Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசு, எதிரணியின் அழைப்புகளில் குளிர்காயும் ஜே.வி.பி. தலைவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசு, எதிரணியின் அழைப்புகளில் குளிர்காயும் ஜே.வி.பி. தலைவர்கள்

[09 - October - 2007]

ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யின் ஆதரவைப் பெறுவதற்கு ஒரு புறத்தில் அரசாங்கமும் மறுபுறத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன. ஆனால், ஜே.வி.பி. இருதரப்பினரிடமும் கிறாக்கி காட்டிக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

கடந்தவாரம் நிக்கவரெட்டியவில் நடைபெற்ற ஏர்பூட்டுவிழாவில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது அரசாங்கத்துக்கு ஒரு வருடத்துக்கு ஆதரவைத் தருமாறு ஜே.வி.பி.யிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று முன்தினம் கடித மூலம் பதிலளித்திருக்கிறார். தங்களிடம் ஆதரவைக் கோருவதற்கு முன்னதாக அரசாங்கம் தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் சில்வா ஜனாதிபதி விடுத்த வேண்டுகோள் ஜே.வி.பி. இப்போது தவிர்க்க முடியாத அரசியல்சக்தியாக மாறிவிட்டது என்பதைக் காட்டுவதாகவும் அதனால் தற்பெருமையின்றி மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 2005 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் தன்னால் நாட்டு மக்களுக்கு முன்வைக்கப்பட்ட `மகிந்த சிந்தனை' விஞ்ஞாபனம் தொடர்பில் ஜனாதிபதி ராஜபக்ஷ இப்போது என்ன நினைக்கிறாரோ தெரியவில்லை. ஆனால், ஜே.வி.பி.யினர் அந்த விஞ்ஞாபனத்தை தங்களது சித்தாந்தமாக ஏற்றுக்கொண்டிருப்பவர்கள் போலப் பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. மகிந்த சிந்தனையை மீறிய செயற்பாடுகளைத்தான் ஜே.வி.பி.யினர் அரசாங்கம் இழைத்திருக்கும் தவறுகளாகச் சுட்டிக்காட்டுகிறார்கள். மற்றும் படி நாடு எதிர்நோக்குகின்ற பிரதான நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் ஜே.வி.பி.யினருக்கும் இடையே பெரிதாக வேறுபாடு எதுவுமேயில்லை.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான நிபந்தனையாக தங்களால் முன்வைக்கப்பட்ட 20 அம்ச யோசனைகளைப் பற்றி அக்கறைகாட்டாத ஜனாதிபதி ராஜபக்ஷ ஐ.தே.க.வுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இறுதியில் புரிந்துணர்வு உடன்படிக்கையைச் செய்துகொண்டதாகச் சுட்டிக்காட்டும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர், அந்த உடன்படிக்கையையும் பின்னர் அலட்சியம் செய்து ஐ.தே.க.விலிருந்து 18 பாராளுமன்ற உறுப்பினர்களை இழுத்தெடுத்து அமைச்சர்களாக்கியதாகவும் அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டியிருக்கிறார். நாட்டின் அபிவிருத்தியை விடவும் அரசியல் அதிகாரத்தை பாதுகாப்பதிலேயே ஜனாதிபதிக்கு அக்கறை என்று குறிப்பிட்டிருக்கும் சில்வா, ஐ.தே.க.விலிருந்து பலர் தாவிய பின்னர் கூட அரசாங்கம் உறுதியானதாக இல்லை என்பதையே ஜே.வி.பி.யின் ஆதரவுக்கு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோள் நிரூபிப்பதாகக் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். படுமோசமான பொருளாதார நெருக்கடியில் அரசாங்கம் சிக்குண்டிருக்கும் நிலையில், அதில் இணையுமாறு ஜே.வி.பி.க்கு அழைப்பு விடுப்பதில் பயனேதுமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஐ.தே.க.வை மீண்டும் அதிகாரத்துக்கு வர அனுமதிக்கப் போவதில்லை என்று சூளுரைத்துக் கொண்டிருக்கும் ஜே.வி.பி.யிடம் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாகவே உதவி கோருகிறார். ஜே.வி.பி.யை கொள்கை, கோட்பாடுகளுடன் செயற்படுகின்ற கட்சியென்று கூட அண்மையில் அவர் பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் புகழாரம் சூட்டினார். இனநெருக்கடிக்கு சமஷ்டி முறையிலான தீர்வொன்றைக் காணவேண்டுமென்ற முன்னைய நிலைப்பாட்டை கைவிடுவதாகஐ.தே.க. அறிவித்ததன் பிரதான நோக்கம் தங்களின் ஆதரவைப் பெறுவதே என்று ஜே.வி.பி.யினர் நம்புகிறார்கள். என்னதான் இருந்தாலும் ஐ.தே.க. அதிகாரத்துக்குவர ஒரு போதுமே உதவப் போவதில்லை என்றும் ஐ.தே.க.வின் அந்தரங்க நிகழ்ச்சித் திட்டத்தைப் பற்றி தங்களுக்கு நன்றாகவே தெரியும் என்று ஜே.வி.பி.யின் பாராளுமன்ற குழுத்தலைவர் விமல் வீரவன்ச சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். இனநெருக்கடி தொடர்பான கொள்கையைத் திடீரென மாற்றிக் கொண்ட ஐ.தே.க. ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டிருக்கிறதா என்பதை தெளிவுபடுத்தவில்லை என்றும் 2002 பெப்ரவரியில் விடுதலைப் புலிகளுடன் விக்கிரமசிங்க செய்து கொண்ட உடன்படிக்கை ஒரு தேசத்துரோகச் செயல் என்பதை ஒத்துக் கொள்ளவில்லை என்றும் வீரவன்ச குறிப்பிட்டிருக்கிறார். பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அரசாங்கத்தைத் தோற்கடிப்பதற்கு ஜே.வி.பி.யின் ஆதரவை பெறவேண்டியதன் முக்கியத்துவத்தை ஐ.தே.க. உணர்ந்து கொண்டிருக்கிறது என்று கூறிய வீரவன்ச, ஐ.தே.க.வினர் முழந்தாழிட்டு கெஞ்சினாலும் கூட அவர்களின் செயற்பாடுகளுக்கு ஒரு போதும் தங்களது கட்சி ஒத்துழைக்கப் போவதில்லை என்று உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

ஒரு வருடத்துக்கு ஆதரவு தருமாறு ஜனாதிபதி ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளும் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு ஒத்துழைக்குமாறு எதிர்க் கட்சித் தலைவர் விக்கிரமசிங்க விடுக்கும் அழைப்பும் தங்களுக்கு இலங்கை அரசியலில் இருக்கும் முக்கியத்துவத்தை காட்டுவதாகவும் அரசாங்கத்தை வலுப்படுத்துவதோ அல்லது கவிழ்ப்பதோ தங்களின் ஒத்துழைப்பில்லாமல் நடக்கமுடியாத காரியங்கள் என்றும் ஜே.வி.பி.யின் தலைவர்கள் பெருமைப்படுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நாட்டு மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கும் முன்னென்றுமில்லாத பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கு அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்கக்கூடிய போராட்டம் எதையும் நடத்தத் தயாரில்லாமல் இருப்பதன் விளைவாக ஜே.வி.பி.யின் செல்வாக்கு எந்த இலட்சணத்தில் மக்கள் மத்தியில் இருக்கிறது என்பதை அத் தலைவர்கள் புரிந்துகொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். இன நெருக்கடியைப் பொறுத்தவரை பேரினவாதக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் ஜே.வி.பி.யினர் விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு போரை மேலும் தீவிரப்படுத்த வேண்டுமென்று தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துக்கொண்டிருப்பதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் ஆதரவை வளர்த்துக் கொள்ள முடியுமென்று நம்பிச் செயற்படுகிறார்கள்.

2004 ஏப்ரில் பொதுத்தேர்தலில் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து அமைத்துக்கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டதன் மூலமாகவே ஜே.வி.பி.யினரால் பாராளுமன்றத்தில் 39 ஆசனங்களைப் பெறமுடிந்தது. மீண்டும் அவ்வாறு பெருமளவு ஆசனங்களைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை ஜே.வி.பி.யினருக்கு இல்லை. அதனால், தற்போதைய பாராளுமன்றம் கலைக்கப்படுவதை அவர்கள் ஒருபோதுமே விரும்பப்போவதில்லை. ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு எதிராக என்னதான் ஜே.வி.பி.யின் தலைவர்கள் பேசிக்கொண்டு திரிந்தாலும் அரசாங்கம் தற்போதைக்கு கவிழ்க்கப்படுவதையும் அவர்கள் விரும்பவில்லை. ஆட்சிக் கவிழ்ப்பும் பொதுத்தேர்தலும் ஐ.தே.க.வின் தலைவருக்கும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர குழுவினருக்குமே அவசியமாகிறது. அரசாங்கமும் எதிரணியும் தங்களின் ஆதரவுக்காக விடுக்கும் அழைப்புகளில் ஜே.வி.பி. தலைவர்கள் நன்றாகவே குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள். நாடு எதிர் நோக்கும் முக்கிய பிரச்சினைகளில் அரசாங்கத்துக்கே பிரதான எதிரணிக்கோ ஆரோக்கியமான கொள்கை நிலைப்பாடுகள் இல்லாத காரணத்தால் இவ்விருதரப்பினரையும் மீறி அந்தப் பிரச்சினைகள் தொடர்பில் ஜே.வி.பி ஒருவித அதிகாரத் தொனியில் கருத்துக்களைத் தெரிவித்து செல்வாக்கு மிக்க நிலையில் இருப்பதாகக் காட்டிக்கொள்ள முடிகிறது.

http://www.thinakkural.com/news/2007/10/9/...l_page37993.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.