Jump to content

வெளிநாட்டு மதுபானம் என விசக்கரைசலை குடித்த இருவர் மரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

dead-body.jpg?resize=612,375&ssl=1

வெளிநாட்டு மதுபானம் என விசக்கரைசலை குடித்த இருவர் மரணம்.

தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மது என நினைத்து விஷக் கரைசலை குடித்து உயிரிழந்துள்ளனர்.

மேலும் நான்கு மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

 

தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட டெவோன் என்ற மீன்பிடி படகில் இருந்த 06 மீனவர்களே இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (28) இரவு கடலில் மிதந்து வந்த போத்தல்கள் சில இவர்களுக்கு கிடைத்துள்ள நிலையில், அதனை வெளிநாட்டு மதுபானம் என நினைத்து அருந்தியுள்ளனர்.

இதன்போது, குறித்த 06 மீனவர்களும் சுகயீனமடைந்துள்ளதாகவும், இது தொடர்பில் செய்தி அனுப்பும் இயந்திரங்கள் ஊடாக அவர்கள் அறிவித்ததாகவும் கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1390244

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மரணங்களுக்கும் திமுகவுக்கும் தொடர்பு இருக்கின்றதா அல்லது எப்படி தொடர்புபடுத்தலாம் என ஒரு கூட்ட மக்கள் ஆராயக்கூடும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

body.webp?resize=442,260

உயிரிழந்த தங்காலை மீனவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு!

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை, மதுபானம் எனக் கருதி அருந்திய சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, மிகவும் மோசமாகப்  பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு மீனவர்களும் சிங்கப்பூர் வணிகக் கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

 

தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற டெவோன் 5 என்ற மீன்பிடிப் படகின் மீனவர்களே
இந்த அவலநிலையை எதிர்கொண்டதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.

தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் அவசர முதலுதவிக்கான வழிமுறைகளை மருத்துவக் குழுக்கள் வழங்கியுள்ளதாகவும், ஆழ்கடல் பகுதியில் உள்ளதால் அவர்களை மீட்க மற்றொரு கப்பலை கடலுக்கு அனுப்ப போதிய கால அவகாசம் இல்லை என்றும் அவர் கூறினார்.

அவர்களை அருகில் உள்ள கப்பலில் ஏற்றி கரைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

படகு இலங்கை கடற்கரையில் இருந்து 320 கடல் மைல் தொலைவில் இருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2024/1390359

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சர்வதேசலெவலுக்கு போய்விட்டது போல. சரி சரி ஆளுக்குப் 10 இலட்சம் *** அரசு வழங்கும்.

Edited by மோகன்
நீக்கப்பட்டுள்ளது
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • செய்யவில்லை   முடியவில்லை ஆனால் தொடர்ந்து உழைந்தார். பலதடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள் ரணில் எழும்பி வெளியில் போ என்ற போதும் கூட  இருந்து பேச்சுவார்த்தை நடத்தினார்   அரசாங்கம்கள்.  தரவில்லையென்றால் என்ன செய்ய முடியும்??? உங்களை பாராளுமன்றம் அனுப்பினால்   சிங்கள குடியோற்றத்தை   நிறுத்துவிர்களா?? எப்படி?? என்று சொல்லுங்கள் பார்ப்போம்?? 
    • முடியாது  எப்படி செய்யலாம்??? சொல்லுங்கள் பார்ப்போம்   அல்லது செய்து காட்டுங்கள்    ஆயுதப் போராட்டம் கூட செய்ய முடியாது   
    • ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை  அவன் இறக்கும்போதுதான்   தெரிய வரும் சமூக ஊடகங்களில் சம்பந்தரின் இறப்பு செய்தி எப்படி கொண்டாடுகிறார்கள்  என்பதை தேடி பாருங்கள் இங்கிருப்பதை விட மோசமாக கழுவி ஊற்றுகிறார்கள்  ] முகநூல் ருவிட்டரில் இப்படி எல்லாம் வந்துள்ளதாக நானும்  கேள்விபட்டேன். தமிழ் மக்களின் சாபக்கேடு தொலைந்தது தொலைந்தது  சனியன்  இறைவனுக்கு நன்றி.தமிழனுக்கு இனி விடிவுகாலம் தான்.   இது பொது மக்கள் கருத்தல்ல. இது பற்றி இலங்கை அனுபவம் கொண்ட ஒரு பெரியவர் சொன்னார்   சம்பந்தன் அய்யா ஒரு மோசமானவர் என்று காட்டுவதற்கு திட்டமிட்டு சமூகவலைதளங்களை பயன்படுத்துகின்றனர். இலங்கை இந்தியா  தமிழ்நாட்டு தலைவர்கள் நன்றாகவே சொல்லியுள்ளனர். முகநூல் ருவிட்டரை பார்த்தால் சீமான் தான் திமுக அதிமுக எல்லாம் கிட்டவும் நெருங்க முடியாத தமிழ்நாட்டு முதல்வர்.
    • இல்லையே,..உங்களுக்கு புரியவில்லை,விளங்கவில்லை   நான் சொன்னது தமிழ் மக்கள் பற்றி   அவர்களின் தெரிவு பற்றி  சம்பந்தர் எப்படி பாராளுமன்றம் போனார்??  ஒரே ஒரு  தடவை தான் தோல்வி மற்ற ஆறு தடவைகளும்.  வெற்றி பெற்றுள்ளார்.    எப்படி சாத்தியம்??  எந்த மக்களுக்குக்காக  உயிர் உள்ளவரை போராடினார்களே  அதே தமிழ் மக்கள்   சம்பந்தனை தெரிவு செய்து ஆறு தடவைகள் பாராளுமன்றம் அனுப்பினார்கள்.    இது பிழையா ??? 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.