபாதம் மற்றும் ???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 

(இது தமிழீழத்திலிருந்து வெளியான ஏழாவது வெளியீடாகும்)

10/07/1992

  1. நெருப்பலைகள்

புஷ்பவனம் குப்புசாமி

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், புஷ்பவனம் குப்புசாமி

புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி.

அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. நெருப்பில் நீராடுவோம்

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா.

 

பின்னணி இசை: இளங்கோ செல்லப்பா.

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, சாந்தி நாகராஜன், கல்யாணி உமாகாந்தன்.

அனைத்துலகச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. நெருப்பின் சலங்கை

இசைவடிவம்: கலைமாமணி ஏ.கே.காளீஸ்வரன். 

 

இசை இயக்கம் மற்றும் நட்டுவாங்கம்: தமிழிசைப்பாணர் ஏ.கஜேந்திரன்.

கவிஞர் ந.மா.முத்துக்கூத்தன்.

ரி.எல்.மகாராஜன், சீதாலட்சுமி, கஜேந்திரன், நிர்மலா.

உருவாக்கம் – வெளியீடு:

தமிழர் நலன்புரிச் சங்கம் சொலத்தூண்.

 
  1. நெருப்பு நிலவுகள்

அமரர் யாழ் ரமணன்

       
  1. பகை வெல்லும் புலி வீரம்

போஸ்கோ

புதுவை இரத்தினதுரை, இணுவை செல்வமணி, ஜேசுதாசன், கந்தசாமி.

மூர்த்தி, செல்வேந்திரன், ஆனந்தன், திருமதி பிரேமா, றீசன், ஜனெந்திரன், திருமதி தேவமனோகரி, ரஜீன், குமர குருபரன், மேத்தா, ஜேசுதாசன், போஸ்கோ.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், இத்தாலிக் கிளை.

 
  1. பசுந்தேசம்

ஸ்ரீகுகன்

கவிஞர் புதுவை இரத்தினதுரை, வேலணையூர் சுரேஸ், ச.வே.பஞ்சட்சரம், பொலிகையூர் சிந்துதாசன், தேவ கருணாநிதி, பொன் காந்தன், தமிழ்கவி, யாழ்வீரன்

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், நிரோஜன், திருமாறன், யுவராஜ், வசீகரன், குமரன், ஜெகனி, டிலானி, விமலினி, றொபெர்ட், திருமலைச் சந்திரன், நிமல், ஜெயபாரதி, மேரி.

பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. பரணி பாடுவோம்

???

???

???

(இது தமிழீழத்திலிருந்து வெளியான மூன்றாவது வெளியீடாகும்)

01/06/1991

  1. பாசறைப் பாடல்கள்

 

(இது நான்காவது இறுவெட்டு ஆகும். தமிழ்நாட்டிலிருந்து வெளியானது.)

எஸ். வைத்தியநாதன்

புதுவை இரத்தினதுரை, 'உணர்ச்சிக் கவிஞர்' காசி ஆனந்தன், பங்காரு

வர்ண இராமேஸ்வரன், வாணி ஜெயராம் மற்றும் மலேசியா வாசுதேவன் மற்றும் அவருடைய குழுவினர், தீபன் சக்கரவர்த்தி, ராகவேந்தர்

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழீழம்.

இந்திய அமைதிப்படையின் காலம்

  1. புதிதாய் பிறக்கின்றோம்

இசைப்பிரியன்

புதுவை இரத்தினதுரை, கலைப்பருதி, வேலணையூர் சுரேஸ், கவிஞர் கு.வீரா, செந்தோழன்.

ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், வசீகரன், சந்திரமோகன், திப்பு, கார்த்திக், யுவராஜ், இசையரசன், கல்ப்பனா ரஞ்சித், சீலன்.

 

அறிமுக உரை: கவிஞர் கு.வீரா, சகிலா.

படையத் தொடக்கப் பயிற்சிக்கல்லூரி, தமிழீழ விடுதலைப் புலிகள்.

 

உருவாக்கம்: தர்மேந்திரா கலையகம், நிதர்சனம்.

 
  1. புதிய காற்று

முகிலரசன்

‘கரும்புலி’ மேஜர் நிலவன்

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசீகரன், நிரோஜன், சௌந்தரராஜன், சுரேந்திரன், இசையரசன், வாணி சுகுமார், யுவராஜ், சர்மிலன், செல்வண்ணன்

 

அறிமுக உரை:

 புதுவை இரத்தினதுரை 

லெப்.கேணல் ராதா வான்காப்புப் படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. புதியதோர் புறம்

அருணா இசைக்குழு

???

எஸ். ஜி. சாந்தன், ஜெயா சுகுமார், மற்றும் ஏனையோர்???

மட்டக்களப்பு பாடும் மீன் கலைமன்றத்தினர்

 

உருவாக்கம்: கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

30-12-1990

  1. புதுவேட்டு புலிப்பாட்டு

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, இளங்கோ செல்லப்பா

மறத்தமிழ் வேந்தன்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, சாந்தி நாகராஜன், கல்யாணி உமாகாந்தன்.

உலகத் தமிழர் வன்கூவர் கிளை (பிரிட்டிஸ் கொலம்பியா), கனடா.

 
  1. புயல் அடித்த தேசம்

காந்தன்

 

பின்னணி இசை: சாணக்யன்

புலவர் புலமைப் பித்தன், காளிதாசன், காந்தன் (அலிகான்), அரவிந்தன், அலிகான்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ, ஹரிகரன், உன்னி கிருஷ்ணன், ஜெயச்சந்திரன், கிருஸ்ணராஜ், சித்திரா, பரசுராம், சுனந்தா, சாரதா, சோபனா, கோரஸ், குஞ்சுரம்மா.

சுவிஸ் கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. புயல்கால ராகங்கள்

 

(இதுவே முதலாவது இறுவெட்டு ஆகும். தமிழ்நாட்டிலிருந்து வெளியானது)

'பாசறைப்பாணர்' தேனிசை செல்லப்பா,

புதுவை இரத்தினதுரை, இன்குலாப், 'உணர்ச்சிக் கவிஞர்' காசி ஆனந்தன், 

'பாசறைப்பாணர்' தேனிசை செல்லப்பா, சொர்ணலதா

உருவாக்கியவர்: பரதன்

1988


 
  1. புலத்திலிருந்து ஓர் தமிழ்க்குயில்

???

???

திருமதி அர்ச்சயா ஆனந்தகரன்

நோர்வே கலை பண்பாட்டுக் கழகம் – தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. புலத்தில் தமிழர் எழுட்சிப் போராட்ட பாடல்கள்

???

???

???

புலத்தில் பல்வேறு பாகங்களில் வாழும் தமிழீழ உறவுகளின் விடுதலையின் தாகங்களின் எழுச்சி கானங்களை ஓர் இசையூற்றாகி தேசக்காற்று வலைத்தளத்தால் இறுவெட்டாக்கப்பட்டது.

2009<

  1. புலிகளின் புரட்சி இசை விழா

எஸ்.கண்ணன்.

மேஜர் சுரேந்தி (நித்திலா), முகில்வாணன், அமுதநதி சுதர்சன்,

எஸ்.கண்ணன், புவனேஸ்வரன், முகில்வாணன், யேசுதாஸ், அனுரா, அமுதா புலேந்திரன், கலாநாயகி சூரியகுமார், உதயன், ஜெகதா, ஜெயந்தினி, ஷோபா, செல்வராணி.

கலை பண்பாட்டுக் கழகம் ஜேர்மனி கிளை, தமிழீழ விடுதலைப் புலிகள்.

11/11/1989

  1. புலிகள் ஓய்வதில்லை

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன்

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா , சாந்தி நாகராஜன்.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. புலிகள் பாடல்

'பாசறைப்பாணர்' தேனிசை செல்லப்பா, தேவேந்திரன்

'உணர்ச்சிக் கவிஞர்' காசி ஆனந்தன், புலமைப்பித்தன், புதுவை இரத்தினதுரை

'பாசறைப்பாணர்' தேனிசை செல்லப்பா, சொர்ணலதா, மலேசியா வாசுதேவன்

???

 
  1. புனர்வாழ்வு

எம்.எஸ்.விஸ்வநாதன்.

உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், பிறைசூடன், மு.மேத்தா, குகநாதன்.

எம்.எஸ்.விஸ்வநாதன், ஆனந்த நாராயனன், கிருஸ்ணராஜ், கங்கா, ஸ்ரீநிவாஸ், கோவை முரளி.

ஊடகப்பிரிவு, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கிளிநொச்சி, தமிழீழம்.

 
  1. பூகம்பப் பொறிகள்

தமிழீழ மகளிர் இசைக்குழுவினர்.

புதுவை இரத்தினதுரை, ராணிமைந்தன், கவிஞர் கு.வீரா, செந்தோழன், வேலணையூர் சுரேஸ், செல்வி, தமிழினி.

வசீகரன், சந்திரமோகன், யுவராஜ், சர்மிலன், பிரபுராஜ், இசைப்ரியன், கானகி, கலைவாணி, இசைவிழி 

 

அறிமுகக்குரல்:

செம்பியன்

தமிழீழ மகளிர் கலை பண்பாட்டுக் கழகம்.

 

ஒலிப்பதிவு: அருளினி 

 

உருவாக்கம்: மாங்கனி கலையகம்

 
  1. பூநகரி நாயகன்

???

தமிழீழக் கவிஞர்கள்.

போராளிகள் , தமிழீழப் பாடகர்கள்.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. பூபாளம்

???

???

???

???

1990/12

  1. பொங்குதமிழ் 2008

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, இசைப்பிரியன், எஸ்.கண்ணன், நிரு, கவி, செந்தூரன் அழகையா, யூட் ஜெயராஜ், கனி, ராஜநீசன், வர்ண இராமேஸ்வரன், சதீஸ்.

அம்புலி, கவிஞர் கு.வீரா, தா.சிவநாதன், ரூபன் சிவராஜா, ஜேர்மனி திருமலைசெல்வன், புலவர் சிவநாதன், சதாபிரவணன், பாவலர் அறிவுமதி, விஜய் ஆனந், நோர்வே கவியன்பன், மனோ

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, எஸ்.கண்ணன், வர்ண. இராமேஸ்வரன், கார்த்திக், சந்திரமோகன், ஹரிசரண், கஜன் டில்சா, வதனன், ஜெய்கீசன், ஷாரு, சதாபிரவணன், கனி, சி.ரி.உத்தமசீலன், திருமாள், ராஜநீசன், கிருஸ்ணராஜ், செந்தூரன் அழகையா.

வெளியீட்டுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம்.

 
  1. போர் முரசம்

ஈழத்தின் முன்னணி நாதஸ்வரக் கலைஞர்களான வி.கே. கானமூர்த்தி, வி.கே. பஞ்சமூர்த்தி ஆகியோர் தனித்தவில் வித்துவான் தட்சணாமூர்த்தி உதயசங்கர் மற்றும் தவில் வித்துவான் கணேஸ் ஆகியோருடன் இணைந்து வழங்கிய, போர்க் காலப் பாடல்களின் நாதஸ்வர இசை வடிவம்.

???

???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், சுவிஸ் கிளை.

 
  1. போர்ப்பறை

தமிழீழ இசைக்குழு

முல்லைச்செல்வன்

கப்டன் சிலம்பரசன் (குட்டிக்கண்ணன்), தேவா, சங்கர், இராஜேந்திரன், இதன், தவமலர், புவனா, இன்பநாயகி

கொள்கை முன்னெடுப்புப் பிரிவு, அரசியல்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. போரிடும் வல்லமை சேர்ப்போம்

செயல்வீரன், சதா 

 

உதவி: திருமாறன் .

புதுவை இரத்தினதுரை, ச.வே.பஞ்சாச்சரம், துளசிச்செல்வன், வேலணையூர் சுரேஸ், அம்புலி, யாழ்வீரன், கு.வீரா, ஜெயசீலன்.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், நிரோஜன், வசிகரன், யுவராஜ், சீலன், பார்வதி சிவபாதம், மேரி, பிறின்சி, மணிமொழி, இசையரசன், இசையருவி.

மருத்துவப்பிரிவு, தமிழீழ விடுதலைப்புலிகள்.

14/06/2004

  1. மண்ணுறங்கும் மாவீரம்

இசைப்பிரியன்

புதுவை இரத்தினதுரை, வேலணையூர் சுரேஸ், கவிஞர் கு.வீரா, கலைப்பருதி, கோ.கோனேஸ், செந்தோழன்.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசீகரன், இசைப்பிரியன், இசையரசன், சந்திரமோகன், கானகி (பின்னணிப் பாடகர்கள்) முகிலரசன் , யுவராஜ் , சீலன் , மணிமொழி , பாடகி

தர்மேந்திரா கலையகம், நிதர்சனம்.

 
  1. மண்ணே வணக்கம்

அசோக் ரமணி , கசேந்திரன்.

காசி ஆனந்தன்  (01.02.03.04.05.07), புதுவை இரத்திணதுரை( 06), பண்டிதர் பரந்தாமன் (08.09).

திருமதி குமுதினி, திரு அசோக் ரமணி

???

 
  1. மண்ணைத் தேடும் இராகங்கள்

தில்லைச்சிவம்

கப்டன் கஜன் மற்றும் தாயக கவிஞர்கள்

???

ஈழமுரசு – பிரான்ஸ்

 
  1. மாவீரகானம்

கண்ணன் (ஜேர்மனி)

அமுதநதிசுதர்சன், தா. சிவநாதன், சிவநேசன்.

எஸ். கண்ணன், அனுரா, அமுதா, தா. சிவநாதன், ஷோபா, தேவிகா.

விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம், ஜேர்மனிக் கிளை.

 
  1. மாவீரர் புகழ் பாடுவோம்/ சந்தனப் பேழை

???

??

???

???

 
  1. மீனிசை

2ம் லெப்டினன்ட் ரசிகன் இசைக்குழு போராளிக் கலைஞர்கள்.

அரியம், கவியுகன், புலேந்திரன், சச்சுதானந்தம்.

எஸ்.ஜி.சாந்தன், மனோ, சிவராஜா, குலம், யாழினியன், சந்திரமோகன் , தவமலர், கோகிலா, கலைவாணி.

வினோதன் படையணி, அன்பரசி படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள்.

06/11/2003

  1. முடிசூடும் தலைவாசல்

இசைப்பிரியன்

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், புதுவை இரத்திரதுரை, கவிஞர் கு.வீரா, கலைப்பருதி, துளசிச்செல்வன், வேலணையூர் சுரேஸ், உதயலட்சுமி.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, எஸ்.ஜி.சாந்தன், திருமலைச் சந்திரன், ரி.எல்.மகாராஜன், வசிகரன், இசையரசன், சந்திரமோகன், யுவராஜ், சாகித்தியா.

தர்மேந்திரா கலையகம், நிதர்சனம்.

28/01/2006

  1. முல்லைப் போர்

முரளி

???

???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. முறிகண்டி முதல்வன்

“இசைவாணர்” கண்ணன்

தை.காமராஜ்

எஸ்.ஜி.சாந்தன், எஸ்.குமாரசாமி, உமாரமணசர்மா, கதிர்.சுந்தரலிங்கம், ஜெயா.சுகுமார், நிரோஜன், வசீகரன், சி.ரவிக்குமார் 

 

இணைக்குரல்: ஜிகானி, சாந்தி

 

ஒலிப்பதிவு: முரளி

சப்தமி ஒலிப்பதிவுக் கூடம்

05/03/2004

  1. முன்னேறிப் பாய்வதென்ன அம்மா 

தமிழீழ இசைக்குழு

????

???

வெளியீடு: மகளிர் படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்

 

உருவாக்கம்: கலை பண்பாட்டுக் கழகம் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்


 
 
  1. யாக ராகங்கள்

???

???

???

???

08/1992

>

  1. வங்கத்திலே ஒரு நாள் 

தமிழீழ இசைக்குழு

???

???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

 
  1. வரலாறு தந்த வல்லமை

‘இசைவாணர்’ கண்ணன்.

 

இசை உதவி: இசைத்தென்றல்.

புதுவை இரத்தினதுரை, கவிஞர் கு.வீரா, உதயலட்சுமி, புரட்சிகா, தமிழவள்.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசீகரன், திருமலைச் சந்திரன், நிரோஜன், றொபேட், மேரி, ஜெயபாரதி கெளசிகன், மணிமொழி கிருபாகரன்

 

அறிமுகக் குரல்கள்: தமிழ்த்தென்றல், புரட்சிநிலா.

2ம் லெப். மாலதி படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள்.

 

உருவாக்கம்: ஸப்தமி கலைக்கூடம்.

25/11/2004

  1. வரும் பகை திரும்பும்

இசைப்பிரியன்

புதுவை இரத்தினதுரை, நாவண்ணன், மார்சல், துளசிச்செல்வன், கவிஞர் கு.வீரா, இளம்பருதி.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், நிரோஜன், வசீகரன், சீலன், இசையரசன், பார்வதி சிவபாதம், புவனா இரத்தினசிங்கம், மணிமொழி, ஜெயபாரதி, மேரி, தமிழ்க்கவி.

கேணல் கிட்டு பீரங்கிப் படையணி மற்றும் லெப். கேணல் குட்டிசிறி மோட்டர் படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள்.

06/02/2004

  1. வாகையின் வேர்கள்

இசைப்பிரியன் 

புதுவை இரத்தினதுரை, அம்புலி, கவிஞர் கு.வீரா, வேலணையூர் சுரேஸ், யோ.யோகி, கலைப்பருதி, செந்தோழன், ராணிமைந்தன்.

எஸ்.ஜி.சாந்தன், வசீகரன், யுவராஜ், சீலன், இசையரசன், சந்திரமோகன், திருமாறன், கல்ப்பனா, ரஞ்சித்குமார், பிரசன்னா, மீனாட்சி, கிறேசி, சங்கீதா, பிறின்சி, மணிமொழி, கல்யாணி, கானகி.

 

அறிமுகக் குரல்: தமிழினி.

லெப். கேணல் பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள்.

 

உருவாக்கம்: தர்மேந்திரா கலையகம், நிதர்சனம்.

 
  1. வாத்திய இசையின் ஈழராகம்

???

???

???

???

 
  1. வானம் தொடும் தூரம்

சிறீகுகன், செயல்வீரன், இசைப்பிரியன்.

புதுவை இரத்தினதுரை, செந்தோழன், துளசிச்செல்வன், கலைப்பருதி, கவிஞர் கு.வீரா, உதயலட்சுமி, வேலணையூர் சுரேஸ், தமிழவள், ஆதிலட்சுமி சிவகுமார்.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், வசீகரன், சந்திரமோகன், இசையரசன், புவனா ரத்தினசிங்கம்.

தர்மேந்திரா கலையகம், நிதர்சனம்.

 

உருவாக்கம்: தமிழீழ கலை பண்பாட்டுக் கழகம்.

 
  1. வானுயரும் புலி வீரம்

எ.பொஸ்கோ.

வி.ரி.சிவபாலன் (காந்தி), மு.கரோலின், ஜெ.யூட், கிங்சிலி றெஜீனா, யோசப் ரட்ணகுமார், அ.அந்தோனிப்பிள்ளை (ஜெயிலா), செ.ஜெயச்சந்திரன் (பாபு).

லெஸ்லி, து.மேதா, டே.ஆனந்தராஜ், அ.சுஜீந்தினி, ஜொ.ரங்கன், வே.சிவமூர்த்தி, டே.ஆனந்தராஜ், மு.கரோலின், லே.ராஜன், லெஸ்லி.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், இத்தாலிக் கிளை.

 
  1. விடியலின் பாடல்கள்

"இசைவாணர்" கண்ணன்

???

???

நிதர்சனம்

24/05/1992

  1. விடியலைத் தேடும் பறவைகள்

யாழோசை கண்ணன்

???

???

யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள், தமிழீழம்.

 

மீள் வெளியீடு: தமிழீழ விடுதலைப் புலிகள்

28/01/1993

  1. விடியும் திசையில்

???

???

???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. விடுதலை நெருப்புக்கள்

இசைப்பிரியன்

புதுவை இரத்தினதுரை, வேலணையூர் சுரேஷ், செம்பருதி, அன்பரசன், தூயவன், கஜனி

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், நிரோஜன், மணிமொழி, இளந்தீரன், செம்பருதி, தனேந்திரன், கலைமாறன், வித்தகி, சீலன், ஜீவன், மதுரா, ரதன்.

தர்மேந்திரா கலையகம், நிதர்சனம்.

 
  1. விடுதலைப் போர் முரசு

'பாசறைப்பாணர்' தேனிசை செல்லப்பா குழு


 
     

1994

  1. விடுதலை வரும் நாள்

சி.ஆர்.பாஸ்கரன்.

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், டாக்டர் விமுனா மூர்த்தி, சி.ஆர்.பாஸ்கரன்.

???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை.

 
  1. விடுதலை வேள்வி 

 

(நாட்டிய நடனப் பாடல்)

எஸ்.கண்ணன்

அமுதநதி சுதர்சன்

எஸ்.கண்ணன், அனுரா, தா.சிவநாதன், அமுதா புலேந்திரன், ஷோபா கண்ண்ணன், தேவிகா அனுரா.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், ஜேர்மனிக் கிளை

 
  1. விடுதலைத்தீ

???

???

???

???

 
  1. விண்ணேறிய வீரம்

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்ப்பா, இளங்கோ செல்லப்பா

புதுவை இரத்தினதுரை, மறத்தமிழ் வேந்தன், அறிவுமதி

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்ப்பா, சாந்தி நாகராஜன், இளங்கோ செல்லப்பா

கனடா – ஈழமுரசு.

 
  1. விழ விழ எழுவோம்

இளங்கோ செல்லப்பா.

புதுவை இரத்தினதுரை, மயூ மனோ, மறத்தமிழ் வேந்தன், ‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, அகச்சுடரோன்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, நிரோஜன், சாந்தி நாகராசன்.

தாய்மண் வெளியீட்டகம், தமிழீழம்.

 
  1. விழி நிமிர்த்திய வீரம்

இசைப்பிரியன்

புதுவை இரத்தினதுரை, கவிஞர் கு.வீரா, வேலணையூர் சுரேஸ், தமிழவள், செல்வி, புரட்சிக்கா, மலைமகள்.

எஸ்.ஜி.சாந்தன், திருமலைச் சந்திரன், எஸ்.நிரோஜன், வசீகரன், யுவராஜ், சீலன், இசையரசன், சந்திரமோகன், றொபேட், ஜெயபாரதி கெளசிகன், மணிமொழி கிருபாகரன், பிறின்சி, மேழின் இமானுவேல், தவமலர்.

 

அறிமுக உரை: சுபா

மேஜர்.சோதியா படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள்.

 

உருவாக்கம்: தர்மேந்திரா கலையகம், நிதர்சனம்.

28/04/2005

  1. விழித்திருப்போம்

இசை: சிறீகுகன், செயல்வீரன், முகிலரசன்

புதுவை இரத்தினதுரை, துளசிச்செல்வன், வேலணையூர் சுரேஸ்.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், யுவராஜ், திருமலைச் சந்திரன், பிறின்சி, கானகி, வசீகரன், இசையரசன், தயாளன், சந்திரமோகன்.

புலனாய்வுத்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

 
  1. விழித்தெழுவோம்

“இசைவாணர்” கண்ணன்

???

???

மகளிர் அமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகள்.

06/01/1993

  1. விளக்கேற்றும் நேரம்

முகிலரசன்

துளசிச்செல்வன், செந்தோழன், அன்ரனி, கவிஞர் கு.வீரா, அம்புலி, இராணிமைந்தன்.

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், வசீகரன், யுவராஜ், இசையரசன், சந்திரமோகன், வாணி சுகுமார், பிறின்சி (பின்னணிப் பாடகர்கள்) மணிமொழி, பாடகி, கானகி, மதுராந்தகி, சீலன், கலையரசன், நிமால்.

தமிழீழ திரைப்பட வெளியீட்டுப் பிரிவு, தமிழீழம்.

 
  1. வீரத்தின் விளைநிலம்

???

???

???

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

 
  1. வீரத்தின் வேர்கள்

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா.

 

பின்னணி இசை: இளங்கோ செல்லப்பா.

கவி அன்பன்.

‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, தி.லோ.மகாராஜன், கல்பனா.

 

அறிமுக உரை: தமிழீழ உணர்வாளர் பழ,நெடுமாறன்.

வெளியீட்டுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. வீரம் விளைந்த பூமி

தி.லோ.மகாராஜன்.

கவி அன்பன், (6வது பாடல்) மறத்தமிழ்வேந்தன்.

தி.லோ.மகாராஜன், கிருஷ்ணராஜ், முகேஷ்.

வெளியீட்டுப்பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம்.

 
  1. வீழமாட்டோம்

???

???

???

???

 
  1. வெஞ்சமரின் வரிகள்

எஸ்.பி.ஈஸ்வரநாதன், தமிழீழ இசைக்குழு.

புதுவை இரத்தினதுரை, தமிழவள், உதயலட்சுமி, மார்ஷல், செ.புரட்சிகா, மலைமகள்

எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசீகரன், திருமலைச் சந்திரன், நிரோஜன், மணிமொழி, தவமலர், பிறின்சி, சந்திரமோகன், இசையரசன், அருணா.

 

பின்னணிப் பாடகர்: பிரியதர்சினி.

2ம் லெப்.மாலதி படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள்.

 

உருவாக்கம்: தர்மேந்திரா கலையகம், நிதர்சனம்.

 
  1. வெல்லும் வரை செல்வோம்

இசைப்பிரியன்

நாவண்ணன், வேலணையூர் சுரேஸ், உதயலட்சுமி, மார்சல், வீரா, கலைப்பருதி, செந்தோழன்.

ரி.எல்.மகாராஜன், எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், நிரோஜன், வசீகரன், யுவராஜ், இசையரசன், சந்திரமோகன், மேரி, பிறின்சி, கானகி, முகிலரசன், மணிமொழி கிருபாகரன், இசைமதி, புரட்சிக்கா.

கப்டன் ஜெயந்தன் படையணி, தமிழீழ விடுதலைப் புலிகள்

2004-2005

  1. வெற்றி நிச்சயம்

எஸ்.கண்ணன்.

அமுதநதி சுதர்சன்.

எஸ்.கண்ணன், தா.சிவநாதன், குமாரச்சந்திரன், ஷோபா கண்ணன், அமுதா, தேவிகா, அனுரா.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள் யேர்மனிக் கிளை.

 
  1. வெற்றி நிச்சயம் 02

சதீஸ்

புதுவை பொன்.கோணேஸ், இரா.தெய்வராஜன், வதன கோபாலன், ஈழப்பிரியா, தி.உமைபாலன், சோதியா, ந.கிருஷ்ணசிங்கம்

 

அறிமுக உரை:

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன்

கிருஷ்ணராஜ், மாணிக்க விநாயகம், இரா.சிறிதரன், இலக்கியா, யாழினி, அனோஜா, சத்யா, அபிராமி, எஸ்.என்.சுரேந்தர், இரா.தெய்வராஜன்.

இரா.சிறிதரன் / தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் நோர்வே.

 
  1. வெற்றிக் காற்று

ரி.எல்.மகாராஜன்.

‘உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன்.

ரி.எல்.மகாராஜன், கோவை கமலா.

வெளியீட்டுபிரிவு,அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. வெற்றிமுரசு

தமிழீழ இசைக்குழு

புதுவை அன்பன், செல்வம்.

கப்டன் சிலம்பரசன் (குட்டிக்கண்ணன்), இரத்தினம், திரவியம், தயாளன், கந்தையா, பீரதிபன், தவபாலன், தவமலர், புதுவை அன்பன், நவம், இன்பநாயகி, தேவன், விஜயன், கெளசிகா.

கொள்கை முன்னெடுப்புப் பிரிவு, அரசியல்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
  1. வேங்கைகளின் விடுதலை வேதங்கள்

 

(இதற்குள் தான் தமிழீழ தேசியக்கொடிப் பாடல் மற்றும் துயிலுமில்லப் பாடல் என்பன வெளிவந்தன.)

'இசைவாணர்' கண்ணன்

புதுவை இரத்தினதுரை, இரும்பொறை, ரவி, 'மாமனிதர்' நாவண்ணன்

எஸ். ஜி. சாந்தன் மற்றும் அவரது குழுவினர், சியாமளா, மிதிலா, பெளசியன், குணமலர், பொன். சுந்தரலிங்கம்

தமிழீழ கலை பண்பாட்டுக் கழகம்

 

(இது தமிழீழத்திலிருந்து வெளியான இரண்டாவது வெளியீடாகும்)

26/11/1990>



 
  1. வேரில் விழுந்த மழை

இரா. செங்கதிர்.

புதுவை இரத்தினதுரை, செந்தோழன், அன்டனி, ஓவியநாதன், கலைச்செல்வன்.

திருமலைச் சந்திரன், நிரோஜன், செங்கதிர், பார்வதி சிவபாதம், யுவராஜ், இசையரசன், சந்திரமோகன், அரசண்ணா, புகழ்வேந்தன், சுரேஷ், சசீந்திரன், நிமல், பாக்யராஜ், தவமலர், வித்தகி, பாகேஸ்வரி, சஞ்சுதா, சுபா, ஜனனி.

தமிழீழ கலை பண்பாட்டுக் கழகம்.

 

உருவாக்கம்: தமிழீழ விடியல் இசைக்குழு, தமிழீழம்.

 
  1. வேர் விடும் வீரம்/ வல்லமை தரும் மாவீரம்

 

(இதுவே தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுதி வெளியீடு ஆகும்.)

அறியில்லை

கவிஞர் புதுவை இரத்தினதுரை மற்றும் தமிழீழத்தில் வாழ்ந்த கவிஞர்கள் பலர்

எஸ்.ஜி. சாந்தன் மற்றும் தமிழீழத்தில் வாழ்ந்த கலைஞர்கள் பலர்

வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

 
  1. ஜீவ கானங்கள்

???

மணி, நாகேஷ், ஜெயா, கே.கஜன்.

செல்வலிங்கம், குமுதா, இந்திரன், ஜெயகுமார், கஜன், தாஸ்.

கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், யேர்மனிக் கிளை.

 
  1. ஜீவ ராகங்கள்

பரா

கப்டன் கஜன், ஜெயா, பரா.

எஸ்.கண்ணன், அனுரா, அமுதா புலேந்திரன், தாஸ்.

அனைத்துலக செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

 
 

புதுவை இரத்தினதுரை அவர்களால் "வேங்கைகளின் விடுதலை வேதங்கள்" என்ற இருவெட்டிற்கு எழுதப்பட்ட ஓர் பாடலில் தலைவர் விரும்பியது போல சில வரிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு மாவீரர் துயிலமில்லத்தில் பாடுவதற்கான "துயிலுமில்லப் பாடலாக" வெளிவந்தது. 

** இந்த இறுவெட்டுத் தயாரிப்பில் தான் தமிழீழத்தில் முதன்முறையாக தொழில்நுட்பம்/கணினிகள் இறுவெட்டைத் தயாரிக்கப் பாவிக்கப்பட்டன.

 

 

  • சிறப்பு நன்றி: இதற்குள் உள்ள அனைத்து வெளியீட்டுத் திகதிகளையும் தேடியெடுத்துத் தந்துதவிய பெயர் குறிப்பிட விரும்பாத கள உறவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

உசாத்துணை:

  • பல வலைத்தளங்களில் இருந்து இறுவெட்டுகளிற்கான விரிப்புகள் எடுக்கப்பட்டன.
  1. https://tamilnet.com/art.html?catid=13&artid=36547
  2. https://on.soundcloud.com/8UqEF2tLj5Bqrp4cA
  3. தமிழீழ எழுச்சிப் பாடல்கள் பாகம் 4
  4. விடுதலைப் பயணத்தில் எழுச்சியை ஏற்படுத்திய இசைப்பாடல்கள்: க.வே.பாலகுமாரன்
  5. ஈழநாதம்-1990.10.23
  6. ஈழநாதம்-1992.07.11
  7. ஈழநாதம் -1990.12.31
  8. ஈழநாதம் -1990.11.26
  9. ஈழநாதம்-1991.05.31
  10. ஈழநாதம்-1992.03.16
  11. ஈழநாதம்-1993.01.06
  12. ஈழநாதம்-1993.01.05
  13. ஈழநாதம்-1992.07.11
  14. ஈழநாதம்-1992.07.10
  15. ஈழநாதம்-1994.07.30
  16. ஈழநாதம்-1994.07.31
  17. ஈழநாதம்-1993.07.02
  18. ஈழநாதம்-1993.07.01
  19. ஈழநாதம்-1992.08.09
  20. ஈழநாதம்-1993.01.30
  21. ஈழநாதம்-1992.11.15
  22. ஈழநாதம்-1992.11.19
  23. ஈழநாதம்-1993.09.25
  24. ஈழநாதம்-2003.04.28
  25. ஈழநாதம்-1994.11.08
  26. ஈழநாதம்-1994.11.15
  27. ஈழநாதம்-1994-11.16
  28. ஈழநாதம்-1994.11.17
  29. ஈழநாதம்-05.03.2004
  30. ஈழநாதம்-07.02.2004
  31. ஈழநாதம்-05.07.2004
  32. களத்தில் 074
  33. துயிலுமில்லப்பாடல் உருவான வரலாறு | திரு.யோகரட்ணம் யோகி (2007 ஆம் ஆண்டு)
  34. நிதர்சனம், புலிகளின்குரல் உருவாக்கத்தின் காரணகர்த்தா பரதன் வாழ்க்கை வரலாறு
  35. எரிமலை நவம்பர் 1995 - pg 41
  36. ஒளிவீச்சு கதிர் 66 - 02/1999
  37. ஒளிவீச்சு கதிர் 68 - 04/1999
  38. ஒளிவீச்சு - 12/1997
  39. ஒளிவீச்சு கதிர் 100
  40. ஒளிவீச்சு கதிர் 102
  41. ஒளிவீச்சு கதிர் 104
  42. ஒளிவீச்சு கதிர் 105
  43. ஒளிவீச்சு கதிர் 106
  44. https://tamilnet.com/art.html?catid=13&artid=13170
  45. https://tamilnet.com/art.html?catid=13&artid=12222
  46. https://www.tamilnet.com/art.html?artid=10382&catid=13
  47. https://www.tamilnet.com/art.html?artid=8054&catid=13
  48. https://tamilnet.com/art.html?catid=13&artid=8079
  49. https://www.errimalai.com/?p=86750
  50. https://noolaham.net/project/1021/102093/102093.pdf
  51. https://noolaham.net/project/1091/109100/109100.pdf
  52. https://noolaham.net/project/373/37235/37235.pdf
  53. https://noolaham.net/project/373/37274/37274.pdf
  54. https://noolaham.net/project/186/18550/18550.pdf
  55. https://noolaham.net/project/73/7218/7218.pdf
  56. https://noolaham.net/project/241/24033/24033.pdf
  57. https://noolaham.net/project/304/30334/30334.pdf
  58. https://noolaham.net/project/242/24119/24119.pdf
  59. https://noolaham.net/project/369/36801/36801.pdf
  60. https://noolaham.net/project/369/36803/36803.pdf
  61. https://noolaham.net/project/1091/109100/109100.pdf
  62. https://noolaham.net/project/233/23238/23238.pdf
  63. https://noolaham.net/project/1091/109100/109100.pdf
  64. https://noolaham.net/project/373/37205/37205.pdf
  65. https://noolaham.net/project/1021/102093/102093.pdf

ஆக்கம் & வெளியீடு:
நன்னிச் சோழன்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to புலிகளின் காலத்திய 213 இயக்கப்பாட்டு இறுவெட்டுகள் | திரட்டு
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஊழியால் அழிந்துவிட்ட இறுவெட்டுகள்

 

adwq.png

 

ada.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to புலிகளின் காலத்திய 213 இயக்கப்பாட்டு இறுவெட்டுகள் | திரட்டு
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

புதிதாக ஐந்து இறுவெட்டுகளை பதிவேற்றியுள்ளதுடன் பல இறுவெட்டுகளின் வெளியீட்டுத் திகதியும் பதிவிடப்பட்டுள்ளது.

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்னி உங்கள் இணைப்பிலிருந்து பாடல்களை கேட்க முடியாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
2 minutes ago, ஈழப்பிரியன் said:

நன்னி உங்கள் இணைப்பிலிருந்து பாடல்களை கேட்க முடியாதா?

ஆ, இல்லை. நான் அதைச் செய்யவில்லை.

வேண்டுமென்றால் தாங்கள் இங்கிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்:

 

கவனி: இவற்றிற்குள் 2009இற்குப் பிறகு வந்த - போரிற்குப் பிந்தைய பாடல்களும் உள்ளன. 

https://www.eelammusic.com/popular-tracks

https://tamileelamsongs.com/a-z-eelam-songs/

https://eelapparavaikal.com/thalivar-padalkal-eelam-mp3-song-eelam-song/?filter_by_type=all&filter_by_genre=all&filter_by_album=all&filter_by_artist=all&ordering_by=post_date

https://telibrary.com/albums/

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to புலிகளின் காலத்திய 214 இயக்கப்பாட்டு இறுவெட்டுகள் | திரட்டு


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முற்றாக துடைத்தழிக்க வேண்டும், பாலஸ்தீன பயங்கரவாதிகளை.    
    • "தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 13 "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits Of Ancient Sumer continuing"     இன்று சிரியா, ஈராக் மற்றும் துருக்கி ஆகிய பகுதிகளே, இன்று நாம் சமையலில் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு பூர்வீகம் ஆகும். கடந்த 24 மணிநேரத்தில் நீங்கள் உண்ணும் கலோரிகளில் 50 சதவிகிதம், இந்த பகுதியில் முதலில் வளர்க்கப்பட்ட காய்கறிகள் அல்லது விலங்குகளிலிருந்து வந்திருக்கும் என்று நான் சொல்லுகிறேன். அதை சரி பார்க்க, யேல் சமையல் பலகை ஒன்றில் ஒரு சமையல் குறிப்பை இனிப் பார்ப்போம்.   "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை, பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இரைப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்"   ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட வில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும் தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம்? சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது:   "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர். [சதாப்பு இலை / இப்பயிர் மலைப் பிரதேசங்களில்செளிப்பான காடுகளில் இயற்கையாக வளர்கிறது. இது வரட்சியைத்தாங்கக் கூடியது. அருவதா செடிகளை எல்லா வகையான மண்ணிலும் வளர்க்கலாம்], அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட அல்லது நறுக்கிய லீக்ஸ், மற்றும் உள்ளி, சமிடு [ரவை?], போதுமான வெங்காயம் சேர்த்து கொள்,"   இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை பரிமாறுதலுக்கான ஆயுத்தமும் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் மேலும் இப்படி தொடர்கிறது:   "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி-, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறிய வாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காத வாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப்பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை ரொட்டி மூடியால் மூடு. பின் அதை பரிமாறலுக்கு அனுப்பு."   என்கிறது. மூன்றாவது யேல் சமையல் பலகை, மிகவும் சிறியதாகவும் அதே நேரம் மிகவும் உடைந்த தாகவும் உள்ளது. இது மூன்று சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இது ஒரு பானையில் பறவை ஒன்றின் சமையல்கள் ஆகும். அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?] - அதிகமாக இது பசுங்கொட்டை அல்லது அதன் மாவாக இருக்கலாம் [Pistachio Nuts or Flour]?- இறைச்சி போன்றவையை சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும் கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தகமாக கருதப்படுகிறது.   சுமேரியர்கள் பியர் மது குடிப்பதில் மிகவும் பிரியமானவர்கள். என்றாலும் உண்மையில், தற்செயலாகத்தான் இந்த சாராயத்தை கண்டு பிடித்தார்கள் என நம்பப்படுகிறது. சுமேரியர்கள் நாடோடி - வேட்டையாடுபவர்களாக முதலில் மெசொப்பொத்தேமியாவில் குடியேறி விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். அவர்கள் செய்த முதல் அறுவடை, ஒரு தானியம் ஆகும். இந்த தானியத்தை பேணி நீண்ட காலத்திற்கு வைத்திருப் பதற்க்காக, கி மு 4000 ஆண்டுகளுக்கு முன், இந்த தானியத்தை வேகவைத்து சேமித்தனர். இப்படி வேகவைத்த இனிமையான தானியங்கள் நாளடைவில், ஈரமாகி, அதன் பின் அது ஒரு மகிழ்ச்சியான, உணர்வு தரத்தக்க, மயக்கம் தர வல்ல, பானம் ஒன்றைத் தந்தது. இதுவே உலகின் முதல் மது ஆகும். இது ஒரு தற்செயலான கண்டு பிடிப்பாகும். அதன் பின், சுமேரியன் வேகவைத்த தானியத்தை நொறுக்கி தண்ணீர் உள்ள பானை ஒன்றிற்குள் தள்ளினான். சிலவேளை, அவன் அதற்கு நறுமண பொருட்கள், பழங்கள் அல்லது தேன் போன்றவற்றை சேர்த்தான். அதன் பின் அதை புளிக்க வைத்து மது தயாரித்தான்.அப்படி தயாரிக்கப்பட்ட அந்த மதுவை பானையில் இருந்து பாபிலோனியன், சில ஆண்டுகள் கழித்து, ஒரு உறிஞ்சி மூலம் குடித்து மகிழப் பழகினான் என அறிஞர்கள் கூறுகிறார்கள்.   சுமேரியர்களால், தமது “வாய் நிரப்பும் பெண்மணி" என போற்றப்படும், "மது பெண் தெய்வ" மான நின்காசியை துதித்து போற்றும் சிறப்பு மிக்க - உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தகமாக கருதப்படும் - ஒரு துதி பாடல், மது வடித்தலுக்கான சேர்மானங்களையும் செய்முறையையும் [recipe for brewing] வரிசையாக எடுத்துக் கூறி, அந்த பண்டைய பெண் தெய்வத்தை அப்பாடல், பாராட்டுகிறது. இது புளிக்கச் செய்யப்பயன் படும் பொருள் முதல், ஊறவைத்தல், நொதித்தல், வடித்தல் என்பனவற்றின் விபரங்களை ஒவ்வொன்றாகத் வரிசையாகத் தருகிறது. பொதுவாக பண்டைய மெசொப்பொத்தேமியாவில் மது வடிப்போர் / காய்ச்சுவோர் பெண்களாக இருந்தார்கள், அதிகமாக நின்காசியின் பெண் குருவே இவர்கள். மேலும் அங்கு துணை உணவாக மது,வீட்டில் பெண்களால் வடிக்கப்பட்டது அல்லது காய்ச்சப்பட்டது. எனவே வீட்டு பணிகளுடன் மேல் அதிகமாக அவர்கள் தாம் வடித்த அந்த ஒரு வகைச் சாராயத்தை / பியர் மது பானத்தை [beer] விற்கவும் அவர்களால் முடியும். அதாவது சுமேரிய பெண்கள் தவறணை காப்பாளராகவும் அன்று இருக்கக் கூடியதாக இருந்தது.   நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி : 14 தொடரும்     "FOOD HABITS OF TAMILS" PART: 13 "Food Habits Of Ancient Sumer continuing"     Many of the ingredients we use in cooking today are native to the regions of Syria, Iraq, and Turkey. I'd say 50 percent of the calories you eat in the last 24 hours should have come from vegetables or animals that were originally grown in this area. To verify that, let's look at a recipe from a Yale cookbook.   "Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire"   It does not mention whether fat or water is added - no doubt the method was so familiar that instructions were considered unnecessary - After the initial boiling or braising, the recipe continues-   "Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)"   While the birds cook, preparations for serving the dish must be made -   "Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" to the table.   The third tablet contains 3 damaged recipes for the pot cooking of a bird, butumtu [unidentified grain, may be Pistachio Nuts or Flour?] and some kind of meat. However, a 3900 - year - old Sumerian poem honouring Ninkasi, the patron goddess of brewing, contains the oldest surviving complete recipe. The Sumerians were big-time beer drinkers. In fact, by accident, they discovered beer. Yes, not created, but rather discovered, or so it's been postulated. Sources indicate that the old school nomadic hunter - gatherers, of some 13,000 years ago, finally realized that they could settle - that it was more beneficial to life and yielded stability. One of their first harvested products was grain. To keep this grain, it was often baked and stored. Some 6,000 years ago, ancient text reveals that eventually it was formulated that the sweetest grain, if baked, left out, moistened, forgotten, then eaten, would produce an uplifting, cheerful feeling. Intoxication at the primal level! The first beer!   After this blissful discovery, baked grains were broken into pieces and stuffed into a pot. Water, and sometimes aromatics, fruit or honey, were added (creating a basic mash and wort) and left to ferment. Years later, the Babylonians fashioned what we now know as a straw, to extract the juice from the grain pulp in the pot. A not-so-distant Russian recipe is still produced today, called "kvass." The only real difference being that the fermented liquid is poured into a cask, bottle or jug.   The Sumerian Hymn to Ninkasi (written down in 1800 BC but presumed to be much older), who is praised as "lady who fills the mouth", is both a praise song to the 'goddess of beer' and a recipe for brewing. Brewers were female, most likely priestesses of Ninkasi, and early on, beer was brewed by women in the home as a supplement to meals. Hence In addition to household tasks, a woman might sell the beer she brewed, ie, she may be even become a tavern keeper. Also The Hymn to Ninkasi, inscribed on a nineteenth century B.C. tablet, contains a recipe for Sumerian beer. It describes the entire process from sourcing the yeast, soaking malts and grains and keeping the liquid in fermentation vessels and filtering into another vessel.   Thanks     [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]   PART : 14 WILL FOLLOW        
    • "நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 12     குடும்ப முறிவு அல்லது குடும்ப செயலிழப்பு [The Collapse Of The Family] இன் இரண்டாம் பாகம் தொடர்கிறது     எந்த சமூகத்திலும்,சமூக நெறிகளை [societal norms] போதிக்கும் முதல் ஆசிரியர்கள், அவர் அவர்களின் குடும்பமே ஆகும். உதாரணமாக, குழந்தை பருவத்தில் இருந்து எது சரி, எது பிழை என எளிய அறிக்கைகள் மூலமாகவோ அல்லது நேரடியாக நடவடிக்கைகள் மூலமாகவோ அவை எமக்கு எடுத்து காட்டி போதிக்கின்றன. ஒரு செயலிந்த அல்லது முறிந்த குடும்பத்தில் [dysfunctional family], வன்முறை மற்றும் உணர்ச்சி துஷ்பிரயோகம் [violence and emotional abuse or psychological abuse] போன்ற விடயங்கள் சமுதாயத்தில் ஏற்கத்தக்கவை போன்று ஒரு தவறான நம்பிக்கையயை விதைத்து வழி காட்டுகிறது. ஏனெனில் அவை பெற்றோரால் அல்லது அதற்கு சமமானவர்களால், சர்வ சாதாரணமாக அவர்களின் குடும்பத்தில் செய்யப்படுவதால் ஆகும்.   இதனால், வளர்ந்து சமுதாயத்திற்குள் வந்த பின்பும், அதை அப்படியே அவர்கள் பிரயோகிக்கும் பொழுது, அவர்கள் அடிக்கடி சட்டத்துடன் மோதுகிறார்கள் அல்லது முரண்படுகிறார்கள். மேலும் எம்மால் சமுதாயத்தில் ஒழுங்காக பங்களிப்பு செய்ய முடியாமலும் போகிறது. நாம் பொதுவாக குடும்பத்திலேயே பல நேரம் கழிக்கிறோம். எனவே அது எங்களை மிகவும் செல்வாக்கு செலுத்துகிறது அல்லது பாதிக்கிறது. ஒரு நிலையான குடும்பத்தில், நாம் கண்ணியமான மற்றும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைகள் முதலியவற்றை கற்கிறோம். எனவே நாம் வளர்ந்து சமுதாயத்தில் நுழையும் போது, நாம் வெற்றிகரமாக சமுதாயத்திற்காக மற்றவர்களுடன் ஒன்றிணைந்து வேலை செய்யவும் முடிகிறது. எனவே தான் நிலையான குடும்பம் என்றும் எங்கும் அவசியம்.   குடும்பங்கள் சமூகவியல் செயல்பாட்டைத் [sociological function] தவிர இன்னும் ஒரு முக்கிய பங்கை சமூகத்திற்கு வழங்குகிறது. இது உயிரியல் செயல்பாடு [biological function] ஆகும். உயிரியல் ரீதியாக, குடும்பங்களை உருவாக்குகின்ற இனப்பெருக்கம் என்ற செயல்பாடு, அவர்களை சுற்றியுள்ள சமூகங்களின் வளர்ச்சி மற்றும் எதிர்கால தொடர்ச்சிக்கு நேரடியாக பங்களிக்க குடும்பங்களுக்கு வழிவகுக்கிறது. இதனால் தானோ என்னவோ, மெசொப்பொத்தேமியாவில், முதல் பிள்ளை பிறந்த பிறகே திருமணத்தை முறையானது என ஏற்கப் பட்டதுடன், அது வரையும் அந்த பெண் மணமகள் என்ற நிலையிலேயே தொடருவதுடன், அந்த முதல் பிள்ளைக்கு பின்பே அவள் மனைவி என்ற பதவியை பெறுகிறாள்.   அதீத தொழில்நுட்ப முன்னேற்றத்துடன், மாற்றமடையும் கலாச்சார நெறிமுறைகளும் [cultural norms], புதிய முன்னுரிமைகளும், இணையத் தளத்தால் ஏற்பட்ட புதிய வடிவில்லான தொடர்புகளும் இன்று எங்கும் எம் வாழ்வை மிகவும் மாற்றிவிட்டன. என்றாலும் இன்னும் குடும்பம் எப்பொழுதும் இருந்ததைப் போலவே அப்படியே முக்கியமான சமூகத்தின் அடித்தளமாகவே இருக்கிறது. எதிர்காலத்தில் எவ்வளவு வாழ்க்கை மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அது எதோ ஒரு வடிவில், சமுதாயத்தின் ஒரு முக்கிய அமைப்பாக தொடரும் என்று நாம் கட்டாயம் நம்பலாம்.   உதாரணமாக திருமணம் அல்லாத உடனுறைவு, விவாகரத்து, மறுமணம், திருமணம் அல்லாத மறுஇணைவு [Non-marital cohabitation, divorce, remarriage and (non-marital) recoupling], போன்று ஒரு குழந்தையின் வாழ்க்கை முழுவதும் அதன் வடிவம் மாற்றம் அடைகிறது. கடந்த காலத்தில் பெரும்பாலும் ஒரு குழந்தை திருமணமான தம்பதியருக்கே பிறந்தனர். எனவே அவர்கள், தமது வாழ்வு முழுவதும் அந்த தமது உயிரியல் பெற்றோருடனே வளர்ந்தார்கள். ஆனால் இன்று அது அருகிவருவதுடன் முன்பு கூறியது போல, அந்த குழந்தையின் வாழும் ஏற்பாடு, அந்த குழந்தையின் பெற்றோரின் உறவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தொடர்ந்து மாற்றம் அடைந்து அந்த குழந்தைக்கு ஒரு நிலையான வாழ்வை கொடுக்க மறுக்கிறது. இது ஒரு கவலைக்கு உரிய விடயமாகும்.   பொன்முடியார் என்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க கால புலவர், அன்று வாழ்ந்த சூழ்நிலைக்கு ஏற்ப, ஒரு குடும்பம் ஒன்றாக எப்படி வாழவேண்டும், அவர்களின் கடமை என்ன என்று தனது புறநானுறு 312 இல், அழகாக வர்ணிக்கிறார்:     "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே; ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே."     அதாவது, மகனைப் பெற்று வளர்த்துப் பாதுகாத்தல் என் (தாயின்) தலையாய கடமை. அவனை நற்பண்புகள் நிறையப் பெற்றவனாக்குதல் அவன் தந்தையின் கடமை. அவனுக்குத் தேவையான வேலை (படைக் கருவிகளை) உருவாக்கிக் கொடுத்தல் கொல்லரின் கடமை. அவனுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது அரசனின் கடமை. ஓளியுடன் விளங்கும் வாளைக் கையில் ஏந்திப் போர்க்களத்தில் பகைவரின் யானைகளைக் கொன்று வெற்றியுடன் மீள்வது அம்மகனின் கடமை என்கிறார். ஆகவே மறைமுகமாக குடும்பம் இந்த கடமைகளை சரிவர செய்ய ஒன்றாக மகிழ்வாக இருக்கவேண்டும் என்கிறார்.   ஒரு சமூகத்தில், கலாசார மற்றும் சமூக மதிப்பை உயர்த்துவதில், குடும்பங்கள் முக்கிய பங்கு வகிப்பதை இன்றைய அவசர உலகில் எடுத்து காட்டவும், அவர்களுக்கு உணர்த்தவும், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானம் A/44/82 (1989) மூலம், மே 15ம் தேதி 1994 இல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 'சர்வதேச குடும்ப ஆண்டு' கொண்டாடிட முடிவு செய்தது.   "யாது ஊரே யாவரும் கேளீர்" என்ற கணியன் பூங்குன்றனாரின் இரண்டாயிரத்தி முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட அந்த அடியை ஒற்றி, 'உலகம் ஒரே குடும்பம்' என்ற பழமையான தத்துவத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம், மனித நேயம், இரக்கம், பெருமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய குடும்பமாக, ஒரு இணக்கமான சமுதாயத்தின் அடித்தளமாக இருக்கவும் மற்றும், உலக கண்ணோட்டத்தை வடிவமைத்து, தனி நபர்களின் மதிப்பு முறையை குடும்பம் வலுவாக்குகிறது. அதன் விளைவாக, அனைவரும் விரும்புகின்ற, ஒரு நிலையான, அமைதியான, வளமான சமூகத்தை உருவாக்க முடியும் என்பது எனது திடமான நம்பிக்கையும் ஆகும்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 13 தொடரும்         
    • எனது அவதானிப்பும் இவ்வாறே உள்ளது. அமெரிக்காவின் நீதித்துறையில் அரசியல். வலது இடது சாரி ஊடகங்களிடையே பனிப்போர் நடைபெறுகின்றது.  இவற்றுக்குள் சிக்கி தவிக்கும் மக்கள். 
    • "யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்??"     "உலக வாழ்க்கையின் மகத்தான மேடையில் வரலாறு படைக்கும் இதயங்களின் மத்தியில்   மானிடப் பிறவி எடுத்தவன் மனிதனா?    மனிதம் கொண்ட ஒருவன் மனிதனா??"   "வெறும் சதையும் எலும்பும் மனிதனல்லா  வெறும் பலமும் செல்வமும் மனிதனல்லா  வெறும் புகழும் பதவியும்  மனிதனல்லா  யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்??"   "கண்கள் விழித்து கருணை காட்டும்  கொடுமையைக் கண்டு மனது குமுறும்      அறிவுடன் அறிந்து உதவும் கரமும்   எங்கே இருக்குதோ? அவனே மனிதன்!!"   "துயரம் கண்டு அக்கறை காட்டி  ஆறுதல் கொடுக்கும் புன்னகை உதிர்ந்து   தனக்கென வாழாது உலகத்துக்கும் வாழும்  அவனே மனிதன்! அவளே மனிதன்[மனிதி]!!"    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.