Jump to content

மாடியில் இருந்து விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு: உயிரை பணயம் வைத்து மீட்ட மக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
29 APR, 2024 | 10:37 AM
image

தமிழ்நாட்டில் சென்னை ஆவடி அருகே அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்த 6 மாத பெண் குழந்தை, 2-வது மாடியில் மழைக்காக அமைக்கப்பட்டிருந்த தகர கூரையில் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. குடியிருப்புவாசிகள் உயிரை பணயம் வைத்து, அந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் திருமலைவாசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இளம் தம்பதியின் 8 மாத பெண் குழந்தை கிரண்மயி. இந்நிலையில், நேற்று காலை குடியிருப்பு வளாகத்தின் 4-வது தளத்தில் இருந்தபடி, குழந்தைக்கு தாய் சோறு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக, தாயின் பிடியில் இருந்து தவறிய குழந்தை, பால்கனி வழியாக கீழே விழுந்தது. தாய் அலறித் துடிக்க, அதிர்ஷ்டவசமாக, 2-வது மாடியில் மழைக்காக அமைக்கப்பட்டிருந்த தகர கூரை மீது குழந்தை விழுந்தது.

இந்த நிலையில், சத்தம் கேட்டு, குடியிருப்புவாசிகள் ஓடி வந்தனர். தகர கூரையின் நுனியில் குழந்தை அழுதபடியே தொங்கிக் கொண்டு இருப்பதை பார்த்து பலரும் பதறினர். பிடி நழுவினால் 2-வது மாடியில் இருந்து எந்நேரத்திலும் குழந்தை கீழே விழக்கூடும் என்ற நிலை இருந்ததால், ஒரு பெரிய துணியை கையில் பிடித்தபடி, பலரும் கீழே சூழ்ந்து நின்றனர். பின்னர், ஒரு பெரிய போர்வையை எடுத்து வந்து 10-க்கும் மேற்பட்டவர்கள் சுற்றி நின்று கெட்டியாக பிடித்துக் கொண்டனர்.

எதிர் குடியிருப்பில் இருந்து இதை பார்த்துக் கொண்டிருந்த 2 பெண்கள் உட்பட 3 பேர், “குழந்தையை எப்படியாவது காப்பாற்றுங்கள்” என தொடர்ந்து வேதனையுடன் குரலெழுப்பியபடி இருந்தனர்.

இதற்கிடையே, தகர கூரையில் தொங்கிக்கொண்டு இருக்கும் குழந்தையை பத்திரமாக மீட்பதற்கான முயற்சியில் குடியிருப்புவாசிகள் சிலர் இறங்கினர். உயிரை பணயம் வைத்து, முதல் தளத்தில் உள்ள ஜன்னல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக இறங்கினர். ஒருவரை ஒருவர் பத்திரமாக பிடித்து கொள்ள, ஒருவர் துணிச்சலுடன் ஏறி, தகர கூரையின் நுனியில் தவித்துக் கொண்டிருந்த குழந்தையை லாவகமாக மீட்டார்.

குழந்தையை   எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்ட அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மீட்கப்பட்ட குழந்தை கிரண்மயிக்கு நெற்றியில் லேசாக காயம்பட்டிருந்தது. உடனடியாக குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

கூரையின் நுனியில் குழந்தை தவிப்பது முதல், பத்திரமாக மீட்கப்பட்டது வரை வீடியோவாக பதிவு செய்த ஒருவர் இதை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். வலைதளங்களில் இது வைரலானது. குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

https://www.virakesari.lk/article/182204

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை.! பதைபதைப்பு நிறைந்த மீட்பு காட்சிகள்.!

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: 4வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை உயிர் பிழைத்தும், தாய் தற்கொலை செய்தது ஏன்?

ரம்யா தற்கொலை
படக்குறிப்பு, தற்கொலை செய்து கொண்ட ரம்யா (இடதுபுறம்), பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை, கீழ் தளத்தின் ஷன் ஷேடில் சிக்கியிருந்த காட்சி (வலது) கட்டுரை தகவல்
  • எழுதியவர், ச.பிரசாந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 31 நிமிடங்களுக்கு முன்னர்

சமூக வலைதளங்களில் யாரோ எங்கோ பகிர்ந்த வெறுப்பு கருத்துகள் சென்னையில் மாடியில் தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் உயிரை பறித்துள்ளது.

சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் வெங்கடேஷ் (37), இவரது மனைவி ரம்யா (33). ஐ.டி துறையில் பணியாற்றி வந்த இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தையும், 9 மாத பெண் குழந்தையும் உள்ளன.

கடந்த ஏப்ரல் 28ம் தேதி ரம்யா உணவு கொடுத்துக் கொண்டிருந்த போது, ஒன்பது மாத கைக்குழந்தை எதிர்பாராத விதமாக நான்காவது மாடி பால்கனியில் இருந்து தவறி கீழ் தளத்திலிருந்த ‘சன் ஷேடில்’ விழுந்தது. அருகில் குடியிருந்தவர்கள் ஜன்னல் கம்பியில் நின்றபடி, பெரும் போராட்டத்திற்கு பின் குழந்தையை உயிருடன் மீட்டனர்.

குழந்தை மீட்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிவேகத்தில் பரவியது. பகிரப்பட்ட வீடியோக்களில், குழந்தை பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்ததற்காக அவரது தாயைக் குற்றம்சாட்டி வெறுப்பு கருத்துகளை பலரும் பதிவிட்டிருந்தனர். இதுபோன்ற இணையவழி தொல்லையால் (Cyber bullying) ரம்யா மன ரீதியில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளார்.

 

இந்த மன உளைச்சலில் இருந்து மீள, கோவையில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்த ரம்யா, அங்கேயே தற்கொலை செய்து கொண்டார்.

ரம்யாவின் தற்கொலைக்கான காரணங்களை அறியும் பிபிசி தமிழ் முயற்சியில், ரம்யா மகப்பேறுக்கு பிந்தைய மனச்சோர்வு (Postpartum Depression), இணையவழி தொல்லை (Cyber Bullying) மற்றும் குழந்தை கீழே விழுந்த நிகழ்வுக்குப் பிந்தைய மன உளைச்சல் (Post Traumatic Depression) போன்ற பாதிப்புகளால் மனமுடைந்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

அதீத மன உளைச்சல் தான் தற்கொலைக்கு காரணம்!

மாடியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை; தாயின் உயிரை பறித்த சமூக வலைதள பதிவுகள்!
படக்குறிப்பு, தற்கொலை செய்து கொண்ட ரம்யா

வழக்கு விசாரணை அதிகாரியான காரமடை காவல் ஆய்வாளர் ராஜசேகரன், ‘‘ரம்யா அதீத மன உளைச்சலில் இருந்ததால் இத்தகைய விபரீத முடிவை எடுத்துள்ளார்,’’ என்கிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், ‘‘குழந்தை விழுந்த சம்பவத்தால் வெங்கடேஷ் மற்றும் ரம்யா தம்பதியினர் மன விரக்தியில் இருந்துள்ளனர். மன அமைதிக்காக கோவையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ரம்யா குடும்பத்துடன் வந்துள்ளார்.

ஆனாலும், சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வெறுப்பு கருத்துகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையாமல் அவர் அதீத மன அழுத்தத்தில் தற்கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளார். ரம்யா குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் இவை தெரியவந்துள்ளன,’’ என்கிறார் ஆய்வாளர் ராஜசேகரன்.

குழந்தை பிறந்த பிறகு தாய்க்கு ஏற்படும் மன அழுத்தம் அதாவது மகப்பேற்றுக்கு பிறகான மன அழுத்த (Postpartum Depression) பாதிப்பில் ரம்யா இருந்ததாகவும், குழந்தை கீழே விழுந்த நிகழ்வுக்குப் பிறகு மன உளைச்சல் அதிகரித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், ரம்யாவின் தந்தை போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

‘‘எனது மகள் ரம்யா இரண்டாவது குழந்தை பிறந்த பின் மன அழுத்தம் ஏற்பட்டு, வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர் போல இருந்தார். யாரிடமும் பேசாமல் விரக்தியில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்துள்ளார்,’’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாடியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை; தாயின் உயிரை பறித்த சமூக வலைதள பதிவுகள்!
படக்குறிப்பு,சென்னையில் குழந்தை மீட்பு

ரம்யாவின் உலகம் எத்தகையது?

‘ரம்யா தைரியமான பெண் அவர் தற்கொலை முடிவை எடுப்பார் என நாங்கள் நினைக்கவில்லை என, நம்மிடம் பேசிய ரம்யாவின் சித்தப்பா கூறினார்.

தனது பெயர் வெளியிட வேண்டாமென்பதை நம்மிடம் கேட்டுக் கொண்ட அவர், ‘‘ரம்யா குடும்பத்திலும், உறவினர்களிடமும் அதீத அன்பு கொண்டவர். சிறு வயது முதலே தைரியமாக இருப்பவர். குடும்பத்தில் யாருக்கு பிரச்னை என்றாலும் தீர்வு சொல்லக்கூடிய பக்குவம் உள்ளவர். மாற்று சாதியை சேர்ந்தவரை காதலித்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அனைத்தும் நன்றாக சென்ற நிலையில் ரம்யா தற்கொலை செய்வார் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை,’’ என்கிறார் அவர்.

ரம்யாவின் தந்தை அரிசி வியாபாரம் செய்பவர். அவர்களின் குடும்பமே அதிக கடவுள் பக்தி உடையது. குழந்தை மீட்கப்பட்ட பின் ரம்யாவின் தந்தை கெடா வெட்டி சிறப்பு பூஜையே நடத்தியுள்ளார் என்கிறார் ரம்யாவின் சித்தப்பா.

மேலும் தொடர்ந்த அவர், ‘‘எங்கே யாரோ பதிவிட்ட வெறுப்பு கருத்துக்கள் எங்கள் மகள் உயிரை பறித்துள்ளது. ஏதாவது சம்பவம் நடந்தால் இனியாவது அனைவரும் சம்பவத்தில் நடந்த நன்மைகளை குறிப்பிட்டு பாதிக்கப்பட்டோருக்கு மன ஆறுதல் தரும் வகையில் பேச முன்வர வேண்டும். வெறுப்பு கருத்துகளால் யாருக்கு என்ன பயன்? பாதிப்பு தான் அதிகமாகிறது’’ என வருத்தத்துடன் நம்மிடம் தெரிவித்தார்.

‘யாரென்றே தெரியாதவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்திற்கு நாங்கள் என்ன செய்ய முடியும், யார் மீது வழக்கு தொடுப்பது?’ என்கிறார் ரம்யாவின் சித்தப்பா.

‘எந்த தாயும் குழந்தையை பாதிப்பில் விடமாட்டார்கள்’

‘சைபர் ஃபுல்லியிங்’ காரணமாக ரம்யா தற்கொலை செய்தது தொடர்பாக சில பெண்களிடம் நாம் பேசினோம்.

நம்மிடம் பேசிய கோவையைச் சேர்ந்த விமலா, ‘‘எனக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளன. எந்த தாயும் தன் குழந்தையை ஆபத்தான சூழலில் விடமாட்டார். சிறிதாக காயம் ஏற்பட்டாலே பதறிப்போவார்கள், அது தான் தாய்மை உணர்வு.

குழந்தை மாடியில் இருந்து விழுந்த போது மனரீதியில் ரம்யா மிகவும் பாதிக்கப்பட்டிருப்பார். அவருக்கு ஆதரவாக, மன உறுதி கொடுப்பது போல் தான் அனைவரும் பேசியிருக்க வேண்டும். ஆனால், அவரின் தாய்மை குறித்து பலரும் விமர்சித்ததை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது,’’ என்றார்.

நம்மிடம் பேசிய மற்றொரு பெண்ணான அமுதா, ‘‘அப்படி ஒரு சம்பவத்தில் இருந்து குழந்தை மீட்கப்பட்டது மிகப்பெரிய விஷயம். உயிருடன் அந்த குழந்தை தாய்க்கு மீண்டும் கிடைத்தது வரம். ஆனால், அந்த தாயின் மனநிலையை பாதிக்கும் வகையில் பதிவிடப்பட்ட கருத்துகளால் இன்று அந்த குழந்தைக்கு தாய் இல்லாமல் போய்விட்டது.

உண்மையில் குழந்தை பிறந்து அதை வளர்க்கும் போது தாய்மார்களுக்கு அதிக மன உளைச்சல் ஏற்படும். இப்படியான சூழலில் வெறுப்பு கருத்துகள் அவரை அதிகம் பாதித்திருக்கும்,’’ என்கிறார் அவர்.

ரம்யா தற்கொலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரசவத்திற்கு பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம்

இரண்டாவது குழந்தை பிறந்ததில் இருந்தே ரம்யா அதிக மன உளைச்சலில் இருந்ததாக புகாரில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த பாதிப்பின் தீவிரம் என்ன?

"பிரசவத்திற்கு பிறகு பெண்களில் 3 சதவீதம் பேர் தான் மகப்பேற்றுக்கு பிறகான மன அழுத்த பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்” என்கிறார், சென்னை எழும்பூரில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனையின் இயக்குநர் கலைவாணி.

நம்மிடம் பேசிய இயக்குநர் கலைவாணி, ‘‘இந்தியாவில் பிரசவமாகும் பெண்களில் 30 சதவீதம் பேருக்கு பிரசவத்துக்கு பிறகான பதற்றம் (Postpartum Blues) எனப்படும் மன அழுத்தம் ஏற்படுகிறது. பிரசவித்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சையால் ஏற்படும் வலி, மயக்கம், குழந்தையை வளர்ப்பு தொடர்பான பயம், வறுமை, குடும்ப ஆதரவு போன்ற பல எண்ணங்கள் மனதில் தோன்றி, அவை ஏற்படுத்தும் மன உளைச்சல் பிரசவத்துக்கு பிறகான பதற்றம் (Postpartum Blues) என அழைக்கப்படுகிறது.

இரண்டு வாரங்களுக்கு மேல் `போஸ்ட்பார்ட்டம் ப்ளூஸ்’ பாதிப்பு இருந்தால் அது, மகப்பேற்றுக்கு பிறகான மன இறுக்கம் (Postpartum depression) என அழைக்கப்படும். இந்தியாவில் பிரசவமாகும் பெண்களில் அதிகபட்சமாக 1 –2 சதவீதம் பேருக்கு தான் இத்தகைய பாதிப்பு ஏற்படும்.

பிரசவித்த தாய்மார்கள் இரண்டு வாரத்திற்கு மேல், சோர்வாக, மன உளைச்சலில் தனிமையாக இருந்தால் உடனடியாக மகப்பேறு மருத்துவரிடமும், மனநல மருத்துவரிடமும் ஆலோசனை பெற வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இந்த பாதிப்பை கண்டறிந்து மனநலத்தை காக்க முடியும்,’’ என்கிறார் அவர்.

மன இறுக்கம் தீவிரமடைந்தால் தாய் தன் குழந்தையை கொலை செய்யும் அளவிற்கான சம்பவங்களும், தாய் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்துள்ளதாகவும், அந்த அளவிற்கு இது தீவிர மன உளைச்சலை தரும் எனவும் தெரிவிக்கிறார் மருத்துவர் கலைவாணி.

இந்தியாவில் மகப்பேறுக்கு பிறகான மன அழுத்த பாதிப்பு கண்டறியப்படாத மற்றும் சிகிச்சை அளிக்கப்படாத குறைபாடுகளில் ஒன்றாகும் என சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

 

ரம்யாவின் உயிரைப் பறித்த பலவித மன அழுத்த பாதிப்புகள்!

மாடியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை; தாயின் உயிரை பறித்த சமூக வலைதள பதிவுகள்!
படக்குறிப்பு,மனநல ஆலோசகர் அனிஷா ரஃபி

ரம்யா ‘இணையவழித் தொல்லை, பிரசவத்துக்கு பிறகான மன அழுத்தம் மட்டுமின்றி அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு ( Post Traumatic Stress) காரணமாகவும் மன அழுத்தத்தில் இருந்திருப்பார் என்கிறார், கோவையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் அனிஷா ரஃபி.

நம்மிடம் பேசிய அனிஷா, ‘‘ஒருவரை மையப்படுத்தி அவரை தவறான முறையிலோ, குற்றம்சாட்டியோ அல்லது அவரின் சமூக அடையாளத்தை கொச்சைப்படுத்தும் படி விமர்சிப்பதை ‘இணையத் தொல்லை’ (Cyber Bullying) என்கிறோம். இது நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக அதிகரிப்பதுடன், இதனால் மன நலம் பாதிப்போரும் அதிகரித்து வருகின்றனர்’’ என்கிறார் அவர்.

நம்மை அதிகம் பாதிக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தால், அதை அடிக்கடி நினைத்து பார்த்து நாம் மனவிரக்தி அடைவதையும், நம்மை நாமே குற்றம் சொல்லிக்கொள்வதையும் அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு ( Post Traumatic Stress) என அழைக்கப்படுகிறது. தற்கொலை செய்த ரம்யாவும் இந்த பாதிப்பையும் எதிர்கொண்டிருப்பார் என்கிறார் அனிஷா.

அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தம் ( Post Traumatic Stress)

மேலும் தொடர்ந்த அனிஷா, ‘‘ரம்யா தைரியமான பெண் என அவர் குடும்பத்தினர் தெரிவித்திருந்தாலும், குழந்தை மீட்கப்பட்ட சந்தோஷத்தை விட ரம்யா குறித்தான மோசமான கருத்துகள் அவரை மிகவும் பாதித்துள்ளது. இது அவரது தற்கொலைக்கான காரணமாக அமைந்திருக்கும்,’’ என்கிறார் அவர்.

அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்த பாதிப்பில் இருந்து மீள்வது எப்படி என்பதையும் மனநல ஆலோசகர் அனிஷா விளக்குகிறார்.

‘‘ரம்யாவிற்கு நடந்ததைப்போல சம்பவம் நடந்தால், சில வாரங்களுக்கு சமூக வலைதளத்தை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. தன் மன உறுதியை அதிகப்படுத்தி, தனக்கு ஆதரவாக உள்ளவர்களிடம் அதிகம் பேசுவது இந்த பாதிப்பில் உள்ளோரின் மனநிலையை பலப்படுத்த உதவும்.

யாரேனும் இப்படி பாதிக்கப்பட்டிருந்தால் அவர் உடனடியாக மனநல ஆலோசகரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவாக பேசி, அவர்களை கண்காணித்து அவர்களின் மனநலத்தை பாதுகாப்பது மட்டுமே அவரை காப்பதற்கான தீர்வு,’’ என்கிறார் மனநல ஆலோசகர் அனிஷா.

ரம்யா தற்கொலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய இணைய பயனாளர்களில் 38% பேர் ‘சைபர் ஃபுல்லியிங்’ செய்பவர்கள் – அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்தியாவில் அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள் ‘சைபர் ஃபுல்லியிங்’ பாதிப்பை எதிர்கொண்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், சமீப நாட்களாக சாமானிய மக்களும் இந்த பாதிப்பை எதிர்கொள்வதும், அதனால் தற்கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது.

ரம்யாவிற்கு முன்னரும் இந்தியாவில் சில மாநிலங்களில், ‘சைபர் ஃபுல்லியிங்’ காரணமாக சிலர் தற்கொலை செய்துள்ளனர்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜயின் பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் பிரியன்சு யாதவ், பலவித மேக்கப் அணிந்து ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் ‘ரீல்ஸ்’ வெளியிட்டு வந்தார். 2023 நவம்பர் மாதம் அவர் பெண் வேடம் அணிந்து ரீல்ஸ் வெளியிட்ட போது, பலரும் பிரியன்சுவை கிண்டல் செய்து வெறுப்பு கருத்துக்களை பகிர்ந்தனர். இதனால், அவர் தற்கொலை செய்து கொண்டார்.

கேரள மாநிலத்தை சேர்ந்த முதல் மாற்றுப்பாலின உடற்கட்டமைப்பாளராக (bodybuilder) இருந்தவர் பிரவீன் நாத். இவர் 2021 மாநில அளவிலான bodybuilding போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதுடன், மிஸ்டர் கேரளா போட்டியிலும் வென்றிருந்தார். மிஸ் மலபார் அழகுப்போட்டியில் வெற்றி பெற்றிருந்த மாற்றுபாலினத்தை சேர்ந்த ரிஷானா ஐசு திருமணம் செய்தார். இவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வெறுப்பு கருத்துகளால், மனமுடைந்து பிரவீன் தற்கொலை செய்து கொண்டார்.

‘சைபர் ஃபுல்லியிங்’ இந்தியாவில் வளர்ந்து வரும் பிரச்னையாக உள்ளது.

தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத்தின் தரவுகளை நாம் சேகரித்த போது, இந்திய அளவில் பெண்களுக்கு எதிரான இணைய வழித்தொல்லை, (சைபர் ஃபுல்லியிங்) சம்பவங்கள் தொடர்பாக 2022ம் ஆண்டில் மட்டுமே 9,821 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவே 2018ம் ஆண்டி 8,986 வழக்குக்கள் பதிவாகியிருந்தன.

இந்தியாவில் பத்தில் நான்கு இணைய பயனாளர்கள் ‘இணையவழித் தொல்லை கொடுக்கும் செயல்களில் ஈடுபடுவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்த இணைய பயனாளர்களில் 38 சதவீதம் பேர் ‘இணையவழித் தொல்லை’ செய்வதாகவும், இதில் இளைஞர்கள் தான் அதிகம் எனவும் தெரிவித்துள்ளனர்.

 

சிலர் ‘இணையவழித் தொல்லை’, ‘பப்ளிக் ஷேமிங்’கில் ஈடுபடுவது ஏன்?

சமூக வலைதளத்தில் ‘சைபர் ஃபுல்லியிங், பப்ளிக் ஷேமிங்’ செய்வது ஒருவித மனநோய் என்கிறார், கோவை குமரகுரு கல்லூரியின் உளவியல் துறை உதவிப்பேராசிரியர் தாரணி.

இதை விளக்கிய உதவிப்பேராசிரியர் தாரணி, ‘‘சமூகத்தில் நானும் ஒரு அங்கம் என்பதை நிரூபிக்க நினைத்து தான், எது நடந்தாலும் அது குறித்து சமூக வலைதளங்களில் பதிவு மற்றும் கருத்துகளை பகிர்கின்றனர்.

ஒரு சம்பவம் தொடர்பாக அல்லது ஒரு நபர் தொடர்பாக கற்பனையான ஒரு உரிமையை எடுத்துக்கொண்டு கருத்துகளை பகிர்வதை பாராசோஷியல் உறவு (Parasocial Relationship) என்கிறோம். ஒருவர் மீது கற்பனையான ஒரு உரிமையை எடுத்துக்கொண்டு, சமூகத்தில் தன் இருப்பை பதிவு செய்ய நினைத்து தான் பலரும் ‘சைபர் ஃபுல்லியிங்’, ‘பப்ளிக் ஷேமிங்’ செய்கின்றனர், இது ஒரு வித மனநோய்,’’ என்கிறார் அவர்.

ரம்யா தற்கொலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

‘இணையவழித் தொல்லை’ குறித்து சட்டம் சொல்வது என்ன?

சமூக வலைதளங்களில் இணையவழித் தொல்லைகளால் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டுமென விளக்கியுள்ளார், கோவை மாவட்ட சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் அருண்.

நம்மிடம் பேசிய அருண், ‘‘சமூக வலைதளங்களில் ‘சைபர் ஃபுல்லியிங், பப்ளிக் ஷேமிங்’ போன்றவற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டால், இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழும், அவதூறு வழக்கு பதிய முடியும், பெண்களாக இருந்தால் பெண் வன்கொடுமை சட்டத்திலும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

அது தெரிந்த நபர்கள் மூலம் நடந்திருந்தால் எளிதாக நடவடிக்கை எடுக்க முடியும், அறிமுகம் இல்லாத நபர்கள் என்றால் அவர்கள் மீது புகார் கொடுத்தாலும், குற்றவாளியின் சமூக வலைதள கணக்கை கண்டறிந்து, அவர்களின் ஐ.பி முகவரி (Internet Protocol), அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து தான் நடவடிக்கை மேற்கொள்ள முடியும். இவர்களுக்கு அபராதத்துடன் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.

‘இணையவழித் தொல்லை, பப்ளிக் ஷேமிங்’ போன்றவை ஒரு நபரின் தற்கொலைக்கு காரணமாக இருந்தாலோ, ஒருவரின் சமூக அந்தஸ்தை குறைத்தாலோ, அவதூறு வழக்கு மட்டுமின்றி, தற்கொலைக்கு தூண்டுதல் போன்ற சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளலாம். இந்த குற்றத்திற்கு இரண்டு ஆண்டு முதல் பத்து ஆண்டுகள் வரையில் தண்டனை கிடைக்கும்’’ என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/articles/ce55yxdz7gdo

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "மாயா"     செப்டம்பர் 22, 1995 , என்னால் மறக்க முடியாத ஒருநாளாக இன்னும் என் மனதை வருத்திக்கொண்டு இருக்கிறது. அன்று தான் என் அன்பு சிநேகிதி இறந்த தினம். அவர் சாதாரணமாக இறக்கவில்லை, அந்த கொடுமையை நினைத்தால் எவருமே கதிகலங்குவார்கள். அவளும் அவளின் மாணவிகளும் புத்தரின் தர்ம போதனைக்கும் உலக நீதிக்கும் எதிராக துண்டு துண்டாக உடல்கள் சிதறி நாகர்கோவில் மகாவித்தியாலத்தில் பிற்பகல் 12.50 மணியளவில் விமானப் படையினரின் குண்டுத் தாக்குதலில் 21 - 26 மாணவர்கள் உட்பட கொல்லப் பட்ட தினம் ஆகும். அது தான் நான் இன்று, இந்த கார்த்திகை தினத்தில் நேரத்துடன் துயிலில் இருந்து எழும்பி யன்னல் வழியாக ஆகாயத்தை வெறுத்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.   அரசியல், யுத்தம், சமதானம் என்பவற்றைப் பற்றிப் புத்தர் தெளிவான கருத்துடையவராயிருந்தார். அஹிம்சையும் சமாதானமுமே பௌத்தம் உலகுக்கு விடுக்கும் செய்தி. இது எல்லாராலும் நன்கு அறியப்பட்டதொரு விஷயம். எந்தவிதமான பலாத்காரத்தையும் அது ஏற்றுக்கொள்வதில்லை. கொல்லாமையே அதன் மூலாதாரமான கொள்கை. 'நீதியான யுத்தம்' என்று சொல்லக் கூடியது ஒன்றுமில்லை. இது ஒரு போலிப் பெயர். துவேஷம், கொடுமை, இம்சை, கொலை என்பவை நேர்மையானவையெனக் காட்டும் நோக்கமாக ஆக்கப்பட்டதொரு அர்த்தமற்ற வார்த்தை.   பௌத்த மதத்தின்படி 'நீதியான யுத்தம்' என்று ஒன்றுமில்லை. 'இது நீதி, இது அநீதி' என்று தீர்மானிப்பது யார்? நாங்கள் துவங்கும் யுத்தம் எப்பொழுதும் நீதியானது. மற்றவர்கள் துவங்கும் யுத்தம் அநீதியானது. பௌத்தம் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்வதில்லை.   ரோஹினி ஆற்று நீர்ப் பிரச்சினை சம்பந்தமாகச் சாக்கியரும், கோலியரும் பிணங்கிக் கொண்டு சண்டை செய்ய முற்பட்டபோது பகவான் யுத்தகளத்துக்குப் போய் பிணக்கைத் தீர்த்துச் சண்டையை நிறுத்தினார். அஹிம்சையை அவர் போதித்தது மாத்திரமன்றி, சமாதானத்தை நிலை நாட்டக் காரிய பூர்வமான நடவடிக்கையை எடுத்தார். பகவானுடைய அறிவுரையைக் கேட்டு அஜாதசத்து என்ற மன்னன் வஜ்ஜிராச்சியத்தோடு உண்டான சண்டையை நிறுத்தினான்.   நான் சைவ மதத்தவன் என்றாலும் புத்த பெருமானை நேசிக்கிறேன் அவரின் இந்த கொள்கைக்காக! ஆனால் இன்று அவரின் புதல்வர்கள் என்று கூறும் பலர், இதை பின்பற்றுவதாக எனக்குத் தெரியவில்லை. அது தான் அந்த குண்டுகள் பொழிந்த ஆகாயத்தை பார்த்தபடி என் சினேகிதியை இந்த கார்த்திகை நாளில் நினைவு கூறுகிறேன்!   என் சினேகிதியை தற்செயலாக தற்காலிக இடமாற்றத்தை அடுத்து வேலையை பாரம் எடுக்க பருத்தித்துறைக்கு சென்ற பொழுது, பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் சந்தித்தேன். அவர் ஒரு இளம் ஆரம்ப பள்ளி ஆசிரியை. அவர் தான் என் புது அலுவலகத்துக்கான பாதைக்கு வழி காட்டியதுடன், தன் வீடும் அதற்கு அருகில் என்று, கூடவே கதைத்து கொண்டும் வந்தார். ஒரு சில நிமிடங்களில் பரிமாறி கொண்ட கவர்ச்சிகரமான அப்பாவித்தனமான பார்வைகள் அவளின் குறும்புத்தனம் மிக்க இனிய குரல்கள், பெண்மையின் வளைவு நெளிவுகளை வெளிப்படுத்தும் அவளின் அழகிய கோலமும் குனிந்த நடையும் வாரம் நகர்ந்தும் என்னால் மறக்க முடியவில்லை. அவளின் பெயர் மாயாதேவி , நாகர்கோவில் மகாவித்தியால ஆசிரியை, இவ்வளவும் தான் எனக்குத் தெரியும். ஒரு சில நிமிடங்கள் தானே அவளுடன் பழக்கம். அவளை முழுமையாக அறிய அன்று ஆவல் இருந்தாலும், எடுத்தவுடன் அதுகளை கேட்டு குழப்பக்கூடாது என்று பேசாமல் இருந்துவிட்டேன்.   முதிர்ச்சியற்ற காதல் இப்படிச் சொல்லும்: `நான் உன்னைக் காதலிக்கிறேன். ஏனென்றால் நீ எனக்கு வேண்டும்.’ முதிர்ச்சியடைந்த காதல் இப்படிச் சொல்லும்: `எனக்கு நீ வேண்டும். ஏனென்றால், நான் உன்னைக் காதலிக்கிறேன்.’ ‘ - இதைச் சொன்னவர் அமெரிக்க சமூக உளவியலாளர் எரிக் ஃப்ரோம் (Erich Fromm). காதலுக்குத் தேவையான அடிப்படையான மனப்பக்குவம் இதுதான். அப்படித்தான் நானும் இருந்தேன்.   அவள் விண்ணில் இருந்து வந்த தேவதையின் உடல் எடுத்து வந்தது போல் இருந்தாள். அவளை சுற்றி ஒரு பிரகாச சூழ்நிலை நிலவிக்கொண்டு இருப்பதாய் அன்று அவதானித்தேன். அந்த அழகு எப்படி வர்ணிப்பது என்று எனக்கு தெரியவில்லை. அவளின் படைப்பில் வெறுக்கிற மாதிரி ஒரு அம்சம் கூட இல்லை. நான் சும்மா சொல்லவில்லை. அவள் மலர்ந்துகொண்டு இருக்கும் ஒரு பன்னீர் மலர்! 'பன்னீர் மலர் சொரியும் மேகங்களே எங்கள் பரந்தாமன் மெய் அழகை பாடுங்களே!' என்று ஒரு பாடல் கேட்ட ஞாபகம். உண்மையில் 'பன்னீர் மலர் சொரியும் மேகங்களே என் நண்பியின் மெய் அழகை பாடுங்களே!' என்று தான் என் உள்ளம் அசை போடுகிறது!. எப்படியும் அவளை சந்திக்கவேண்டும் என்று அன்று ஒரு நாள், அவள் பாடசாலை முடிய வரும் பேருந்துக்காக, நேரத்துடன் வேலையில் இருந்து புறப்பட்டு காத்திருந்தேன்.   'இளந்தளிரைப் போன்று மென்மையாகவும் தாமரைக்கொடியைப் போன்ற மெதுமெதுவென்று இருக்கும் கரங்கள் என்னைத் தழுவவேண்டும். அவளின் வசீகரமான புன்முறுவல் என் மார்பில் சாய்ந்து கொட்டிடவேண்டும். அப்பொழுது உணர்ச்சிக் கொந்தளிப்புக்கள் இன்பத்தை பொழியவேண்டும்' இப்படி என் மனம் மகிழ்ந்து கொண்டு, நான் என்னையே மறந்து கனவில் மிதந்த அந்த தருவாயில், 'ஹாய்' என்ற அந்த அவளின் இனிய குரல் என்னை மீண்டும் பூமிக்கு வர வைத்தது. 'ம்ம்ம் என்ன இன்று நேரத்துடன் வேலை முடிந்ததா ?' அவள் தான் தொடர்ந்தாள், நான் என்னை சமாளித்துக்கொண்டு, இல்லை ஒரு தனிப்பட்ட விடயமாக கொஞ்சம் வெளியே வந்தேன், இனி திரும்பவும் வேலைக்கு போகப் போகிறேன் என என் கதையை மாற்றினேன். அப்ப தான் அவளுடன் ஒன்றாய் நடக்க முடியும்!   கொஞ்சம் எனக்கு பசி, வாங்க தேநீரும் வடையும் சாப்பிட்டுவிட்டு போவோம் என கூப்பிட, அவள் கொஞ்சம் தயங்கினாலும், பின் ஓகே என்று வந்தாள். அது தான் என் முதல் வெற்றி! கொஞ்சம் கொஞ்சமாக அவளை அறியத் தொடங்கியதுடன் என்னைப்பற்றியும் சொன்னேன். அவள் தொடக்கத்தில் கொஞ்சம் அச்சம் நாணம் கொண்டாலும், போகப் போக அன்னியோன்னியமாக பழகத் தொடங்கினாள். அது என் இரண்டாவது வெற்றி!   அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும் பெண்பாற் குரிய என்ப."   என்றார் தொல்காப்பியர். இது களவியலுக்கு மட்டும் தான்! ஒரு காதல் சுவைக்கு மட்டும் தான் என்ற உண்மையை அவளிடம் கண்டேன்! இப்ப நான் மட்டும் அல்ல அவளும் எனக்காக காத்திருக்கிறாள். இப்ப நான் மோட்டார் சைக்கிளில் வர ஆரம்பித்ததால், நான் காலை நேரத்துடன் வந்து அவளை பாடசாலையில் இறக்கிவிட தொடங்கினேன். அவள் என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு செல்லக் கதைகளும் பேச தொடங்கிவிட்டாள். அந்த சிலநிமிட பயணம், சொர்க்கம் என்று ஒன்று இருந்ததால் அங்கே போனமாதிரி இருந்தது!   ஒரு சில மாதம் கழிய, செப்டம்பர் 22, 1995 , அவளுக்கு என் காதலின் அடையாளமாக ஒரு அழகிய மோதிரம் எம் இருவரின் படத்துடன், அன்று அவளை, பாடசாலையில் இறக்கிவிடும் பொழுது, திடீரென ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, அவளின் விரலில் நானே போட்டுவிட்டேன். அவள் அப்படியே திகைத்து நின்றாள், ஒன்றுமே பேசவில்லை, ஆனந்த கண்ணீர் சொட்டு சொட்டாக அவள் கன்னத்தை நனைத்தன. அது தான் நான் கொடுத்த முதல் முத்தம் கூட. திரும்பி, சுற்றி பார்த்தாள், நாம் ஒரு மரத்தின் அடியில் நின்றதால், எம்மைக் காணக்கூடியதாக ஒருவரும் தெரியவில்லை. திடீரென அவசரம் அவசரமாக என்னை இழுத்து, வாயுடன் வாய்சேர்த்து முத்தம் தந்துவிட்டு, சட்டென அந்த மோதிர விரலை பார்த்தபடியே பாடசாலைக்குள் ஓடி விட்டாள். வழமையாக சொல்லும் 'போயிட்டு வருகிறேன்' கூட சொல்லவில்லை ?   அவள் இன்று ஒன்றும் சொல்லாமல் பாடசாலைக்குள் போனது எனோ எனக்கு ஒரு மாதிரி இருக்க, என் மதிய இடைவெளியில், சாப்பிடுவதை தவிர்த்து, அவளை ஒருக்கா பார்க்க வேண்டும் என்ற அவா உந்த, மோட்டார் சைக்கிளில் அவளிடம் போனேன். போகும் பொழுது, பாடசாலைக்கு கொஞ்சம் அருகில் இருந்த கடை ஒன்றில் அவளுக்கு, அவள் மிகவும் விரும்பும் இருதய அமைப்பில் அமைந்த ஆல்கஹால் பிரீ டார்க் சாக்லேட் [alcohol free dark chocolate] பெட்டி ஒன்றை வாங்கி, மீண்டும் மோட்டார் சைக்கிளில் எற, பெரும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் பாடசாலை பக்கம் இருந்து கேட்டது. போர்விமானமும் கூவிக்கொண்டு பறந்தன, கடைக்கார முதலாளி கடையை உடனடியாக மூடிக்கொண்டு, தம்பி, ஒரு இடமும் போகவேண்டாம் என்று என்னையும் பதுங்கு குழிக்குள் இழுத்து சென்றார்.   நான் ரசித்த உடல் துண்டு துண்டாக அன்று மாலை என்னால் போய் பார்க்க முடிந்தது. அவளின் மற்றும் மாணவர்களின் பெற்றோரின் அழுகுரல் ஒரே சோகமயமாக அங்கு காட்சி அளித்தது. நான் அவளின் கையை, நான் போட்டுவிட்ட மோதிரம் மூலம் அடையாளம் கண்டேன்.     "அழகான என் செல்ல நண்பியே அன்பான ஒரே நம்பிக்கை நட்சத்திரமே அளப்பெரும் துயரில் என்னைத் தள்ளி அமைதியாய் சொல்லாமல் மறைந்தது ஏனோ ?"   "வாய் மூடி தலை குனிந்து வான் உயர துள்ளி குதித்து வாழ்க்கை காண கனவு கண்டவளே வாட்டம் தந்து மௌனமாகியது எனோ?"   "என் அழகான காதல் செல்லமே என்னை விட்டு போக வேண்டாம்? என் குறும்பு இளவரசி இல்லாமல் எனக்கு இனி மகிழ்ச்சி எனோ?"   "பள்ளி அறையில் புத்தகங்களுக்கு இடையில் பகுதி பகுதியாக உன்னை கண்டுஎடுத்தேன் பரவி இருந்த இரத்த சொட்டுக்குள் பச்சை சேலை சிவந்தது எனோ?"   "மச்சம் கொண்ட உன் இளம்கால் மல்லாந்து என்னைப் பார்ப்பதைக் கண்டேன் மயான அமைதியில் உற்று நோக்கினேன் மடிந்தவிரலில் மோதிரம் என்னை அழைப்பதுஎனோ?"     நேரம் இப்ப அதிகாலை இரண்டு மணி, இன்னும் நல்ல இருட்டு, பனி எங்கும் பொழிந்து கொண்டு இருந்தது. நான் இப்ப வெளிநாட்டில், மனைவி பிள்ளைகளுடன் வாழ்கிறேன். அது உலக வாழ்க்கை. ஆனால் என் மனம் இன்னும் அவளையே நினைக்கிறது. அவளுக்காக ஒரு தீபம் ஏற்ற இப்பவே இந்த கார்த்திகை தினத்தில் எழும்பிவிட்டேன். என் மனைவி இன்னும் சரியான தூக்கத்தில், பிள்ளைகள் தங்கள் தங்கள் அறையில். யன்னலுக்கு வெளியே, இது கிராமப்புறம் என்பதால் சிறு மரப்பத்தைகள் [woods]. வானம் அமைதியாக இருந்தது. நான் கொஞ்சம் என் பார்வையை கிழே இறக்கி மரப்பத்தையை பார்த்தேன்.   கழுத்தில் இருந்து கால்வரை வெள்ளை நிற முழு அங்கியுடன், தனது முகத்தை நீண்ட கரும் கூந்தலால் மறைத்துக்கொண்டு, என்னை நோக்கி என் மாயாவின் உடல் அமைப்பிலேயே ஒரு பெண் உருவம் வருவதைக் கண்டேன்!   அருகில் அருகில் வர, தன் முடியை, தன் வலது கையால் வாரி முதுகுப் பின்னல் போட்டாள். நான் போட்டுவிட்ட அந்த மோதிரம் இன்னும் அந்த விரலில் இருப்பதைக் கண்டேன். அது ஒளிர்ந்து கொண்டு இருந்தது. அதே புன்முறுவல், அதே நாணம், அதே நடை! என்னால் நம்பவே முடியவில்லை!. 'ம்ம் வாங்க, உங்க மாயா கூப்பிடுகிறாள், நான் தான் உங்க மனைவி, உதறித்த தள்ளுங்கள் அவளை, கட்டிலில் படுத்திருப்பவளை'   இரண்டு கைகளையும் நீட்டி என்னை அழைத்தபடி நெருங்கி வந்து கொண்டு இருந்தது. என்னை அறியாமலே நான் யன்னலூடாக குதித்து வெளியே போக, யன்னலை அகல துறந்து, அதில் எற, ஒரு காலை தூக்கி வைத்தும் விட்டேன். மற்ற காலை தூக்க முயலும் பொழுது தான் , யாரோ என் காலை பிடித்து இழுப்பது தெரிந்தது. நான் திரும்பி பார்க்கவே இல்லை, என் மாயாவையே, அந்த அழகு தேவதையே பார்த்துக் கொண்டு ' மாயா, என் செல்லமே, நான் வாரெனடா கண்ணு' என்று சத்தம் போட்டு அலறியே விட்டேன்.   பிள்ளைகளும் சத்தம் கேட்டு ஓடிவந்து அப்பா, அப்பா என , மனைவியுடன் சேர்ந்து என்னை யன்னலால் குதிக்க விடாமல் உள்ளுக்குள் இழுத்துவிடார்கள். மனைவி என்னை கட்டிப்பிடித்து, உங்கள் மாயா எனக்கும் சகோதரி தான், எனக்கும் நண்பி தான். காலை நாம் குடும்பமாக இந்த , இனிவரும் ஒவ்வொரு கார்த்திகை தினத்திலும் விளக்கேற்றுவோம். இப்ப வந்து படுங்க, என பிள்ளைகளும் சேர்ந்து என்னை மீண்டும் கட்டிலில் படுக்க வைத்தனர். நான் அவர்களுக்காக கண்மூடி விடியும் மட்டும் இருந்தாலும், அந்த உருவம், என் மாயா என் மனதில் இருந்து அகலவே இல்லை !   "இறந்த அவளின் சூக்கும உடல் இளமுறுவலுடன் என் முன் வந்தது இலக்குமி போல அழகாய் தோன்றி இதழ் குவித்து முத்தம் தந்து"   "பழைய மெல்லிசை முணுமுணுத்து பதுங்கி என் கண்கள் பார்த்து பதுமையாக என் முன் நின்று பணிந்து அழைத்து வா என்றது"   "என் அழகிய குட்டி கண்மணியே எதற்காக உன் உயிரை மாய்த்தாய்? எழுச்சி தந்து நம்பிக்கை விதைத்து என்னை விட்டு விலகியது எனோ?"   "இறந்ததாக நான் உன்னை நம்பவில்லை இன்றும் உனக்காக நான் காத்திருக்கிறேன் இளந் தென்றல் தொடும் அடிவானத்தில் இரவும்பகலும் உன்னைத் தேடி அலைகிறேன் ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • ஊடகத்துறை சார்ந்தவர்கள் அனேகமாக உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்கும் பணிகளைச் செய்யும்போது, அந்த உண்மைகளின் சூட்டினால் அவர்களே தாக்கப்பட்டு அவதிப்படுவதைக் காண்கின்றோம். இதில் சாதாரண மக்களை விடவும் அதிகாரம் உள்ளவர்களால் தாக்கப்படும் போது உயிருக்கே ஆபத்து நேர்ந்துவிடுவதையும் கண்டுள்ளோம். இங்கே துமிலன் அவர்களின் அறிக்கையால் உண்மைஅறிந்த காவல்துறை மன்னிப்புக் கேட்டாலும், இது தனக்கு நேர்ந்த ஒரு அவமானமாக, இழிவாக அந்தத்  துறையின் அதிகாரவர்க்கம் அதனை எண்ணவைத்து, துமிலன் தொடரப்போகும்  செய்திகளில் சிறு தவறு கண்டாலும் அதனை ஊதிப் பெருப்பித்து தனது சூட்டைத் தணிக்க முற்படலாம். ஆகவே துமிலன் தனது தொடரப்போகும் பணியை, மிகவும் அவதானமாகவும், கவனமாகவும் மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகிறேன்.🙌  
    • ரஸ்யாவின் மற்றும் யூகோசிலாவியாவின் உடைவு(உடைப்பு) என ஒரு தொடர் செயற்பாட்டு நிரலுள் நடைபெறும் பூகோள மற்றும் கனியவளச் சுரண்டலாதிக்கக் கொள்கைகளே போருக்கான முதன்மைக் காரணிகளாக விளங்குகின்றமை யாவரும் அறிந்த ஒன்று. மிகையில் கோபர்சேவின் நடவடிக்கையால் உதிர்ந்த சோவியத் ஒன்றியமும் இணைந்த யேர்மனியும் புதின் போன்ற கடும் போக்குத் தலைமைகளால் சாத்தியமாகியிருக்காது அல்லது பழைய போக்கிலேயே ஒரு பனிப்போர்காலம் போல் தொடர்ந்திருக்கும். ஆனால் உலகம் மாற்றங்களை ஏதோ ஒரு வகையில் சந்தித்தே வருகிறது. அது(போர் அல்லது இராசதந்திரப்போர்) வன்வலு மற்றும் மென்வலு என அழைக்கப்படும் இரு வழிகளூடாகவும் உலகு தொடர் மனித உயிரிழப்பைச் சந்தித்தே வருகிறதென்று கொள்ளலாம். இதற்கு அடிப்படையாக இருப்பது உலகத் தலைவர்களின் நேர்மையீனமே.அவர்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களையோ வாக்குறுதிகளையோ கடைப்பிடித்துச் செல்பவர்களாக இல்லை. அதன் விளைவாகவே போர்கள் தோற்றம் பெறுகின்றன. போர் நாகரீகமற்றது என்று  போதித்தவாறு காசாவின் படுகொலைகளை இந்த உலகு பார்த்துக்கொண்டிருக்கிறது. மனிதாபிமான உதவிகள், போர் நிறுத்தக் கோரல்கள், பயங்கரவாதத்தைத் தடுக்கும் உரிமை என்ற சொல்லாடல்கள் வழியாகப் போரைத் தொடர்கிறது. இதனையே முழு உலகிலும் தமது தேவைக்கேற்ப செய்கிறார்கள். ஆனால், ஒரு வல்லரசான ரஸ்யா ஏன் நேட்டோவைக் கண்டு அஞ்சுகிறது. அது தனது எல்லைகளைப் பலப்படுத்திப் பாதுகாப்பை வலுப்படுத்தியிருக்கலாமே. இவளவு மனிதவள, பொருண்மிய இழப்புகள் தேவையா? தோல்வியை ஏற்காதுவிடின் வெற்றியைப் பெறும்வரை போரை நடாத்தி இன்னும் அழிவுகளை விதைத்து எதைக்காணப் போகிறார்கள்? அணுஆயுத வல்லரசு தோல்வியை ஏற்குமா என்பதை இனிவரும் நாட்களே முடிவுசெய்யும். எதற்காகப் புதின் திடீரென நிபந்தனைகளோடு போர்நிறுத்தத்தைக் கோருகிறார்?  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.