Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான சமத்துவம் எது- பா.உதயன் 

ரோமானியா ஒரே இரவில் கட்டப்படவில்லை Rome was not built in a day, அதே போல் மாற்றம் என்பது ஒரே இரவில் செய்யப்பட முடியாதது. இவை பழையன கழிந்து கடந்து போக பல ஆண்டுகளாகலாம் அத்தோடு மிகவும் சவால் நிறைந்தது. பெரும்பான்மை சமூகம் எதிர் கொள்ளும் பிரச்சினைகளின் இருந்து ஏனைய தேசிய இனப் பிரசினையை எப்படி கையாளப் போகிறது புதிய அரசு என்பதனை இணைக்கும் புள்ளியில் தான் இதன் மாற்றத்திற்கான வெற்றி உள்ளது என்ற யதார்த்த உண்மையை முதலில் உணர வேண்டும். இந்த சவால்களை எதிர் கொள்ள அரசு மாத்திரம் பலமாக இருந்தால் மட்டும் போதாது எதிர் கட்சி ஒன்றும் பலமாக இருக்க வேண்டும். இதுவே ஜனநாயகத்துக்குமான பண்புமாகும். ஈழத் தமிழர் பிரச்சினையை நாம் சரியாக கையாளுவதற்கு எமக்கும் பலம் வாய்ந்த ஒரு தமிழர் கூட்டுத் தெரிவும் மிக அவசியமானதாகும்.

எவ்வளவு தான் எம் தமிழர்களிடையே பிரிவுகள் இருந்தாலும் எதிர் காலம் எப்படியோ நல்லதாக அமையும் என்ற நம்பிக்கையோடு தமிழர்கள் தேசிய ஒருமைப்பாட்டோடு கூடிய தமிழ் கட்சிகளுக்கு தான் வாக்களிக்க வேண்டும். சிங்களக் கட்சிகளுக்கோ அல்லது அவர்களோடு சேர்ந்து போட்டி போடும் கட்சிகளுக்கோ வாக்களிக்கலாமா என்று நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழர் வாக்குகளை பிரித்து உங்கள் பலத்தை சிதறடிக்காமல் எதிர்கால உங்கள் இருப்பு நலனை வேண்டி சரியாக சிந்தித்து வாக்களியுங்கள். அனுபவமும் ஆற்றலும் இராஜதந்திரமும் மொழி அறிவும் முக்கியம் என்பதையும் நாம் உணர வேண்டும். நாலு சுவருக்குள் நாம் பேசிக் கொண்டிருக்காமல் வெளி உலகத்துக்கும் நாம் பேசுவது தெரிய வேண்டும். 

தமிழர் பலமான கூட்டோடு ஒரு அணியை படித்த இளம் சமுதாயத்திடம் இருந்தும் அனுபவம் ஆற்றல் தலைமைப் பண்பு கொண்டவர்களில் இருந்தும் எதிர் காலத்தில் கட்டும் வரையிலாவது எவ்வளவு பிரச்சினை இருப்பினும் இன்று நாம் வீடு, சங்கு, சயிக்கிள், ஜனநாயக போராளிகள் எதுகும் வேண்டாம் என்றால் வேறு என்ன தெரிவு எமக்கு, பின் யாருக்கு வாக்குப் போட்டு பாராளுமன்றம் அனுப்பி வைக்கப் போகிறோம். புதிதாக அடிக்கும் அலைகளோடு நாமும் சேர்ந்து போனால் நமது நலன்களும் எங்கள் தியாகங்களும் அர்பணிப்புக்களும் பாதுகாக்காப்படுமா என்று நாம் சிந்திக்க வேண்டும். எத்தனை உயிர்களை எத்தனை தியாகங்கள் எத்தனை இரத்தங்களை இந்த மண்ணோடு மண்ணாய் விதைத்திருக்கிறோம் என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். எமது விடுதலைக்காய் நாம் கொடுத்த விலை அதிகம் என்பதை சிந்தியுங்கள். உங்கள் நேசத்திற்கும் பாசதிற்கும் உரிய பிள்ளைகள் இந்த மண்ணில் தான் புதைந்து கிடக்கிறார்கள். உயிர்களையே தந்து சென்றார்கள் உங்கள் உன்னதமான விடுதலைக்கே. 

ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட பல தேசிய இனங்கள் தம் அடையாளம் தொலையாமல் இருந்து போரடியதனால் தான் இன்று விடுதலை அடைந்த வரலாற்றை உலகம் கற்றுத் தந்திருக்கிறது. தமிழர் பிரச்சினைக்கான நியாயமான தீர்வை முன் வைத்தால் எந்தப் பெரும்பான்மை சிங்களக் கட்சிகளுடனும் அனைவரினதும் அரசியல் பொருளாதார நலன் கருதி நாம் இணைந்த அரசியல் செய்ய முடியும் அது வரை நாம் நாமாகவே பலமாக இருந்து நமக்காக போராட வேண்டும். நாங்களும் நீங்களும் ஒன்று எனக் கூறுவது சரியான சமத்துவம் ஆகாது இந்தக் கூற்றானது எங்களோடு அதாவது பெரும் பான்மை இனத்தோடு சேர்ந்து வாருங்கள் என்று கூறிக் கொள்வதன் மூலம் இத்தனை காலமும் எந்த உரிமை கேட்டு தமிழர்கள் போராடினார்களோ அவற்றை எல்லாம் அடியோடு நிராகரிற்பதற்கு சமமாகும் இதை தமிழர் தேசம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். எமது அடையாளம், எமது மொழி, எமது பாரம்பரிய பிரதேசம், அத்தோடு நாம் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதையும் நாம் நாங்களாக இருக்க வேண்டும் எங்கள் இருப்பை பாதுகாக்க வேண்டும் என்று மறந்து விடாமல் இவை அழிந்து விடாமல் ஒரே சக்தியாக பயணியுங்கள்.

பெளத்தர்களின் அடையாளம் ஆக்கப்பட்டு இந்த நாடு பெளத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் ஏனைய இனங்கள் இரண்டாம் தர பிரஜைகள் போல் ஒரே நாடு ஒரே தேசம் ஒரு நாடு ஒரு சட்டம் என்று இன்னும் ஒரு இனத்தின் உரிமையும் விடுதலையும் மறுக்கப்பட்டு அவர்கள் விருப்புகள் ஏற்றுக் கொள்ளாமையினால் தான் இத்தனை மானிடப் பேரழிவுகளை இலங்கை சந்தித்தது. மாற்றம் என்பது ஏழைகளுக்கு உணவு கொடுப்பதில் இருந்தும் விழுந்து கிடப்பவனை தூக்கி விடுவதில் இருந்து ஆரம்பிப்பதே மானிடம் இதுவே சமத்தும் இதுவே மாற்றம். மாக்ஸ் சொன்ன மகத்தான தத்துவம் இதுதான். நாம் மாற்றத்தை நாடினால், அரசியல் விவகாரங்களை பற்றி மதத் தலைவர்களுடன் எப்போதும் சந்தித்து பேசுவது போன்ற நிகழ்வுகளும் நிறுத்தப்பட வேண்டும். மதத்தை தனிப்பட்ட வாழ்க்கையாக வாழ அனுமதித்து, தனி மனித உரிமையாக அரசியலில் இருந்து விடுதலையாகி இருக்க வேண்டும். 

அதே போல் பெரும் துன்பமும் துயரமும் நிறைந்து சிறுபான்மை மக்களின் தீர்வுகளையும் வெளிப்படையாக பேச வேண்டும். லெனினின் தன்னாட்சி கொள்கையில் கூறும் ஜனநாயகம் என்பது எந்த மக்களும் தங்கள் எதிர்காலத்தை பெரும்பாலான வாக்குகளின் மூலம் தீர்மானிக்க முடியும் என்ற கருத்து நிலைத்துவிட்டது. லெனினின் தன்னாட்சி குறித்த சிந்தனைகள் மார்க்சியம்தான், மேலும் இவை போல்ஷெவிக் சிந்தனையாகவும் விளங்கின. ஒரு தேசிய சிறுபான்மை இனத்தின் சுய நிர்ணய விடுதலையை முழுமையயாக அங்கீகரிக்காத வரை அவர்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்று அங்கீகரிக்காத வரை எவன் பேசும் சமத்துவமும் சமத்துவம் இல்லை இதில் சமூக நீதியும் இல்லை என்பதை உண்மையான சோஷலிசவாதிகளுக்கு மட்டுமே இது தெரிந்திருக்கும். இதை விடுத்து சிவப்பாக தெரிவது எல்லாம் சோசலிசம் என்றும் கொம்யூனிசம் என்றும் யானை பார்த்த குருடர்கள் போல இருக்கக் கூடாது.

பா.உதயன்✍️ 
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.