Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினதுறையினர்

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, ஆறு வயது சிறுமி உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

திண்டுக்கல்லில் சிட்டி ஹாஸ்பிட்டல் என்ற தனியார் மருத்துவமனையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நான்கு தளங்கள் கொண்ட அந்த மருத்துவமனையின் நேற்றிரவு (டிச. 12) தரைத்தளத்தில் தீப்பற்றியதாகவும் அந்த தீ அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீ காரணமாக ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கி, மருத்துவமனையின் லிஃப்ட்டில் உள்ளே இருந்தவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட உடனேயே தகவலறிந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த மருத்துவமனையில் சுமார் 42 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில், உள்ளே சிக்கியிருந்தவர்களையும் தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர்.

ஆட்சியர் விளக்கம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எம்.என். பூங்கொடி, நேற்றிரவு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "மருத்துவமனையில் சிக்கியிருந்தவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். மீட்கப்பட்டவர்களுள் ஒரு சிலர் மயக்க நிலையில் இருந்தனர். மருத்துவமனைக்குள் தற்போது யாரும் இல்லை" என தெரிவித்தார்.

திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு, மருத்துவமனைக்குள் யாரும் தற்போது சிக்கியிருக்கவில்லை என ஆட்சியர் தெரிவித்தார்

லிப்டில் சிக்கி ஆறு பேர் உயிரிழப்பு

தீயணைப்பு துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு, மூன்றாம் தளம் வரை பரவியுள்ளது. 32 பேரை நாங்கள் உயிருடன் காப்பாற்றியுள்ளோம். மீட்புப் பணிகளுக்கு நடுவே ஒரு மருத்துவர் வந்து, லிப்டில் சிலர் சிக்கியுள்ளதாக தெரிவித்தார். லிப்டை உபகரணங்கள் மூலம் திறந்து பார்த்தபோது அதில் 8 பேர் சிக்கியிருந்தனர். 3 ஆண்கள், 2 பெண்கள்,ஆறு வயது சிறுமி என ஆறு பேர் உயிரிழந்தனர். இரண்டு பேர் மீட்கப்பட்டு வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்" என தெரிவித்தார்.

லிப்டில் ஆட்கள் உள்ளே இருந்தது முன்பே தெரியவில்லை எனவும், கடைசியாகத்தான் அதுகுறித்து தெரிவிக்கப்பட்டதாகவும், அதனால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனை என்பதால், நோயாளிகளால் நகர முடியாத சூழல் நிலவியதாகவும் அவர் கூறினார்.

"இனி தான் தீ விபத்திற்கான காரணம் தெரியவரும்" என்று அவர் தெரிவித்தார்.

திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்து

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு, லிப்டில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்தனர்

எம்எல்ஏ கூறுவது என்ன?

இந்த விபத்து குறித்து பழநி தொகுதி திமுக எம்.எல்.ஏ, ஐ.பி. செந்தில்குமார் ஊடகங்களிடம் அளித்த பேட்டியில், "நேற்று (டிச. 12) இரவு 9-9.45 மணியளவில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நிகழ்ந்த உடனே மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தீயணைப்பு துறை, மின் துறை என அனைத்துத் தரப்பு அதிகாரிகளும் நிகழ்விடத்திற்கு வந்துவிட்டனர்." என தெரிவித்தார்.

நேற்றிரவு அவர் அளித்த பேட்டியில், மருத்துவமனையிலிருந்து 32 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தார். மருத்துவமனையின் உள்ளே முழுவதும் புகை மூட்டமாக இருந்த நிலையில், தீயணைப்பு துறையினர் உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்டதாக தெரிவித்தார். "எனினும், இது எதிர்பாராத ஒரு விபத்து" என தெரிவித்தார்.

மின்சார துறை அதிகாரிகள் மின்கசிவு காரணமாக இந்த விபத்து நிகழவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக ஐ.பி. செந்தில்குமார் தெரிவித்தார். "முழுமையான அறிக்கை வழங்கப்படும் போதுதான் உண்மையான காரணம் தெரியவரும்" என்றும் அவர் கூறினார்.

தீ ஆரம்பத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே பரவியதாகவும் அதனால் ஏற்பட்ட புகைமூட்டத்தினாலேயே பாதிப்புகள் அதிகமானதாகவும் அவர் தெரிவித்தார். "உயிரை காப்பாற்றிக் கொண்டு ஓடியபோது அதனாலும் சிலருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளன" என்றார் ஐ.பி. செந்தில்குமார்.

இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

https://www.bbc.com/tamil/articles/c9dpj2g1jn8o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.