Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   04 JUN, 2024 | 03:03 AM

image
 

யாழ்ப்பாணத்தை சேர்ந்த போலி மருத்துவர் ஒருவர் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்களை இலக்கு வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நிலையில் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

001.jpg

குறித்த நபர், சுமார் ஒரு கோடியே 50 இலட்ச ரூபாய் பெறுமதியான அதிசொகுசு காரில் யாழ்.நகர் பகுதியில் பயணித்த போதே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட வேளை, காரினுள் இருந்து 15 பவுண் தங்க நகைகள், 05 இலட்ச ரூபாய் பணம் மற்றும் இலட்ச ரூபாய்க்கள் பெறுமதியான அதிநவீன கையடக்க தொலைபேசிகள் 05 என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், போலியான வைத்தியர்களுக்கான அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்து  தன்னை வைத்தியராக அறிமுகப்படுத்தி, ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருவதாக கூறி புலம்பெயர் நாடுகளில் வசித்து வரும் தமிழர்களை ஏமாற்றி, பெரும் தொகையான பணத்தினை பெற்று யாழ்ப்பாணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். 

012001.jpg

இந்நிலையில் யாழ்.நகர் பகுதியில் உள்ள தனது காணியொன்றினை ஒரு கோடியே 42 இலட்ச ரூபாய்க்கு விற்பனை செய்வுள்ளதாக கூறி போலியான உறுதி உள்ளிட்ட போலி ஆவணங்களை அனுப்பி, கனடா வாசியிடம் இருந்து ஒரு கோடியே 40 இலட்ச ரூபாய் பணத்தினை சட்டவிரோதமான முறையில் (உண்டியல் மூலம்) பெற்றுள்ளார். 

சில தினங்களின் பின்னரே தமக்கு வழங்கப்பட்ட ஆவணங்கள் போலியானவை என கனடாவை சேர்ந்தவருக்கு தெரியவந்துள்ளது. 

அதனை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, மோசடியில் ஈடுபட்ட நபர், போலியாக தன்னை ஒரு மருத்துவர் என கூறி புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் நபர்கள் பலரிடம் பல ஆண்டு காலமாக இலவச மருத்துவ முகாம்களுக்கு என பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வருகின்றார் என தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் குறித்த நபர் அதிசொகுசு காரில் யாழ்.நகர் பகுதியில் பயணிப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், காருடன் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்

கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

https://www.virakesari.lk/article/185253

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

போலியாக தன்னை ஒரு மருத்துவர் என கூறி புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் நபர்கள் பலரிடம் பல ஆண்டு காலமாக இலவச மருத்துவ முகாம்களுக்கு என பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வருகின்றார் என தெரியவந்துள்ளது.

பின்புலம் தெரியாமல் கேட்கும்போது கொடுப்பதால் இப்படியானவர்கள் ஏமாற்றி வாழ்கின்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் இவர்…. ஆபரேஷன் செய்து சனத்தை மேல்லோகத்துக்கு அனுப்பவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இப்படித்தான் மக்கள் பலர் சென்று கொண்டிருக்கிறார்கள்........பணத்தை மையப்புள்ளியாக வைத்து சுழலும் இவ்வுலகில் மக்கள் பெரும்பாலும் இப்படித்தான் வாழ்வார்கள்......!  😴

  • கருத்துக்கள உறவுகள்

தனி உங்களை கண்டது மகிழ்ச்சி........ தொடர்ந்திருங்கள்........!  💐

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

தனி உங்களை கண்டது மகிழ்ச்சி........ தொடர்ந்திருங்கள்........!  💐

மோகன் , மேலே தனி லைக் பண்ணியிருக்கிறார் அதுதான் கண்டது மகிழ்ச்சி என்று எழுதினேன் ......!  😴

  • கருத்துக்கள உறவுகள்

போலி மருத்துவரிடம் பெண்களின் அந்தரங்கப்படங்கள்

1162195381.jpg

யாழ்ப்பாணத்தில் நேற்றுக் கைது செய்யப்பட்ட போலி மருத்துவரின் அலைபேசியில் பல பெண்களின் அந்தரங்க காணொலிகள், ஒளிப்படங்கள் இருந்தமையும் அவற்றை வைத்து மிரட்டி பணம் பெற்றுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர், பாடசாலை மாணவிகள் பலருடன் காதல் தொடர்புகளை பேணி வந்துள்ளார்.  வெளிநாடுகளில் வசிக்கும் தன்னை விட வயது அதிகமான பெண்களுடனும் காதல் தொடர்புகளை பேணி அவர்களை மிரட்டி, பல இலட்ச ரூபாக்களைப் பெற்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த இளைஞன் தன்னை மருத்துவர் என அறிமுகப்படுத்தி, அதற்கான போலியான ஆவணங்களையும் தயாரித்து வெளிநாடுகளில் வசிக்கும் நபர்களை இலக்கு வைத்து பல இலட்ச ரூபா மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இந்நிலையில் இளைஞனை நேற்று திங்கட்கிழமை யாழ். நகரத்தில் அதிசொகுசு மகிழுந்தில் இளைஞன் பயணித்துக்கொண்டிருந்த வேளை பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட வேளை இளைஞன் 15 பவுண் நகையை அணிந்திருந்ததுடன், 5 இலட்ச ரூபா பணத்தை செலவுக்கு என வைத்திருந்துள்ளார். அத்துடன் 5 அதிநவீன அலைபேசிகள , பல வங்கி அட்டைகள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டு இருந்தனர். 

இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல போலி உறுதி முடிப்புக்கள், காணி மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. 

இளைஞன் தனித்து மோசடிகளில் ஈடுபடவில்லை எனவும், இவருக்கு பின்னால் பெரும் கும்பல் ஒன்று மோசடிக்கு உதவி புரிந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. 

அதேவேளை இளைஞனின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை ஆராய்ந்து , இளைஞன் யார் யாருடன் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பண பரிமாற்றங்களில் ஈடுபட்டார் என்பது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்து, தொடர்புடைய நபர்களை விசாரணை வளையத்துக்குள் எடுத்து விசாரணை செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 

இந்நிலையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ். நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. (அ)  
 

https://newuthayan.com/article/போலி_மருத்துவரிடம்_பெண்களின்_அந்தரங்கப்படங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல போலி உறுதி முடிப்புக்கள், காணி மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. 

இளைஞன் தனித்து மோசடிகளில் ஈடுபடவில்லை எனவும், இவருக்கு பின்னால் பெரும் கும்பல் ஒன்று மோசடிக்கு உதவி புரிந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. 

கும்பல் என்றால் தப்பிவிடுவார்கள் என நினைக்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.