Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
29 SEP, 2024 | 09:57 AM
image
 

பெங்களூரு: மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை பெற்றதாக   இந்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்ய பெங்களூரு போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பெங்களூருவில் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜன அதிகார சங்கர்ஷ சங்கத்தின் துணைத் தலைவர் ஆதர்ஷ் அய்யர் கடந்த மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ''மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை வைத்து தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை பெற்றுள்ளனர். தேர்தல் பத்திர நடைமுறையை கொண்டு வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கோரி இருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ''இந்த புகார் தொடர்பாகஇ மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூருவில் உள்ள திலக் நகர் போலீஸார் உடனடியாக‌ வழக்கு பதிவு செய்ய வேண்டும்'' எனக்கூறி இவ்வ‌ழக்கின் அடுத்த கட்ட விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

குமாரசாமி எடியூரப்பாவிடம் விசாரணை: கடந்த 2006-ம் ஆண்டு கர்நாடகாவில் மஜத‍ - பாஜக‌ கூட்டணி ஆட்சி நடைபெற்றது அப்போது பெங்களூரு நகர வளர்ச்சி ஆணையம் தனியார் நிறுவனத்திடம் இருந்து 1.11 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. இதனை அப்போது முதல்வராக இருந்த குமாரசாமியும் துணை முதல்வராக இருந்த எடியூரப்பாவும் விடுவித்து உத்தரவிட்டனர்.

இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த இவ்வழக்கை லோக் ஆயுக்தா போலீஸார் மீண்டும் விசாரிக்க முடிவெடுத்தனர். இதையடுத்து மத்திய அமைச்சர் குமாரசாமி முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோரிடம் நேற்று விசாரணை நடத்தினர்.

https://www.virakesari.lk/article/195024

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் பத்திரம் தொடர்பாக நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு - என்ன காரணம்?

நிர்மலா சீதாராமன், தேர்தல் பத்திரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (கோப்புபுப் படம்) கட்டுரை தகவல்
  • எழுதியவர், இம்ரான் குரேஷி
  • பதவி, பிபிசி ஹிந்திக்காக, பெங்களூருவில் இருந்து
  • 28 செப்டெம்பர் 2024
    புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர்

தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அமலாக்க இயக்குநரகம் மீது பெங்களூரு சிறப்புப் பிரதிநிதிகள் நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் குற்றவியல் சதி வழக்கைப் பதிவு செய்ய பெங்களூருவில் உள்ள சிறப்பு பிரதிநிதிகளுக்காக நியமிக்கப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களதிகார சங்கர்ஷ பரிஷத் எனும் (ஜேஎஸ்பி) அமைப்பின் இணைத் தலைவர் ஆதர்ஷ் ஐயர் தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த மார்ச் மாதம் உள்ளூர் காவல் நிலையத்தில் ஆதர்ஷ் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அவர் நீதிமன்றத்தை நாடினார்.

ஜேஎஸ்பி என்பது கல்வி உரிமைச் சட்டம் மற்றும் பிற விவகாரங்கள் தொடர்பான பிரச்னைகளுக்குக் குரல் எழுப்பி வரும் ஓர் அமைப்பு.

 

இந்த வழக்கில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜேந்திரா ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாநில பாஜக முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

ஜேஎஸ்பி வழக்கறிஞர் எஸ்.பாலன் பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், "நிர்மலா சீதாராமன், அமலாக்க இயக்குநரகம் ஆகியவை இந்த வழக்கில் வழிநடத்தியவர்கள் (facilitators), நட்டா மற்றும் விஜேந்திரா ஆகியோர் இதில் குற்றங்களை ஊக்குவித்தவர்கள் (abettors)."

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகாரில், “குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரின் (நிர்மலா சீதாராமன்) ரகசிய உதவியுடனும், குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது நபரின் (அமலாக்க இயக்குநரகம்) ஆதரவுடனும் மூன்றாம் (நட்டா) மற்றும் நான்காம் நபரின் (விஜேந்திரா) நலனுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. மூன்றாம் நபர் (நட்டா) தேசியளவிலும், நான்காம் நபர் கர்நாடகா மாநில அளவிலும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

 

புகாரில் கூறப்பட்டிருப்பது என்ன?

புகாரில், “குற்றம் சாட்டப்பட்ட முதல் நபர் (நிர்மலா சீதாராமன்), பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள், அவற்றின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு ரெய்டுகள், பறிமுதல்கள் மற்றும் கைதுகளை நடத்துவதற்காக குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது நபரின் (அமலாக்க இயக்குநரகம்) சேவைகளைப் பயன்படுத்திக் கொண்டார்.

குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரின் அழுத்தத்தால் இரண்டாம் நபர் மேற்கொண்ட ரெய்டுகளுக்கு பயந்ததால், பல கார்ப்பரேட் நிறுவனங்களும் பணக்காரர்களும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது," என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இதன்மூலம் 8,000 கோடி வசூலித்திருப்பதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

அதோடு, ஏப்ரல் 2019, ஆகஸ்ட் 2022 மற்றும் நவம்பர் 2023க்கு இடையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 230.15 கோடி வழங்கிய அலுமினியம் மற்றும் தாமிர நிறுவனங்களான ஸ்டெர்லைட், வேதாந்தா ஆகியவற்றின் உதாரணத்தை இந்தப் புகார் குறிப்பிடுகிறது.

 
ஜேபி நட்டா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பாஜக தலைவர் ஜேபி நட்டா

அலுமினியம் மற்றும் தாமிர நிறுவனமான, மெசர்ஸ் ஸ்டெர்லைட் மற்றும் மெசர்ஸ் வேதாந்தா நிறுவனம், ஏப்ரல் 2019, ஆகஸ்ட் 2022 மற்றும் நவம்பர் 2023க்கு இடையில் ரூ. 230.15 கோடி செலுத்தியுள்ளது.

மெசர்ஸ் அரபிந்தோ ஃபார்மா குழும நிறுவனங்கள் 5 ஜனவரி 2023, 2 ஜூலை 2022, 15 நவம்பர் 2022 மற்றும் 8 நவம்பர் 2023 ஆகிய தேதிகளுக்கு இடையே ரூ.49.5 கோடி வழங்கியுள்ளது. இந்த உதாரணங்களை புகாரில் மேற்கோள் காட்டியுள்ளனர்.

வழக்கறிஞர் பாலன் கூறுகையில், ''எங்கள் கருத்தை நிரூபிக்கும் வகையில் ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளோம். நாங்கள் நீண்ட காலமாக முன்வைத்த வாதங்களை மீண்டும் முன்வைத்தோம். எங்களின் வழக்கு சுமார் பத்து முறை ஒத்தி வைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிடுவதற்கு முன்பு, போதுமான ஆதரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதை (prima facie case) நீதிமன்றம் ஒப்புக்கொண்டது," என்று தெரிவித்தார்.

இந்தப் புகார் CrPC-இன் பிரிவு 156 (3) இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவின் கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் (XLII) நீதிமன்றம், அபராதம் அல்லது அபராதம் இல்லாமல் ஏழு ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன் கூடிய குற்றங்களுக்காக நியமிக்கப்பட்ட ஒரு நீதிமன்றம் ஆகும்.

இந்தக் குற்றங்களுக்காக, ஐபிசி பிரிவுகள் 384 (பணம் பறித்தல்), 120B (குற்றச் சதி) மற்றும் ஐபிசி பிரிவு 34 (பொது நோக்கத்திற்காகப் பலரின் ஒருங்கிணைந்த நடவடிக்கை) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வரவில்லை. அவர் உஸ்பெகிஸ்தானுக்கு சென்றிருப்பதாகவும், இந்த நேரத்தில் அவரைத் தொடர்புகொள்வது கடினம் என்றும் அவருடைய அலுவலகத்தில் கூறப்பட்டது. அவர்களின் பதில் வந்ததும் இந்தக் கட்டுரை புதுப்பிக்கப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.