Jump to content

ரா. சம்பந்தன் காலமானார்: இலங்கைத் தமிழர் விவகாரத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
சம்பந்தன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்தார் ரா.சம்பந்தன் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

முப்பதைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கியப் பங்கு வகித்த இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், இலங்கை தமிழரசு கட்சியின் பெரும் தலைவருமான ரா.சம்பந்தன் காலமானார்.

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ஒரு நியாயமான தீர்வைப் பெறுவதற்காக நீண்ட காலம் பணியாற்றியவர் அவர்.

அவருக்கு வயது 91.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய  இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ரா.சம்பந்தனின் அரசியல் பயணம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த பெருந்தலைவரான ரா.சம்பந்தன், கிழக்கு திரிகோணமலையின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

பல தசாப்தங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சம்பந்தன், நாடாளுமன்றத்தில் தமிழர் பிரச்சனைகளுக்காக உறுதியான, இடைவிடாத குரலை எழுப்பியவர்.

"ரா. சம்பந்தன் பல வேறுபட்ட அரசியல் சூழ்நிலைகளைத் தாண்டிவந்த மனிதர். அந்தந்த சூழ்நிலைகளுக்கு அரசியல்ரீதியான பொறுப்புகளோடு எதிர்வினை ஆற்றியவர். பல அவமானங்களை எதிர்கொண்டாலும், தமிழர்களின் நலனை மனதில் வைத்து தனது பயணத்தைத் தொடர்ந்தவர். தமிழர்களுக்கு ஏதாவது ஒரு தீர்வு தனது வாழ்நாளிலேயே வரும் என நம்பினார் சம்பந்தன்" என்கிறார் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர்ந்து எழுதிவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

திருகோணமலையை மையமாக வைத்து, 1970ஆம் ஆண்டுவாக்கில் தனது அரசியல் பிரவேசத்தைத் தொடங்கினார் சம்பந்தன். 1977ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர் விடுதலை கூட்டணியின் சார்பில், இரா.சம்பந்தன் திருகோணமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

 

இந்தக் காலகட்டத்தில்தான் இலங்கையின் தமிழர் அரசியல் வேறொரு பாதைக்குத் திரும்பியிருந்தது. வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட இளைஞர்கள், ஆயுதப் போராட்டத்தை தமிழர் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக முன்வைத்து செயல்பட ஆரம்பித்திருந்தனர்.

1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது சட்டத் திருத்தம் தனிநாடு கோருவதற்கு எதிராக இருப்பதைக் கண்டித்தும் 1983 கறுப்பு ஜூலை நிகழ்வுகளில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர்.

மூன்று மாதங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபெறாததால், 1983 செப்டம்பரில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் சம்பந்தன்.

இரா.சம்பந்தன்

பட மூலாதாரம்,TNA

தமிழர் பகுதியாக விளங்கிய திருகோணமலை தேர்தல் தொகுதியை மையப்படுத்தி, 1970ஆம் ஆண்டு காலப் பகுதியில் ரா.சம்பந்தன் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்.

1977ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர் விடுதலை கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி, ரா.சம்பந்தன் திருகோணமலை தொகுதி தேர்தலில் போட்டியிட்டார்.

இந்த தேர்தலின் ஊடாக இரா.சம்பந்தன், இலங்கை நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தார்.

இவரது அரசியல் பிரவேசம் இடம்பெற்ற காலப் பகுதியானது, உள்நாட்டு போர் ஆரம்பமான காலப் பகுதி என்பதுடன், பெருமளவான இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட காலப் பகுதியாகவும் அமைந்திருந்தது.

இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய, ரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழர் விடுதலை கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 1983ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தை புறக்கணித்திருந்தனர்.

தனிநாட்டு கோரிக்கைக்கு இடமளிக்க முடியாது என்ற உள்ளடக்கத்துடனான அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவளிக்க முடியாது எனவும், 1983ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான தமிழர்கள், படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் நாடாளுமன்ற அமர்வுகளை தமிழர் விடுதலை கூட்டணி புறக்கணித்திருந்தது.

நாடாளுமன்ற அமர்வுகளை தொடர்ந்து மூன்று மாத காலம் புறக்கணித்த காரணத்தை முன்னிலைப்படுத்தி, ரா.சம்பந்தனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 1983ஆம் ஆண்டு பறிக்கப்பட்டது.

இதையடுத்து, 1989ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி தலைமையில் பல தமிழ் கட்சிகளின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட கூட்டமைப்பு சார்பில் சம்பந்தன், திருகோணமலை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டார்.

எனினும், அந்த தேர்தலில் அவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை.

 
ரா.சம்பந்தன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோட்டாபய ராஜபக்ஷேவுடன் ரா.சம்பந்தன்

இதற்குப் பிறகு தமிழர் விடுதலை கூட்டணி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, டெலோ ஆகிய கட்சிகள் கைகோர்த்து 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பின் தலைவராக ரா.சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தக் கூட்டமைப்பிற்கு தேர்தல்கள் செயலகம் அங்கீகாரம் வழங்காத நிலையில், 2001ஆம் ஆண்டு தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்கொண்டது. இந்தத் தேர்தலின் மூலம், 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரானார் சம்பந்தன்.

இந்த நிலையில், இலங்கை தமிழர்களின் ஒரே அரசியல் பிரதிநிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளுமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கூறியது. ஆனால், இதனை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான ஆனந்தசங்கரி ஏற்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தில் போட்டியிட ஆனந்தசங்கரி அனுமதிக்கவில்லை.

இதனால் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டது. இந்த காலகட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் ரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டார். இதற்குப் பிறகு வந்த அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்களிலும் சம்பந்தன் வெற்றிபெற்றார்.

மன்மோகன் சிங்குடன் இரா.சம்பந்தன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,2012இல் அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் ரா.சம்பந்தன்

எதிர்கட்சித் தலைவரான ரா.சம்பந்தன்

சுதந்திர இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் தற்போதுவரை இரண்டு தமிழர்கள் மாத்திரமே எதிர்கட்சித் தலைவர்களாக பதவி வகித்துள்ளனர். 1977ஆம் ஆண்டில் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவரான அ. அமிர்தலிங்கம், இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

2015ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இலங்கையின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும் இணைந்து ஆட்சி அமைத்தனர். இதனால், இந்த இரு கட்சிகளுக்கும் அடுத்தபடியாக அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இலங்கை தமிழரசு கட்சி விளங்கியது. இந்தக் கட்சிக்கு 16 இடங்கள் கிடைத்திருந்தன. ஆகவே 38 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி, இலங்கையின் தமிழர் தலைவர் ஒருவருக்கு மீண்டும் கிடைத்தது.

ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வுக்காக உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச நாடுகளுடனும் இணைந்து செயற்பட்ட தலைவர்களில் ரா. சம்பந்தனுக்கு முக்கிய இடம் இருக்கிறது.

"மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தில் இந்தியாவில் அவருக்கு ஒரு பெரிய மதிப்பு இருந்தது. ஆனால், 2014க்குப் பிறகு இந்தியாவுக்கு இலங்கை பற்றிய அணுகுமுறையே இல்லாத நிலை ஏற்பட்டது. இந்தியா தற்போது மலையக மக்களுக்கு பல உதவிகளைச் செய்துவரும் நிலையில், வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்களைப் பற்றி பெரிதாக யோசிப்பதில்லை என்ற நிலை இருந்தாலும் அதைப் பற்றி அவருக்கு பெரிய புகார்கள் ஏதும் இல்லை. தொடர்ந்து இலங்கை விவகாரத்தில் இந்தியா கவனம் செலுத்தும்படி கோரிவந்தார் அவர்" என்கிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

இலங்கைச் சூழல் குறித்து இந்தியாவுக்கு பல தருணங்களில் சம்பந்தன் கடிதம் எழுதியிருக்கிறார் என்றும், அது தொடர்பாக பதில் ஏதும் வராத போதும் தனது முயற்சிகளை அவர் கைவிடவில்லை என்றும் கூறுகிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

ரா.சம்பந்தன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரணில் விக்கிரமசிங்கவுடன் ரா.சம்பந்தன்

தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்

மனித உரிமை மீறல் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், தமிழர் பகுதிகளில் இடம்பெறும் அத்துமீறிய குடியேற்றம், காணி பிரசினைகள் உள்பட தமிழர்கள் எதிர்நோக்கி வந்த பிரச்னைகளுக்கு குரல் கொடுத்த முக்கிய தலைவராக சம்பந்தன் இருந்தார்.

"அங்கிருக்கும் அரச கட்டமைப்புக்குள் நின்றுகொண்டு என்ன செய்ய முடியுமோ, அதை அவர் செய்திருக்கிறார். இலங்கையில் எல்லாமே ஒரு போராட்டமாகத்தான் இருந்தது. புலிகள் முழுமையாகத் தோற்ற பிறகு, தமிழர் நலன் தொடர்பான சிறிய முன்னேற்றத்திற்குக்கூட பெரிதாகப் போராட வேண்டியிருந்தது. தீர்க்கமான முடிவெடுக்க தயங்குவார் என்ற அவரைப் பற்றிய விமர்சனம் சரியானதல்ல. சம்பந்தனாக இருந்தால்தான் அவரது நிலை புரியும்" என்கிறார் ராதாகிருஷ்ணன்.

ஆனால், மூத்த பத்திரிகையாளரான பகவான் சிங், சம்பந்தன் குறித்த மாறுபட்ட சித்திரத்தை முன்வைக்கிறார்.

"தனது ஆங்கிலப்புலமை, விவாதம் செய்யும் திறம், ஈழம் குறித்த ஆழமான புரிதல் ஆகியவற்றை அவர் முழுமையாகப் பயன்படுத்தியிருந்தால் சிங்கள ஆதிக்கத்திற்கு எதிரான தமிழர் அரசியலில் ஒரு ஒற்றுமையை, ஒருமித்த கருத்தைக் கொண்டுவந்திருக்க முடியும். அமிர்தலிங்கம் கொடூரமாகக் கொல்லப்பட்ட நிலையில், தலைமைப் பதவி இவருக்குக் கிடைத்தது. ஆனால், தமிழ் - சிங்கள அரசியலில் உள்ள மோசமான சக்திகளின் ஆதாயத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தும் ஒரு நபராக சம்பந்தன் தன்னைக் குறுக்கிக் கொண்டார்" என்கிறார் பகவான் சிங்.

 
விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரா.சம்பந்தன்

விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு

2004ஐ ஒட்டிய வருடங்களில் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாக இவர் மீது விமர்சனம் வைக்கப்படுவதும் இருக்கிறது.

"ஆனால், புலிகள் வலுவாக இருந்த நிலையில், அதைத் தவிர வேறு எதையும் செய்திருக்க முடியாது. மற்றொரு பக்கம், புலிகள் இவரைக் கண்டுகொள்ளவேயில்லை. இருந்தபோதும் மக்களுக்காக செயல்பட வேண்டுமா அல்லது தனது மான - அவமானம் சார்ந்து செயல்பட வேண்டுமா என்ற நிலையில், மக்களுக்காக செயல்பட்டார் அவர்" என்கிறார் ராதாகிருஷ்ணன்.

தனது மரணத்தின் மூலம் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை இலங்கைத் தமிழர் அரசியலில் ஏற்படுத்திச் சென்றிருக்கிறார் சம்பந்தன்.

"ஆனால் அந்த வெற்றிடம் முன்பே ஏற்பட்டுவிட்டது. இவர் மிகவும் உடல் நலம் குன்றியிருந்த மூன்று, நான்கு வருடங்களில் தமிழர் அரசியலே சின்னாபின்னமாகிவிட்டது. தமிழரசுக் கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்குள் இருந்த போட்டி இதற்கு முக்கியக் காரணம். தற்போது ரா. சம்பந்தன் மரணமடைந்திருக்கும் நிலையில், இதைவிட பெரிய துரதிர்ஷ்டம் இருக்க முடியாது" என்கிறார் ராதாகிருஷ்ணன்.

சம்பந்தன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததற்குப் பிறகான தமிழர் அரசியலில் சம்பந்தனுக்கு ஒரு முக்கியப் பங்கு இருந்தது. ஆனால், அது எந்த அளவுக்கு தமிழர்களுக்கு முன்னேற்றத்தைக் கொண்டுவந்தது என்பது ஒரு முக்கியமான கேள்வி. சம்பந்தனைப் பொறுத்தவரை, இலங்கையில் தமிழ் தேசிய அரசியலை ஒன்றிணைக்கக் கூடிய நிலையில் இருந்தார். அவர் இல்லாவிட்டால் தமிழர் அரசியல் சிதறிப் போயிருக்கும். ஆனால், அந்த ஒற்றுமையால் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார அபிலாஷைகளுக்கு முன்னேற்றம் ஏற்பட்டதா என்பதும் ஒரு கேள்வி.” என்கிறார் இலங்கையைச் சேர்ந்த அரசியல் - பொருளாதார ஆய்வாளரான அகிலன் கதிர்காமர்.

“அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் போன்ற முக்கிய தமிழ் தலைவர்கள் புலிகளால் கொல்லப்பட்ட நிலையில்தான் சம்பந்தன் தலைமைத்துவத்தைப் பெற்றார். அப்போதிருந்தே தமிழர்களின் நாடாளுமன்ற அரசியலுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுவிட்டதாகத்தான் சொல்லவேண்டும். யுத்தம் முடிந்த பிறகு அந்தப் பின்னடைவு மேலும் அதிகரித்தது. இங்கிருந்த தலைவர்களால் தமிழ் அரசியலை சரியான வகையில் முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. ஆனால், இதனை சம்பந்தன் என்ற தனி நபர் மீது சொல்லப்படும் குறைபாடாக பார்க்கக்கூடாது. இது தமிழ் அரசியலுக்கே இருக்கும் ஒட்டுமொத்த சவாலாகத்தான் பார்க்க வேண்டும்" என்கிறார் அகிலன் கதிர்காமர்.

ரா.சம்பந்தன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,2014இல் அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்த ரா.சம்பந்தன்

ரா. சம்பந்தனின் தனிப்பட்ட வாழ்க்கை

ரா.சம்பந்தன் என அனைவராலும் அழைக்கப்பட்ட ராஜவரோதயம் சம்பந்தன், திருகோணமலையில் 1933ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி பிறந்தார்.

யாழ்ப்பாணம் - சம்பத்தரிசியார் கல்லூரி, மொறட்டுவை புனித செபஸ்தியன் கல்லூரி ஆகியவற்றில் படித்த ரா.சம்பந்தன் இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து சட்டம் பயின்று வழக்கறிஞரானார். சம்பந்தனின் மனைவி லீலாவதி. இந்தத் தம்பதிக்கு சஞ்சீவன், செந்தூரன், கிருஷாங்கிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

நீண்ட நாட்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சம்பந்தன், நாடாளுமன்றத்திற்குச் செல்வதிலிருந்து விடுப்பு எடுத்திருந்தார். உடல்நலம் மோசமடைந்த நிலையில், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த ரா.சம்பந்தன், சிகிச்சை பலனின்றி ஜூன் 30ஆம் தேதி இரவில் உயிரிழந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடைபெற்றார் தமிழினத்தின் தலைமகன்

02 JUL, 2024 | 04:23 PM
image

ஆர்.ராம்

தமிழ் மக்கள் பாரம்பரியமாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்து வருகின்றார்கள். ஆகவே அவர்கள் உள்ளக சுயநிர்ணயத்துக்கு உரித்துடையவர்கள். அந்த அடிப்படையில் பிரிக்க முடியாத, பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய அடிப்படையில் இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி அடிப்படையில் அதியுச்சமான அளவில் அதிகாரங்கள் பகிரப்பட்டு அவை மீளப்பெறப்படாத வகையில் உறுதி செய்யப்பட வேண்டும்

இந்தக் கூற்றுக்கள் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமின்றி மிகமிக உறுதியாக  வெளிப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. அந்தக் கூற்றுக்களுக்காக  வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமது ஆணையை தொடர்ந்தும் அளித்து வந்திருக்கின்றமையையும் கண்கூடாக கணாக்கூடியதாகவும் இருக்கின்றது.

இனமொன்றின் விடுதலைக்காகவுள்ள இறுதியான வாயிற்கதவான இந்தக் கூற்றுக்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் அல்ல. ஆயதப்போராட்ட மௌனிப்பின் பின்னர் தமிழ் மக்களால் அரசியல் தலைமகனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இராஜவரோதயம் சம்பந்தனுடையதுதான். 

கடந்த ஜுன் மாதம் 16ஆம் திகதி வீரகேசரி வார வெளியீட்டில் பிரசுரமாகிய விசேட நேர்காணலுக்காக 14ஆம் திகதி மாலை 6 மணியளவில் கொழும்பிலுள்ள  இல்லத்துக்குச் சென்று நேர்காணலை ஆரம்பித்தபோது, ஜனாதிபதி ரணில், சஜித், அநுர ஆகிய மூவரும் களமிறங்கினால் யாரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தினை, எதனடிப்படையில் எடுப்பீர்கள்? என்று வினாவொன்று எழுப்பப்பட்டது.  

அந்த வினாவுக்கான பதில் மிகத்துல்லியமாக அமைந்தது. தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக காணப்படுகின்ற ஒரேயொரு வழி இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு காணப்படுவதுதான் என்பது சம்பந்தனின் தளர்ந்த உடலிலிருந்து வெளியான உறுதியான குரலாக அமைந்திருந்தது. இறுதிவரையில் தன்னுடைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்ற பிரதிபலிப்பும் பட்டவர்த்தனமாகவும் இருந்தது. 

குறித்த நேர்காணல்தான் அவருடைய அரசியல் வாழ்க்கையில் வழங்கிய இறுதி நேர்காணலாக இருக்கிறது. ஆனால் அந்த நேர்காணலிலும் அவர் இனப்பிரச்சினைக்கான தீர்வு, தமிழர்களின் அபிலாஷைகள் உறுதி செய்யப்படுவதற்கான அவசியம் மற்றும் முகங்கொடுக்கும் சமகாலப் பிரச்சினைகள் ஆகிய விடயங்களில் தொடர்ச்சியாகக்கொண்டிருந்த உறுதியான நிலைப்பாட்டிலிருந்து பிறழ்வடையவில்லை.

தமிழினத்தின் விடுதலைக்காக கிடைக்கின்ற அனைத்து வாய்ப்புக்களையும் பயன்படுத்த வேண்டும் என்பதில் சம்பந்தன் உறுதியாக இருந்தார். எவருடனான பேச்சுவார்த்தை மேசையையும் தவிர்த்துச் செல்லக்கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருந்தார்.

அதற்காக திம்பு பேச்சுவார்த்தை முதல் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் அவர் பயன்படுத்தினார். தமிழ்த் தலைவர்கள் பேச்சுக்களுக்காக திறக்கப்பட்ட வாயில்கள் ஊடாக முயற்சித்துப் பார்க்கவில்லை என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதில் இறுதிவரையில் உறுதியாக அவர் இருந்தார். 

அதனை அவர் தனது நேர்காணலிலும் வெளிப்படுத்தினார். “அடுத்த தேர்தலில் ரணிலோ, சஜித்தோ, அநுரவோ யாருடனும் பேசுவதற்கு தயாராகவே இருக்கின்றோம்” என்றும் “அவர்களின் விஞ்ஞாபனங்களின் அடிப்படையில்தான் தீர்மானங்கள் எடுப்போம்” என்றும் இறுதியாகக் கூறினார்.

கடந்த பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி தனது 91ஆவது வயதில் காலடி பதித்திருந்த சம்பந்தன், வயதால் மூப்படைந்திருந்தார். அதனால் உடல்நிலையில் தளர்வுகள் காணப்பட்டன. ஆனால் அவருடைய சிந்தனைகள், கருத்துக்கள் மாறவில்லை. நினைவாற்றால் குன்றவில்லை. 

அவரது, உரையாடல்களில் சிறுசிறு தெளிவின்மைகள் காணப்பட்டாலும், ஆண்டுகள், திகதிகள் மாறுபடாது வரலாற்று நிகழ்வுகளையும், குறிப்புக்களையும், துன்பங்கள் துயரங்களையும் வெளிப்படுத்தி இனப்பிரச்சினைக்கான தீர்வினை வலியுறுத்தும் தர்க்க ரீதியான பண்பு நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கவில்லை.

தனிநாடு கோரிய ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றபோது, திக்கற்று நின்ற தமிழினத்துக்கு தமிழ்த் தேசியக் கொள்கையில் நின்று தமிழ்த்தேசிய அரசியலை கட்டுறுதியாக வைத்திருந்ததில் விமர்சனங்களையும் தாண்டி காத்திரமான பங்கு சம்பந்தனின் உடையது.

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவற்றை ஒன்றிணைந்து பேரம் பேசும் தமிழர் கட்டமைப்பை வழிநடத்தியதில் சம்பந்தனுக்கு பெரும் பங்குண்டு. அது பின்னாளில் சிதைவடைவதற்கு பல்வேறு காரணங்களும் இல்லாமலில்லை.

உள்நாட்டு அரசியலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன, பிரேமதாச போன்றவர்களுடன் ஊடாட்டங்கள் இருந்தாலும் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்காக சந்திரிகா, மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்த தமிழ்த் தலைவராகவும் சம்பந்தன் உள்ளார்.

தெற்காசியப் பிராந்தியத்தில் தலைமை நாடான இந்தியாவின் பிரதமர் நரேந்திரமோடி முதல் அனைத்து நாடுகளின் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் மதிப்பளித்து செவிசாய்த்த பெருமைக்குரிய தலைவராகவும் சம்பந்தன் திகழ்கின்றார்.

விசேடமாக, இந்தியாவின் முன்னாள் பிரதமர்களான இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய், மன்மோகன் சிங் உள்ளிட்டவர்களுடன் சந்திப்புக்களை நடத்திய தமிழ்த் தலைவராகவும் சம்பந்தன் திகழ்வதோடு அவர்களுடன் தொடர்ச்சியான ஊடாட்டங்களையும் பேணி வந்திருந்தார்.

அதுமட்டுமன்றி, உலகத்தவர்கள், சர்வதேச இராஜதந்திரிகள் மத்தியிலும் அவர் நன்மதிப்புக்களைப் பெற்றிருந்ததோடு அவர்கள் ஊடாக தமிழ் மக்களுக்கான விடியலைப் பெறுவதற்கும் தீவிரமான முயற்சிகளையும் எடுத்திருக்கத் தவறவில்லை.

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன், அமெரிக்காவின் முன்னாள் செயலாளர் ஜோன் கெரி, ஐ.நா.செயலாளர் பான் கீ மூன், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் உயர்ஸ்தானிகர்களான நவநீதம்பிள்ளை, செயிட் அல் ஹூசைன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனான அவரது சந்திப்புக்கள் மிக முக்கியமானவை. 

தமிழ் மக்களின் தலைமகனாக சம்பந்தன் உள்நாட்டு, வெளிநாட்டு  ரீதியாக ஆளுமைமிக்கவராக மிளிர்ந்தார், செயற்பட்டார். அந்த உயரத்தை அவர் அடைவதற்கு கடந்துவந்த பாதை மிகவும் நெடியது, கரடுமுரடானது.

ஆம், 1933ஆம் ஆண்டு பெப்ரவரி 5ஆம் திகதி திருகோணமலையில் இராஜவரோதயம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த சம்பந்தன் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி, மொறட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.

பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று சட்டத்தரணியானதோடு லீலாதேவியை திருமணம் முடித்தார். அவரின் இல்லற வாழ்வின் பலனாக சஞ்சீவன், செந்தூரன், கிரிசாந்தினி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

சட்டத்தரணியாக மிளிர்ந்த சம்பந்தன் இளவயதிலேயே தமிழினத்தின் விடுதலைக்கான செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தார். சட்டரீதியான போராட்டங்களிலும், ஜனநாயக ரீதியான போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இதன்பலனாக 1956ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக்கட்சியில் சம்பந்தன் இணைந்துகொண்டார். எனினும் தேர்தல் அரசியலில் பங்கேற்குமாறு 1963இல்  தமிழினத்தின் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கேட்டுக்கொண்டார். எனினும் அதனை சம்பந்தன் உடனடியாக ஏற்றுக்கொண்டிருக்கவில்லை.

எனினும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய மூன்று தரப்பினரும் இணைந்து 1972இல் ஸ்தாபித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் 1977இல் தேர்தல் அரசியலுக்குள் சம்பந்தன் பிரவேசித்தார்.

அதன்விளைவாக, 1977இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து வெற்றி பெற்று முதன்முதலாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். அக்காலத்தில் இருந்த தமிழினத் தளபதி அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்றவர்களுடன் கூட்டிணைந்து தாக்கம் செலுத்தும் அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்றார்.

1977 முதல் 1983 வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சம்பந்தன், 1989, 1994, 2000 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கவில்லை. பின்னர் 2001ஆம் ஆண்டில் தமிழர் விடுதலைக்கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ரெலோ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப் பு என்ற புதிய கூட்டணியை தமிழீழ விடுதலைப்புலிகள் ஸ்தாபித்தனர்.

இக்கூட்டணிக்கு சம்பந்தன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அக்கட்சி தேர்தல் சட்டத்தில் அங்கீகரிக்கப்படாதபடியால் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டது. சம்பந்தன் திருகோணமலைத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் காரணமாக 18 ஆண்டுகளின் பின்னர் சம்பந்தன் பாராளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டார.

எனினும் 2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயருடன் போட்டியிடுவதற்கு ஆனந்தசங்கரி அனுமதிக்கவில்லை. இதனால் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டனர். 

சம்பந்தன் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளராக, துணைத்தலைவராக, பொருளாளராகவும் பதவி வகித்ததோடு தமிழரசுக் கட்சியின் தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். 

பின்னர் அவர் 2004, 2010, 2015, 2020 எனத் தொடர்ச்சியாக பாராளுமன்றத்திற்கு திருகோணமலை தமிழ் மக்களின் ஆணையுடன் தெரிவு செய்யப்பட்டு வந்தார். 2015 செப்டெம்பர் 3ஆம் திகதி முதல் 2018 டிசம்பர் 18 வரை இவர் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார்.

இந்தப் பதவி நிலையே சம்பந்தன் தனது அரசியல்வாழ்வில் வகித்த அதியுச்சமான பதவிநிலை என்பது குறிப்பிடத்தக்கதாக இருப்பதோடு, தற்போதும் தமிழ் மக்களின் பெருந்தலைவர் என்ற உயரிய அந்தஸ்து சம்பந்தனுக்கே உரியதாகிறது.

தனது வாழ்நாள் முழுவதையும் தமிழ் அரசியலுக்காகவும், இன விடுதலைக்காகவும் அர்ப்பணித்த தலைவராக இருக்கும் சம்பந்தனின் இழப்பு விமர்சனங்களுக்கு அப்பால் தமிழ்த் தேசிய அரசியலுக்கும், தமிழினத்துக்கும் நிரப்ப முடியாத பெருவெற்றிடம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. 

IMG-20240701-WA0001.jpg

IMG-20240701-WA0002.jpg

SAMPANNTHAN.jpg

prabhakaran-sampanthan.jpg

Chandrika-and-Sampanthan.jpg

anton-balasingham-sampanthan.jpg

100_1168.jpg

722px-The_President__Tamil_National_Alli

C_oJlwLVwAMcic2.jpg

Hora.jpg

image_080a0b559e.jpg

image_96ae5c9149.jpg

images.jpg

0154.jpg

C5F_BDpWcAA6qlT.jpg

_1.jpg

https://www.virakesari.lk/article/187499

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • http://aruvi.com/img/uploads/2015/aruvi-news-photos/sivasakthi_ananthan.jpg விடுதலைப் புலிகள் மீதான சுமந்திரனின் வசைபாடலுக்கு வித்திட்டவர் சம்பந்தனே: சிவசக்தி ஆனந்தன்! Posted: 2020-05-17 06:25:27 EST தமிழீழ விடுதலைப்புலிகள் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் வசைபாடுவதற்கு வித்திட்டவர் அதன் தலைவரான சம்பந்தனாக இருக்கின்றார் என்று சுட்டிக்காட்டியுள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன் வேலிக்கு ஓணான் சாட்சியா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட ஆயுதப்போராட்டம் சம்பந்தமாக எதிர்மறையான கருத்துக்களை கூட்டமைப்பின் பேச்சாளர் சிங்கள் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிந்தார். அதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தததை அடுத்து கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அக்கூற்று பற்றி தெளிவுபடுத்தல் அறிக்கையொன்றை விடுத்து அதற்கான நியயப்படுத்தல்களையும் செய்திருந்தார். உண்மையிலேயே சுமந்திரன் தன்னுடைய அரசியல் தலைவராக சம்பந்தனையே கொள்வதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் சம்பந்தனைப் பொறுத்தவரையில் அவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட ஆயுத இயக்கங்கள் பற்றி வெளிப்படையான நிலைப்பாடுகளை தெரிவிக்கும் ஒருவர் அல்லர். பாராளுமன்றத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தமிழ் மக்களுக்கான ஆயுத விடுதலைப் போராட்டத்தினை பயங்கரவாதமாக சித்தரித்து உரையாற்றியிருக்கின்றார். குறிப்பாக, போரின் பின்னரான நிலைமையிலும், கடந்த நல்லாட்சி அரசாங்கத்துடனான தேனிலவுக்காலத்திலும் இத்தகைய சித்தரிப்புக்களை அதிகமாகச் செய்திருந்தார். அதுமட்மன்றி, விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்றும் பாராளுமன்றத்திலே கூறியுள்ளார். அரச தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விடுதலைப்புலிகள் உருவாக்கவில்லை என்றும் கூறியிருக்கின்றார். அவர்கள் தன்னை கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கவில்லை என்றும், அவர்களின் கருத்துக்களுடன் இணைந்து செயற்படவில்லை என்றும் முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட காலத்தில் பொய்யுரைத்திருந்தார். இவ்வாறான நிலையில் அவரினை தலைவராக ஏற்றிக்கும் சுமந்திரன் விடுதலைப்புலிகளையும், ஆயுதப்போராட்டத்தினையும் எவ்வாறு ஆதரிப்பார். குருவுக்கு மிஞ்சிய சீடன் என்பது போன்று சம்பந்தனை விட ஒருபடி மேலே சென்று போராட்டத்தினை கொச்சைப்படுத்தியிருக்கின்றார். பின்னர் சர்ச்சைகள் ஏற்படவும் அவருடைய கருத்துக்களை தெளிவு படுத்தி சம்பந்தன் அறிக்கை விடுகின்றார். இது வேடிக்கையாக இருக்கின்றது. வேலிக்கு ஓணான் சாட்சியா? மூன்று தசாப்தங்களாக எத்தனையோ உயிர்த்தியாகங்கள் நடைபெற்றிருக்கின்றன. அந்த தியாகங்களை மதிக்காது வெறுமனே வாக்குகளைப் பெறுவதற்காக அவர்களை தியாகிகள் என்பதும் பின்னர் அவர்களை துரோகிகள் என்பது மேட்டுக்குடி அரசியல் தரப்பின் வழக்கமாகிவிட்டது. ஆகவே சம்பந்தன், சுமந்திரன் கூட்டணியே கடந்த நான்கரை வருடங்கள் தமிழர்களை ஏமாற்றி நீதிக்கான கோரிக்கையையும் மலினப்படுத்தியது. இப்போது அவர்களின் உண்மையான முகத்திரையும் கிழிந்துவிட்டது. எனவே தமிழ் மக்களே தீர்க்கமான தீர்மானம் எடுப்பதற்கு தலைப்பட்டள்ளார்கள் என்றுள்ளது. https://www.aruvi.com/article/tam/2020/05/17/11896/
    • சம்பந்தன் மௌனம் கலைய வேண்டும்-சிவசக்தி ஆனந்தன் Posted on October 17, 2016 by நிலையவள்  322 0 http://www.kuriyeedu.com/wp-content/uploads/2016/10/sivasakthi-ananthan.pngதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மௌனத்தை கலைத்து உண்மைகளை வெளியிட வேண்டும் என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார். புதிய அரியல் யாப்பைத் தயாரிக்கும் பணிகள், இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு மற்றும் காணி அபகரிப்பு, மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம் உட்பட தமிழ் மக்களின் பிரதான பிரச்சனைகள் தொடர்பில் கூட்டமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் ஓரிரு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கதைப்பதை நிறுத்திவிட்டு, அனைவருடனும் கலந்துரையாட வேண்டும் என்றும் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பிலுள்ள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் அரசாங்கத்துடன் இந்த வருட இறுதிக்குள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் கட்சிக்குள் எவ்வாறான விடயங்கள் இடம்பெறுகின்றது என்பதனை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேலும் கருத்து வெளியிடுகையில், மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத் திட்டம் யுத்தம் நிறைவடைந்து 7 வருடங்கள் கடந்துள்ளது. இந்த காலப்பகுதியில் யுத்தத்தால் இடம்பெயர்ந்துள்ள மக்களில் ஒரு பகுதியினர் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறியிருக்கின்றனர். மேலுமொரு பகுதியினர் கால்நூற்றாண்டு காலமாக அகதி முகாம்களில் இருக்கின்றார்கள். மீளக்குடியேறியுள்ள மக்கள் தமது சொந்தக்காணியில் வசித்தாலும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாத நிலைமையே உள்ளது. அவர்களுக்கு தேவையான நிரந்தர வீட்டுத்திட்டம் வாழ்வாதாரம் அல்லது ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் பல கிராமங்களுக்கு இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை. அதனால் வருடந்தோறும் ஏற்படும் பருவமழை காரணமாக தற்காலிக வீடுகளில் உள்ள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். ஆகவே 7 வருட காலத்தில் இந்த மக்களுக்கான வீட்டுத்திட்டம் வழங்குவதில் கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கமாக இருந்தாலும் சரி தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலும் சரி வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என்பது பாரிய குற்றச்சாட்டாகும். நாங்கள் புதிய அரசாங்கத்துடனும் கூட 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை ஒரு இலட்சத்தி 30 ஆயிரமாக மாற்றி 21 இலட்சமான அந்த தொகையை இருவருக்கு வழங்குமாறும் கோரியிருந்தோம். அத்துடன் பொருத்து வீடு என்பது எமது பகுதி காலநிலைக்கு ஏற்றதாக இருக்காது என்பதனால் நிரந்தரமான வீடாக அமைக்குமாறும் கேட்டுள்ளோம். குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்தும் இந்த பொருத்து வீட்டை நிரந்தரமான வீடாக வழங்குமாறு கேட்டிருந்தும் அரசாங்கமோ அமைச்சரோ இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்தவாரம் கூட சுவாமிநாதன் தலைமையில் வட மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாகாண அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் இடம்பெற்றது. அந்த இடத்திலும் இது தொடர்பாக வலியுறுத்தப்பட்டது. ஆனால் அந்த இடத்திலும் சுவாமிநாதன் பொருத்து வீட்டைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கின்றார். எவரும் இந்த வீட்டைத் தருவதற்கு முன்வருகின்றார்கள் இல்லை என்றார். ஆனால் அரசாங்கம் குறைந்தபட்சம் இந்த போரால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் சொத்திழப்புகள் மட்டுமன்றி காணாமல்போனோரின் உறவுகள், நீண்டகாலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் போன்றோர் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி உள்ளனர். ஆனால் அவர்களுக்கு இந்த 7 வருடங்களில் நிவாரணங்களை வழங்காமல் இந்த பாதிப்புக்கு முக்கிய காரணமாக உள்ள முப்படையினரையும் அவர்களது குடும்பங்களையும் அவர்களுக்கு தேவையான சலுகைகளையும் வசதிகளையும் வழங்குவது தொடர்பாகவே ஜனாதிபதியும் பிரதமரும் பேசிக்கொண்டிருக்கின்றார்களே தவிர பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை செய்வதற்கு இந்த அரசாங்கம் முன்வரவில்லை. இது கண்டிக்கத்தக்க விடயம். கிடைத்துள்ள வீடுகளையாவது நிரந்தரமான வீடுகளாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பிரதேச, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் பேசப்பட்டாலும் கூட அதில் எந்தவிதமான முடிவும் எடுக்கமுடியாத நிலை உள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த அரசாங்கம் மக்களினுடைய அபிவிருத்தி வாழ்வாதாரம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தவில்லை. இரா.சம்பந்தன் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும் நீண்ட காலமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வைக் காணும் விடயத்திலும் கூட அக்கறையற்ற போக்கே உள்ளது. இந்த விடயம் தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் எதிர்க்கட்சித்தலைவர் என்ற வகையில் சம்பந்தன் ஐயா தனது மௌனமான போக்கை கலைக்கவேண்டும். இந்த அரசாங்கத்துடன் நேரடியான பேச்சுக்கு செல்லவேண்டும். அந்த பேச்சுவார்த்தையில் எங்களுடைய உடனடிப்பிரச்சனைகள் என்ன? அரசியல் தீர்வு சம்பந்தமான விடயத்தில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றது? என்பது தொடர்பாக எமது கட்சி கூட்டங்களில் பல தடைவை வலியுறுத்தியும் கூட சம்பந்தனால் இந்த அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் ஓர் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு சம்பந்தனும் விரும்பவில்லை அரசாங்கமும் விரும்பவில்லை. ஆனால் மக்கள் மாவட்டம் தோறும் தங்களது பிரதிநிதிகளுக்கு கடுமையான அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கத்தை வெறுமனே பாதுகாப்பது தான் எதிர்க்கட்சித் தலைவரதோ அல்லது கூட்டமைப்பின் தலைவரது கடமை என்று இல்லாமல் எமக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு நாங்கள் மதித்து நடக்கவேண்டும். இதில் கூட்டமைப்பு தலைவரின் மௌனம் அல்லது அசமந்தம் இராஜதந்திர ரீதியாக பின்பற்றுகின்றார் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் அல்ல. அரசாங்கத்தில் உள்ள் பிரதான இரு கட்சிகளும் தங்களது நிகழ்ச்சி நிரலில் சரியாக சென்று கொண்டிருக்கின்றார்கள். எனவே அரசாங்கததின் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் நாங்கள் இழுபட்டு செல்ல முடியாது. கூட்டமைப்பின் தலைவர் எந்த விதமான அழுத்தமும் கொடுக்காமல் மென்போக்காக இருந்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது. அடுத்த ஆண்டைப் பொறுத்தவரையில் தெற்கிலும் வடக்கிலும் பல தேர்தல்கள் இடம்பெறவுள்ள காரணத்தால் அடுத்த ஆண்டு இந்த அரசாங்கத்துடன் இணைந்து எதையும் செய்ய முடியாது. ஆனால் சம்பந்தன் ஒரு சிலரோடு பல விடயங்களை பேசிக்கொண்டிருக்கின்றார். அதனால் 2016 முடிவதற்குள் தீர்வு வரும் என்ற வாக்குறுதியை கொடுத்துள்ளார். ஆகவே அந்த நாட்களும் இன்னும் சொற்ப நாட்களாகவே உள்ளது. ஆனால் இதுவரை அவ்வாறாக தீர்வு கிடைப்பதற்கான சூழ்நிலை எதுவும் இல்லை என்பது சிறுபிள்ளைக்கு கூட தெரியும். ஆகவே எமக்கு ஆதரவளித்த மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது என தெரிவித்தார். https://www.kuriyeedu.com/?p=19364
    • "சித்திரம் பேசுதடி"     "சித்திரம் பேசுதடி சின்ன பெண்ணே சிறிதளவும் உனக்கு இதயம் இல்லையோ? கோத்திரம் கேட்கிறாய் காதலித்த பின்பு கோலம் ஒன்றை நீரில் போட்டேனோ?   பாத்திரம் அறியாமல் காதலை ஏற்றேனோ பாவியாய் இன்று அலைய விட்டாயோ?" "சாத்திரம் பார்க்கும் அழகு மாதே சாந்தமாய் கதைத்து கவர்ந்தது ஏனோ?   ஆத்திரம் வருகுதடி ஏமாந்து போனேனே ஆசையை வார்த்து மோசம் செய்தாயோ? காத்திரமான உறவு என்று நான் காலத்தை வீணாக்கி உன்னை நம்பினேனோ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • ஆறு மாதத்துக்கு கொழும்பு கத்தரிக்காய் கனடாவுக்கும் யுரோப்புக்கும் வராது சாரபாம்பு போல் இருக்கும் ஸ்பெயின் கத்தரிக்காய் தான் யுரோப்புக்கு. ஜமேக்காவில் தோட்டம் தப்பினால் கனடா மக்கள் கத்தரியை காணலாம். 
    • இந்த பராமரிப்பு இல்லங்களை உடனடியாக இழுத்து மூடினால் அங்கு தங்கவைக்கப்பட்டிருக்கும் சிறார்களின் கதி என்ன ?. அவர்களுக்கு தகுந்த தங்குவசதிகள் செய்துகொடுக்காமல் பராமரிப்பு இல்லங்களை பூட்டினால் சிறுவர்களின் பாதுகாப்பிற்கு அரசு உத்தரவாதம் வழங்குமா?இதுபோன்ற சிறுவர் இல்லங்களை தொடர்ச்சியான மேர்பார்வைக்குட்படுத்தி நிர்வாக சீர்கேடு ஏற்படாமல் தடுப்பது அரசின் கடமை.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.