Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

26 JUN, 2024 | 05:13 PM
image
 

பல வெளிநாட்டு பிரஜைகளையும் உள்ளூர் மக்களையும் குறிவைத்து இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் வெளிநாட்டு பிரஜை உட்பட 33 பேரை நீர்கொழும்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.

டிக்டொக் வீடியோக்களை  லைக் செய்வதற்கும், கருத்து தெரிவிப்பதற்கும் பணம் தருவதாக கூறி வட்ஸ்அப் குழு ஒன்றில் பெண்ணொருவர்  இணைந்துள்ளார். 

ஆரம்பத்தில் லைக் மற்றும் கமெண்ட் செய்ததற்காக இந்த பெண் பணம் பெற்றுள்ளார். பின்னர் தொடர்ந்து பணத்தை பெற்றுக்கொள்ள வங்கிக் கணக்கில் 5.4 மில்லியன் ரூபாய் முதலீடு  செய்துள்ளார்.

பணத்தை முதலீடு செய்த போதிலும் அவர் திரும்ப பணத்தை பெறவில்லை. இந்நிலையில், குறித்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பெண்ணின் முறைப்பாட்டிற்கு அமைய  வங்கிக் கணக்குகள் தொடர்பான மேலதிக விசாரணைகளின் போது தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரை பொலிஸார் கைது செய்தனர்.

இதேவேளை,  பீட்சா ஆர்டர் செய்யப்பட்ட வங்கி கணக்கொன்றின் மூலம் நீர்கொழும்பிலுள்ள வீடொன்றில் சோதனை நடத்திய போது இரண்டு பெண்கள் உட்பட 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மோசடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட 57 கையடக்க தொலைபேசிகள், 13 கணினிகள் மற்றும் 3 மடிக்கணினிகளை அதிகாரிகளால் கைப்பற்ப்பட்டன.

நீர்கொழும்பில் மற்றொரு சொகுசு விட்டில் பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 19 கூடுதல் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த இடத்தில் இருந்து 52 மொபைல் போன்கள் மற்றும் 33 கணினிகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பொலிஸார் கைப்பற்றினர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த மோசடியில் வெளிநாட்டவர்களும் சிக்கியது தெரியவந்தது.

இவர்களின் கிளைகள் துபாய் மற்றும் ஆப்கான் இராச்சியங்களிலும் இருப்பதும் தெரியவந்துள்ளது.

சமூக ஊடகங்கள்  வாயிலாக பிரபல நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக செயற்படுமாறு இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

https://www.virakesari.lk/article/187028

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் நிதிமோசடி – 60 பேர் கைது

arr-300x200.jpg

30 இந்தியர்கள் உட்பட 60 சந்தேக நபர்களைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று(27) கைது செய்துள்ளனர்.

இணையத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்தேகநபர்கள் தலங்கம, மாதிவெல மற்றும் நீர்கொழும்பு, கொச்சிக்கடை பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

https://thinakkural.lk/article/304699

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 117 பேர் கைது!

28 JUN, 2024 | 03:13 PM
image
 

நாட்டில் வெவ்வேறு இடங்களில் தங்கியிருந்து இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வெளிநாட்டு  பிரஜைகள் உட்பட 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

சந்தேக நபர்கள் நீர்கொழும்பு - கொச்சிக்கடை, தலங்கம மற்றும் மடிவெல பிரதேசங்களில் தங்கியிருந்து நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்படி, தலங்கம - ஹெயினடிகும்புர பகுதியில் உள்ள வீடொன்றைச் சுற்றிவளைத்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், 19 பேரை கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 09 மடிக்கணினிகள் மற்றும் 59 கையடக்கத் தொலைபேசிகளை  கைப்பற்றியுள்ளனர் . 

நீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதியில் உள்ள விடுதியொன்றில் சோதனை நடத்திய போது, மேலும் 30 பேர் கைது செய்யப்பட்டதுடன்  அவர்களிடமிருந்து 40 கணினிகள், நிதி மோசடிக்குப் பயன்படுத்திய 38  கையடக்கதொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 

அதன் பின்னர், மடிவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலும், கொச்சிக்கடை பொருதொட்ட பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதியொன்றிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இந்தக் கடத்தலில் ஈடுபட்ட மேலும் 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட  இணையச் சூதாட்ட மோசடி இலங்கையிலும்  அமுல்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/187164

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைய நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் 30 சீன பிரஜைகள் கைது !

29 JUN, 2024 | 10:30 AM
image
 

இணையம் ஊடாக நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில்  குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 30 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே  இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.  

இதேவேளை, இணையத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் வெள்ளிக்கிழமை (28) வரை 137  இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

அவர்களிடமிருந்து பல மடிக்கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டதாக நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.  

https://www.virakesari.lk/article/187228

  • nunavilan changed the title to இணைய மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் உட்பட 33 பேர் கைது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.