Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

றிப்தி அலி

கடந்த நவம்பர் 14ஆம் திகதி நடை­பெற்று முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பாரிய வெற்­றி­யினை ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்க தலை­மை­யி­லான தேசிய மக்கள் சக்தி சுவீ­க­ரித்­தது.

செப்­டம்­பரில் இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் அநுர குமார திசா­நா­யக்க பெற்­றுக்­கொண்ட வாக்­கு­களின் அடிப்­ப­டையில் சுமார் 120 ஆச­னங்­க­ளையே அக்­கட்சி பெறும் என ஆய்­வா­ளர்கள் எதிர்­வு­கூ­றி­யி­ருந்­தனர்.

இந்த எதிர்­வு­­கூ­ற­லுக்கு முற்­றிலும் மாற்­ற­மா­கவே பொது­மக்­களின் வாக்­க­ளிப்பு அமையப் பெற்­றி­ருந்­தது. இலங்கை வர­லாற்றில் எந்­த­வொரு தனிக் கட்­சியும் கைப்­பற்­ற­தாக 159 ஆச­னங்­களை தேசிய மக்கள் சக்தி கைப்­ப­றி­யுள்­ளது. இந்த எண்­ணிக்கை பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மை­யினை விட அதி­க­மான ஆச­னங்­க­ளாகும்.

எதிர்க்­கட்­சிகள் மத்­தியில் ஒற்­று­மை­யின்­மையின் கார­ண­மா­கவே ஆளும் தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் இந்­த­ளவு அதிக எண்­ணிக்­கை­யான ஆச­னங்­களை கைப்­பற்­றி­யுள்­ளது.
ஜனா­தி­பதி தேர்­தலில் ரணில் விக்­ர­ம­சிங்­கவும் சஜித் பிரே­ம­தா­சவும் இணைந்து போட்­டி­யிட்­டி­ருந்தால் இன்று அவர்­க­ளினால் ஆட்­சி­யினை கைப்­பற்­றி­யி­ருக்க முடியும்.

அந்தத் தேர்­தலில் தனித்துப் போட்­டி­யிட்­டது போன்று பாரா­ளு­மன்ற தேர்­த­லிலும் தனித்து போட்­டி­யிட்­ட­மை­யினால் அவர்­க­ளுக்கு வாக்­க­ளிப்­பதில் எந்தப் பிர­யோ­ச­னமு­மில்லை என பொது­மக்கள் உணர்ந்­து­விட்­டனர்.

இதே­நிலை தான் சிறு­பான்மை அர­சி­ய­லிலும் காணப்­பட்­டது. குறிப்­பாக தமிழ் மற்றும் முஸ்லிம் கட்­சிகள் பிரிந்து பாரா­ளு­மன்றத் தேர்­தலில் கள­மி­றங்­கின. இதன் கார­ண­மா­கவே அக்­கட்­சி­களின் வாக்­கு­களில் பாரிய சரிவு ஏற்­பட்­டது.

குறிப்­பாக இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி – அதன் கோட்­டை­யான யாழ். மாவட்­டத்­தி­னையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் – அதன் கோட்­டை­யான அம்­பாறை மாவட்­டத்­தையும் இன்று இழந்­துள்­ளன.

இவ்­வாறு சிறு­பான்மைக் கட்­சிகள் எதிர்­கால தேர்­தல்­களில் பிள­வு­பட்டு கள­மி­றங்­கினால், அக்­கட்­சிகள் முக­வ­ரி­யற்றுப் போய்­விடும் என்­ப­தனை இங்கு சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றேன்.

வட மாகா­ணத்தில் யாழ். மற்றும் வன்னி ஆகிய இரண்டு மாவட்­டங்­க­ளையும் ஒரு தேசியக் கட்சி கைப்­பற்­றி­யுள்­ளது இலங்கை வர­லாற்றில் முதற் தட­வை­யாகும். அதே­போன்று மட்­டக்­க­ளப்பு மாவட்டம் தவிர்ந்த அனைத்து தேர்தல் மாவட்­டங்­க­ளிலும் ஒரு தேசியக் கட்சி வெற்றி பெற்­ற­மையும் முத­லா­வது சந்­தர்ப்­ப­மாகும்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகா­ணங்­களை வெற்­றி­யீட்­டிய ஐக்­கிய மக்கள் சக்­தி­யினால் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வெற்­றி­யீட்ட முடி­ய­வில்லை. இதற்­கான காரணம் ஐக்­கிய மக்கள் சக்­தி­யி­லுள்ள பங்­காளிக் கட்­சிகள் தனித்துப் போட்­டி­யிட்­ட­மை­யாகும்.

இதன் கார­ண­மா­கவே கிழக்கு மாகா­ணத்தில் இரண்டு ஆச­னங்­களை முஸ்லிம் சமூகம் இழந்­துள்­ளது. குறிப்­பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் இணைந்து போட்­டி­யிட்­டி­ருந்தால் கிழக்கு மாகா­ணத்தில் அதிக ஆச­னங்­களை நிச்­ச­ய­மாக கைப்­பற்­றி­யி­ருக்க முடியும்.

கடந்த பாரா­ளு­மன்­றத்தில் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் இரண்டு முஸ்லிம் ஆச­னங்­களும், அம்­பாறை மாவட்­டத்தில் நான்கு முஸ்லிம் ஆச­னங்­களும் காணப்­பட்­டன. எனினும் இந்தத் தேர்­தலில் திரு­கோ­ண­ம­லையில் ஒரு முஸ்லிம் ஆச­னத்தையும், அம்­பா­றையில் இரண்டு முஸ்லிம் ஆச­னங்­களையும் மாத்­தி­ரமே பெற முடிந்­தது.

குறிப்­பாக அம்­பாறை மாவட்­டத்தின் கரை­யோரப் பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து தேசிய மக்கள் சக்­திக்கு 75,000க்கு மேற்­பட்ட வாக்­குகள் வழங்­கிய போதிலும் ஒரு முஸ்லிம் ஆச­னத்­தினை பெற முடி­ய­வில்லை. இதற்கு பிர­தே­ச­வா­தமும், வேட்­பா­ளர்­க­ளி­டையே நிலவிய ஒற்­று­மை­யின்­மை­யுமே பிர­தான கார­ண­மாகும்.

இதே­வேளை, அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் இணைந்து போட்­டி­யிட்­டி­ருந்தால் இரண்டு ஆச­னங்­களை நிச்­ச­ய­மாக கைப்­பற்­றி­யி­ருக்க முடியும். எனினும், முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் அமீர் அலியின் பிழை­யான வியூ­கத்­தினால் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் மட்டு. மாவட்­டத்தில் ஆச­னத்­தினை இழந்­துள்­ளது. இந்தத் தவ­றினை தற்­போது அக்­கட்­சி­யினர் உணர்ந்­துள்­ளனர்.

கடந்த பாரா­ளு­மன்­றத்தில் 20ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளித்து ஜனாஸா எரிப்பின் போது வாய்­மூடி மௌனி­யாக இருந்­த­வர்­களில் காதர் மஸ்­தானைத் தவிர ஏனைய அனை­வரும் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.

அதே­வேளை, சில முஸ்லிம் தலை­வர்­களை தோற்­க­டிக்க வேண்டும் என்ற நோக்கில் சில கட்­சி­களும், சுயேட்­சைக்­கு­ழுக்­களும் இந்தத் தேர்­தலில் கள­மி­றங்­கின.
குறிப்­பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்­கீ­மினைத் தோற்­க­டிப்­ப­தற்­காக கண்டி மாவட்­டத்தில் உதை­பந்துச் சின்­னத்தில் சுயேட்­சைக்­கு­ழு­வொன்று போட்­டி­யிட்­டது. இந்த சுயேட்­சைக்­குழு பெற்ற வாக்­கு­களின் எண்ணிக்கை 13,378 ஆகும். இது 5 சத­வீ­தத்­தினைக் கூட தாண்­ட­வில்லை.

இது போன்று தான் புத்­தளம் மாவட்­டத்தில் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியும் (7,083 வாக்­குகள்), ஐக்­கிய தேசிய கூட்­ட­மைப்பும் (6,410 வாக்­குகள்) தனித்­த­னி­யாக போட்­டி­யிட்­டன. இந்த இரண்டு கட்­சி­களும் 5 சத­வீ­தத்­திற்கு குறை­வான வாக்­கு­க­ளையே பெற்­றி­ருந்­தன. குறித்த 13,493 வாக்­கு­களும் ஐக்­கிய மக்கள் சக்­திக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கு­மாயின் அக்­கட்­சியின் ஆச­ன­மொன்று அதி­க­ரிக்­கப்­பட்டு முஸ்­லி­மொ­ருவர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தெரி­வு­செய்­யப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு கிடைத்திருக்கும்.

இதே­வேளை, களுத்­துறை, கம்­பஹா, குரு­நாகல், புத்­தளம் மற்றும் அனு­ரா­த­புரம் ஆகிய மாவட்­டங்­களில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ரவூப் ஹக்­கீமும் றிசாத் பதி­யு­தீனும் இணைந்து ஒரு வேட்­பா­ளரை மாத்­திரம் நிறுத்­தி­யி­ருந்தால் ஐக்­கிய மக்கள் சக்­தியின் ஊடாக நிச்­சயம் ஒரு ஆச­னத்­தினைப் பெற்­றி­ருக்க முடியும்.

இந்தத் தவ­றினை தேசிய மக்கள் சக்தி மேற்­கொள்­ளா­மை­யினால், மாத்­தறை, குரு­நாகல், புத்­தளம் மற்றும் கம்­பஹா ஆகிய மாவட்­டங்­களில் தலா ஒரு ஆச­னத்­தினைப் பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. இதன் ஊடாக குறித்த மாவட்­டங்­க­ளி­லுள்ள முஸ்லிம் மக்­களின் நீண்ட கால தாகம் தீர்க்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, கடந்த பாரா­ளு­மன்­றத்தில் 22 முஸ்­லிம்கள் அங்கம் வகித்தனர். கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு வரை வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­தல்­களின் ஊடாக 17 முஸ்­லிம்கள் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளனர். இந்த எண்­ணிக்கை 20 ஆக அதிகரிப்பதற்­கான வாய்ப்­புக்கள் அதி­க­மாக உள்­ளன.

இதனிடையே அநுர குமார திநாசாயக்கவின் அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உள்ளடக்கப்படாமை பாரிய கருத்தாடலொன்றை இன்று முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அமைச்­சுக்­களின் செய­லாளர் நிய­ம­னத்­திலும் முஸ்லிம் அதி­காரி உள்­ள­டக்­கப்­ப­டாமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

எனினும், நாங்கள் இன­வாத அடிப்­ப­டையில் செயற்­ப­ட­வில்லை. பிரதி அமைச்சர் நிய­ம­னத்தில் முஸ்­லிம்கள் நிச்­சயம் உள்­ள­டக்­கப்­ப­டுவர் என அர­சாங்கம் தெரி­விக்­கின்­றது.
எப்­ப­டியோ இந்த ஜனா­தி­ப­தியின் வெற்­றியில் முஸ்­லிம்­களும் பங்­கா­ளி­க­ளாக உள்­ளனர். இதனால் அனைத்து நிய­ம­னங்­க­ளிலும் முஸ்லிம் சமூ­கத்­தினையும் உள்வாங்கி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டியது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.- Vidivelli

https://www.vidivelli.lk/article/18123

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.