Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனித உரிமை மீறல் விவகாரம்: அம்பலமாகும் உண்மைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-10-08

மனித உரிமை மீறல் விவகாரம்: அம்பலமாகும் உண்மைகள்

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கைத் தீவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள் சம் பந்தமாக அமெரிக்கத் தரப்பில் இருந்து தகுந்த பதிலடி வந்திருக் கின்றது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மிக மோசமாக அதிகரித்திருக்கின்றன. ஆள்கடத்தல்கள், காணாமற் போகச் செய்தல், படுகொலைகள், கப்பம் அறவிடல் எனத் திட்டமிடப்பட்ட வன் முறைகள் தமிழினத்துக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக் கின்றன. இத்தகைய மோசமான மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை அரசுத் தலைமை காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளது என்பதையும் தாண்டி இத்தகைய மீறல்களின் பின்னணிச் செயற்பாடுகளுக்கும் அரசுத் தலைமைக்கும் இடையில் தொடர்புகள் இருக்கலாம் என்றளவில் சந்தேகங்கள் கூறப்பட்டு வருகின்றன.

மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் தரப்புகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதில்லை என்பதற்கு அப்பால், அத் தரப்புகளுக்கு சட்ட விலக்களிப்பு வழங்கும் விசேட ஏற்பாடுகள், ஒழுங்கு விதிகள் இலங்கையில் கடைப்பிடிக்கப்படுகின்றமை இந்த மோசமான நிலைமையின் பின்புலத்தில் பின்னணியில் அதிகார வர்க்கம் இருப்பதை உறுதிப்படுத்தும் ஆதாரமாகும்.

நாட்டில் தன்னாட்சி உரிமைகோரிப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகள் அதற்காகப் "பயங்கரவாதத்தை' கைக்கொள்கின்ற னர் எனக் கூறும் கொழும்பு அரசு, "புலிப் பயங்கரவாதத்தை பதில் பயங்கரவாதத்தால் வெல்வது' என்ற மிக மோசமான தந்திரோ பாயத்தைத் தனது மனதில் கொண்டு, அந்த உத்தியின் ஒரு கட்ட மாகவே இவ்வாறு மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு இடமளித்து, அதற்குத் தூண்டி, வழி செய்து நிற்கின்றது என்பது பொதுவாகவே சர்வதேசம்வரை புரிந்த பரம இரகசியமாகும்.

இந்த உண்மையை கொழும்பு அரசின் அதிகாரத் தலைமை முதல், கீழ் மட்டம் வரை பெயருக்கேனும் உதட்டளவிலேனும் மறுத்து, மறைத்து உரைத்து வருகின்றன என்பதும் இன்று அம்பலமான விடயம்தான்.

கடந்த வாரம் அமெரிக்காவில் தங்கியிருந்த இலங்கை ஜனாதி பதியிடம் விசேட செவ்வி ஒன்றைப் பெற்ற இணையத்தளச் செய்தி நிறுவனம் ஒன்று இவ்விடயம் குறித்து அவரிடம் நேரடியாகவே கேள்வி எழுப்பியிருந்தது.

""உங்கள் நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடு, இறைமை, ஜனநாயகம் போன்றவற்றை உலகின் மிக மோசமான பயங்கரவாத இயக்கம் ஒன்றிடமிருந்து பாதுகாப்பதற்காகப் போராடி வரும் நீங் கள், அதேசமயம் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றீர்கள். ஆனால் சர்வதேச சமூகம் குறிப்பாக அமெரிக்கா நீங்கள் பயங்கரவாதத்துக்கு எதிராகவே போராடுகின்றீர்கள், இனப் போராட்டம் ஒன்றுக்கு எதிராக அல்ல என்ற உங்களின் வாதத்தை ஏற்க மறுத்து வருகின்றதே?'' என்று செய்தி நிறுவனம் அப்போது ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியது.

அதாவது, நீங்கள் நடத்துவது பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் அல்ல, இன எதிர்ப்புப் போராட்டமே என்றே அமெரிக்கா உட்பட்ட சர்வதேச சமூகம் கருதுகின்றது என ஜனாதிபதிக் குச் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, "" அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கூட தனக்கான தகவல்களை உள்நாட்டுத் தரப்புகளிடமிருந்தும் அதிகாரிகளிடம் இருந்துமே பெற்றுக்கொள்கின்றது. சில சமயங் களில் அத்தகைய தகவல் வதந்திகளையும் தவறான கருத்துருவ நிலைப்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு அமைந்து விடுகின்றன. இவ்விவகாரத்தில் மோசமான ஊடகப் பிரசாரமும், மற்றையோரின் ஆதரவுடன் கூடிய தமிழர் தரப்பின் சர்வதேசப் பரப்புரை வலையமைப்பும் எங்களைத் தோற்கடித்து விட்டன.'' என்று கூறியிருக்கின்றார்.

ஆக, இலங்கைக்கு எதிரான மிக மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் பொய்யான பரப்புரைகளினாலும், வதந்திகளினாலும் புனையப்பட்ட ஆதாரமற்ற வசவுகள் என்பதே நாட்டின் ஜனாதிபதியிலிருந்து, தென்னிலங்கை அரசின் இறுதி அங்கம் வரை சகல தரப்புகளினாலும் கூறப்படும் சமாளிப்பாக இருந்து வருகின்றது.

இந்த நிலைப்பாட்டுக்கு விளக்கத்துக்கு கையோடு நல்ல பதிலடியைத் தந்திருக்கின்றது அமெரிக்கா.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கடந்த வார இறுதியில் வாஷிங்ரனில் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் உதவிச் செயலாளர் நிக்கலஸ் பேர்ன்ஸைச் சந்தித்திருக்கின்றார். இந்தச் சந்திப்பை ஒட்டி இலங்கை வெளி விவகார அமைச்சு சமாளிப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட போதிலும், அமெரிக்க இராஜாங்க அமைச்சு பட்டவர்த்தனமான விடயங்களைக் குறிப்பிட்டு உண்மை நிலையைப் போட்டு டைத்து அறிக்கை ஒன்றின் மூலம் அம்பலப்படுத்தி இலங்கை அரசுத் தரப்புக்கு அரசுத் தலைமைக்கு நல்லதொரு குட்டுப் போட்டிருக்கின்றது.

""இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசை அமெரிக்கா இந்தச் சந்திப்பின்போது வற்புறுத்திக் கேட்டுக்கொண்டது.

""மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு குற்றம் இழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் வாஷிங்ரன் கொழும்பு அரசை வலியுறுத்தியுள்ளது.

""ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பது குறித்தும் அமெரிக்கா தனது கவலையைத் தெரிவித்தது.

""கொழும்பில் ஆள்கடத்தல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறைந்திருந்தாலும் நாட்டின் இதர பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் நீடித்து வருகின்றமை பற்றி நம்பகத்தன்மை கொண்ட அறிக்கைகள் கிடைத்து வருகின்றமை குறித்து அமெ ரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.''

இந்தச் சாரப்பட அமெரிக்கத் தரப்பின் உத்தியோகபூர்வ அறிக்கை அமைந்திருக்கின்றது.

ஆக, அமெரிக்க மண்ணில் இருந்தபடி பேட்டியளித்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாகக் கூறப்படும் விடயங்கள் குறித்து, அடிப்படை அற்ற ஆதாரங்கள் இல்லாத வதந்திகளே அமெரிக்கா உட்பட்ட சர்வதேச சமூகத்துக்குக் கிட்டி வருகின்றன எனச் சுட்டிக்காட்டி யிருந்தார்.

அந்தப் பேட்டி வெளியாகி, ஓரிரு தினங்களுக்குள் அந்த விடயத்துக்குத் தகுந்த பதிலடி நேரடியாக தந்திருக்கின்றது அமெரிக்கா.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றமை குறித்து வதந்தித் தகவல்கள் அல்ல, நம்பகரமான அறிக்கைகளே தங்க ளுக்குக் கிடைத்து வருகின்றன என்பதை தனது நாட்டின் பிரதி இராஜாங்கச் செயலாளர் மூலம் இலங்கை வெளிவிவகார அமைச் சருக்கு நேரடியாகவே எடுத்துரைக்கச் செய்து, அதனை அந்தச் சந்திப்பை ஒட்டிய தனது அறிக்கையிலும் இடம்பெறவைத்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சப்புக்கட்டல் சமாளிப்பு கருத்துக்கு நல்ல பதிலடி கொடுத்திருக்கின்றது அமெரிக்கா.

இது, இலங்கைக்கு கொழும்பு அரசுக்கு செம்மையாகப் புரிந்தும், அது புரியாதது போலத் தொடர்ந்து நடிப்பதுதான் வேடிக்கை.

http://www.uthayan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.