Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காசா (Gaza) பகுதியின் பல்வேறு பகுதிகளில் 3 நாட்கள் போரை இடைநிறுத்தம் செய்ய இஸ்ரேலும் (Israel) ஹமாஸும் (Hamas) ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவிலுள்ள குழந்தைகளுக்கான போலியோ (Polio) சொட்டு மருந்து வழங்குவதற்காகவே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் மிலேச்சத்தனமான தாக்குதல்களில் இதுவரை 40,000இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

போர் நிறுத்தம்

இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் இதற்கான ஒப்பந்தங்கள் இன்னும் கையெழுத்தாகாமல் நீடித்துக் கொண்டு இருக்கின்றன.

போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்ட இஸ்ரேல் - ஹமாஸ்: இதுதான் காரணம் | Three Days Ceasefire In Gaza For Polio Vaccination

காசாவிலுள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து பெறாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில் அவர்களுக்கான சொட்டு மருந்து கொடுக்கவில்லை என்றால் ஆபத்து என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இதனால் போலியோவுக்கு எதிராக காசா முழுவதும் சுமார் 640,000 குழந்தைகளுக்கு முதல் சுற்று தடுப்பு மருந்து வழங்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

மேலும், இதற்கான முதற்கட்ட பிரசாரம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/three-days-ceasefire-in-gaza-for-polio-vaccination-1725015932

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போலியோ முகாம் - காஸா மீதான தாக்குதலை 3 நாட்கள் நிறுத்த ஒப்புக்கொண்ட இஸ்ரேல்

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த இஸ்ரேல்-காஸா இடையேயான தொடர் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தம்

பட மூலாதாரம்,AFP

கட்டுரை தகவல்
  • எழுதியவர், டாம் பென்னெட்
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 30 ஆகஸ்ட் 2024

குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்க வேண்டும் என்ற "மனிதநேய காரணத்திற்காக" காஸாவில் நீண்டகாலமாக நடந்து வரும் தொடர் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள இஸ்ரேல் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்க இருக்கும் இந்த முகாமின் மூலம் காஸா பகுதி முழுவதிலும் சுமார் 6.4 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்க இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி ரிக் பீபர்கார்ன் தெரிவித்தார்.

இந்த முகாம் மத்திய, தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் மூன்று தனித்தனி கட்டமாக நடக்க இருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும், உள்ளூர் நேரப்படி 06:00 முதல் 15:00 வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தாக்குதல் இடைநிறுத்தப்படும்.

25 ஆண்டுகளுக்கு பிறகு காஸாவில் முதல் முறையாக 10 மாத குழந்தை ஒன்று போலியோ நோய்தொற்று பாதிப்புக்கு உள்ளானதை அடுத்து இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதாக ஐக்கிய நாடு சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

போலியோ சொட்டு மருந்து வகை 2-ன் (nOPV2) சுமார் 6 லட்சம் டோஸ்கள் ஏற்கனவே காஸாவில் இருக்கின்றன. கூடுதலாக 4 லட்சம் டோஸ்கள் கூடிய விரைவில் அங்கு வரயிருக்கிறது.

ஐநா ஊழியர்கள் மற்றும் உள்ளூர் சுகாதார பணியாளர்களால் இந்த மருந்து வழங்கப்படும். இதற்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது இருக்கிறது.

போலியோ மருந்து முகாமை பாதுகாப்பாக நடத்துவதற்காக காஸாவில் உள்ள ஐநா செய்தித் தொடர்பாளர் லூயிஸ் வாட்டர்ட்ஜ் போர் நிறுத்தத்திற்கான அழைப்பை விடுத்தார்.

"வானில் இருந்து குண்டுகள் வீசப்பட்டு தாக்குதலுக்கு மத்தியில் குழந்தைகளுக்கு மருந்து வழங்க இயலாது. மேலும் உயிரை காப்பாற்றிக்கொள்ள தப்பி ஓடும்போது குழந்தைகளுக்கு மருந்து வழங்க இயலாது", என்று அவர் வெள்ளிக்கிழமை அன்று வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.

"முகாம் நடைபெறும் போது நடக்கும் எந்த ஒரு தாக்குதல் நடவடிக்கையும், குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்கும் எங்கள் செயல்பாட்டை பாதிக்கும்", என்று அவர் தெரிவித்தார்.

இந்த வாரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தின் முதல் இரண்டு டோஸ்கள் வழங்கப்படும் என்றும், நான்கு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் அடுத்த டோஸ் வழங்கப்பட வேண்டும் என்று லூயிஸ் வாட்டர்ட்ஜ் கூறினார்.

 
போலியோ வைரஸ் மிகவும் கொடிய நோய் பரப்பும் கிருமி.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, போலியோ வைரஸ் மிகவும் கொடிய நோய் பரப்பும் கிருமி.

இந்த முகாமின் மூலம் 90% குழந்தைகளுக்கு மருந்து வழங்கி காஸா பகுதியில் போலியோ வைரஸ் பரவுவதை தடுப்பதே உலக சுகாதார அமைப்பின் நோக்கமாக இருக்கிறது.

அந்த இலக்கை எட்ட முடியவில்லை என்றால் மேலும் நான்காவது நாளாக தாக்குதல் இடைநிறுத்தப்பட்டு இந்த முகாம் தொடரவும் ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

போலியோ வைரஸ் மிகவும் கொடிய நோய் பரப்பும் கிருமி. அது பெரும்பாலும் கழிவுநீர் மற்றும் அசுத்தமான நீர் மூலம் பரவுகிறது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் உடல் சிதைவு மற்றும் பக்கவாதம் ஏற்படும். குறிப்பாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை இது பாதிக்கிறது.

இந்த தாக்குதல் தொடங்குவதற்கு முன்பு, காஸா மற்றும் மேற்குக் கரை பகுதியில் போலியோ நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் சரியாக நடந்து வந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

சமீபத்திய தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டு 99% குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்கப்பட்டது, ஆனால் இது கடந்த ஆண்டு 89% ஆகக் குறைந்துள்ளது.

"இந்த முகாமின் மூலம் காஸா பகுதியில் உள்ள 6.5 லட்சத்திற்கும் அதிகமான பாலத்தீன குழந்தைகளுக்கு மருந்து வழங்க சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்", என்று ஹமாஸ் ஆயுதக்குழு அதிகாரி பாசெம் நயிம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இந்த மூன்று நாள் இடைநிறுத்தம் என்பது முழு போர் நிறுத்தத்தை உணர்த்துவதில்லை என்று இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதென்யாகு குறிப்பிட்டு உள்ளார்.

 

இந்த திட்டத்தை "வலுவாக" வரவேற்பதாக ஐநாவுக்கான இங்கிலாந்து துணை நிரந்தர பிரதிநிதி ஜேம்ஸ் கரியுகி கூறினார்.

"நாம் இப்போது இதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை பார்க்க வேண்டும். 90% குழந்தைகளுக்கும் மருந்து வழங்க இந்த போர் இடைநிறுத்தங்கள் போதுமானதாக இருக்க வேண்டும். இந்த முகாமிற்கு ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் வரும்போது அவர்கள் அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும்", என்றும் அவர் கூறினார்.

பணயக்கைதிகளாக இருப்பவர்களுக்கும் இந்த முகாமின் மூலம் மருந்து வழங்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் ஹகாய் லேவினே வலியுறுத்தினார். அவர் இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பங்களுக்கான மன்றத்தின் செய்தித் தொடர்பாளராக இருக்கிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது முன்னறிவிப்பின்றி ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலின்போது சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.

காஸாவில் அக்டோபர் 7 முதல், 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு இருப்பதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்; போலியோ முகாமிற்கு முன்னால் 49 பேர் பலி

காசாவின் நசீரத் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு தரப்பினரும் போரை துவங்கினர். கிட்டதட்ட 11 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த போரினால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகளும், பெண்களும்தான் அதிகம் இறந்துள்ளனர். இதனிடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.

இஸ்ரேலின் பயங்கரமான தாக்குதல்களால் காசா முழுவதும் உருக்குலைந்துள்ளது. போரால் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, நோய் தொற்று அபாயங்களும் ஏற்பட்டுள்ளன. இதனால் காசாவில் உள்ள 6.4 லட்சம் குழந்தைகளுக்காக, உலக சுகாதார அமைப்பு போலியோ சொட்டு முகாம் நடத்த முன்வந்தது.

அதற்காக இன்றுமுதல் 3 நாட்களுக்கு தினமும் 8 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்றைய தினமே பல இடங்களில் மாதிரி முகாம்கள் நடத்தப்பட்டன. சில குழந்தைகளுக்கு மருத்துவ அதிகாரிகள் போலியோ சொட்டு மருந்தும் வழங்கினர்.

தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த சொட்டு மருந்து முகாம்களுக்கு, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் சமூக நலப் பணியாளர்கள் தயாராக இருந்தனர். இச்சூழலில் காசாவில் இஸ்ரேல் படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த வான்வழித் தாக்குதலில், அகதிகள் முகாம்கள் அமைந்திருந்த பகுதிகளில் ஒன்றான நசீரத் பகுதியில் 19 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஒரே நாளிலில் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது.

https://thinakkural.lk/article/308836

  • கருத்துக்கள உறவுகள்

நத்தனியாகுவுக்கு எதிராக ரெல் அவிவில் ஊர்வலம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசா பகுதியில் 640,000 குழந்தைகளுக்கு தடுப்பூசி

ஐக்கிய நாடுகள் சபை, பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை காசா பகுதியில் 640,000 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலும் ஹமாஸும் தங்கள் 11 மாதப் போரில் சிறு இடைநிறுத்தம் செய்து பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்ல ஒப்புக்கொண்டுள்ளன.

உலக சுகாதார அமைப்பு கடந்த மாதம் ஒரு குழந்தை டைப் 2 போலியோ வைரஸால் பகுதியளவு முடங்கிவிட்டதை உறுதிப்படுத்தியது. கடந்த 25 ஆண்டுகளில் இது முதல் தடவை எனவும் சுட்டிகாட்டப்பட்டது.

மத்திய காசாவின் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிரச்சாரம், வரும் நாட்களில் மற்ற பகுதிகளுக்கும் நகரும். தொடர்ந்து மூன்று நாட்களில் குறைந்தது எட்டு மணிநேரம் போர் நிறுத்தப்படும்.

இடைநிறுத்தங்கள் நான்காவது நாளுக்கு நீட்டிக்க வேண்டியிருக்கும் என்றும், முதல் சுற்று தடுப்பூசிகள் இரண்டு வாரங்களுக்குள் எடுக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியது.

குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களால் அழைத்துச் செல்லப்பட்டு, மத்திய காஸா நகரமான டெய்ர் அல்-பாலாவில் உள்ள ஐ.நா-வால் நடத்தப்படும் மருத்துவ முகாமில் தடுப்பூசிகளை போட்டுக்கொள்வர்.

மருத்துவ ஊழியர்கள் சொட்டு மருந்து பெற்ற குழந்தைகளை விரல்களில் பேனாவைக் கொண்டு குறித்துக்கொண்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

https://thinakkural.lk/article/308742

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.