Jump to content

நாளை அமெரிக்க தூதரகம் மூடப்படும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

22 SEP, 2024 | 10:17 AM
image
 

நாளை 23ஆம் திகதி (திங்கட்கிழமை) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்படும்  என  அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/194415

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹி.....   அமெரிக்காவுக்கு குடியேற்ற விசா ஏற்க விரும்பவில்லைபோலும். 

3 hours ago, ஏராளன் said:

நாளை 23ஆம் திகதி (திங்கட்கிழமை) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்படும்  என  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை விசேட அறிவிப்பு. கடந்தகால அனுபவத்தினால்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஒற்றுமை மற்றும் ஒன்றாதல் என்பது உங்கள் போன்றவர்களால் இல்லாமல் ஆக்கப்பட்டு முடிவுக்கு வந்தாச்சு. அதன் கடைசி முயற்சிதான் முடிந்துள்ளது.  மற்றும்படி நீங்கள் சொல்வது போல் 1000 ஆண்டுகளுக்கு பின்னர் டமில் என்று ஒரு இனமும் இருக்க வாய்ப்பில்லை. அதையும் புலம்பெயர் தேசத்தில் அறுத்து விடாமல் நீங்கள் சாகப்போவதில்லை. 
    • இது கவுண்டர் செந்திலின் ""அண்ணே  நான் எட்டாங்கிளாஸ் பாஸ் அண்ணே. நீங்க SLSC  பெயில் அண்ணே,.....Pass பெருசா Fail பெருசா,..?" போல இருக்கிறது சிறியரின் வாதம்.  சொல்லுங்க  சிறியர்,... எனக்குத் தெரிந்த ஒருவர் பெரிய பந்தா காட்டிக்கொண்டு திரிவார். அவரைச் சந்தித்த ஒருவர் அவரிடம் "அண்ணா நீங்கள் பள்ளிக்கூடம் போகவே இல்லையாமே. மூன்றாம் வகுப்புத்தானே படித்தீர்களாம். உண்மையா என்று நையாண்டி செய்திருக்கிறார். அதற்கு அவர்,...,...இல்லை த் தம்பி நான் ஐந்தாம் வகுப்புவரைப் படித்தனான் " என்றிருக்கிறார்.  🤣
    • தேர்தல் தோல்வியின் எதிரொலி - மனைவியுடன் வெளியேறிய ரணில்   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து தனது பாரியார் சகிதம் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரும், அவரது பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் அவர்களின் தனிப்பட்ட வாசஸ்தலமான கொள்ளுப்பிட்டி ஐந்தாம் ஒழுங்கையில் உள்ள வீட்டுக்கு தற்போது குடிபெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.  அத்துடன் வெற்றி பெறும் வேட்பாளரிடம் அதிகாரத்தை சுமூகமாக கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி செயலாளருக்கு ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தில் இருந்தும் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட கோவைகள் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  https://ibctamil.com/article/ranil-wickremesinghe-leaves-official-residence-1726994260
    • அனுரவின் வெற்றி உங்கள் கருத்துக்கு  எதிராக இருக்கிறதே. அனுரவின் கட்சி வெல்லும் என கடந்த தேர்தல்களில் யாரும் நினைக்கவில்லை. தமிழரசுக்கட்சியிலுள்ள புல்லுருவிகளை களைந்தால் நமக்கு வெற்றி நிட்சயம். சளைக்க மாட்டோம். தமிழர் எல்லோரும் கடந்த காலத்தில் தமிழரசுக்கட்சிக்கு மட்டுமா வாக்களித்தனர்?
    • "இலங்கை தமிழ் தலைமையின் கூத்து" [முரண்படும் தமிழ்த் தலைமைகள்]   விவிலியத்தின் படி, வெள்ளப் பெருக்கிற்குப் பின் உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன. மனிதர்கள் கிழக்கிலிருந்து வந்து, சினயார் [Shinar]  சமவெளியில் குடியேறினர்.    அப்பொழுது அவர்கள், ″வாருங்கள், உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாத படி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி [build a city and a tower tall enough to reach heaven], நமது பெயரை நிலை நாட்டுவோம்″ என்றனர். மானிடர் கட்டிக் கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு ஆண்டவர் கீழே இறங்கி வந்தார்.  அப்பொழுது ஆண்டவர், ″இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்றனர். எனவே அவர்களின் இந்த செயலை நிறுத்த [அல்ல விட்டால் அவர்கள் எல்லோரும் சொர்க்கம் வந்து விடுவார்கள்?]  நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்து கொள்ள முடியாத படி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்″ என்றார். [ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஆண்டவனுக்கே பொறுக்கவில்லை ?, ஏன் ??, இதைத்தான் அரசும் சிறுபான்மை மக்களை ஆள கையாளும் தந்திரம் கூட இன்று, ஆண்டவன் போதித்த பாடம் அல்லவா ???]   அப்படியாயின் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள மாட்டார்கள். எனவே ஒன்றாக வேலை செய்ய முடியாது. அவர்கள் கட்டுவதைக் கைவிட்டு சிதறுண்டு போவார்கள் என்றார்.  ஆகவே அது ″பாபேல்″ [“தாறுமாறு” என்பது அதன் பொருள் / Babel] என்று வழங்கப் பட்டது. ஏனெனில் அங்கே ஆண்டவர் உலகெங்கும் வழங்கி வந்த மொழியில் குழப்பத்தை உண்டாக்கினார். அங்கிருந்து அவர்களை ஆண்டவர் உலகம் முழுவதிலும் சிதறுண்டு போகச் செய்தார். (Genesis 11:5–8  / தொடக்க நூல் 11:5-8).  இதில் இந்த ஆண்டவர் யார் ?? தனது முதலாவது வாக்கினை தமிழரசுக்கட்சியின் தீர்மானத்திற்கமைவாகவும்  இரண்டாவது வாக்கை பொது வேட்பாளருக்கு  மூன்றாவது வாக்கினை ரணில் விக்ரமசிங்கவிற்கும் அளித்துள்ளதாக தமிழரசுக்கட்சி (ITAK) கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) வாக்களித்தபின் கூத்தாடினார் ?? சுமந்திரனோ  இப்போதைய ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எம்மால் பரிசீலிக்கப்பட்ட மூன்று பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் எதுவும் எமது அடிப்படை அரசியல் கோரிக்கைகளை முழுமையாக உள்ளடக்கவில்லை என்பதைக் கருத்தில் கொள்கிறோம்.   இந்த விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் எமது தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற எமது அடிப்படைக் கோட்பாடுகளில் எந்தவித விட்டுக்கொடுப்பும் இல்லாத வகையில் ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனம் ஒப்பீட்டு ரீதியில் ஓரளவு திருப்தியாகக் காணப்படுகின்றது. அது என்ன ஒப்பீட்டு ரீதி? வெள்ளம் மூக்குக்கு மேலே கொஞ்சம் போனால் என்ன? கூட போனால் என்ன ? இரண்டும் ஒரே விளைவுதானே?? பிறகு ஏன் இந்த கூத்து ??? கஜேந்திரகுமார் தேர்தல் பதவியை கையில் வைத்துக்கொண்டு  தேர்தல் பகிஷ்கரிப்பு என்ற ஒரு கூத்து ?? முடிவில்  இன்று சிதைந்தது போனது  தான் மிச்சம் !! இதில் இந்த ஆண்டவர் யார் ??   இதில் இவர்களா ? இல்லை வேறு யாராவதா ?? ஒற்றுமை காணா இந்த தருணத்தில் பொது வேட்ப்பாளர் தேவையானதா ??? அல்லது வேறு நோக்கமா ????      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.