Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அழுக்கான ஆடையை எறிந்துவிட்டு ஜனநாயக ஆடையை அணிந்துகொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டில் உள்ள ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஆனால், மக்கள் விடுதலை முன்னணி ஜனநாயக ஆடை அணிந்தாலும் அந்த ஆடை இன்னும் அவர்களின் உடலுக்கு பொருத்தம் இல்லாமல் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. அதேநேரம் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அறிக்கை தயாரித்த உதய செனவிரத்ன குழுவின் அறிக்கை பொய் என பிரதமர் ஹரிணி உறுதிப்படுத்த தவறினால் சம்பிரதாய பிரகாரம் பிரதமர் பதவி விலக வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும்  வேட்பாளர்களை ஆதரித்து கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரணில் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

ஒரு ஆசனத்துடன் பாராளுமன்றத்துக்கு வந்து நாட்டின் சவால்களை ஏற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் அந்த சவால்களை வெற்றிகொள்ள உதவியாக இருந்தவர்களே இன்று காஸ் சிலிண்டரில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 

நாட்டில் இந்த பிரச்சினை ஏற்பட்டிருப்பது அரசாங்கத்தினால் அல்ல, ஊடகங்களால் ஆகும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருக்கிறார். பழைய அடிமைத்துவத்தை கைவிட முடியாத சில ஊடகங்கள் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். 

அழுக்கான ஆடையை எறிந்துவிட்டு ஜனநாயக  ஆடையை அணிந்துகொள்ளுமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவிக்கிறார்.

இந்த கதையை சொல்வது யார்? அழுக்கான ஆடையை கைவிட்டு ஜனநாயகத்துக்கு வந்த மக்கள் விடுதலை முன்னணி ஆகும். ஆரம்பமாக பணம் அச்சிட்டதாக தெரிவித்து, பின்னர் பணம் அச்சிடவில்லை என ஊடகங்கள் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவிக்கிறார். 

பணம் அச்சிட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கும்போது பணம் அச்சிடவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

திரவத்தன்மையை பாதுகாத்துக்கொள்வதற்காக பணம் அச்சிட்டதாக மத்திய வங்கி தெரிவிக்கிறது. வங்கி திரவத்தன்மை தொடர்பில் அவர்களுக்கு தெரியாது என்பதற்கு ஊடகங்களுக்கு எவ்வாறு குற்றம் தெரிவிக்க முடியும். 

பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கூட இந்த திரவத்தன்மை தொடர்பில் பேசியிருந்தார். அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள் 3 பேருக்கும் அது தெரியாது. இவர்கள் அனுபவமில்லாதவர்கள். அதனால்தான் அனுபவம் உள்ளவர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என தெரிவிக்கிறேன். 

இவர்கள் ஜனநாயக ஆடை அணிந்தாலும் இன்னும் அது அவர்களுக்கு பொருத்தம் இல்லாமல் இருக்கிறது.

அதேபோன்று பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்துவதாக அச்சுறுத்துகின்றனர். அவர்களால் எப்படி பாராளுமன்றத்தை துப்புரவுபடுத்த முடியும்?  பாராளுமன்றம் ஊழல் நிறைந்தது என நீங்கள் தெரிவித்ததற்கு நாட்டு மக்களில் நூற்றுக்கு 58 வீதமானவர்கள் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கின்றனர்.  யாருக்காவது ஊழல் குற்றச்சாட்டு இருக்குமானால் மக்கள் அவர்களை தேர்தலில் நிராகரிப்பார்கள். 

அத்துடன் மின்சார கட்டணம், எரிபொருள் கட்டணத்தை குறைத்ததாக தெரிவிக்கிறார்கள். நாங்கள் அறிமுகப்படுத்திய விலை சூத்திரத்தின் பிரகாரம், இந்த வருடம் இறுதி வரை மின்சாரம் மற்றும் எரிபொருள் கட்டணம் குறையவேண்டும். ஆனால், அவர்கள் தெரிவித்த பிரகாரம் தற்போது இந்த விலைகள் குறைந்திருக்கிறதா?

அதேபோன்று நாட்டின் அரச நிர்வாகத்துக்கு பொறுப்பான அமைச்சராக இருப்பவர் பிரதமராகும். அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட உதய செனவிரத்ன குழுவின் அறிக்கை ஒன்று இல்லை என அவர் தெரிவிக்கிறார். பல அதிகாரிகள் இதில் கைச்சாத்திட்டுள்ளனர். அவர்களின் கையெழுத்தை திருட்டுத்தனமாக வைத்ததா என அந்த அதிகாரிகளிடம் பிரதமர் கேட்கவேண்டும்.  பிரதமர் அல்லது அமைச்சர் பொய் சொன்னால் பதவியை இராஜினாமா செய்யும் சம்பிரதாயம் இருக்கிறது. அவ்வாறு என்றால் பிரதமர்  உதய செனவிரத்ன குழுவின் அறிக்கை தொடர்பில் அதிகாரிகளிடம் கேட்டு, அவர் தெரிவித்தது பொய் என்றால் பதவி விலகவேண்டும்.

இவர்கள் என்னதான் சத்தம் போட்டாலும் அரசியல் அமைப்பு தொடர்பில் இவர்களுக்கு தெரியாது. அரச ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிக்கும்போது அது போதாது 20ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என  ஆரம்பத்தில் தெரிவித்தது திசைகாட்டியாகும். அதன் பிரகாரம் உதய செனவிரத்ன குழுவை நியமித்து இரண்டு சந்தர்ப்பங்களில் 20ஆயிரம் அடிப்படையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது. அதற்காக நாங்கள் நிதி ஒதிக்கி இருக்கிறோம். ஆனால் அந்த பணத்தை வழங்குவதற்கு அவர்கள் இன்னும் இணங்கவில்லை. அரச ஊழிர்களுக்கு இந்த அதிகரிக்கப்பட்ட பணத்தை வழங்க முடியுமா முடியாதா என அரசாங்கம் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். 

அதனால் அரசாங்கம் இந்த அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்கும் வரை இவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என நான் அரச ஊழியர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/197652

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

அரசாங்கம் இந்த அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்கும் வரை இவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என நான் அரச ஊழியர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

எனக்கு வாக்கு அளியுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறார். அப்போ அவர் அதிகரித்த சம்பளத்தை அளிக்கும்வரை  தேர்தலை தள்ளிப்போடலாமா? இவர் ஆட்சிக்காலத்தில் கொடுத்த உறுதி மொழிகளை நிறைவேற்றினாரா?  சுதந்திர தினத்துக்கு முன்  தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என்று அறிவித்தாரே, அதற்கு என்னாயிற்று? அனுராவின் வாயை கிளறி அவரது வாக்குகளை குறைக்கவும், அதேநேரம் தமது வாக்கு வங்கியை உயர்த்தவும் பலர் முயற்சிக்கின்றனர். ஆனால் அவரும் தேர்தல் முடியும்வரை எந்த விளக்கமும் பதிலும் அளிப்பதாக இல்லை. அதன் பின் இவர்கள் எதுவும் கேட்க போவதில்லை  ஆகவே கேட்க வேண்டியவற்றையெல்லாம் இப்போதே கேட்டு விடட்டும். பதில் செயலில் கிடைக்கும், ஆட்சி முழுமையாக அவர் கையில் வந்தபின்.  அதுசரி....  ஜனாதிபதியாக எத்தனையோ பேர் வந்தார்கள், போனார்கள், ரணிலார் அரசை கவிழ்த்தார்கள், அவர்கள் மேற்கூட இவர் கோபப்பட்டதில்லை, ஏன் அனுரா மீது இவ்வளவு கடுப்பு, சாபம்? ஒருவேளை தமிழருக்கு ஏதாவது நன்மை செய்து விடுவாரோ என்ற பயமா? அரசியல்வாதிகளுக்கு கஸ்ரகாலந்தான். ஆனாலும் பின்னாளில் இந்த திட்டங்களை  கைவிடும் நிலையும் வரலாம். இப்போ தனது அரசியல் எதிரிகளை தள்ளி வைப்பதற்கும் மக்களின் ஆதரவை பெறுவதற்கும் அதிரடியாக மேற்கொள்ளப்படும் திட்டங்கள், பின்னாளில் தாமும் அதனால் பாதிக்கப்படுவோம்  எனும்போது மாற்றப்படலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.