Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் தமிழர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர் ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.

Pickering பகுதியை சேர்ந்த 28 வயதான சுலக்சன் செல்வசிங்கம் என்பவரே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூடு

இந்த சம்பவம் ஸ்காப்ரோவின் வோர்டன் அவன்யூவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது.

கனடாவில் தமிழர் ஒருவர் சுட்டுக்கொலை - தீவிர விசாரணையில் பொலிஸார் | Tamil Boy Shot Dead In Canada Police Invermination

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச்சூடு நடந்த போது சுலக்சன் அமர்ந்திருந்த வாகனத்திலும், எரிபொருள் நிலைய சுவரிலும் துப்பாக்கி சன்னங்களின் காயங்கள் காணப்பட்டன.

பொலிஸார் விசாரணை

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வாகனம் அல்லது சந்தேக நபர் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

 

கனடாவில் தமிழர் ஒருவர் சுட்டுக்கொலை - தீவிர விசாரணையில் பொலிஸார் | Tamil Boy Shot Dead In Canada Police Invermination

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை ரொரன்ரோ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

https://tamilwin.com/article/tamil-boy-shot-dead-in-canada-police-invermination-1720797380

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் துப்பாக்கிச் சூடு – இலங்கை இளைஞன் பலி

கனடாவில் நேற்று (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கனடாவின் டொரென்டோவில் இரு வர்த்தக குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் காரணமாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அந்த இளைஞன் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் – மீசாலையிலிருந்து கனடா சென்று அங்கு வியாபாரம் செய்து வந்த 29 வயதுடைய இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவரது தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கனடா சென்று தொழில் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்ததாகவும் பின்னர் அவரது மகன் அங்கு கல்வி கற்கும் வேளையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொழில் செய்யும் இடத்தில் இரு வியாபார பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும் இதில் ஒரு தரப்பினரின் துப்பாக்கிச் சூட்டில் இந்த இளைஞன் பலியாகியதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கனடா டொரென்டோ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/188553

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.