Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"உயிரே போனாலும் பெண்களை விட மாட்டோம் என்னும் சபரிமலை பக்தர்களுக்கு... "
 
 
எல்லா சமயங்களும் மக்களுக்கு உண்மையை யும், நேர்மையையுமே போதிப்பதாகவும் அவை சகோதரத்துவத்தை வலியுறுத்துவதாகவும் ஆனால் மனித ர்கள் தான் தங்களுக்குள் சாதி, வர்க்க, பாலின பிரிவுகளை ஏற்படுத்திக் கொள்வதாகவும் கூசாமல் பொய் சொல்லும் மதவாதிகளை, நீதியின் தீர்ப்பின் பின்பும், சபரிமலை ஐயப்பன் கோவில் சுற்றாடலில், பெண்களை போகவிடாமல் தடுத்து நடைபெறும் அடாவடித்தனமும், அறிக்கைகளும், எச்சரிக்கைகளும், வன்முறைகளும் அம்பலப்படுத்தி இருக்கின்றது. இதற்கு திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் கேரள அரசின் நடவடிக்கைகள் உடந்தையாகவும் உள்ளன.
 
பத்து அகவைக்கும் ஐம்பது அகவைக்கும் இடைப் பட்ட காலத்தில் பெண்களுக்கு பொதுவாக மாத விடாய் வரும் காலம் என்றும், அதனால் அவர்கள் ஐயப்பனை நேரில் வந்து வழிபடுவதை விரும்பவில்லையாம் ? ஏனென்றால் அப்படி வழிபட வரும் பொழுது ஒருவேளை அவர்களுக்கு மாதவிடாய் வந்து விடுமோ என்ற பயமாம் ? யாருக்கு இந்த தீட்டும் அருவருப்பும் ? - ஐயப்பனுக்கா, நிர்வாகத்திற்க்கா அல்லது ஆண் பக்தர்களுக்கா ??
 
முதலில் ஐயப்பனை பார்ப்போம், அரக்கர்களின் அரசனான மகிசாசுரனின் வதத்திற்கு பிறகு, அவரின் தங்கை மகிசீ என்பவர் அதற்கு காரணமான தேவர்களை பழிக்கு பழி வாங்க முடிவு செய்தாள். எனவே பிரம்மாவை நோக்கி கடுந் தவமியற்றி, அதனால் பிரம்மா மகிழந்து, சிவனுக்கும் திருமா லிற்கும் பிறக்கும் குழந்தையால் மட் டுமே மகிசீக்கு மரணம் ஏற்படும் என்று ஒரு வரம் கொடுத்தாராம்.
 
அப்படி ஆண் ஓரினச் சேர்க்கை மூலம், அதாவது ஹோமோ செக்சில் பிறந்தவரே ஐயப்பன் ஆவார். தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் ஐயனார் வழி பாடும் ஐய்யப்பன் வழிபாடும் ஒருங்கே சேர்த்து பார்க்கப்பட்டாலும் இரண்டுக்கு மிடை யில் முக்கிய வித்தியாசங்கள் உண்டு. ஐய்யப்பன் வழிபாடு கேரளத்தில் இந்து சமய பிராமண முறையைத் தழுவியது, அதற்கு வழமை போல் பிராமணர்களின் ஒரு புராணக் கதையே உண்டு. ஐயனார் வழிபாடு தமிழர் மத்தியில் காணப்படும் ஒரு சிறுதெய்வ அல்லது ஒரு சிறு காவல் தெய்வ வழிபாடு ஆகும். ஆகவே இரண்டும் ஒன்றல்ல.
 
மத்திய ஆசியாவில் இருந்து நாடோடியாக வந்த ஆரியர்கள், திராவிடர்களை / தமிழர்களை வென்ற பின்பு, பண் டைய திராவிடர்களின் சமயத்திலும் மாற்றம் மெல்ல மெல்ல எற்பட்டது. பண்டைய கால தமிழர்கள் போர் மற்றும் காதலில் சிறந்து விளங்கிய, “இளமை’ கடவுளை வணங்கினர். அக் கடவுளுக்கு இளமை, இளைஞன் எனும் பொருள்பட முருகு அல்லது முருகன் என்ற திராவிட பெயர்கள் வழங் கப்பட்டன [முருகு விம்மிய மொய் குழலேழை (சீவ.)] . அக்கடவுள், வடஇந்தியர்கள் வணங்கிய போர்கடவு ளான “ஸ்கந்தா’வோடு ஒத்து காணப்படுகிறது. அது போலவே வேதங்களில் 'உருத்திரன்; என்று ஒருவ ரைப் பற்றிப் பேசப் படுகின்றது! இவரைச் சிவனு டன் சேர்த்துவிட்டார்கள். உதாரணமாக, தமிழரின் சிறப்புக் கடவுள்கள், ஆரியக் கலப்புக்குப் பின்னர், முருகன்→ ஸ்கந்தன்/சுப்பிரமணியன் ஆனான்! திருமால்→ விஷ்ணு ஆனான்!சிவன்→ ருத்திரன் ஆனான்! கொற்றவை→பார்வதி/துர்க்கை ஆனாள்!
 
உதாரணமாக சுத்த தமிழ்க்கடவுளான முருகனை, பிராமணர்கள் கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண் யனாக்கி விட்டார்கள். ஏன்... பரமசிவன் - பார்வதி யின் மகனாக்கி விட்டார்கள். தமிழர்களின் சைவ மதம் வைதீக பிராமண மதத்துக்குள் உள் வாங்கப் பட்டது..
 
அடிமைப் படுத்தப் பட்ட மக்களை, வென்ற வர்களின் கலாச்சாரத்திற்குள் உள்வாங்கிய வரலாறு தான், பிற்கால இந்து மதத்தின் வரலாறு ஆகும். தென்னிந்தியர்களின் நாட்டார் தெய்வங்களை எல்லாம், இந்து மதத்திற்குள் உள்வாங்கி னார்கள். அவற்றிற்கு, சமஸ்கிருதப் பெயர்கள் சூட்டப் பட்டன. தமிழரின் நாட்டார் தெய்வமான முருகன், சுப்பிரமணியன் என்று பெயர் மாற்றி இந்து மதக் கடவுளர்களில் ஒருவரானார். அதனால் தான், தமிழரை விட அதிகமாக ஆரிய மயப் பட்ட,  மலையாளிகளும், கன்னடர்களும், "சுப்பிரமணியக் கடவுள்" என்றே அழைக்கின்றனர். முருகனும், சுப்ரமணியனும் வேறு வேறு என்பதை, தமிழ் இந்துக்களும் [சைவர்களும்] உணர்வ தில்லை.
 
எந்த சிவன் தன் உடலில் பாதியைத் தன் மனைவி க்கு கொடுத்து ஆணும் பெண்ணும் சமம் என்று உலகத்திற்கே சொன்னதாக கூறப்பட்டதோ, அதே சிவன் தான் இவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அப்படி என்றால் பெண் பங்கு தேவையில்லை என்று ஒரு நாடகம் ஆடி மறுத்தளிப்பு செய்வாரா ? கொஞ்சம் யோசியுங்கள் சபரிமலை பக்தர்களே ?
 
மற்றது படைத்தல் தொழில் செய்யும் பிரமனுக்கு ஒரு உயிர் உற்பத்திக்கு ஆணும் பெண்ணும் அவ சியம் என்பது தெரியாமல் போய்விட்டதா ? அல்லது தன் தொழிலையே மறந்து போய் அல்லது சிவனையோ அல்லது திருமாலையோ பெண் என்று நினைத்தாரா ? எப்படி 'சிவனுக்கும் திருமாலிற்கும் பிறக்கும் குழந்தை' என்று சொன்னார் ? யாராவது ஒரு பக்தராவது சிந்தித்தீர்களா ? இல்லை உங்களுக்காவது அறிவு, அனுபவம் இல்லையா ?
 
ஆனால் பெண்களை ‘தீட்டு’ என்று புறக்கணிக்கும் கொடுமைக்கு எதிராக அன்றே கலகம் செய்தவர் தமிழ் தாய் தந்த திருமூலர் என்பது எத்தனை பேருக்கு அல்லது எத்தனை சபரிமலை பக்தர் களுக்கு தெரியும்? தாம் மலையாளி, தமிழ் தெரியாது என்று சொல்ல முடியாது? ஏனென்றால், திருமூலர் காலத்தில் , சங்க காலத்தில் ,ஏன் இந்த புராண ஐயப்பன் காலத்தில், நீங்கள் தமிழ் சேர நாட்டு மக்கள் என் பதும் தெரியாதா ?
 
அவர் தனது ஒரு பாடலில் [2551], “பிறரைத் தீண்டுவது தமக்குத் தீட்டு! தீட்டு!” என்று கூறுபவர் சிறிதும் அறிவிலார். தீட்டு ஏற்படுத்தும் இடத்தை அவர்கள் அறிந்திலர். தீட்டு என்ன என் பதை மெய்யாக அறிந்து கொண்ட பின்பு, மனித உடலே உண்மையில் பெரிய தீட்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்கிறார். அதாவது பெண்கள் தீட்டு என்றால் அதிலிருந்து உருவான மானுடமும் தீட்டு என்கிறார் திருமூலர் அன்றைய சேர நாட்டு ,ஆனால் இன்றைய ஐயப்பன் பக்தர்களை நோக்கி ?
 
 
"ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்
ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிகிலார்
ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிந்தபின்
ஆசூசம் மானிடம் ஆசூசம் ஆமே."
 
 
இன்னும் ஒரு பாடலில்,[2552], தம்மை உள்ளபடி உண ர்ந்து கொண்ட தத்துவ ஞானிகளுக்கு ஆசூசம் என் னும் தூய்மையின்மை என்பது கிடையாது என அடித்து கூறுகிறார்.
 
 
"ஆசூச மில்லை அருநிய மத்தருக்கு
ஆசூச மில்லை அரனை அர்ச் சிப்பவர்க்கு
ஆசூச மில்லையாம் அங்கி வளர்ப்போர்க்கு
ஆசூச மில்லை அருமறை ஞானிக்கே."
 
 
அதே போல, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839 நவம்பர் 22 - 1898 சூலை 5) கூட, திரு மூலர் வழியில் தீட்டிற்கு எதிராக உரத்துக் குரல் எழுப்பினார். அவர் காலத்திலும் பெண்கள் மாத விடாய் காலத்தில் கோயில்களுக்குச் செல்லக் கூடாது என்று பழைமைவாதிகள் கூறி வந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் தனது ‘புலவர் புராணம்’ நூலில்,
 
 
“வீங்கு புண் முலையாள்
மாதவிடாயினள் ஒருத்தி
வேட்கை தாங்குறாது இரங்கி
அன்னோன் சரண் பணிந்து
அதனைச் சொன்னாள்
ஏங்குறேல் பெரு நெருப்பிற்கு
ஈரம் இன்றே என்றானே!”
 
 
அதாவது, பெரு நெருப்பாகிய இறைவனுக்கு தீட்டு இல்லை என்பதை திருஞான சம்பந்தர் கதை மூலம் எடுத்துரைத்தார். அப்படி என்றால் எப்படி ஐயப்பனுக்கு தீட்டு வரும் ?, கொஞ்சம் யோசியுங்கள் தாம் ஐயப்பன் பக்தர் என்று கூறுபவர்கள் ??
 
மற்றது ஐயப்பனை 'மாளிகை புரத்தம்மா' என்ற அழகி மணம் செய்ய விரும்பிய பொழுதும் அதை உதறி தள்ளி, ஒரு பிரம்மச்சரியத்தை தொடர்ந்து கடைபிடித்தவராம். என்றாலும் எப்பொழுது முதல் தரம், வரும் பக்தர்கள் இல்லாது ஒழியுதோ (devotee visiting Sabarimala for first time) அன்று உன்னை மணப் பேன் என்று, அவளுக்கு உறுதி கொடுத்தார், அந்த காதல் தேவி அதை ஏற்று இன்னும் அந்த சபரிமலையிலேயே காத்திருக்கிறாளாம் என்று நம்புவதுடன், அவரின் சிலையும் அங்கு வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவளும் ஒரு மணப்பெண் என்பது குறிப் பிடத் தக்கது, இது இன்னும் இந்த பக்தர் களுக்கு தெரியாதா ? அவளை ஏன் இன்னும் சபரிமலையில் இருந்து துறத்தவில்லை ? அவளை எப்படி சபரி மலையில் வைத்து வழிபடமுடியும் ?,
 
சிலர் பெண் கள் சபரிமலைக்கு போவது பிரம்மச்சரியத்தில் இருக்கும் ஐயப்பனுக்கு இடைஞ்சல் என்கிறார்கள் , அப்படி என்றால் அவர் அவ்வளவு மனக் கட்டுப்பாடு இல்லாதவரா ? அனுமானும் பிரம்மச்சரி தான், ஆனால் எந்த பெண்களும் போகலாம் வழிபடலாம் , அது எவ்வாறு அல்லது அனுமான் ஐயப்பனை மாதிரி இல்லாமல், உறுதியான மனக் கட்டுப்பாடு உள்ளவர் என்று ஐயப்பனை குறைத்து கூறுகிறீர்களா??
 
சிலர் பெண்களின் சுகாதார மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு மலை ஏறி வழிபடுவதை தடுத்து கட்டுப்பாடில் கொண்டு வந்ததாக கூறுகிறார்கள், இது இந்த நவீன வசதிகள் படைத்த இன்றைய உலகில் ஒரு முற்றிலும் பொருந்தா வாதமாகும்?
 
ஒரு சமயம் என்பது நீதி, அன்பு, மானிடம், சம உரிமை என்பனவற்றினை முலமாக, அடிப்படை யாக கொண்டிருப்பதுடன் உயர் மனித நேயத்தை, இயல்பை திருப்தி படுத்தக் கூடியதாகவும், தனது படைப்பின் உயிர்களுக்கிடையில் வேறு பாட்டை காட்டாமல், அது கருப்போ வெள்ளையோ உயரமோ குட்டையோ பணக்காரனோ ஏழையோ எல்லோரிட மும் ஒரே தன்மை, நிலைபாட்டை உடையதாக இரு க்க வேண்டும் என்பதை தயவு செய்து உணருங்கள் .
 
"எங்கு அன்பு உள்ளதோ அங்கு வாழ்வு உண்டு"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available.  No photo description available.
 
 
No photo description available.
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, kandiah Thillaivinayagalingam said:

எல்லா சமயங்களும் மக்களுக்கு உண்மையை யும், நேர்மையையுமே போதிப்பதாகவும் அவை சகோதரத்துவத்தை வலியுறுத்துவதாகவும் ஆனால் மனித ர்கள் தான் தங்களுக்குள் சாதி, வர்க்க, பாலின பிரிவுகளை ஏற்படுத்திக் கொள்வதாகவும் கூசாமல் பொய் சொல்லும் மதவாதிகளை,

மதங்கள் வழமையாக சொல்லும் இந்த  மிகப்பெரிய பொய்  பலதடவை அப்பலபட்டு அவைகளின் சுயரூபம் வெளிவந்துள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.