Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

un.jpg?resize=700,375&ssl=1

தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா அதிருப்தி!

தொல்பொருள் திணைக்களமானது பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய அரச கட்டமைப்புக்களுடன் ஒன்றிணைந்து பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்காக வட, கிழக்கு மாகாணங்களில் இந்து மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளை ஆக்கிரமித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு (United States Commission On International Religious Freedom), மதச்சுதந்திரத்துடன் தொடர்புடைய விவகாரத்தில் இலங்கையை விசேட கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்குமாறு ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கத்துக்குப் பரிந்துரை செய்துள்ளது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் பௌத்த பிக்குகளால் மத சிறுபான்மையினருக்கு எதிராகத் தூண்டப்பட்ட அமைதியின்மை மற்றும் வன்முறைகளைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறியிருப்பதாக, குறித்த ஆணைக்குழு தமது வருடாந்த அறிக்கையில், சுட்டிக்காட்டியுள்ளது.

சிறுபான்மையினருக்கு எதிராக பௌத்த பிக்குகளால் தூண்டப்பட்ட ஒடுக்குமுறைகளைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக இலங்கையின் மதச்சுதந்திரம் தொடர்பான வருடாந்த அறிக்கையில் அமெரிக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு, பல்வேறு சந்தர்ப்பங்களில் பௌத்த பிக்குகளால் மத சிறுபான்மையினருக்கு எதிராகத் தூண்டப்பட்ட அமைதியின்மை மற்றும் வன்முறைகளைத் தடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் தவறியிருப்பதாக சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆகவே, மதச்சுதந்திரத்துடன் தொடர்புடைய விவகாரத்தில் இலங்கையை விசேட கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அரசுக்கு சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகளின் மதச்சுதந்திர நிலைவரம் தொடர்பில் அமெரிக்க அரசு முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளடங்கலாக மதச்சுதந்திரம் தொடர்பில் விரிவான தகவல்களை உள்ளடக்கிய 102 பக்க வருடாந்த அறிக்கையிலே சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையின் மதச்சுதந்திர நிலைவரம் 2023 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து பின்னடைவை சந்தித்ததாகவும் இலங்கை அரசாங்கம் மத சிறுபான்மையினரை தொடர்ச்சியாக ஒடுக்கியும், அச்சுறுத்தியும் வந்திருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சில சந்தர்ப்பங்களில் அவர்களது வழிபாட்டுத்தலங்களுக்குள் பிரவேசிப்பதற்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சிறுபான்மையினரை இலக்குவைத்து கண்காணிப்பதற்கும் தடுத்துவைப்பதற்கும் அரசாங்கம் அடக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்தியதாகவும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் மக்கள்கைதுசெய்வதற்கும் தடுத்துவைப்பதற்கும் பரந்துபட்ட அதிகாரங்களைக் கொண்ட பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஆண்டு தொல்பொருள் திணைக்களம், பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய அரச கட்டமைப்புக்களுடன் ஒன்றிணைந்து பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்காக வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்து மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளை ஆக்கிரமித்தாகவும் சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1384026

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

un.jpg?resize=700,375&ssl=1

தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா அதிருப்தி!

தொல்பொருள் திணைக்களமானது பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய அரச கட்டமைப்புக்களுடன் ஒன்றிணைந்து பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்காக வட, கிழக்கு மாகாணங்களில் இந்து மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளை ஆக்கிரமித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு (United States Commission On International Religious Freedom), மதச்சுதந்திரத்துடன் தொடர்புடைய விவகாரத்தில் இலங்கையை விசேட கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்குமாறு ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கத்துக்குப் பரிந்துரை செய்துள்ளது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் பௌத்த பிக்குகளால் மத சிறுபான்மையினருக்கு எதிராகத் தூண்டப்பட்ட அமைதியின்மை மற்றும் வன்முறைகளைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறியிருப்பதாக, குறித்த ஆணைக்குழு தமது வருடாந்த அறிக்கையில், சுட்டிக்காட்டியுள்ளது.

சிறுபான்மையினருக்கு எதிராக பௌத்த பிக்குகளால் தூண்டப்பட்ட ஒடுக்குமுறைகளைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக இலங்கையின் மதச்சுதந்திரம் தொடர்பான வருடாந்த அறிக்கையில் அமெரிக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு, பல்வேறு சந்தர்ப்பங்களில் பௌத்த பிக்குகளால் மத சிறுபான்மையினருக்கு எதிராகத் தூண்டப்பட்ட அமைதியின்மை மற்றும் வன்முறைகளைத் தடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் தவறியிருப்பதாக சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆகவே, மதச்சுதந்திரத்துடன் தொடர்புடைய விவகாரத்தில் இலங்கையை விசேட கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அரசுக்கு சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகளின் மதச்சுதந்திர நிலைவரம் தொடர்பில் அமெரிக்க அரசு முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளடங்கலாக மதச்சுதந்திரம் தொடர்பில் விரிவான தகவல்களை உள்ளடக்கிய 102 பக்க வருடாந்த அறிக்கையிலே சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையின் மதச்சுதந்திர நிலைவரம் 2023 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து பின்னடைவை சந்தித்ததாகவும் இலங்கை அரசாங்கம் மத சிறுபான்மையினரை தொடர்ச்சியாக ஒடுக்கியும், அச்சுறுத்தியும் வந்திருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சில சந்தர்ப்பங்களில் அவர்களது வழிபாட்டுத்தலங்களுக்குள் பிரவேசிப்பதற்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சிறுபான்மையினரை இலக்குவைத்து கண்காணிப்பதற்கும் தடுத்துவைப்பதற்கும் அரசாங்கம் அடக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்தியதாகவும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் மக்கள்கைதுசெய்வதற்கும் தடுத்துவைப்பதற்கும் பரந்துபட்ட அதிகாரங்களைக் கொண்ட பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஆண்டு தொல்பொருள் திணைக்களம், பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய அரச கட்டமைப்புக்களுடன் ஒன்றிணைந்து பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்காக வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்து மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளை ஆக்கிரமித்தாகவும் சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1384026

அவர் பாட்டிற்கு அமைதியாக இருக்கிற விமல் வீரவன்சவை அமெரிக்கா வம்புக்கு இழுக்கின்றது........🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.