Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

7 கோடி கொள்ளையின் சந்தேகநபர் ஒருவர் கைது!

7 கோடி கொள்ளையின் சந்தேகநபர் ஒருவர் கைது!

பணத்தை பாதுகாப்பாக கொண்டு செல்லும் தனியார் நிறுவனமொன்றின் சாரதி ஒருவர் 7 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மினுவாங்கொடையில் வைத்து கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மினுவாங்கொட பொலிஸாரும் இணைந்து நேற்று (19) பிற்பகல் கம்பஹா கடுவங்கஹா பகுதியில் வைத்து சந்தேக நபரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து 5 கிராம் 420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில், கொள்ளையிடப்பட்ட பணத்தில் இருந்து 31,515,291 ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது.

 தம்மிட்ட மாகவிட பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுயை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பணத்தை பாதுகாப்பாக கொண்டு செல்லும் தனியார் நிறுவனமொன்றின் நான்கு பேர் கொண்ட அதிகாரிகள் குழுவொன்று நேற்று காலை பணப்பைகளுடன் வேனில் மினுவாங்கொடையில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றுள்ளனர்.

வங்கிக்கு அருகில் வந்த பிறகு, சாரதி மட்டும் வேனில் இருந்த நிலையில் ஏனையவர்கள் வேனில் இருந்து இறங்கிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது வேனில் 7 கோடியே 13 லட்சத்து 27 ஆயிரத்து 296 ரூபாய் பணம் இருந்த நிலையில் குறித்த பணத்துடன் சாரதி குறித்த வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் அவர் கம்பஹா உக்கல்கொட பிரதேசத்தில் வேனை கைவிட்டு மோட்டார் சைக்கிளில் மற்றுமொரு நபருடன் தப்பிச் சென்றது அங்கிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியிருந்தது.

https://tamil.adaderana.lk/news.php?nid=196146

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா பொலிஸாரின் அவசர வேண்டுகோள்

image

வவுனியா உட்பட வடமாகாணத்தினுள் இவர்களை கண்டால் உடனடியாக அறியத்தருமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் மினுவாங்கொடை பகுதியில் 7 கோடி பெறுமதியான பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.

இந்த கொள்ளை சம்பவத்துடன் சீதுவ பகுதியைச் சேர்ந்த பிரேசுமனி துஷார இந்திக்க சொய்சா மற்றும் உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஏ.டி சமன் ரணசிங்க ஆகிய இருவரும் தொடர்புடையவர்கள் என அடையாளர் காணப்பட்டுள்ளார்கள்.

குறித்த இருவரும் தற்சமயம் வவுனியா மற்றும் வடமாகண பிரதேசங்களில் நடமாடிவருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் பொதுமக்களின் ஆதரவை வேண்டி நிற்கின்றனர். 

குறித்த நபர்களை பொதுமக்கள் யாரும் அடையாளம் கண்டால் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியான சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் அழகியவண்ணவின் தொலைபேசி இலக்கமான 0718596422 ஊடாக அல்லது 0716360020 (சிந்தக்க) ஆகிய தொடர்பு இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறியத்தருமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/199422

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

7 கோடி ரூபா கொள்ளையர்கள் தொடர்பில் வௌியான திடுக்கிடும் தகவல்கள்

7 கோடி ரூபா கொள்ளையர்கள் தொடர்பில் வௌியான திடுக்கிடும் தகவல்கள்

மினுவாங்கொடை பகுதியில் ஏழரை கோடி ரூபா கொள்ளையடிக்கப்பட்ட பிரதான சந்தேகநபர்கள் இருவர் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட மேலும் இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 18ஆம் திகதி, மினுவாங்கொடையில் உள்ள தனியார் வங்கியின் சாரதி ஒருவர், வங்கிக்கு பணத்தை எடுத்துச் செல்லும் போது, 7 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்துடன் தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த பணத்தில் 3 கோடிக்கும் அதிகமான பணத்தை பொலிஸார் கண்டுபிடித்தனர். மேலும் சந்தேகத்தின் பேரில் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

கம்பஹா பிரிவு குற்றத் தடுப்பு பிரிவினர் இது தொடர்பான பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

பிரதான சந்தேக நபர் கட்டானை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான துஷார இந்திக சொய்சா எனவும், மற்றைய சந்தேக நபர் 40 வயதான உடுகம்பலை பிரதேசத்தை சேர்ந்த சமன் ரணசிங்க எனவும் தெரியவந்துள்ளது.

கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்ட போது சந்தேகநபர்கள் இருவரும் மூன்றரை கோடி ரூபாவை வேறு ஒருவரிடம் கொடுத்துள்ளதுடன், குறித்த நபர் பணத்துடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்ட பின்னர் இருவரும் குருநாகல் மசாஜ் நிலையம் ஒன்றிற்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல CCTV காட்சிகளை சோதனை செய்ததில் இந்த தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸார் நடத்திய விசாரணையில் இருவரும் அங்கிருந்து வாடகை காரில் நாகதீபத்திற்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், குருநாகல், கணேவத்த பிரதேசத்தில் சந்தேகநபர்கள் இருவரும் வீதியில் காத்திருந்த ஒருவரிடமிருந்து தமக்கு அழைப்பு வரவிருப்பதாக தெரிவித்து கையடக்க தொலைபேசி ஒன்றை 10,000 ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளனர்.

இது தொடர்பான CCTV காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகின.

பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் நாகதீப கோவிலுக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டவிட்டு, யாழ்ப்பாணம் நகருக்குத் திரும்பியதும் கடற்படைச் சிப்பாய்கள் குழுவுடன் உரையாடிய போதிலும் அவர்களால் அடையாளம் காண முடியவில்லை.

பின்னர், சந்தேகநபர்கள் இருவரும் ஒரு இலட்சத்து 50,000 ரூபாவை வாடகை வாகனத்திற்கு செலுத்தியுள்ளனர்.

பின்னர், சம்பந்தப்பட்ட காரின் சாரதிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்தேகநபர்கள் இருவரைப் பற்றி கேட்டபோது, அவர் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்துள்ளார்.

பின்னர், சம்பந்தப்பட்ட சாரதி மற்றும் உதவியாளரை கைது செய்து விசாரணை நடத்தியதில் சந்தேகத்திற்கு இடமான இருவரையும் பொலிஸார் தேடுவதாக தெரிவித்ததையடுத்து அவர்கள் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் தப்பிச் செல்லும் CCTV காட்சியும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.

சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவுக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அதன்படி, அதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

https://tamil.adaderana.lk/news.php?nid=196308

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏழரை கோடி கொள்ளை - பிரதான சந்தேகநபர்கள் கைது

மினுவாங்கடை பிரதேசத்தில் ஏழரை கோடி ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா குற்றத் தடுப்பு விசாரணை பிரிவின் அதிகாரிகளினால் மினுவாங்கொடை பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட போது சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் 40 இலட்சம் ரூபா கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் திகதி மினுவாங்கொடையில் உள்ள தனியார் வங்கிக்குப் பணத்தை எடுத்துச் செல்லும் போது பாதுகாப்பாகப் பணம் கொண்டு செல்லும் நிறுவனத்தின் சாரதி ஒருவர் 7.5 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தைத் திருடி, அதே வாகனத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
 
பின்னர் கம்பஹா - உக்கல்கொட பகுதியில் வாகனத்தை நிறுத்தி, பணத்தை எடுத்துக் கொண்டு மற்றுமொருவருடன் உந்துருளியொன்றில் தப்பிச் சென்றார்.

இதனையடுத்து, பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் பணத்தில் 3 கோடி ரூபாவினை பெற்றுக்கொண்ட சந்தேகநபர் ஒருவர் கைதாகியிருந்தார்.

இந்நிலையில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

https://tamil.adaderana.lk/news.php?nid=196516

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏழரை கோடி கொள்ளை - டுபாய்க்கு தப்பிச் சென்ற சந்தேகநபர் 

ஏழரை கோடி கொள்ளை - டுபாய்க்கு தப்பிச் சென்ற சந்தேகநபர் 

மினுவாங்கொடையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் ஏழரை கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட மேலதிக விசாரணையில் இது தெரியவந்துள்ளது.

பணத்தை பாதுகாப்பாக கொண்டு செல்லும் தனியார் நிறுவனமொன்றின் சாரதி மினுவாங்கொடையில் உள்ள தனியார் வங்கிக்கு பணத்தை எடுத்துச் செல்லும் போது, கடந்த நவம்பர் மாதம் 18ஆம் திகதி ஏழரை கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்துடன் தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர், சம்பவம் தொடர்பில் 03 சந்தேகநபர்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து மூன்று கோடியே 55 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்படி, நேற்று (27) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, திருடப்பட்ட பணம் விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காக செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கடந்த 23ஆம் திகதி டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கம்பஹா பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளைச் சம்பவத்திற்குப் பின்னர் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் தமக்கு தெரியாது எனத் தெரிவித்துள்ளனர்.

எனினும் தரிந்து பெரேரா என்ற சந்தேகநபர் பணப் பையுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வது சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

https://tamil.adaderana.lk/news.php?nid=196550

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.