Jump to content

இலங்கையைச் சேர்ந்த இரு வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

paris.webp?resize=750,375

இலங்கையைச் சேர்ந்த இரு வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி.

இலங்கையின் தருஷி கருணாரத்ன மற்றும் தில்ஹானி லேகம்கே ஆகிய வீரங்கனைகள் இவ்வாண்டு பிரான்ஸின் தலைநகரான பரீஸில்  நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்குத்  தகுதி பெற்றுள்ளனர்.

 

அந்தவகையில் இலங்கையின் இளம் வீராங்கனையான தருஷி கருணாரத்ன பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்ட போட்டியை பிரதிநிதித்துவப்படுத்தத் தகுதி பெற்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் தில்ஹானி லேகம்கே பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டிக்துத் தகுதி பெற்றுள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1390764

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள்... சாந்தன், சம்பந்தனின் செத்த வீட்டுக்கு வந்த சனத்தைப் பற்றிக் கதைக்க, நீங்கள் கில்மிசாவின் களியாட்ட நிகழ்ச்சியை பற்றி கதைக்கின்றீர்கள்.  அப்படி என்றால்... தமன்னாவுக்கு வந்த ஆட்களையும்  ஒப்பிட்டு  பார்க்க வேண்டியதுதானே.
    • கந்ஸ், ஆரம்பம் முதல் இந்த விடயத்திற்கு கருத்தெழுதாமல் தவிர்த்ததற்குக் காரணம் செய்தியில் முழுமையாக விடயங்கள் வெளியிடப்படவில்லை என்று கருதியதால்தான். ஆனால் கண்காணிப்புக் கமரா விடயத்தில் பொருள் இருக்கிறது என்று நம்புகிறேன்.    பிரச்சனையைத் தொடாதது தாங்களும் சுண்டலுமே.  திருமுருகன் அல்லது அங்குள்ள வேலையாட்களோ நிர்வாகிகளோ பிள்ளைகள்நீராடுவதையும் உடை மாற்றுவதையும் பார்த்தார்கள் அல்லது பதிவு செய்தார்கள்  என்று எங்குமே எவருமே குற்றம் சுமத்தவில்லை. நிர்வாகம் உரிய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதுதான் பிரச்சனையின் சாராம்சம்.  பெட்டிசன் போட்டது உண்மையாக இருந்தால்  அதைச் செய்தது  சைவர்களே. அங்குள்ள சிறார்களும் சைவர்களே,  விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்தது அப்பிரதேசத்திற்குரிய AGA Office. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தது ஆளுனர்.  இதில் சமயத்திற்கு எங்கே  இடம்?  ஆனால் சைவப் பழங்களுக்கு பெயர் கெட்டுவிடும் என்று விடையத்தை திசைதிருப்பி மூடி மறைக்க முற்படுவது தாங்களும் சுண்டல் போன்ற உசார் மடையர்களுமே. 
    • ஆளப் போகும்  தொழில் கட்சியில் இருந்து  உமா குமரன் 19,145 வாக்குகளுடன்  வெற்றி பெற்றுள்ளார். 🙂 பிரித்தானியாவின் புதிய பிரதமர் – யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்? ! பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழில் கட்சி வேட்பாளர் கெய்ர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக அவர் விரைவில் பதவியேற்கவுள்ளார். அதன்படி, பிரித்தானியாவில் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் தொழில் கட்சியின் ஆட்சி இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. அதாவது, பிரித்தானிய தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு படு தோல்வியையே கன்சர்வேடிவ் கட்சி சந்தித்துள்ளது. இதேவேளையில், தொழில் கட்சி வேட்பாளர் கெய்ர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரித்தானியவின் புதிய பிரதமராக கீர் ஸ்டார்மர் பதிவியேற்கவுள்ளார். யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்? அவரது பின்னணி என்ன? 1962 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி லண்டனில் சர்ரே ஆக்ஸ்டெட் பகுதியில் ஒரு தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தார் கீர் ஸ்டார்மர். இவரின் தாய் செவிலியராக வேலை செய்து வந்துள்ளார். இருடன் உடன் பிறந்தவர்கள் மூன்று பேர். பாடசாலை கல்வியை நிறைவுசெய்த கெய்ர் ஸ்டார்மர், லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வி பயின்றுள்ள நிலையில், சட்டத்துறையில் நிபுணத்துவம் கொண்டவராக அறியப்படுகின்றார். அத்துடன் இவரொரு இசைக்கலைஞர் எனவும் குறிபப்பிடப்படுகின்றது. கெய்ர் ஸ்டார்மர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வழக்கறிஞராக செயற்பட்டு வந்தவர் ஆவார். மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவரது சேவையைப் பாராட்டி, கடந்த 2014 இல் மறைந்த ராணி எலிசபெத் கெய்ர் ஸ்டார்மர்க்கு நைட்ஹுட் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.   பிரித்தானிய பிரதமராக டோனி பிளேயர் இருந்த காலத்தில், பிரிட்டன் அரசு ஈராக் மீது படையெடுத்த போது, கெய்ர் ஸ்டார்மர் அதனை கடுமையாக எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கெய்ர் ஸ்டார்மர் கடந்த 2015 ஆம் ஆண்டு அரசியலுக்குள் பிரவேசித்தார். ஹோல்போர்ன் மற்றும் செயின்ட் பான்க்ராஸ் தொகுதியில் போட்டியிட்ட இவர் நடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார். கெய்ர் ஸ்டார்மரின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக உடனடியாக லேபர் கட்சியில் முக்கிய பதவிகள் கிடைத்தன. இதையடுத்து, 2020 ஆம் ஆண்ட லேபர் கட்சியின் தலைவராக கெய்ர் ஸ்டார்மர் நியமிக்கப்பட்டார். தற்போது பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1391080
    • உரிய விளக்கம் கோரல்... நியூ உதயன்‌ பப்ளிக்கேசன்‌ பிறைவேட்‌ லிமிடெட்‌, ஈஸ்வரபாதம்‌ சரவணபவன்‌, பணிப்பாளர்‌, நியூ உதயன்‌ பப்ளிக்கேசன்‌ பிறைவேட்‌ லிமிடெட்‌ யசோதை சரவணபவன்‌, பணிப்பாளர்‌, நியூ உதயன்‌ பப்ளிக்கேசன்‌ பிறைவேட்‌ லிமிடெட்‌, லக்ஷ்மி சரவணபவன்‌, பணிப்பாளர்‌, நியூ உதயன்‌ பப்ளிக்கேசன்‌ பிறைவேட்‌ லிமிடெட்‌ நால்வரும்‌ 361, கஸ்தூரியார்‌ வீதி, யாழ்ப்பாணம்‌ கேள்விக்‌ கடிதம்‌ தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி அம்மன்‌ ஆலய முகாமைத்துவ சபையின்‌ தலைவர்‌ கலாநிதி ஆறு. திருமுருகன்‌ அவர்களின்‌ அறிவுறுத்தலில்‌ எழுதும்‌ கேள்விக்‌ கடிதமாவது, 04.07.2024 அன்று தங்களது நிறுவனத்தினால்‌ பிரசுரிக்கப்படும்‌ உதயன்‌ நாளிதழின்‌ முன்பக்கத்தில்‌ “மாணவிகள்‌ குளிக்கும்‌ வீடியோக்கள்‌ பதிவு!  ஆறு.திருமுருகனால்‌ நடத்தப்படும்‌ சிறுவர்‌ இல்லம்‌ இழுத்துமூடல்‌ எனும்‌ தலைப்பில்‌ செய்தியொன்று தலைப்புச்‌ செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்தது.  குறித்த செய்தி பிரசுரிக்கப்பட்ட 04.07.2024 இற்கு முன்பதாக அவ்வாறான எந்தவொரு உத்தரவும்‌ வடமாகாண கெளரவ ஆளுனரினால்‌ வழங்கப்பட்டிருக்கவில்லை.  மேலும்‌ மாணவிகள்‌ குளிக்கும்‌ வீடியோக்கள்‌ பதிவு எனும்‌ முற்றிலும்‌ பொய்யான விடயம்‌ குறித்த செய்தியில்‌ உள்ளடக்கப்பட்டுள்ளது. மேற்படி முகவரியில்‌ தங்கள்‌ நிறுவனம்‌ அமைந்துள்ள ஆதனமானது எனது கட்சிக்காரர்‌ தலைவராக கடமையாற்றும்‌ சிவபூமி அறக்கட்டளைக்கு நன்கொடையளிக்கப்பட்டு விட்டது என்பதாலும்‌  குறித்த ஆதனத்திலிருந்து தங்களை வெளியேற்ற எனது கட்சிக்காரர்‌ நடவடிக்கை எடுத்து வருகின்றார்‌ என்பதனாலும்‌ அவர்‌ மீதுள்ள குரோதத்தின்‌ காரணமாக குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதென எனது கட்சிக்காரர்‌ கருதுகின்றார்‌. எனது கட்சிக்காரர்‌ கடந்த இரு தசாப்த காலத்தில்‌ தனது நாவன்மையின்‌ மூலம்‌ சேகரித்த நிதியைக்‌ கொண்டு பல்வேறு சமய சமூகப்‌ பணிகளை செய்து வருவதோடு ஈழ சைவ சமயிகளினுடைய குறிப்பிடத்தக்க தலைவராகவும்‌ இருந்து வருகின்றார்‌.  தங்களது பத்திரிகையில்‌ வெளியிடப்பட்ட முற்றிலும்‌ பொய்யான செய்தியானது பொதுப்பணிகளில்‌ ஈடுபட்டு வரும்‌ எனது கட்சிக்காரரை இழிவுபடுத்தும்‌ தன்மையானது என்பதோடு அவரது நற்பெயருக்கு இழுக்கேற்படுத்தும்‌ தீய நோக்கம்‌ கொண்டதுமாகும்‌. எனவே இக் கடிதம் கிடைத்து 48 மணத்தியாலங்களிற்குள் தங்ளால் பிரசுரிக்கப்படும் உதயன் நாளிதழில் 04.07.2024ம் திகதி வெளி வந்த செய்திக்கு நிகரான வடிவத்தில் எனது கட்சிக்காரரிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்பதுடன், இக் கடிதம் கிடைத்து 14 நாட்களுக்குள் ரூபா 300 மில்லியன் நட்ட ஈடாக வழங்க வேண்டும் என எனது கட்சிக்காரர் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன். மேற்குறித்த விடையங்களை உரிய காலத்துள் செய்ய தவறுமிடத்து தங்களுக்கு எதிராக பொருத்தமான நீதிம்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை இத்தால் தங்களிற்கு அறியத்தருகின்றேன். கலாநிதி குமாரவடிவேல் குருபரன் LL.B (Hons) (Colombo)  B.C.L (Oxford) Ph.D (London) Attomey-at-Law (Sri Lanka) Notary Public and  Commissioner for Oaths.
    • அப்படி அல்ல சுவைப்பிரியரே! துஷ்டரைக் கண்டால் தூர விலகு. அவர்கள் தமிழர்கள் இத்திரியிலும் துஷ்டர்களைக் கண்டு விலகி நிற்கிறார்கள். 😔
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.