Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட ஏழு நபர்களுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்குவதற்கு சட்ட நடவடிக்கை எடுக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) தீர்மானித்துள்ளது.

இதன்படி, இந்த சந்தேக நபர்கள் அவர்களது சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் காப்புறுதிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஆணைக்குழு வட்டாரங்கள்

இது தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழு வட்டாரங்கள் கூறுகையில், இந்த ஏழு நபர்களிடம் அவர்கள் சாதாரண சம்பளத்தில் வாங்க முடியாத அளவுக்கு அதிக சொத்துக்களை எப்படி சம்பாதித்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடக்கப்படவுள்ள அரசியல்வாதிகள் உட்பட எழுவரின் சொத்துக்கள் | Seven Politicos Officers Face Asset Freeze

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் சிலர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மூலம் இவ்வளவு பெரிய சொத்துக்களை பெற்று வந்ததாக கூறுவது முற்றிலும் தவறானது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பல அரசியல்வாதிகள், விசாரணைகளுக்கு உதவும் வகையில் அறிக்கைகளை வழங்குவதற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முன்பாக வருவதற்கு தயக்கம் காட்டுவதாக அறியமுடிகிறது.

கடந்த அரசாங்கத்தின் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் சில சொத்துக்களை எவ்வாறு சம்பாதித்தார்கள் என்பதை விளக்க முடியாமல் அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.

முன்னாள் அமைச்சரின் சாரதி

கறுவாத் தோட்டத்தில் சொகுசு வீடு மற்றும் நிலம் வாங்கியதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சரின் சாரதி ஒருவரைப் பற்றியும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முடக்கப்படவுள்ள அரசியல்வாதிகள் உட்பட எழுவரின் சொத்துக்கள் | Seven Politicos Officers Face Asset Freeze

இதேவேளை, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரின் 16 வங்கிக் கணக்குகள் மற்றும் 5 காப்புறுதிகளை முடக்கும் உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த வாரம் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் தனது நெருங்கிய சகாக்களின் பெயர்களில் சம்பாதித்ததாகக் கூறப்படும் ஏராளமான சொத்துக்கள் குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. 

https://ibctamil.com/article/seven-politicos-officers-face-asset-freeze-1728157669

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.