Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தை நாளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம் - எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திடம் வலியுறுத்தினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   04 JUN, 2024 | 04:42 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தின் பெரும்பாலான ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானது. ஆகவே சட்டமூலத்தை நாளை  (வியாழக்கிழமை) விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் முயற்சிகளை அரசாங்கம் கைவிட  வேண்டும்  என எதிர்க்கட்சியினர்  அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.

சட்டமூலம் குறித்து உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ள திருத்தங்களை  செயற்படுத்த தயாராகவுள்ளோம். திட்டமிட்டதற்கு அமைய சட்டமூலம் மீதான விவாதம் நாளை இடம்பெறும். பெரும்பான்மை எம்மிடம் உள்ளது. ஆகவே எதிர்ப்பவர்கள் எதிர்க்கலாம் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது  உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் தொடர்பில் உயர்நீதின்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.

இந்த சட்டமூலத்துக்கு எதிர்தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் மின்சாரத்துறை அமைச்சருக்கும், எதிர்க்கட்சிகள் உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் தர்க்கம் நிலவியது.

உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் என்பதையே உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான நிலையில் சட்டமூலத்தை நாளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள அரசாங்கம்  தீர்மானித்துள்ளது. இந்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ளஅரசாங்கம் அவசரப்படுகிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைய செயற்பட வேண்டும்.

துறைசார் மேற்பார்வை குழுவின் ஊடாக விசேட கவனம் செலுத்த வேண்டும். பாராளுமன்ற விவகாரம் தொடர்பான குழுவின் உறுப்பினரல்லாதவர்கள் குழு கூட்டத்தில் கலந்துக் கொள்ள அனுமதி கோரியுள்ளார்கள். ஆகவே இவ்விடயம் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன? என சபாநாயகரிடம்   என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷமன் கிரியெல்ல கேள்வியெழுப்பினார்.

ஆராய்ந்து பதிலளிக்கிறேன் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். எதுவும் தெரியாது  என்று குறிப்பிடாதீர்கள். உங்களுக்கு அதிகாரம் உண்டு என்றார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் நீங்கள் குறிப்பிடும் வகையில் என்னால் செயற்பட முடியாது என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய லக்ஷ்மன் கிரியெல்ல, மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தால் 23 ஆயிரம் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். அத்துடன் மின்சார சபையை  12 கூறுகளாக பிரிப்பதற்கு  அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இவற்றையா  உங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டீர்கள் என்றார்.

நான் குறிப்பிடும் விடயங்களுக்கு நீங்கள் கவனம் செலுத்துவதில்லை. எதிர்ப்புக்களை மாத்திரம் குறிப்பிடுகின்றார்கள். கேள்வி எழுப்பினால்  விளங்காதது போன்று அருகில் உள்ள கோப்புக்களை  பார்க்கின்றீர்கள் என்றார்.

மின்கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரம் தனியார் மின்நிறுவனங்களுக்கு வழங்கும் வகையில் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே  சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதை பிற்போடுங்கள் என்றார்.

இதன்போது  எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மின்சார சபை மறுசீரமைப்பு  சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ள திருத்தங்கள்  ஊடாக இச்சட்டமூலம் முறையற்றது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இவ்விடயத்தில் அவசரப்பட வேண்டாம். இந்த அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடையாது என்பதால் முறையற்ற வகையில் செயற்படுகிறது என்றார்.

இதனை தொடர்ந்து எழுந்து உரையாற்றிய மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு அப்பாற்பட்டு செயற்பட போவதில்லை. முன்வைக்கப்பட்டுள்ள 12 திருத்தங்களை  சட்டமூலத்தில் உள்ளடக்குவோம். கடந்த காலங்களிலும் இவ்வாறான பல திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த சட்டமூலம் அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிடுவது முறையற்றது. கடந்த ஒன்றரை வருட காலமாக இந்த சட்டமூலம் பற்றி பேசப்படுகிறது. சட்டமூலத்தை நாளை வியாழக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள தயாராகவுள்ளோம். பெரும்பான்மை பற்றி கவலைப்பட வேண்டாம் நிச்சயம் சட்டமூலத்தை நிறைவேற்றுவோம். மின்சார சபையை மறுசீரமைக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியினர் குறிப்பிடுகிறார்கள். நாங்கள் அதனை முன்னெடுக்கும் போது எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சட்டமூலத்தை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதாக இருந்தால் எதிர்க்கட்டும் என்றார்.

மீண்டும் எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், நாங்கள் முன்வைத்துள்ள திட்ட வரைபில் மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதாக குறிப்பிடவில்லை. அவ்வாறு குறிப்பிட்டிருந்தால் அதனை காண்பியுங்கள் என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய  விமல் வீரவன்ச, இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டுமாயின் விசேட பெரும்பான்மையுடன் மக்கள் வாக்கெடுக்குக்குச் செல்ல வேண்டும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அமைச்சர் குறிப்பிடுகிறார்  12 திருத்தங்கள் தானே அவற்றை முன்னெடுக்கலாம் என்று, இதனை அலட்சியப்படுத்த முடியாது. நாட்டின் மின்சார துறையுடன் தொடர்புடைய இந்த சட்டமூலம் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும். ஆகவே சட்டமூலத்தை நாளைய தினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதை பிற்போடுங்கள். முறையான  பரிசீலனை செய்யலாம் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிரணியின் சுயாதீன உறுப்பினர் சந்திம வீரக்கொடி, இந்த சட்டமூலத்தின் 12(1) பிரிவு அரசியலமைப்புக்கு முரண் ஆகவே விசேட பெரும்பான்மையுடன் மக்கள் வாக்கெடுப்புக் செல்ல வேண்டும் என று குறிப்பிட்டுள்ளது. 12(1) பிரிவு  நாட்டு மக்களின் சமவுரிமை பற்றி குறிப்பிடுகிறது. ஆகவே இச்சட்டமூலத்தை விரிவாக ஆராய வேண்டும் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய  எதிர்க்கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தில் மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதாக குறிப்பிடவில்லை. அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதை இடைநிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். ஆகவே அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவின் நிலைப்பாடு என்ன என்று கேள்வியெழுப்பினார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ..பாராளுமன்ற  அலுவல்கள் தொடர்பான குழு கூட்டம் கடந்த மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் நான் கலந்துக் கொள்ளவில்லை. மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தை விவாத்துக்கு எடுத்துக் கொள்ளும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். கிணற்றுத்தவளை போல்  சிந்திப்பதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிடுகிறார். ராஜபக்ஷர்களுடன் இருக்கும் போது கிணற்றுக்குள்   இருந்து விட்டு ரணில் விக்கிரமசிங்கவுடன் இருக்கும் போது கிணற்றுக்கு மேல் வந்து விட்டாரா என்பதை அறிய முடியவில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/185288

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.