Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதானி காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை கோருகிறது டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களிற்கு விண்ணப்பம்

05 JUN, 2024 | 04:21 PM
image
 

இந்திய அதானி குழுமத்தின் மன்னார் மற்றும் பூநகரியின் காற்றாலை மின் திட்டம் தொடர்பான வெளிப்படைத்தன்மை சட்டபூர்வமான தன்மை மதிப்பீட்டு செயல்முறை விலை நிர்ணயம் அரசின் ஈடுபாடு மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு  அறிக்கை தொடர்பான தகவல்களை கோரி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்  கீழ் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது. 

இது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் தெரிவித்துள்ளதாவது-

transparancy.jpg

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அதானி கிரீன் எனர்ஜி (ஸ்ரீலங்கா) லிமிடெட் மன்னாரில் 250 மெகாவாட் மற்றும் பூநகரியில் 234 மெகாவாட் இரண்டு காற்றாலைகளுக்கு தற்காலிக அனுமதியைப் பெற்றது. முக்கியமான பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ள இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்து ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல்  பெரிதும் கரிசனை கொண்டுள்ளது. 

இது தொடர்பான முன்மொழிவை  மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டு 2024 மே 6 ம் திகதி அன்று அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த விலைக்கும் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு யூனிட் மின்சாரத்தின் தற்போதைய உலகளாவிய விலைக்கும் இடையே பாரிய வித்தியாசம் உள்ளது. 

மேலும் உலகின் இடம்பெயர்ந்த பறவைகளின் முக்கியமான பாதையான மன்னார் வழித்தடத்தில் காற்றாலை விசையாழிகள் நிறுவப்படுவது சுற்றுச்சூழலுக்கு மீள முடியாத தீங்கு விளைவிப்பதாக சிரேஷ்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செயல்முறையின் நம்பகத்தன்மை குறித்தும் கரிசனை எழுப்பப்பட்டுள்ளன. 

இந்த குறிப்பிடத்தக்க விடயங்கள் காரணமாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல்  நிறுவனமானது  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்  கீழ் மொத்தமாக 11 விண்ணப்பங்களை முக்கிய அரச அமைப்புகளிடம் தாக்கல் செய்துள்ளது. இதில் அமைச்சரவை அலுவலகம் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு நிதி அமைச்சு நிலையான எரிசக்தி அதிகாரசபை மத்திய சுற்றாடல் அதிகாரசபை இலங்கை மின்சார சபை  சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு ஆகிய அரச நிறுவனங்கள் அவற்றில் உள்ளடங்குகின்றன.

 இந்த விண்ணப்பங்கள் பின்வருவனவற்றைப் பற்றிய தகவல்களைத் கோருகின்றன: 

1. விலைமானுக்கோரல் செயன்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டபூர்வத் தன்மை: இலங்கை அரசாங்கம் விலைமானுக்கோரல்களை மேற்கொண்டதா அல்லது முன்மொழிவுகள் பெறப்பட்டதா என்பது குறித்த விவரங்கள். 

2. மதிப்பீடு மற்றும் தேர்வு செயன்முறை: மதிப்பீடு மற்றும் தேர்வு செயல்முறையானது அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு திட்டத்தை வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் மற்றும் அடிப்படை நியமங்கள் தெளிவுபடுத்துதல் விலைமானுக்கோரல்களின் மதிப்பீடு மற்றும் விலைமானுக்கோரலில் தேர்வு செய்யப்பட்ட நிறுவனம்/ நபர் தேர்வு செயல்முறையில் பங்கேற்கும் நபர்களை அடையாளம் காண்பது மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டமானது அரசாங்கத்திற்கு-அரசாங்கம் இடையேயான ஏற்பாடா என்பது பற்றி தெளிவுபடுத்துதல். 

3. விலை நிர்ணயம் மற்றும் செலவு நன்மைகள்: இலங்கைக்கான எரிசக்தி மற்றும் செலவு நன்மைகளை நிரூபிக்கும் ஆவணங்கள் திட்டத்திற்காக தீர்மானிக்கப்பட்ட அலகு விலை மற்றும் சந்தை விகிதங்களை விட அதிக விலை நிர்ணயம் ஆகியவற்றை நிரூபிக்கும் அத்தாட்சிப் படுத்தப்பட்ட ஆவணங்கள். 

4. தேவை மற்றும் அபாய மதிப்பீடுகள்: திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட தேவைகளின் மதிப்பாய்வு மற்றும் அபாய மதிப்பாய்வு பற்றிய விவரங்கள் மற்றும் சாத்தியமான அபாயங்களை தவிர்க்கும் முறைகள். 

5. முடிவெடுக்கும் செயன்முறை: கோரப்படாத திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் முன்மொழிவு கோரிக்கைகளுக்கான பதில்கள் மற்றும் முடிவெடுக்கும் செயன்முறை தொடர்பான அனைத்து ஆவணங்கள் தகவல்தொடர்புகள் பகுப்பாய்வுகள் மதிப்பீடுகள் மற்றும் அறிக்கைகள்ஃகுறிப்புகள்  ஆகியவற்றின் அத்தாட்சிப் படுத்தப்பட்ட பிரதிகள். 

6. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் அடிப்படையில் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் பகுப்பாய்வு மற்றும் அங்கீகாரத்தை வழங்குவதற்கான முடிவை விவரிக்கும் அத்தாட்சிப்படுத்தப்பட்ட ஆவணங்கள். 

7. காணி கையகப்படுத்துதல்: மன்னார் மற்றும் பூநகரியில்  காணிகளைக் கையகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்  வழங்கியதா காணிகள் கையகப்படுத்தும் சட்டத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறை பின்பற்றப்படுகிறதா? கையகப்படுத்த அனுமதிக்கப்பட்ட காணிகளின் அமைவிடம் பரப்பு மற்றும் எல்லை நிர்ணயம் குறித்த அத்தாட்சிப் படுத்தப்பட்ட ஆவணங்கள். 

இந்த தகவல் கோரிக்கைகளில் பலவற்றிற்கு இதுவரை முழுமையான மற்றும் சரியான நேரத்தில் பதில்கள் கிடைக்காததால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் குறித்தளிக்கப்பட்ட அதிகாரிகளிடம்  மேன்முறையீடு செய்வதன் மூலம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நமது நாட்டின் வளங்களின் பாதுகாவலராகக் கருதப்படும் அரசாங்கம் இந்த முக்கியமான திட்டத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் நாட்டின் மற்றும் மக்களின் நலனுக்காக இத்திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்கவும் அர்ப்பணிப்புடன் இருக்குமாறு ட்ரான்ஸ்பரன்சி கேட்டுக்கொள்கிறது. 

https://www.virakesari.lk/article/185385

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.