Jump to content

"இலங்கை தமிழ் தலைமையின் கூத்து" [முரண்படும் தமிழ்த் தலைமைகள்]


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"இலங்கை தமிழ் தலைமையின் கூத்து" [முரண்படும் தமிழ்த் தலைமைகள்]

 

விவிலியத்தின் படி, வெள்ளப் பெருக்கிற்குப் பின் உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன. மனிதர்கள் கிழக்கிலிருந்து வந்து, சினயார் [Shinar]  சமவெளியில் குடியேறினர். 

 

அப்பொழுது அவர்கள்,


″வாருங்கள், உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாத படி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி [build a city and a tower tall enough to reach heaven], நமது பெயரை நிலை நாட்டுவோம்″


என்றனர். மானிடர் கட்டிக் கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு ஆண்டவர் கீழே இறங்கி வந்தார். 


அப்பொழுது ஆண்டவர்,


″இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்றனர். எனவே அவர்களின் இந்த செயலை நிறுத்த [அல்ல விட்டால் அவர்கள் எல்லோரும் சொர்க்கம் வந்து விடுவார்கள்?]  நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்து கொள்ள முடியாத படி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்″


என்றார். [ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஆண்டவனுக்கே பொறுக்கவில்லை ?, ஏன் ??, இதைத்தான் அரசும் சிறுபான்மை மக்களை ஆள கையாளும் தந்திரம் கூட இன்று, ஆண்டவன் போதித்த பாடம் அல்லவா ???]  


அப்படியாயின் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள மாட்டார்கள். எனவே ஒன்றாக வேலை செய்ய முடியாது. அவர்கள் கட்டுவதைக் கைவிட்டு சிதறுண்டு போவார்கள் என்றார். 


ஆகவே அது ″பாபேல்″ [“தாறுமாறு” என்பது அதன் பொருள் / Babel] என்று வழங்கப் பட்டது. ஏனெனில் அங்கே ஆண்டவர் உலகெங்கும் வழங்கி வந்த மொழியில் குழப்பத்தை உண்டாக்கினார். அங்கிருந்து அவர்களை ஆண்டவர் உலகம் முழுவதிலும் சிதறுண்டு போகச் செய்தார். (Genesis 11:5–8  / தொடக்க நூல் 11:5-8). 


இதில் இந்த ஆண்டவர் யார் ??


தனது முதலாவது வாக்கினை தமிழரசுக்கட்சியின் தீர்மானத்திற்கமைவாகவும் 

இரண்டாவது வாக்கை பொது வேட்பாளருக்கு 

மூன்றாவது வாக்கினை ரணில் விக்ரமசிங்கவிற்கும் அளித்துள்ளதாக

தமிழரசுக்கட்சி (ITAK) கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) வாக்களித்தபின் கூத்தாடினார் ??


சுமந்திரனோ 


இப்போதைய ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எம்மால் பரிசீலிக்கப்பட்ட மூன்று பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் எதுவும் எமது அடிப்படை அரசியல் கோரிக்கைகளை முழுமையாக உள்ளடக்கவில்லை என்பதைக் கருத்தில் கொள்கிறோம்.

 

இந்த விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் எமது தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற எமது அடிப்படைக் கோட்பாடுகளில் எந்தவித விட்டுக்கொடுப்பும் இல்லாத வகையில் ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனம் ஒப்பீட்டு ரீதியில் ஓரளவு திருப்தியாகக் காணப்படுகின்றது.


அது என்ன ஒப்பீட்டு ரீதி?


வெள்ளம் மூக்குக்கு மேலே கொஞ்சம் போனால் என்ன? கூட போனால் என்ன ? இரண்டும் ஒரே விளைவுதானே?? பிறகு ஏன் இந்த கூத்து ???


கஜேந்திரகுமார் தேர்தல் பதவியை கையில் வைத்துக்கொண்டு 
தேர்தல் பகிஷ்கரிப்பு என்ற ஒரு கூத்து ??


முடிவில் 


இன்று சிதைந்தது போனது  தான் மிச்சம் !!


இதில் இந்த ஆண்டவர் யார் ??

 

இதில் இவர்களா ? இல்லை வேறு யாராவதா ??

ஒற்றுமை காணா இந்த தருணத்தில் பொது வேட்ப்பாளர் தேவையானதா ???

அல்லது வேறு நோக்கமா ???? 

 

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

460862727_10226311325192289_8893359889061951851_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=fCd1kNOmVRMQ7kNvgEapcPw&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=Au4vH1XP82jwXu__0A9nzPN&oh=00_AYCHRoVHxk6IarlopZSHnT-5srS6cSLGibSfy8l1NL_ysg&oe=66F5BFA8 460927166_10226311325072286_876620121368093055_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=7KL3Q0EdTjQQ7kNvgGQr3BI&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=Au4vH1XP82jwXu__0A9nzPN&oh=00_AYDp28MsNG4Av8vA5LDmF3tj1nRy4y55sZDLZEhqwlFeBw&oe=66F5BAB2 

460960383_10226311325392294_4506421656385152419_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=hOUIvT9qX5EQ7kNvgF6_Q-u&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=Au4vH1XP82jwXu__0A9nzPN&oh=00_AYALmY_3t9g8RJ5joriM58Uu0IFq23171YXm2OADb3N-OA&oe=66F5BEFF


 

Edited by kandiah Thillaivinayagalingam
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சன்டைக்காரன் காலில் விழுவது நல்லது என்று முடிவெடுத்த ஈழ தமிழர்களுக்கு எனது ராயல் சல்யூட். இந்தியாவின் அழுகிய பின்மூச்சை இனியும் ஈழ தமிழர்கள் மணந்து கொண்டு திரிய தயாரில்லை என்பதை பதிவுசெய்திருக்கின்றனர். பாராளுமன்ற தேர்தலில் கூத்தமைப்பானுகள் இதே போன்று அடிவாங்கும் அந்த நன்நாள் எனது பொன் நாள்  
    • அத்துடன் வெறியூட்டும் சக்தி வாய்ந்த தமிழ் இனவெறி பிரசாரமும் அரியநேத்திரனுக்கு மேற்கொள்ளபட்டது
    • ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் : ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு புதிய இணைப்பு ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியான பின்னரும் மக்கள் அமைதியாகச் செயற்படுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை தேர்தலின் போது அமைதியான முறையில் செயற்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த ஜனாதிபதி தேர்தலில் பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லையெனவும் இது திருப்திகரமாகவுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.     இரண்டாம் இணைப்பு 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்தை எட்டாத நிலையில் இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். விருப்பு வாக்கு தேர்தவுக்காக அநுர குமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச தவிர ஏனைய அனைத்து வேட்பாளர்களும் நீக்கப்பட்டனர். நாட்டின் தேர்தல் விதிகளின்படி, வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதியாக வெற்றிபெற மொத்த வாக்குகளில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும்.இந்த நிலையில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இரண்டாவது விருப்பு தேர்விற்கு நகர்ந்துள்ளது. முன்னிலை வகிக்கும் இரண்டு வேட்பாளர்கள் எந்தவொரு வேட்பாளரும் பெரும்பான்மையை பெறாத நிலையில் முன்னிலை வகிக்கும் முதல் இரண்டு வேட்பாளர்களான அநுர மற்றும் சஜித்தை தவிர்த்து ஏனைய வேட்பாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் நீக்கப்பட்ட வேட்பாளர்களின் வாக்குச்சீட்டிலிருந்து இரண்டாவது விருப்பத்தேர்வுகள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு முதல் இரு வேட்பாளர்களுக்கும் வழங்கப்படும். இரண்டாம் விருப்பு வாக்களிப்பில் முன் அனுபவம் இல்லாவிட்டாலும், தேர்தல் அலுவலர்கள் இந்த செயன்முறையை கையாள்வதில் முழுமையாக பயிற்சி பெற்றுள்ளதாக ரத்நாயக்க பொதுமக்களுக்கு உறுதியளித்தார். மேலும் இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணும் பட்சத்தில், மாவட்டம் ரீதியாக முடிவுகள் அறிவிக்கப்படும். இதனால் இறுதி முடிவுகள் இன்று பிற்பகல் அல்லது நாளை முற்பகல் வரை தாமதமாகலாம் என்றும் கூறப்படுகிறது. முதலாம் இணைப்பு  ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணியை தேர்தல் ஆணையகம் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தோடு, வெற்றியாளரின் அறிவிப்பு இன்று (22) பிற்பகல் அல்லது நாளை (23) முற்பகல் வரை தாமதமாகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையேயான வாக்கு எண்ணிக்கை இடைவெளி குறைவடைந்து வருகிறது. ஜனாதிபதித் தேர்தல் இந்தநிலையில், வாக்குகள் 50.1 சதவீதத்தை எட்டாது என்று எதிர்பார்க்கப்படுவதால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை எண்ணும் பணி நடைபெற வேண்டும். எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார வெற்றி பெற்றுள்ளார் என்று தேர்தல் ஆணையகத் தரப்புக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/srilanka-presidential-election-final-result-update-1726989972#google_vignette
    • கூத்தமைப்பான் கைகாட்டியதால் முக்கியமாக கருமாந்திரம் கை காட்டியதால்  என்னுடைய குடும்பத்தில் மட்டும் அண்ணளவாக 30 வாக்குகள் அனுராவிற்கு விழுந்திருக்கிறது 
    • 65 வீதத்திற்கும் மேல் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட பொது வேட்பாளரை மக்கள் திரளாக ஒன்றிணைந்து ஆதரவு கொடுத்துள்ளனர் என்று சொல்வதன் மூலம் நீங்கள் எல்லாம் ஒரு காலத்திலும் திருந்தப் போவதில்லை என்பதையே எமக்கு மீண்டும் நிரூபிக்கின்றீர்கள். போரும், அழிவும், குண்டு மழையும், இடப்பெயர் வாழ்வும், பொருளாதார சீரழிவும் காணாமாக்கபடுதலும் கூட தமிழ் மக்களை தமிழ் தேசிய அரசியலில் இருந்து விலகிப் போகச் செய்யவில்லை. ஆனால் உங்களின் தூர நோக்கற்ற, தம் இருப்பை மட்டும் பேணுகின்ற வெற்று கோச அரசியல் அவர்களை தமிழ் தேசிய அரசியலில் இருந்து விலத்தி செல்ல வைத்துள்ளது. சிங்களம்  செய்ய முற்பட்டு செய்ய முடியாமல் போனதை 15 வருடங்களில் தமிழ் அரசியல் கட்சிகள செய்து முடித்து விட்டன.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.