Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU  13 JUN, 2024 | 04:34 AM

image

(இராஜதுரை ஹஷான்)

தமிழர்களின் தீர்மானமிக்க வாக்குகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவார். 13 ஆவது திருத்தத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதியும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளார்கள். ஆகவே தேசியம் தொடர்பாக பெரும்பான்மையினத்தவர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பகுதியில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

எதிர்க்கட்சித் தலைவரின் கூற்று 

இலங்கை அரசியல் வரலாற்றில் சிங்கள எதிர்க்கட்சித் தலைவர்கள் எவரும் குறிப்பிடாத வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு மாகாணத்துக்கு சென்று தமிழ் மக்களிடம் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை தான் முழுமையாக அமுல்படுத்துவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான மக்கள் 13 ஆவது திருத்தத்துக்கு எதிராக இருப்பதால் எதிர்க்கட்சித் தலைவர்கள் எவரும் இதுபோன்று கருத்துரைக்கவில்லை.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் உண்மை நோக்கம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களின் வாக்குகளை இலக்காகக் கொண்டே எதிர்க்கட்சித் தலைவர் 13 ஆவது திருத்தம் பற்றி பேசியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார முன்வைத்த 22 ஆவது திருத்த தனியார் பிரேரணையில் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் வலியுறுத்தலுக்கமைய 13 ஆவது திருத்தத்தை பலப்படுத்தும் வகையில் இரண்டு சட்டத்திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ,1987 ஆம் ஆண்டு இந்து – லங்கா ஒப்பந்தத்துக்கு இணக்கம் தெரிவித்ததை தொடர்ந்து 13 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.இருப்பினும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக அவர் ஒருபோதும் குறிப்பிடவில்லை. ஜனாதிபதியாக பதவி வகித்துக் கொண்டு அவர் அவ்வாறு செயற்படவுமில்லை. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக கூற்றுக்களை வெளியிட முன்னர் 13 ஆவது திருத்தத்தின் வரலாற்றை எதிர்க்கட்சித் தலைவர் அறிந்துக் கொள்ள வேண்டும். அப்போது அதன் பாரதூரம் மற்றும் திருத்தங்களின் உண்மை நோக்கத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

இந்து –அமெரிக்க பூகோள நோக்கம்

இந்து – அமெரிக்க நோக்கத்துக்காக பிரிவினைவாத முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படுகின்றன.13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கு உள்ளது.இந்தியாவின் தற்போதைய அரசியல் மாற்றம் இதற்கு முன்முனைப்புடன் செயற்படுகிறது.

தேசியத்தின் தலைமீது தொங்கவிடப்பட்டுள்ள கூர்மையான வாள்கள்

இந்து – லங்கா ஒப்பந்தம் மற்றும் 13 ஆவது திருத்தம்  ஆகியவற்றுக்கு எதிராக நிலவிய கடுமையான எதிர்ப்பினால் அவற்றை சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்ற முடியாத சூழல் காணப்பட்டது. 13 ஆவது திருத்தம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நீதியரசர்கள் 13 ஆவது திருத்தம் தேசியத்தின் தலைமீது கட்டப்பட்டுள்ள கூர்மையான வாள்'என்று குறிப்பிட்டனர். திருத்தங்கள் ஊடாக வாள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை அவிழ்ப்பது பாரியதொரு குற்றமாகும்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம்

தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் வெளிநாடுகளின் அழுத்தம் ஆகிய காரணிகளால் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை மாத்திரம்  நீக்குவது பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது.13 ஆவது திருத்தம் இல்லாமல் நாட்டுக்கு பொருந்தும் வகையில் பிரிவினைவாத அம்சங்கள் இல்லாத வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.சிறுபான்மை இனத்தவர்களின் தீர்மானமிக்க வாக்குகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் ஆட்சிக்கு வந்தால் புதிய அரசியலமைப்புக்கு பதிலாக 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முயற்சிப்பார்.

ரணில் – சஜித் ஒரு குழையின் தேங்காய்கள்

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் நிலைப்பாட்டில் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் உள்ளார்கள். இவ்விருவரில் எவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பார்கள். ஆகவே இவ்விருவரின் செயற்பாடுகள் குறித்து பெரும்பான்மையின மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/185961

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.