Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
20 Aug, 2024 | 05:11 PM
image
 

தமிழ்நாட்டை சேர்ந்த திராவிட கழக தலைவர் கி.வீரமணி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்.  

நாடாளுமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் மறைந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 97ஆவது பிறந்தநாள் நினைவு பேருரை எதிர்வரும் சனிக்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள றிம்பர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.  

அந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே கி. வீரமணி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார். 

யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள திராவிடக்கழக தலைவர் கி.வீரமணி! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

எமது உரிமைகளை பெற நம்மை நாம் எப்படி தயாரித்துக்கொள்வது என்ற உணர்வில் பக்குவம் பெறவேண்டும் - தமிழகத்தின் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி

25 AUG, 2024 | 12:06 PM
image

நடந்தவற்றை பற்றியே சிந்தித்துக்கொண்டு இருக்காமல், அடுத்து எமது உரிமைகளை பெறுவதற்காக நம்மை நாம் எப்படி தயாரித்துக்கொள்ளவேண்டும் என்ற உணர்வில் பக்குவம் பெறவேண்டும் என இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த தமிழகத்தின் திராவிடர் கழகத் தலைவர் இ.வீரமணி தெரிவித்தார். 

இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமர்ந்த முதலாவது தமிழரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 97ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை நேற்று சனிக்கிழமை (24) பிற்பகல் 4 மணிக்கு யாழ். நகரில் அமைந்துள்ள றிம்மர் மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நினைவுப் பேருரை ஆற்றும்போதே வீரமணி இதனை தெரிவித்தார்.   

அவர் மேலும் கூறுகையில்,   

இலங்கை தமிழர்கள் நேற்று விழுந்த இடத்தில் இன்று விழுந்துவிடாதீர்கள். புதிய இடத்தில் அல்லது முன்னுக்காவது வீழ்ந்து பாருங்களேன். விழுந்துவிடக்கூடாது என்று கூறுகின்றோம். நாங்கள் உங்களை கீழே விழ விடமாட்டோம். அதற்காகத்தான் எங்களை போன்றவர்கள் இருக்கிறோம்.  

அதற்காக புதிய இடத்துக்கு செல்வதல்ல, வீழ்ந்துவிடக் கூடாது என்பதை கூறுகின்றேன். இந்த நிகழ்வின் நோக்கம் என்ன? அடுத்த செயல் வடிவத்தை புத்தாக்கத்தை  பெற்றாகவேண்டும். வேர்களைத் தேடித்தான் விழுதுகள் செல்லவேண்டும். வேர்கள் பாதுகாப்பாக இருப்பதால்தான் விழுதுகள் தேடிவந்திருக்கின்றன. எனவே விழுதுகள் பழுதில்லாமல் இருக்கவேண்டுமானால் பழுதில்லாத விழுதுகளை உருவாக்கவேண்டும். என்றால், அது வேருக்கு பெருமை. அதனை செய்திருக்கிறார்கள்.

ஆனால் பல நேரங்களில் விழுதுகள் வேர் இருக்கிறது என்பதை பற்றியே நினைப்பதில்லையே. நடந்தவை நடந்ததாக இருக்கட்டும். நாம் பாடங்களை கற்றுக்கொள்ளவேண்டும். வரலாற்றை திருப்பி பார்க்கவேண்டும்.  

அதனை பார்த்து திருப்பங்கள் உருவாக வேண்டும். இனம், மொழி, பண்பாடு, கலாசாரத்தை காப்பாற்றிக்கொள்வதற்கு உலகத்தில் பிறந்த அத்தனை தமிழர்களுக்கும் உரிமை உண்டு. நடந்தவற்றை பற்றியே சிந்தித்துக்கொண்டு இருக்காமல், அடுத்து எமது உரிமைகளை பெறுவதற்காக நம்மை நாம் எப்படி தயாரித்துக்கொள்ளவேண்டும் என்ற உணர்வில் பக்குவம் பெறவேண்டும்.  

இளைய தலைமுறைக்கு பென்னான காலத்தை வழிகாட்டவேண்டும். கலங்கரை வெளிச்சங்கள் இல்லாவிட்டால் கப்பல்கள் கடலில் பயணம் செய்ய முடியாது. இன்று நினைவுகூரப்படும் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எல்லோரையும் அணைத்துச் சென்றார்.  வெளிநாட்டு தலைவர்கள், இந்திய தலைவர்களுக்கு அவர் மையப்புள்ளியாக இருந்தார்.

ஏற்கனவே பல இரத்தங்களை கண்டுவிட்டோம். அதனை அழித்துவிட்டுச் செல்லலாம் என்று நினைத்துவிடக்கூடாது. பல இழப்புகளை சந்தித்தோம். கடந்து செல்ல முடியாது. அதிலிருந்து என்ன பாடத்தை கற்றோம் என்பதை பற்றி ஆழமாக சிந்திக்கவேண்டும்.  

இத்தகைய நேரத்தில் அவர் வேறு நான் வேறு என்று எது பிரிக்கிறதோ, அதனை முன்னிலைப்படுத்திக் கொள்ளக்கூடாது என்பது என்னுடைய கருத்து என்றார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், இலங்கை தமிழ் அரசு கட்சி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமசந்திரன், சிவாஜிலிங்கம் மற்றும் முன்னாள் தவிசாளர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் , ஆதரவாளர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டார்கள்.

20240824_155444.jpg

20240824_155425.jpg

20240824_155439.jpg

20240824_173522.jpg

https://www.virakesari.lk/article/191915

  • கருத்துக்கள உறவுகள்

""நாங்கள்உங்களை கீழே விழ விடமாட்டோம்.அதற்காகத்தான் எங்களை போன்றவர்கள் இருக்கிறோம். 

 வேர்களைத் தேடித்தான் விழுதுகள் செல்லவேண்டும். வேர்கள் பாதுகாப்பாக இருப்பதால்தான் விழுதுகள் தேடிவந்திருக்கின்றன""

திரும்பவும் இந்தியாவை நம்பச் சொல்கிறார். 

இப்படிச் சொல்லிச் சொல்லித்தானே எங்கள்  கழுத்தறுத்தீர்கள்.

இன்னுமாடா உங்கள் இரத்தப் பசி தீரவில்லை. 

பச்சை சந்தர்ப்பவாதிகள். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.