Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மற்றொரு வெற்றி நிச்சயம்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிஸ் நிலவரம் பத்திரிகைக்காக நிலவன்

ஊடகங்களில் வெளியாகி வருகின்ற செய்திகளைப் பார்க்கின்ற போது, சிறிலங்கா இராணுவம் வடக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒரு யுத்தத்தை ஆரம்பித்துவிட்டது என்கின்ற எண்ணத்தை தோற்றுவிப்பதாகவே இருக்கின்றது.நாளாந்தம் வெளிவருகின்ற யுத்தச் செய்திகள், யுத்த அறைகூவல்கள், இழப்புச் செய்திகள், விடுதலைப் புலிகள் வெளியிடும் மாவீரர் பெயர் விபர அறிவித்தல்கள்…. - இவை எல்லாமே வடக்கில் ஒரு பாரிய யுத்தம் நடைபெற்று வருகின்றது என்பதை உறுதிப்படுத்துவதாகவே இருக்கின்றன. வெளிவரும் செய்திகளை அடிப்படையாகக ;கொண்டு நோக்கும போது ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது. அதாவது, சிறிலங்கா இராணுவமே வடக்கில் வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது என்கின்ற உண்மை தெளிவாகப் புரிகின்றது.புரியாதது?

ஆனால் சரிவரப் புரியாத மற்றொரு விடயமும் இந்தச செய்திகளுள் அடங்கி இருக்கத்தான் செய்கின்றது.

அதாவது வடக்கைப் பொறுத்த வரையில் சிறிலங்கா இராணுவத்தின் இராணுவ இலக்கு என்ன என்பது தெளிவாகப்

புரியாத ஒன்றாகவே இருக்கின்றது. நாகர்கோவிலில் சிறிலங்கா இராணுவத்தினர் முன்னகர்வு முயற்சி ஒன்றை மேற்கொண்டதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கும். அடுத்த தினமே மன்னார் பிரதேசத்தில் சிறிலங்கா

இராணுவத்தின் வேறொரு முன்னகர்வு நடவடிக்கை இடம்பெற்றதாக மற்றொரு செய்தி வெளியாகி இருக்கும்.

முகமாலை முன்னரங்க நிலைகளில் இருந்து சிறிலங்காப்படைகள் முன்னேற முயன்றதாக ஒரு செய்தி வெளியாகி ஓரிரு தினங்களில், ஓமந்தையில் சண்டைகள் நடைபெற்றதாக மற்றொரு செய்தி வெளியாகும்.

மணலாறு ஊடாக முன்நகர்ந்து வன்னியை ஊடறுக்கும் நோக்கில் சிறிலங்கா இராணுவத்தின் 58வது டிவிசன் என்கின்ற புதிய படைப்பிரிவு அமைக்கப்பட்டு அக்டோபர் இறுதிக்குள் களமிறக்கப்பட இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது.அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவைக் கைப்பற்றும் நோக்குடன் சிறிலங்கா இராணுவத்தில் 59வது டிவிசன் என்ற பெயரில் மேலும் ஒரு படைப்பிரிவு ஆரம்பிக்கப்பட இருப்பதாக

மற்றொரு செய்தி வெளியாகி இருந்தது. விரைவில் முல்லைத்தீவைக் கைப்பற்றி அங்கிருக்கும் பௌத்த

சின்னங்களை சிங்களவர்கள் சென்று தரிசிக்கும் நிலையை உருவாக்க உள்ளதாக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்த செய்தி வெளியாகி இருந்தது. வன்னியைக் கைப்பற்றி விடுதலைப் புலிகளை 100 வீதம் வெற்றி கொள்ளப்போவதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அறிவித்திருந்த செய்த வெளியாகி இருந்தது. இது போன்று வெளிவருகின்ற செய்திகளை

அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது, வன்னியை கைப்பற்றும் விதமாக பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றுக்கு

சிறிலங்காவின் முப்படைகளும் தயாராகி வருகின்ற ஒரு தோற்றப்பாடு ஏற்படுகின்றது.இங்குதான் பல கேள்விகள் எழுகின்றன.

சிறிலங்கா இராணுவத்தினால் வன்னியை ஆக்கிரமிக்க முடியுமா? சிறிலங்காப் படைகளின் வன்னி ஆக்கிரமிப்பு எந்த முனையில் இருந்து மேற்கொள்ளப்படும்? பலமுனைகளில் இருந்தும் ஒரே நேரத்தில் வன்னி

மீதான ஆக்கிரமிப்பை மேற்கொள்ளும் தகைமை சிறிலங்கா இராணுவத்திற்கு இருக்கின்றதா? வன்னி ஆக்கிரமிப்பு தொடர்பிலான சிறிலங்காப் படைத்துறைத் தலைமையின் போர் உத்தி எப்படிப்பட்டதாக இருக்கின்றது?

உண்மையிலேயே இந்தக் கேள்விகளுக்கான பதில் தெரியாமல் தமிழர் தரப்பை குழப்பத்தில் வைத்திருக்க வேண்டும்

என்பதுதான் சிறிலங்கா போரியல் வல்லுனர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கின்றது. பலமுனைகளில் தாக்குதல்கள் நடாத்துவதும், தாக்குதல் எதிர்வு கூறல்களை வெளியிடுவதும் கூட, தமிழர் தரப்பை

குழப்பி தனது உண்மையான போரியல் திட்டம் என்ன என்பதை எதிரியால் அனுமானிக்க முடியாமல் வைத்திருப்பதே சிறிலங்கா இராணுவத் தலைமையின் திட்டமாக இருக்கின்றது. என்ன திட்டம்?

சிறிலங்காவின் முக்கிய போரியல் ஆய்வாளர் ஒருவருடன் அண்மையில் தொடர்புகொண்டு பேசிய போது, சிறிலங்காவின தற்போதைய போரியல் திட்டம் பற்றி ஒரு கருத்தை அவர வெளியிட்டிருந்தார். அதாவது, தற்பொழுது சிறிலங்கா இராணுவத்திடம் உள்ள பலம், விடுதலைப் புலிகள் வசம் இருப்பதாக கணிப்பிடப்படும் பலம்,

வன்னியின் நில அமைப்புக்கள் என்பனவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் பொழுது, வன்னியின் பல முனைகளிலும் ஒரே நேரத்தில் முன்னகரும் பலமும் வளமும் சிறிலங்காப்

படைகளிடம் கிடையாது என்று அவர் அடித்துக் கூறினார். வன்னியைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் மிக

மிகப் பலமாக இருப்பதாகவும், சிறிலங்கா இராணுவத்தினரின் கற்பனைக்கெட்டாத அளவிற்கு விடுதலைப் புலிகளின் ஆயுத மற்றும் ஆளணி வளம் இருப்பதாகவும் தெரிவித்த அந்த ஆய்வாளர், இது சிறிலங்காப் படைத்துறைத் தலைமைக்கும் நன்றாகத் தெரியும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அப்படியானால் வன்னியைப் பொறுத்தவரையில் சிறிலங்கா இராணுவத்தின் முதன்மை இலக்கு என்ன என்ற கேள்வியை எழுப்பியபோது, வவுனியா மன்னார் பூநகரி சங்குப்பிட்டி பாதையான ஏ-32 பாதை வழியாக ஒரு ஒரு பாரிய படை நடவடிக்கையை

மேற்கொண்டு பூநகரியைக் கைப்பற்றுவதே சிறிலங்காப் படைகளின் தற்போதைய திட்டமாக இருக்கலாம் என்று அவர்

தெரிவித்திருந்தார். தற்பொழுது மன்னார்ப் பிராந்தியங்களில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்டு வரும் இராணுவ நகர்வுகள், அவர்களால் அங்கு குவிக்கப்பட்டு வரும் வளம் என்பனவற்றை வைத்துப் பார்க்கும் போது, பூநகரியைக் கைப்பற்றுவதே சிறிலங்காப் படைகளின் முதன்மையான இலக்காக இருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகின்றது.

எதற்காகப் பூநகரி?

வடக்கில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகக் கூடியதான எத்தனையோ சிறிலங்காவின் படை நிலைகள் இருக்க, எதற்காக பூநகரியை நோக்கி படை நடவடிக்கை எடுக்க சிறிலங்கா இராணுவம் நினைக்கின்றது? சிறிலங்காப் படைத்துறையைப் பொறுத்தவரையில் அவர்கள் அவசர அவசரமாக பூநகரிப் பிரதேசத்தில் நிலைகொண்டேயாக வேண்டிய ஒரு தேவை அவர்களுக்கு இருக்கத்தான் செய்

கின்றது. பூநகரியிலும், கல்முனைப் பகுதிகளிலும் உள்ளதாக சிறி லங்காப் படையினர் கூறும் விடுதலைப் புலிகளின் ஆட்டிலறி நிலைகளைக் கைப்பற்றவேண்டிய தேவை சிறிலங்கா படை யினருக்கு இருக்கின்றது. இந்தத் தளங்களில் இருந்தே சிறிலங்கா இராணுவத் தளமான பலாலியைக் குறிவைத்து புலிகள் ஆட்டிலறித் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக சிறிலங்காப் படைத்துறைத் தலைமை நினைக்கின்றது. விடுதலைப் புலிகளின் ஆட்டிலறித் தாக்குதல் எல்லைக்குள் தொடர்ந்தும் பலாலித் தளத்தை வைத்திருப்பதென்பது, யாழ் குடாவில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினரின் இருப்புக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும். எதிர்வரும் மாரி காலத்தில் விடுதலைப் புலிகள் பலாலி விமானத்தளத்தை நோக்கி தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல் களை மேற்கொண்டபடி, வட கடல் மீதான கடற்புலிகளின் ஆதிக்கத்தையும் சற்று அதிகரித்தால், யாழ் குடாவில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினருக்கான விநியோகம் என்பது நிச்சயம் கேள்விக்குள்ளாகிவிடும்.

எனவே வவுனியா-மன்னார்-பூநகரி-சங்குப்பிட்டிப் பாதை வழியாக ஒரு பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டு,

அப்பிரதேசத்தில் நிலைகொள்வதன் மூலம், விடுதலைப் புலி களின் எறிகணை வீச்சிலிருந்து பலாலிப் படைத்தளத்தைக் காப்பாற்றிக்கொள்வதுடன், யாழ்குடாவிற்கான தரைவழி விநியோகத்தையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்று சிறிலங்கா இராணுவத் தலைமை நினைக்கின்றது. மன்னார் சங்குப்பிட்டிப் பாதையை சிறிலங்காப் படைத்துறைத் தலைமை தேர்ந்தெடுப்பதற்கு, அந்தப் பாதை விடுதலைப் புலிகளின் முக்கிய நிலைகளை ஊடறுத்துச் செல்லாதது ஒரு காரணம். யாழ் குடாவிற்கான மற்றைய பிரதான பாதைகளுடன் ஒப்பிடும் போது, பாரிய எதிர்ப்புக்கள் இன்றி இலகுவாக முன்னேறத் தோதான பாதை என்று சிறிலங்காப் படைத்துறைத்

தலைமையினால் கணிக்கப்படுகின்றது. அத்தோடு, இந்தப் பாதை பெரும்பாலும் கடற்கரைப் பிரதேசங்களை அண்டியதாகவே செல்வதால் இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்கா இராணுவத்தினருக்கான

விநியோகம் தடையில்லாமல் கிடைத்துக்கொண்டே இருக்கும் என்றும் சிறிலங்காப் படைத்துறைத் தலைமை நினைக்கின்றது. தேவை எனப்பட்டால், அல்லது இந்தப் பாதையில் விடுதலைப் புலிகளின் எதிர்ப்பு பலமாக இருந்தால், விடுதலைப் புலிகளின் நிலைகளுக்குப் பின்புறமாக அவர்களின் நிலைகளைச் சுற்றி

வளைத்து கடல்வழித் தரையிறக்கத்தைச் சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ள முடியும் என்றும் கருதப்படுகின்றது.

வில்லங்கம் ஏற்பட்டால் இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுகின்ற படையினரை கடல் வழியாக வெளியேற்றிவிட முடியும் என்றும்

படைத்துறைத் தலைமை நினைக்கின்றது. அத்தோடு, கட்டுநாயக்க விமானத் தளத்தைப் பின்தளமாகக்

கொண்டு, போர் விமானங்கள், உலங்கு வானூர்திகள் போன்றவற்றின் உச்சப் பயன்பாட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சிறிலங்காப் படைத்தரப்பு நினைக்கின்றது. சிறிலங்காக் கடற்படையிடம் உள்ள போர்க் கப்பல்கள்,

தாக்குதல் கலங்கள் எல்லாவற்றையும் அணிவகுத்து மன்னார் கடற்பரப்பில் நிறுத்தி, இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்கா இராணுவத்தினருக்கு அதி உயர் பாதுகாப்பையும், ஒத்துழைப்பையும் வழங்க முடியும் என்றும் அது கருதுகின்றது. அனைத்திற்கும் மேலாக, இந்தப் பிராந்தியத்தின் சர்வதேச கடல் எல்லைகள் இந்திய கடற்படையின் அதி உச்ச கண்காணிப்பின் கீழ் இருக்கின்றது. எனவே இராணுவ நடவடிக்கை

இடம்பெறும் காலத்தில் சர்வதேச கடல் எல்லைகள் ஊடாக இலங்கையின் மன்னார் கடல் எல்லைக்குள் கடற்புலிகளின் படகுகள் வருவது கடினமாக இருக்கும் என்றும் சிறிலங்கா இராணுவம் எதிர்பார்க்கின்றது.

எனவேதான் மன்னார்- சங்குப்பிட்டிப் பாதையை சிறிலங்காப் படைத்துறைத் தலைமை வன்னிக்கான தனது அடுத்த இராணுவ நடவடிக்கைக்காகத் தேர்ந்தெடுத்திருக்கின்றது. இந்த நடவடிக்கைக்கான பொறுப்பு, வன்னிக்கான விஷேட

படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூர்யாவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.