Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இ.தொ.க உப தலைவர் பதவி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் பாரத் அருள்சாமி விலகல்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் பாரத் அருள்சாமி பதவி விலகும் கடிதத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு இன்று (07) மாலை அனுப்பி வைத்துள்ளார்.

மக்களினதும், கட்சி அங்கத்தவர்களினதும் எதிர்பார்ப்புகளை மீறி எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்த நாட்டினை வங்குரோத்து நிலைக்கு அடைய செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தங்களது சுயநல அரசியலுக்காக கண்டி மக்களை அடகு வைத்த உறுப்பினர்களோடு இணைந்து தாம் போட்டியிட தயார் இல்லை எனவும், கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாக மக்களின் எதிர்பார்ப்புக்கு அப்பால் தன்னால் செயல்பட இயலாது என்பதன் காரணமாக இந்த முடிவை தான் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமன்றி 2013 ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் மாகாண சபை உறுப்புரிமையை பெற்றுக்கொள்வதற்காக தனது தந்தையும், தானும் அயராது உழைத்தது மாத்திரமன்றி மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானினால் மாவட்ட பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை கடந்த தேர்தலில் இ.தொ.காவிற்கு ஆதரவாக வெறும் மூன்று வாரங்களில் ஏரதாள 25 ஆயிரம் வாக்குகளை பெற்று மக்களின் நம்பிக்கையை வென்றதாகவும், இம்மாவட்ட மக்களின் நலனுக்காக அரசாங்கத்தின் ஊடாகவும், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாகவும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்ததோடு, மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒரு போதும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுடனும், அதன் தலைமையை விமர்சித்த தலைமைகளோடு சேர்ந்து தான் தேர்தல் கேட்க தயார் இல்லை எனவும் தெரிவித்தே இப்பதவி விலகல் கடிதத்தை அவர் அனுப்பி வைத்துள்ளார்.

மேலும், மக்களின் நலனுக்காகவே கட்சி தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமே தவிர சில தனி நபர்களின் வளர்ச்சிக்காக மாத்திரமே கட்சி முடிவுகளை எடுக்க கூடாது என்பதினையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

கட்சியின் அடிப்படை உறுப்பினராக தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றியுள்ளதுடன், கட்சியின் இளைஞர் அணி உருவாக்கம் மற்றும் கட்சியினுடைய சர்வதேச தொடர்புகள், கண்டியில் இ.தொ.காவின் வளர்ச்சியில் தனது அலப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் அதற்கு துணை நின்ற கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அனைத்து நல்லுல்லங்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://www.samakalam.com/இ-தொ-க-உப-தலைவர்-பதவி-கட்சி/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனோவுடன் இணைந்தார் பாரத் அருள்சாமி

Oruvan

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளராகவும், உப தலைவராகவும் செயற்பட்ட பாரத் அருள்சாமி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் இயங்கும் ஜனநாயக மக்கள் முன்னணியில் இணைந்துள்ளார்.

பாரத் அருள்சாமி மனித வள அறக்கட்டளையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார், மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த எஸ். அருள்சாமியின் மகனும் ஆவார்.

ஜனநாயக மக்கள் முன்னணியில் இணைந்துள்ள பாரத் அருள்சாமி, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கீழ் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைக் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக பாரத் அருள்சாம் நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.

கட்சியின் பொது செயலாளருக்கு பதவி விலகல் அனுப்பியிருந்தார்.

இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்குள் அண்மைய நாட்களாக உட்கட்சிபூசல்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான பின்னணியிலேயே பாரத் அருள்சாமியும் பதவி விலகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 

https://oruvan.com/sri-lanka/2024/10/08/bharat-arulsamy-joined-mano-ganesans-party

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்குள் அண்மைய நாட்களாக உட்கட்சிபூசல்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழரசு கட்சிக்குள்தான் உட்பூசல் என்றால்….
மலையக தமிழ் கட்சிகளுக்குள்ளும் உட் பூசலா… ?

எனக்கென்னவோ  சி.ஐ.ஏ., மொசாட், றோ…. போன்ற வெளிநாட்டு புலநாய்வு அமைப்பினரின் சதி வேலையாக இருக்குமோ என்று சந்தேகமாக கிடக்குது. 😁 😂 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.