Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்ன சமஷ்டிக்கு ஐ.தே.க. சம்மதிதததா? தலையில் கை வைக்கிறார் லக்ஷ்மன் கிரியெல்ல.

Featured Replies

சுடர் ஒளிக்கு விசேட செவ்வி

இனப்பிரச்சனைக்கு சமஷ்டி அடிப்படையில தீர்வு காண்பதற்கு ஐ.தே.கட்சி ஒரு போதுமே இணங்கியதில்லை. விடுதலைப் புலிகள் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு, இறங்கி வந்ததால் அவர்களைத் தொடர்ந்தும் பேச்சு மேசையில் வைத்திருப்பதற்காக சமஷ்டி பற்றி ஆராய்ந்து பார்ப்பதற்கு இணங்கினோமே தவிர அதனை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்கவில்லை.

'எமது கட்சி சமஷ்டி அடிப்படையில் தீர்வு காணச் சம்மதித்து என்று கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. அது திரிக்கப்பட்ட பொய்.'

இப்படி விளக்கம் அளித்திருக்கின்றார் ஐ.தே.க. நா.உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல.

இது தொடர்பாக சுடர் ஒளிக்கு அளித்த விசேட செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு :-

அதிகாரப்பகிர்வின் ஊடாகவே தீர்வு என்று ஐ.தே. கட்சி கூறிதே தவிர, சமஷ்டி ஊடாகத் தீர்வு என்று ஒரு போதும் சொல்ல வில்லை. அதே வேளை, ஐ,தே கட்சி நாடு இரண்டாகப் பிரியும் வகையில் கூடுதலான அதிகாரப் பகிர்வு வழங்கவோ, அதிகாரப்பகிர்வு தொடர்பான தனது நிலைப்பாட்டிலிருந்து விலகவோ மாட்டாது.

2002 இல் புலிகளுடன் பேச்சு நடத்தப்பட்டபோது ஆட்சில் இருந்தது ஐ.தே.கட்சி அல்ல, பல கட்சிகள் இணைந்த ஐ.தே.. முன்னணி. இந்த முன்னணியின் தீர்மானத்தின் படியே 2002 இல் பேச்சுக்கள் நடைபெற்றன.

தமது தனிநாட்டுக் கொள்கையைக் கைவிட்டுவிட்டு, சமஷ்டியின் ஊடாகத் தீர்வைப் பெற விரும்புகின்றனர் என்று பேச்சுக்கு வந்த புலிகள் கூறினர்.20 வருடங்களாகத் தனிநாடு கேட்டு யுத்தம் செய்த புலிகள் அத் தனிநாட்டுக் கொள்கையைக் கைவிட்டு விட்டு, இறங்கி வருகின்ற போது நாமும் அவர்களுக்கு ஏதாவது

நல்லது பண்ண வேண்டும் என்பதால் அவர்கள் முன்வைத்த சமஷ்டியை ஆராய்ந்து பார்க்க அது பற்றிப் பேச நாம் இணங்கினோம்.

சமஷ்டி ஊடாக ஏதேனும் தீர்வு முன்வைக்க முடியுமா என்று ஆராய்ந்து பார்ப்போம் என்றும், சமஷ்டி ஊடாகத்தான் இறுதித் தீர்வு என்று, எதிர்பார்க்க வேண்டாம் என்று நாம் அப்போதே கூறியிருந்தோம்.

புலிகளுடன் இடம் பெற்ற அத்தனை பேச்சுகக்களின் போதும் இந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருந்தோம். ஆனால், சமஷ்டி ஊடாகத் தேசியப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நிலைப்பாட்டிலே ஐ.தே.கட்சி இருந்தது என்று கூறப்படுகின்றது. அது உண்மையில்லை. எமது நிலைப்பாடு பிழையாக விளக்கப்பட்டுள்ளது.

தேசியப் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலம் தீர்வு என்பது தான் எமது நிலைப்பாடு. இந்த அதிகாரப் பகிர்வில் நாம் விழிப்பாகவுள்ளோம்.கூடுதலான அதிகாரம் வழங்கப்பட்டு அதனூடாக நாடு பிரிந்து விடுமோ என்ற அச்சத்தில் சிங்கள மக்கள் உள்ளனர். எப்படிப்பட்ட அதிகாரம் வழங்கப்படப் போகின்றது என்று

அவர்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர்.

மாகாணசபை மட்டத்தில் அதிகாரங்களைப் பகிர்ந்து அதிகாரப் பகிர்வின் மீதுள்ள எமது உண்மைத் தன்மையை வெளிப்படுத்தியிருக்கின்றோம

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.