Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   18 AUG, 2024 | 06:11 PM

image
 

மட்டக்களப்பு நகரில் இயங்கிவரும் பிரபல உணவகம் சுகாதார ஒழுங்கு விதிகளை மீறி கழிவு நீரை வெளியில் திறந்துவிட்ட மற்றும் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோழி இறைச்சியை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உணவகத்தை எதிர்வரும் 22ம் திகதிவரை தற்காலிகமாக மூடுமாறு ஞாயிற்றுக்கிழமை (18) உத்தரவு பிறப்பித்ததையடுத்து உடன் பொது சுகாதார பரிசோதகர்கள் உணவகத்தை மூடி சீல் வைத்தனர்.

IMG_2905.JPG

குறித்த பிரபல உணவகத்தின் கழிவு நீர் வெளியேறி வீதிகளிலும் வடிகான்களிலும் தேங்கி நிற்பதுடன் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசி வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு தெரிவித்து வந்தனர்.

WhatsApp_Image_2024-08-18_at_04.55.33.jp

இந்த நிலையில் குறித்த உணவகத்தை புளியந்தீவு பொது சுகாதார பரிசோதகர் ஜெ.யசோதரன் தலைமையிலான பரிசோதகர்கள் முற்றுகையிட்டு பரிசோதனையிடனர் இதன் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோழி இறைச்சியை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமையை கண்டுபிடித்து கைப்பற்றியதுடன் சுகாதார ஒழுங்கு விதிகளை மீறி கழிவு நீரை வெளியில் திறந்துவிட்ட வந்துள்ளதை கண்டுபிடித்தனர்.

WhatsApp_Image_2024-08-18_at_04.55.34.jp

இந்த சுகாதார சீர்கேடு தொடர்பாக 1980ம் ஆண்டு 26 ம் இலக்க உணவு சட்டத்தின் 13 (1) ஆம் பிரிவின் கீழ் குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது பொது சுகாதார பரிசோதகர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஞாயிற்றுக்கிழமை (18) வழக்கு தாக்குல் செய்ததுடன் குறித்த உணவகத்தின் மீது கடந்த மாச் மாதம் 14 ம் திகதி மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவு வைத்திருந்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளி என இனங்காணப்பட்டு தண்டப்பணம் செலுத்தினர் என நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து  நீதவான் உடனடியாக குறித்த உணவகத்தை எதிர்வரும் 22ம் திகதிவரை தற்காலிகமாக மூடீ சீல்வைக்குமாறு உத்தரவிட்டார்.

IMG_2872.JPG

இதனையடுத்து மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் யோகேஸ்வரன் மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் வேணிதரன், கோட்டமுனை பிரிவு பொது சுகாதர பரிசோதகர் ரி.மிதுன்ராஜ், புளியந்தீவு பொது சுகாதார பரிசோதகர் ஜெ.யசோதரன் ஆகியோர் குறித்த உணவகத்தை முற்றுகையிட்டு மூடி சீல் வைத்தனர்.

https://www.virakesari.lk/article/191377

  • கருத்துக்கள உறவுகள்

KFC க்கு பூட்டு

Janu   / 2024 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:19 - 0      - 41

print sharing button
facebook sharing button
reddit sharing button
twitter sharing button

சுகாதார சீர்கேட்டை முன்னிட்டு மட்டக்களப்பு KFC விற்பனை நிலையம்  ஞாயிற்றுக்கிழமை (18) அன்று மூடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய , சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார மருத்துவ பணிமனையின் அதிகாரிகளால் மட்டக்களப்பு KFC நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது .

இதன் போது உணவு பொருட்கள் உரிய முறையில் விநியோகிக்கப்படாமை, களஞ்சியப்படுத்தப்படாமை, கழிவு நீர் முகாமைத்துவம் சரியாக பேணப்படாமை உணரப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த நிறுவனத்தின் மேல் நீதி மன்றத்தினால் வழக்கு தொடரப்பட்டு, எதிர்வரும் (22) திகதி வரை தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் இவ்வாறு செயற்படும் உணவகங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி இராசரெட்ணம் முரளீஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

எம். எஸ். எம். நூர்தீன் 

image_4b6db3fbfb.jpg


Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.