Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனித உரிமைகள் விவகாரத்தில் இலங்கை தப்பிக் கொண்டது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமைகள் விவகாரத்தில் இலங்கை தப்பிக் கொண்டது எப்படி?

[07 - October - 2007]

-டிட்டோ குகன்-

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் (யூ.என்.எச்.ஆர்.சி.) ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படவிருந்த மனித உரிமைகள் நிலைவரங்கள் தொடர்பான தீர்மானத்தை சமர்ப்பிக்க விடாமல் தடுத்து நிறுத்தப்பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல என்பதை அரசாங்கமே ஒப்புக் கொண்டுள்ளது.

இந்தத் தீர்மானமானது சமர்ப்பிக்கப்படாமல் கைவிடப்பட்டதானது தங்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றியெனவும் அரசாங்கம் இப்போது மார்தட்டிக் கொள்கிறது.

எனினும் இதன் மறுபக்கத்தைப் பார்த்தால் அரசுக்கு எதிரான தரப்பு தீர்மானத்தைப் பேரவையில் கொண்டு வரும் விடயத்தில் துளியளவும் முயற்சிகளை எடுக்காததன் காரணமாகவே அரசாங்கத்துக்கு இந்த வெற்றி கிடைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

கடந்த வருடம் செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்கள் முதலே ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் நிலைவரங்கள் தொடர்பாக தீர்மானமொன்றைக் கொண்டு வருவதற்கான முனைப்புகளில் ஈடுபட்டிருந்தது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஒவ்வொரு அமர்விலும் இவ்வாறான தீர்மானத்தை இலங்கைக்கு எதிராகக் கொண்டு வர ஐரோப்பிய ஒன்றியத்தால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதை இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சரான மகிந்த ராஜபக்ஷவும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அத்துடன், ஒவ்வொரு அமர்வுகளின் போதும் தீர்மானம் சமர்ப்பிக்கப்படாத போதிலும், அடுத்த அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலில் அது உள்ளடக்கப்படுவது தொடர்ந்து வருவதாகவும் அமைச்சர் சமரசிங்க, கடந்த வியாழக்கிழமை இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இதேநேரம், இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்று மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படப் போகின்றதென அறியவரும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அதைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோவொரு வகையில் தன்னாலான முயற்சிகளை எடுத்தே வந்துள்ளது.

எனினும் கடந்த காலங்களை விட இம்முறை நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்து கொண்ட அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிக்க விடாமல் தடுப்பதற்கான நடவடிக்கை சற்று முன் கூட்டியே ஆரம்பித்திருந்தது. அண்மைக் காலங்களில் இலங்கைக்கு வந்த சர்வதேச பிரதிநிதிகள் இங்கேயே நிலைவரங்கள் தொடர்பாக வெளியிட்ட கருத்துகள் அரசுக்கு சாதகமாக அமையாமை மற்றும் சர்வதேச நாடுகளிடையே இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரங்கள் தொடர்பாக இருந்து வந்த அவதானங்களும், அதிருப்தியுமே இந்த முன்கூட்டிய எச்சரிக்கை முனைப்புகளுக்கு ஏதுவாக அமைந்திருந்தன.

ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதியே ஜெனீவாவில் ஆரம்பமாகவிருந்த நிலையில் இலங்கை அரசாங்கம் சார்பான அணியொன்று செப்டெம்பர் 2 ஆம் திகதியே ஜெனீவா புறப்பட்டு சென்றுவிட்டது. இந்த அணியில் அமைச்சர் மகிந்த சமரசிங்க, சட்டமா அதிபர் சி.ஆர்.டி. சில்வா, அரச சமாதான செயலகப் பணிப்பாளர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர்.

இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்றைக் கொண்டு வரப்பட்டுவிடாமல் சமாளிப்பதற்காக முன் கூட்டியே அனுப்பப்பட்டிருந்த இந்தக் குழுவினர், ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியான தயான் ஜயதிலகவின் ஒத்துழைப்புகளுடன் செப்டெம்பர் 4 ஆம் திகதி முதல் சமரச சமாளிப்பு முயற்சிகளை ஆரம்பித்திருக்கின்றனர்.

கூட்டத் தொடர் ஆரம்பிக்கும் முன்னர், ஜெனீவாவிலுள்ள வதிவிடப் பிரதிநிதிகள் உட்பட சந்திக்க முடிந்த அனைவரையும் சந்தித்து இலங்கையின் நிலைமைகளை எடுத்துக் கூறியதாக அமைச்சர் மகிந்த சமரசிங்கவே கூறியிருந்தார். பொதுக் கூட்டங்களின் போது தனிப்பட்ட ரீதியிலும் பல சந்திப்புகளை நடத்தியதாகவும், இம்முறை தங்களுக்கு `மூச்சு விடுவதற்கு' கூட நேரமிருக்கவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக் காட்டியிருந்தார்.

அரசாங்கம் எதிர்பார்த்தது போலவோ என்னவோ, மனித உரிமைகள் பேரவையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள் பேசும்போது இலங்கை நிலைவரங்கள் தொடர்பாக அதிருப்தி வெளியிடும் வகையில் பேசியிருந்தனர். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் போர்த்துக்கல், ஜேர்மன், பிரிட்டன் போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரங்கள் குறித்து அதிருப்திகளை வெளியிட்டிருந்ததுடன், இலங்கை வரும் ஐ.நா. மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகரான லூயிஸ் ஆர்பரின் அறிக்கையை பெரிதும் எதிர்பார்ப்பதாக சுட்டிக் காட்டியிருந்தனர்.

இதற்கேற்றாற் போல், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கு எதிரான தீர்மானமும் சற்று வித்தியாசமான முறையில் கொண்டு வர எத்தனிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, பேரவையின் தலைவரின் ஊடாக இலங்கை குறித்த விஷேட அறிக்கையொன்றை விடுக்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த அறிக்கையில், இலங்கையில் யுத்தம் அதிகரித்துவிட்டது. படுகொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்கள் அதிகரித்துவிட்டன, போன்ற அரசுக்குப் பாதகமான பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலும்

[08 - October - 2007]

ஜெனீவாவில் அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலின் 6 ஆவது கூட்டத்தொடர் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் நிறைவேற்றாமல் முடிவடைந்தமை குறித்து அரசாங்கம் பெரும் குதூகலமடைந்திருக்கிறது. இலங்கையில் இடம்பெறுகின்ற படுமோசமான மனித உரிமை மீறல்களைக் கண்டனம் செய்யும் தீர்மானமொன்றை ஐரோப்பிய ஒன்றியமே முன்மொழியுமென்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. எந்தவொரு தீர்மானமுமே இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படுவதை தடுப்பதில் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் பங்கேற்ற இலங்கைத் தூதுக்குழுவினர் தடுத்துவிட்டதாகவும் இனிமேல் அந்தக் கவுன்சிலில் இலங்கை நிலைவரங்கள் தொடர்பில் 2008 செப்டெம்பரில் மாத்திரமே ஆராயப்பட முடியுமென்றும் மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்திருக்கிறார்.

மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானமெதுவும் நிறைவேற்றப்பட்டிருந்தால், மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க ஐ.நா.வின் அனுசரணையுடனான சர்வதேச கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை மேலும் பலமடைந்துவிடும் என்று அரசாங்கம் அச்சம் கொண்டிருந்தது. சர்வதேச கட்டமைப்புக்கு எதிராக இருந்துவரும் அரசாங்கம் மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் எதுவுமே நிறைவேற்றப்படாதமையை தனக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகக் கருதுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் உற்சாகத்துடன் உரையாற்றிய அமைச்சர் சமரசிங்க, இலங்கையில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்புக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை அரசாங்கம் தொடர்ந்து கடுமையாக எதிர்க்கும் என்று அறிவித்திருக்கிறார். அரசாங்கத்துக்கு எதிராகத் தெரிவிக்கப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எல்லாமே போலியானவை- அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களினால் உள்நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டவை என்பது மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரின்போது இலங்கைத் தூதுக்குழுவினரால் நிரூபிக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்க சமாதானச் செயலகத்தின் செயலாளர் நாயகம் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்கவும் அறிக்கையொன்றை விடுத்திருக்கிறார். அரசாங்க சார்பற்ற பல தொண்டர் நிறுவனங்கள் இலங்கையில் இடம்பெறுகின்ற ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணாமல்போகும் சம்பவங்கள் மற்றும் படுகொலைகளுடன் அரசாங்கப் படைகளுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறி ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலை தவறாக வழி நடத்த முயன்றதாகவும் ஆனால், உண்மை நிலைவரத்தை இலங்கைத் தூதுக் குழுவினர் தெளிவுபடுத்தியதையடுத்து கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக எந்த அறிக்கையுமே விடுக்கப்படவில்லை என்றும் விஜேசிங்க தெரிவித்திருக்கிறார். இலங்கைக்கு எதிராகத் தெரிவிக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. பல நாடுகளிலிருந்து வந்த தூதுக்குழுவினருடனும் தொண்டர் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனும் இலங்கைக் குழுவினர் நடத்திய ஆரோக்கியமான கலந்துரையாடல்களின் மூலம் குற்றச்சாட்டுகளுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கக் கூடியதாக இருந்ததாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

கடந்த இரு வருடங்களாக இடம்பெற்று வருகின்ற படுமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் கடுமையான கண்டனத்தையும் விசனத்தையும் தெரிவித்து வந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானமெதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பதை இலங்கையில் மனித உரிமைகள் பேணப்படுகின்ற நிலைவரம் குறித்து சர்வதேச சமூகம் திருப்தியடைய ஆரம்பித்து விட்டதாக அர்த்தப்படுத்த அரசாங்கம் கடுமையாக முயற்சிக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் லூயிஸ் ஆபர் இவ்வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கிறார். இவருக்கு முதல் இலங்கை வந்த எந்தவொரு ஐ.நா. அதிகாரியும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தவறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. லூயிஸ் ஆபரின் விஜயத்துக்கு முன்னதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானமெதையும் நிறைவேற்றினால் அசௌகரியமானதொரு சூழ்நிலை உருவாகக்கூடும் என்ற சந்தேகத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானத்தைக் கொண்டு வருவதைத் தவிர்த்திருக்கக்கூடும்.

மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைத் தூதுக்குழுவினர் பெரும் சாதனையைச் செய்திருப்பதாக மார் தட்டுவது மனித உரிமைகள் நிலைவரத்தில் மேம்பாட்டைக் கொண்டுவர எதுவிதத்திலும் உதவப்போவதில்லை. தீர்மானம் கொண்டுவரப்படுவதைத் தடுத்தமை மனித உரிமை மீறல்களைத் தடுத்ததாகிவிடாது என்பதை அரசாங்கத் தரப்பினர் புரிந்துகொள்ள வேண்டும். மனித உரிமைகள் நிலைவரம் இலங்கையில் எந்தளவில் இருக்கிறது என்பது அதனால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற மக்களைத் தவிர வேறு எவருக்கும் சரியாகப் புரியாது!

http://www.thinakkural.com/news/2007/10/8/...l_page37928.htm

தமிழர்களைப்பொறுத்த வரை இது தோல்வி அல்ல....

இலங்கை அரசை இவ்வளவுக்கு பதட்டப்படவைத்தே ஓருவிதத்தில் முன்னேற்றம் தான் ஆனால் போதாது....

எமது இலக்கு சர்வதேசத்தின் முன் இலங்கை முகமூடி கிழிபடவேண்டும் ....அதுவே வெளினாடுகளில் இருக்கும் எமது மக்களின் முதல் கடமையாக இருத்தல் வேண்டும்.......

எந்த சந்தர்ப்பத்திலும் மனத்தளர்வு இருக்க கூடாது.....எமது பின்னடைவுகளின் காரணங்கள் உடன் கலையப்படவேண்டும்....அதுவே அடுத்த அடி மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும்........

மனிதவுரிமையமைப்பின் கிருபாகரன் கூறியது போன்று தமிழர்தரப்பில் சோர்வான நிலை கலையப்படல்

வேண்டும்......இதன் மூலம் அடுத்த கூட்டங்களின் போது மிக கவனமாக செயல்பட்டு வெண்ணை திரையும்

போது சட்டி உடையும் நிலை வராமல் பாதுகாக்கலாம்......

எனவே இப்படியான கூட்டங்களின் முன் தமிழர்தரப்பு முற்கூட்டியே கூடி ஆராய்ந்து

இலங்கை என்ன பொய்மூட்டைகளுடன் வரும்? இதற்கு என்ன ஆதாரங்களுடன் நாங்கள் பதில் கொடுக்கலாம்?

இலங்கை எதிர்பாரத விதமான தாக்குதல் கேள்விகள்? இப்படியே அடுக்கிக்கொண்டு போகலாம்.......

அடுத்த முறை இக்குறைகள் கலையப்பட பொறுப்பானவர்கள் ஆவண செய்வார்களா?

அடுத முறை போதிய அளவு பிரச்சார ஆவணங்கள் பிரதி நிதிகளிடம் முதலில் கையளிக்கப்படவேண்டும்

இதன் மூலம் போதிய விளக்கம் பெறும் வெளினாட்டுப்பிரதி நிதிகள் கேள்விகள் மூலமே இலங்கையை

திக்குமுக்காக்கி விடுவார்கள்....

எங்கே தொடரட்டும் உங்கள் அடுத்த இலக்கு...........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.