Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கல்பனா சாவ்லா விருது பெற்ற செவிலியர் சபீனா
படக்குறிப்பு,செவிலியர் சபீனாவின் பணியைப் பாராட்டி கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டுள்ளது. கட்டுரை தகவல்
  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 15 ஆகஸ்ட் 2024

ரெயின்கோட் மட்டுமே அணிந்திருக்கிறார். கையில் முதலுதவி உபகரணங்கள் அடங்கிய ஒரு பையை இறுகப் பற்றியுள்ளார். கீழே ஆற்றில் வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த ஆற்றை ஜிப்லைன் வாயிலாகக் கடந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும்.

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டபோது சூரல்மலையில் இருந்து இப்படி ஜிப்லைன் மூலமாக ஒரு செவிலியர் முண்டகைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்து காப்பாற்றியுள்ளார். அவர் நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனா.

ஜிப்லைன் வாயிலாகச் செல்வது அவருக்கு இதுவே முதன்முறை. மழை பெய்துகொண்டிருக்கிறது, மீண்டும் நிலச்சரிவுக்கான எச்சரிக்கை. ஆனால் அவர் எதையும் பொருட்படுத்தவில்லை என்பது அவரிடம் பேசியதில் புரிந்தது.

பிபிசி தமிழ் சார்பில் அவரிடம் “ஜிப்லைனில் சென்று சிகிச்சை அளிப்பதற்குப் பயமில்லையா?” எனக் கேட்டபோது, “பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. பயம் இல்லை” என பதிலளித்தார்.

அவருடைய பணியைப் பாராட்டி தமிழ்நாடு அரசு கல்பனா சாவ்லா விருது வழங்கி சுதந்திர தின விழாவில் கௌரவித்தது.

 

செவிலியர் சபீனா, ஷிஹாப் தங்கல் மனிதநேய மையம் எனும் தொண்டு நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளாக செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கிக் கிடப்பவர்களின் வசிப்பிடத்திற்கே சென்று சிகிச்சை அளிக்கும் பணியை அவர் செய்து வருகிறார்.

ஜூலை 29 அன்று கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், சூரல்மலை, முண்டகை எனும் இரண்டு பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இரு கிராமங்களையும் இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இது மீட்புப் பணிகளில் குறிப்பிடத்தக்க தடங்கல்களை ஏற்படுத்தியது.

குறிப்பாக, சூரல்மலையில் இருந்து முண்டகைக்கு அந்தப் பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும். எனவே, முண்டகைக்குச் சென்று காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தாமதமானது. எனவே, ராணுவம், தேசியப் பேரிடர் மீட்புப்படை உள்ளிட்ட மீட்புக் குழுவினர் சூரல்மலையில் இருந்து ஜிப்லைன் அமைத்து அதன் வாயிலாக முண்டகைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்க வேண்டியிருந்தது.

இப்படி ஜிப்லைன் வாயிலாக முண்டகைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்திருக்கிறார் செவிலியர் சபீனா.

ஆபத்தை மீறி உதவி

“ஜூலை 29ஆம் தேதி நள்ளிரவு நிலச்சரிவு ஏற்படுகிறது. 30ஆம் தேதி முதலுதவி உபகரணங்களை எடுத்துக்கொண்டு உடனடியாக வருமாறு எங்கள் குழுவிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது."

"எங்கள் குழுவிலிருந்து ஏற்கெனவே பிந்து, சிந்தியா என்ற இரு செவிலியர்கள் அங்கு சென்றிருந்தனர். காலை 10-10.30 மணிக்கு நாங்கள் சூரல்மலைக்குச் சென்றபோது, ‘யாரும் இங்கு நிற்க வேண்டாம், ஆபத்து. மீண்டும் நிலச்சரிவு ஏற்படலாம்’ என எச்சரித்தனர்” என்கிறார் பிபிசியிடம் பேசிய சபீனா.

சபீனாவுக்கு அங்கிருந்து திரும்பிச் செல்ல மனம் வரவில்லை.

“நாம் வந்தது உதவுவதற்காகத்தானே, ஏன் திரும்பிச் செல்ல வேண்டும், காத்திருக்கலாம் என எனக்குத் தோன்றியது” என்கிறார் அவர்.

 
கல்பனா சாவ்லா விருது பெற்ற செவிலியர் சபீனா

பட மூலாதாரம்,SABEENA

படக்குறிப்பு,ஜிப்லைன் மூலம் முண்டகைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளார் சபீனா.

அப்போது மீட்புக்குழுவினர், சூரல்மலையிலிருந்து முண்டகைக்கு ஜிப்லைன் வாயிலாகச் சென்று சிகிச்சை அளிக்க ஆண் செவிலியர்கள் யாரும் இருக்கின்றனரா எனக் கேட்டுள்ளனர்.

ஆனால், சபீனாவின் குழுவில் ஆண் செவிலியர்கள் இல்லை. பெண் செவிலியர்கள் ‘ரிஸ்க்’ எடுக்க வேண்டாம் என மீட்புக்குழுவினர் கூறியதாக சபீனா தெரிவிக்கிறார்.

“ஆனால், நான் ஜிப்லைன் வாயிலாகச் சென்று முதலுதவி அளிக்க முன்வந்தேன். ஜிப்லைன் மூலமாக ஆற்றைக் கடந்து, முண்டகைக்குச் சென்று சுமார் 30-35 பேருக்கு முதலுதவி அளித்தேன்” என்கிறார் சபீனா.

“ஜிப்லைனில் செல்லும்போது நானே பெல்ட் அணிந்தேன். பெல்ட் இறுக்கமாக இல்லை என மீட்புக்குழுவினர் பயந்தனர். இருந்தாலும் சென்றேன். முதலுதவி உபகரணங்கள் உள்ள பை கீழே விழுந்துவிடப் போகிறது என ஆரம்பத்தில் பயந்தேன்” எனக் கூறுகிறார் அவர்.

நள்ளிரவிலும் முதலுதவி

சூரல்மலை - முண்டகை இடையே மீட்புப் பணிகளுக்காக கடந்த ஆகஸ்ட் 1 அன்று இந்திய ராணுவத்தின், ‘மெட்ராஸ் சாப்பர்ஸ்’ எனும் மெட்ராஸ் இன்ஜினியர் குழு குறுகிய நேரத்தில் ‘பெய்லி பாலம்’ எனப்படும் தற்காலிக இரும்புப் பாலத்தைக் கட்டினர்.

அப்பிரிவின் மேஜர் சீதா ஷெல்கே எனும் அதிகாரியின் கண்காணிப்பில்தான் அப்பாலம் 31 மணிநேரத்தில் கட்டி முடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

ஆனால், அப்பாலம் கட்டப்படுவதற்கு முன்பு வரை மீட்கப்படும் சடலங்கள், காயமடைந்தவர்கள் என எல்லோரையும் ஜிப்லைன் வாயிலாகத்தான் கட்டி மீட்புக் குழுவினர் அனுப்பினர்.

 
கல்பனா சாவ்லா விருது பெற்ற செவிலியர் சபீனா

பட மூலாதாரம்,SABEENA

படக்குறிப்பு,ப்நள்ளிரவு 12 மணிவரைகூட முதலுத பணிகளை மேற்கொண்டதாகக் கூறுகிறார் செவிலியர் சபீனா.

பாலம் அமைக்கப்படும் வரை ஒவ்வொரு நாளும் கூடலூரில் வீட்டிலிருந்து சூரல்மலைக்கு முதலுதவி உபகரணங்களுடன் வந்து, முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மீண்டும் கூடலூர் திரும்ப வேண்டும் என்று அப்போதைய சூழலை விவரித்தார் சபீனா.

"முதல் நாள் மட்டும்தான் முண்டகைக்கு ஜிப்லைனில் சென்று அங்கு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தோம். அப்போது இரவு 12 மணிவரை அங்கே இருந்தோம். அடுத்தடுத்த நாட்கள் சூரல்மலையில், மீட்புப் பணியின் போது காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்தோம்.”

'பயம் இல்லை'

இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒருவரைத் தங்கள் குழுவைச் சேர்ந்த செவிலியர் சி.பி.ஆர். எனப்படும் உயிர்காக்கும் சிகிச்சையளித்து காப்பாற்றியதாக அவர் கூறுகிறார்.

எனக்கு எந்தப் பயமும் அந்தச் சூழலில் இல்லை. விரைந்து சென்று காப்பாற்ற வேண்டும் என்றுதான் தோன்றியது. ஏற்கெனவே மீட்புக் குழுவினர் அங்கு சென்று திரும்பினர். அதனால் எனக்கும் பயம் ஏற்படவில்லை” என்கிறார் அவர்.

சடலங்களும் காயமடைந்தவர்களும் ஒரே இடத்தில் கிடந்ததாகவும் சில நேரத்தில் சடலத்தைத் தாண்டியும், (அறியாமல் சடலங்களை மிதித்தும் செல்ல வேண்டியிருந்ததாக) கூறும் அவர், அந்தச் சூழல் தன்னை மிகவும் பாதித்ததாகக் கூறுகிறார்.

 
கல்பனா சாவ்லா விருது பெற்ற செவிலியர் சபீனா

பட மூலாதாரம்,SABEENA

படக்குறிப்பு,காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே முதன்மையாக இருந்ததாககக் கூறுகிறார் சபீனா.

தான் முன்பு பணியாற்றிய தனியார் நிறுவனம் ஒன்றில் தாம் மிகவும் மதித்த ஒரு நபர் புற்றுநோயால் இறக்கவே, அதன் காரணமாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணி செய்ய முடிவெடுத்துள்ளார் சபீனா.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனது கண் முன்னே இறப்பதைப் பார்த்த சபீனா, வயநாடு நிலச்சரிவு துயரத்தையும் கனத்த மனதுடன் தாங்கிக்கொண்டு பணியை மேற்கொள்ள முடிந்ததாகக் கூறுகிறார்.

ஒற்றைப் பெற்றோரான சபீனா, தனது ஒரே மகளையும் செவிலியர் படிப்பைப் படிக்க வைத்திருக்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Wayanad landslide: நிலச்சரிவு எச்சரிக்கை; zipline-ல் risk பயணம் - உதவிக்கு சென்ற TN Nurse Sabeena

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.