Jump to content

காதலியுடன் முரண்பாட்டதனால் ஆத்திரமடைந்த காதலன் செய்த அட்டகாசம்; மானிப்பாயில் சம்பவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

FI.jpg

காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக காதலியின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சேதமாக்கப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினில் நேற்று திங்கட்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெண்ணின் மோட்டார் சைக்கிளை தீ மூட்டியதுடன், முச்சக்கர வண்டி மற்றும் பட்டா வாகனம் என்பவற்றின் மீதும் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, வீட்டில் வசிக்கும் யுவதிக்கு இளைஞன் ஒருவருக்கும் காதல் தொடர்பு இருந்ததாகவும் தற்போது இருவரும் முரண்பட்டு பிரிந்து உள்ளமையால் காதலனே தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து சந்தேக நபரான காதலனை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

FI2.jpg

https://thinakkural.lk/article/310776

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.