Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

மக்களின் குறைகளைக் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர்!

December 9, 2024  09:23 am

மகளின் குறைகளைக் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர்!

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பு ஒன்றை நடாத்தினார்.

குறித்த கிராமமானது முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமம் என்பதுடன், வெள்ள அனர்த்தத்தின் போது இந்தக் கிராமத்திற்குச் செல்வதற்கான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டிருந்ததால், குறித்த சிராட்டிகுளம் கிராமம் தனிமைப்பட்டிருந்தது.

இதனால் குறித்த கிராம மக்கள் பெருத்த இன்னல்களுக்கு முகங்கொடுத்து வந்திருந்தனர்.

இந்நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த கிராமத்திற்கு நேரடியாகச் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்துள்ளார்.

இதன்போது சிராட்டிகுளம் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிச்சீரமைப்பு, நெல் உலரவிடும் தளம் அமைத்தல், யானைவேலி அமைத்தல், சிராட்டிகுளம் மாதிரிக் கிராமத்தில் தாழ்நிலப் பகுதியில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளமையால் மக்கள் எநிர்நோக்கும் பிரச்சினைகள், பொதுப் போக்குவரத்துப் பிரச்சினை, வனவளத் திணைக்களத்தால் மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளமை உள்ளிட்ட விடயங்கள் இதன்போது மக்களால் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

அந்தவகையில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர், குறித்த பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைக்கடிதங்களை தனித்தனியே தன்னிடம் கையளிக்குமாறு தெரிவித்ததுடன், உரிய தரப்பினருடன் பேசி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் குறித்த மக்கள் சந்திப்பில் சமூக செயற்பாட்டாளர்களான யோகானந்தராசா, உதயகுமார் ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினருடன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



https://tamil.adaderana.lk/news.php?nid=197033

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள ஆண்டான்குளம் மற்றும் தண்ணிமுறிப்பு கால்நடைவளர்பாளர்கள் !

10 Dec, 2024 | 11:15 AM

image

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச்சங்கத்தின் கீழுள்ள ஆண்டான்குளம் மற்றும், தண்ணிமுறிப்பு ஆகிய பகுதிகளில் கால்நடைவளர்ப்பில் ஈடுபடும் கால்நடை வளர்ப்பாளர்கள் மேச்சல் தரவை இன்மையால் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.     

இந் நிலையில்,  வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் பகுதிகளுக்கு நேற்று திங்கட்கிழமை (09) நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.  

IMG-20241210-WA0013.jpg

அந்தவகையில், குறித்த ஆண்டான்குளம் மற்றும், தண்ணிமுறிப்புப் பகுதிகளில் 5000 இற்கும் மேற்பட்ட கால்நடைகள் காணப்படுகின்றபோதும், அந்த கால்நடைகளுக்குரிய மேச்சல் தரவையின்மையால் வருடந்தோறும் 50 இற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழப்பதாக கால் நடைவளர்ப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால், பல கால் நடைவளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை விற்பனை செய்கின்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேச்சல் தரவை தொடர்பான கோரிக்கைகளை உரிய தரப்புக்களிடம் பலதடவை முன்வைத்தும், இதுவரையில் அதுதொடர்பில் உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

IMG-20241210-WA0019.jpg

அத்தோடு இந்த ஆண்டான்குளம் மற்றும், தண்ணிமுறிப்பு பகுதிகளிலுள்ள கால்நடைகளிலிருந்து நாளொன்றிற்கு 3000லீற்றர் க்கும் அதிகமான பால் உற்பத்தி செய்யப்படுவதாகவும், மேச்சல் தரவை கிடைக்கப்பெறின் இதனைவிட அதிகளவிலான பாலுற்பத்தியைப் பெற்றுக்கொள்ளமுடியுமெனவும் விவசாயிகள் நடாறுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் தெரிவித்தனர்.

இந் நிலையில் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் அனைவருக்குமே இந்த மேச்சல்தரவை இல்லாத பிரச்சினை இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

இவ்வாறு, மேச்சல் தரவையில்லாத பிரச்சினையால் அதிகளவில் கால்நடைகள் உயிரிழப்பு ஏற்படுவதுடன், கால்நடைவளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை விற்பனைசெய்கின்ற இக்கட்டான நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

அத்தோடு பாலுற்பத்தியும் மந்தநிலையிலிருப்பதாக கால்நடைவளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில், கால் நடைவளர்ப்பாளர்களின் இந்த பாதிப்பு நிலையுணர்ந்து அவர்களின் அத்தியாவசியத் தேவையாகவுள்ள மேச்சல் தரவை வழங்கப்படவேண்டும். மேச்சல் தரவைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

IMG-20241210-WA0023.jpg

IMG-20241210-WA0021__1_.jpg

  •  



https://www.virakesari.lk/article/200855

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.