Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிதி முறைகேட்டிற்காக கருணாவை இடைநீக்கம் செய்துவிட்டனராம்: சொல்கிறது கருணா குழு

Featured Replies

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவின் தலைவரான கருணாவை அக்குழுவிலிருந்து நிதி முறைகேடுகளுக்காக "இடைநீக்கம்" செய்திருப்பதாக அதன் "மத்திய குழு" முடிவு செய்துள்ளது.

மேலும் வாசிக்க

இவர்களுக்கு எல்லாம் மத்திய குழு இடை நீக்கம் அது இது என சுத்த நகைச்சுவையாக இருக்குது

அப்பிடியா...??? அப்ப அவர் இன்னும் ஒரு இயக்கத்தை இந்தமுறை ஆரம்பிக்க மாட்டாராமா...???

கருணாகுழுவிலை இருந்து கருணாவை நீக்கினால் எப்பிடி ஐய்யா அது கருணா குழு...?? இனி வெறும் ஒட்டு குழு இல்லை.. இராணுவ புலநாய்வு குழு மட்டும்தான்...

எங்கட ஊடங்கள் இதிலை கவனமாக இருப்பது நல்லது...!

கருணாவை இடைநீக்கம் செய்யவும் இல்லை பிறநாட்டிற்கு செல்லவும் இல்லை . -கிழக்கில் கருணாவிற்கே குந்த குடிநிலம் கொடுக்க மறுத்த இலங்கை அரசு.

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவின் தலைவரான கருணாவை அக்குழுவிலிருந்து நிதி முறைகேடுகளுக்காக "இடைநீக்கம்" செய்திருப்பதாக அதன் "மத்திய குழு" என்று கூறிக்கொள்ளும் ஒரு குழு இன்று திங்கட்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. 8 மில்லியன் ரூபாய் வரையில் கருணா முறைகேடு செய்திருப்பதாகவும், அதில் 5.5 மில்லியன் ரூபாய் அளவில் தனது குடும்பத்தினருக்கு கருணா செலவு செய்திருப்பதாகவும் அக்குழு "குற்றம்" சுமத்தியிருக்கிறது. இது தொடர்பாக அம்பாறையில் உள்ள விசேட உளவுத்துறை கட்டமைப்பை கவனித்து வரும் வி.பி.ஜி.எல்.புஸ்பகுமாரவிடம் கேட்டபோது கருணா நிதி மோசடியில் ஈடுபடுவது உண்மை எனவும் அவர் லண்டன் செல்லவில்லை என்றும் எனினும் அவருடைய உறவினர்கள் ஸ்கொட்லன் பகுதியில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார். சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து பாரிய மனித உரிமை மீறல்களில் கருணா குழு ஈடுபடுவதாகவும், ஆட்கடத்தல்கள், படுகொலைகள் மற்றும் காணாமல் போதல்களில் சிறிலங்கா இராணுவம் மற்றும் கருணா குழுவினருக்குத் தொடர்பிருப்பதாகவும் அனைத்துலக அமைப்புக்கள், நாடுகள் பல குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர், இலங்கைக்கு நாளை பயணம் மேற்கொள்ள உள்ளார். இலங்கைப் பயணத்தின் போது சிறிலங்கா இராணுவம் மற்றும் கருணா குழு மீது லூய்ஸ் ஆர்பரும் இதே குற்றச்சாட்டுகளைக் கூறுவதனைத் தவிர்க்க வைக்கும் வகையில் அல்லது குற்றச்சாட்டைத் தெரிவித்தால் அதற்கு பதில் தரும் வகையில் சிறிலங்கா அரசாங்கத்தின் ஆலோசனையின்படி இத்தகைய ஒரு அறிவிப்பை கருணா குழு வெளியிட்டிருக்கக்கூடும் என்று கொழும்பு அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளதுடன் அத்தகய ஒரு தேவை கருதியே இத்தகய செய்தி வெளியிடபட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கருணா போன்றவர்களுக்கு இலங்கையே பாதுகாப்பான இடமாக கருதுவதாக எமக்கு தகவல் தந்த அதிகாரி தெரிவித்தார். எமக்கு தகவல் தந்த உளவுத்துறை அதிகாரியின் அடயாள அட்டை இலக்கம் 6936..............ஏ பாதுகாப்பு கருதி வெளியிட முடியாதபோதும் அவர் 1969 ம் ஆண்டு பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை கருணா குழுவிற்குள் இருக்கும் எமது செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளதுடன் மத்திய குழு என்று ஒண்று கருணா குழுவிற்குள் இல்லை எனவும் எம்மை இலங்கை அரசால் நியமிக்கபட்ட சிலரே செயற்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

-நிதர்சனம்.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Tue Oct 9 9:20:00 2007

.நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கருணா இடைநிறுத்தப்பட்டார்! பிள்ளையான் புதிய தலைவர்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி.) என்று அழைக்கப்படுகின்ற கருணா அணியின் மத்திய குழு, அதன் தலைவர் கருணாவை தமது அணியிலிருந்தும் தலைமைப் பொறுப்பிலிருந்தும் இடைநிறுத்தியிருப்பதாக அறிவித்திருக்கிறது.

தமது அமைப்புக்குச் சொந்தமான பலகோடி ரூபா நிதியை அதன் தலைவரான கருணா மோசடி செய்துவிட்டார் கையாடிவிட்டார் என்றும், அதனாலேயே அவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டாõர் என்றும் கட்சியின் மத்தியக் குழுவை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தமது அணிக்குச் சொந்தமான சுமார் 80 கோடி ரூபா நிதியை கையாடிவிட்டார் கருணா என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின

அப்ப கருணா கடத்திய நிதி எங்கை இருந்து அவர்களுக்கு வந்தது எண்ட கணக்கையும் சொல்லலாமே...??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.