Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
08 AUG, 2024 | 12:02 PM
image

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 10 ம் திகதி  தமிநாட்டில் உள்ள சிங்கள வணிகங்களை இழுத்து மூடும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மே 17 இயக்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் மே 17 இயக்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது

இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த வாரம் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்கள் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியது. இதில் மீனவர் திரு மலைச்சாமி கொல்லப்பட்டார். மற்றொரு மீனவர் திரு இராமச்சந்திரன் என்பவரை காணவில்லை. அவரது உடலும் கிடைக்கவில்லை. மற்ற இருவர் உயிருடன் தப்பி வந்துள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்கள் மீதுஇலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களின் தொடர்ச்சியாக இச்சம்பவம் நடந்துள்ளது.

thiru_murugan.jpg
 

கொல்லப்பட்ட மீனவர்

திருமலைச்சாமியின் உடல் கரைக்கு கொண்டுவரப்பட்டு அதிகாரிகளால் உடனடியாக புதைக்கப்பட்டுள்ளது. எவ்வித வழக்கும் பதியவில்லைஇ உடற்கூராய்வும் நடத்தப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கக் கூடிய செய்தியாக அமைந்தது. காணாமல் போன மீனவர் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

கொல்லப்பட்ட மீனவரின் குடும்பத்திற்கு அரசு சார்பாக ரூ.10 லட்சம் கொடுக்கப்பட்டு இப்படுகொலை விவகாரம் முடித்து வைக்கப்பட்டுள்ளது. அரசும் அதிகாரிகளும் இதற்கு காரணமாக இருந்த இலங்கை கடற்படையினர் மீது வழக்கு பதியவுமில்லைஇ எவ்வித விசாரணையும் கோரவில்லை. அப்பாவி மீனவர்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டிய ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் மீனவர்களின் படுகொலையை கைகழுவும் வேலையை தொடர்ந்து செய்வதையே தற்போதைய சம்பவம் உணர்த்துகிறது. இதனால்இ இந்தியாவின் நட்பு நாடான இலங்கையினால் 600க்கும் மேற்பட்ட தமிழ் மீனவத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டும் இதுவரை நீதி கிடைக்கவில்லை.

இப்படியாக எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் இந்த சம்பவமும் கடந்துபோனால் தொடர்ந்து இது போன்ற சம்பவம் அரங்கேறிக்கொண்டே இருக்கும். ஆகையால் இலங்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாட்டின் இலங்கையின் பொருளாதாரத்தை முடக்கும் வேலையை தொடங்குவோம். 

தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென 2013 ம் ஆண்டு தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள சிங்கள வணிகங்களை இழுத்து மூடும் போராட்டத்தை முன்னெடுப்போம்.

முதற்கட்டமாக சிங்கள  நிறுவனத்தின் தமிழ்நாடு  கிளைகளை ஆகஸ்ட் 10 அன்று மே பதினேழு இயக்கம் தோழமை அமைப்புகளோடு இணைந்து முற்றுகையிடும் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த போராட்டத்தில் தமிழர்கள் அனைவரும் தங்களை இணைத்துக்கொள்ளுமாறு மே 17 இயக்கம் அறைகூவல் விடுக்கிறது. 

தமிழர்களை கொலை செய்யும் சிங்களப் பேரினவாதத்தின் வணிகத்தை தமிழ்நாட்டிலிருந்து அகற்றுவோம். இலங்கையுடனான பொருளாதார உறவுகளை புறக்கணிப்போம். தமிழினம் காக்க ஒன்றுதிரள்வோம்.

https://www.virakesari.lk/article/190557

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.